search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "guard dies"

    • அங்கமுத்து நாமக்கல்லில் உள்ள லாரி பட்டறையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
    • சம்பவத்தன்று நாமக்கல்-சேலம் சாலையில் நடந்து செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஜங்கலாபுரத்தை சேர்ந்தவர் அங்கமுத்து (73), இவரது மனைவி சர்மிளா, மகன் சக்திவேல். அங்கமுத்து நாமக்கல்லில் உள்ள லாரி பட்டறையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று நாமக்கல்-சேலம் சாலையில் நடந்து செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானார். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அங்கமுத்து இறந்துவிட்டார்.

    • வாலாஜா அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    திருவலம் அருகே உள்ள கெம்பராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் துளசிராமன் (வயது 63). இவர் ராணிப்பேட்டை அருகே உள்ள சிப்காட்டில் தனியார் தோல் தொழிற்சாலையில் காவலாளி யாக வேலை பார்த்து வந்தார்.

    இந்தநிலையில் உடல்நலம் இல்லாமல் இருந்த இவர் நேற்று தொழிற்சாலையில் திடீரென்று மயங்கி விழுந்தார். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து துளசிராமனை பரிசோதனை செய்தபோது அவர் இறந்தது தெரியவந்தது.

    இதனை அடுத்து துளசிராமனின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்து வமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் கல்லூரி காவலாளி கார் மோதி பலியானார்.
    • ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆஸ்டின்பட்டி போலீஸ் சரகம் தனக்கன்குளம் வெங்கல மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 55). இவரது மனைவி சரஸ்வதி .

    மாரியப்பன் மதுரையில் உள்ள கல்லூரியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று இரவு சைக்கிளில் சமயநல்லூர்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்

    அப்போது பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாரியப்பன் ரத்த வெள்ள த்தில் சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்த தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீ சார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து சரஸ்வதி கொடுத்த புகாரின்பேரில் கார் டிரைவர் திண்டு க்கல் மாவட்டம் சின்னாள பட்டியை சேர்ந்த தினேஷ் பாபு மீது ஆஸ்டின் பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×