search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Engineering College"

    • சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் ஆர்.வேல்ராஜ் சிறப்பு விருந்தின ராக பங்கேற்று பட்டங்களை வழங்கினார்.
    • விழாவில், 596 மாணவர்களுக்கு இளநிலை பொறியியல் பட்டங்கள் வழங்கப்பட்டது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரியின் 35-வது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.

    கல்லூரியின் துணைத் தலைவர் கே.ஆர்.கிருஷ்ண மூர்த்தி தலைமை தாங்கி னார். செயலாளர் சி.சங்கர நாராயணன், தாளாளர் கே.ஆர்.அருணாசலம், தொழிலதிபர் சி.ராமசாமி, இயக்குநர் எஸ்.சண்முக வேல் மற்றும் முதல்வர் கே.காளிதாச முருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கல்லூரி முதல்வர் வரவேற்புரை நிகழ்த்தி கல்லூரியின் சிறப்பு அம்சங்களை விவரித்தார். சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் ஆர்.வேல்ராஜ் சிறப்பு விருந்தின ராக பங்கேற்று பட்டங்களை வழங்கி, பட்டமளிப்பு விழா சிறப்புரை நிகழ்த்தினார்.

    சிறப்பு விருந்தினர் பட்ட தாரிகளை வாழ்த்தி தனது உரையை துவங்கினார், அவர் தமது உரையில் பட்ட தாரிகள் பல்வேறு துறை சார்ந்த தொழில்நுட்ப அறிவை பெறவேண்டும் என்றும் அவற்றின் முக்கி யத்துவம் பற்றியும் எடுத்துரைத்தார்.

    மாணவ தொழில்முனை வோர்கள் நிதி ஆயோக் போன்ற அரசாங்க திட்டத்தின் மூலம் நிதி ஆதரவை பெற்று சிறந்த தொழில்முனைவோராக வேண்டும் என்றும், அவர்கள் இந்தியாவில் தனித்துவமான, புதுமை யான தயாரிப்புகளை உரு வாக்க வேண்டும் என்றும், நன்கு வரையறுக்கப்பட்ட வணிகத் திட்டங்களே வெற்றிக்கான பாதைகளாக அமையும் என்றும் அறிவுறுத்திக் கூறினார்.

    விழாவில், 596 மாணவர்க ளுக்கு இளநிலை பொறியியல் பட்டங்களையும், 24 மாணவர்களுக்கு முதுநிலை பொறியியல் பட்டங்களை யும் சிறப்பு விருந்தினர் வழங்கினார்.

    மேலும், பட்டம் பெற்றவர்களில் 41 இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் மாணவர்கள் தன்னாட்சி தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற வர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. மேலும், பட்டதாரி கள் அனைவரும் பட்ட மளிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    விழாவில் சிறப்பு விருந்தி னர்களாக லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பேராசிரி யர் ஏ.ராஜேஸ்வரன், கே.ஆர்.கலை மற்றும் அறிவியியல் கல்லூரி முதல்வர் எஸ்.மதிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் இயக்குநர் மற்றும் முதல்வர் ஆகியோரது வழிகாட்டு தலின்படி ஒருங்கிணைப்பா ளர்கள் பேராசிரியர் டி.வெங்கட்குமார், உதவிப் பேராசிரியர் எ.ஆண்ட்ரூஸ், அனைத்துத் துறைத் தலைவர்கள், பேராசிரி யர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    • பாதிக்கப்பட்ட பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் நேரடியாகவும், கடிதம் மூலமாகவும் தொடர்ந்து புகார்கள் அளித்து வருகின்றனர்.
    • பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோவை:

    கோவை அருகே உள்ள குரும்பபாளையத்தில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் முதல்வர் கோவில்பாளையம் போலீஸ்நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2021-ம் ஆண்டு எங்களது கல்லூரியில் சிங்காநல்லூரை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் பணியில் சேர்ந்தார். அவர் தொடர்ந்து கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியைகள் மற்றும் மாணவிகளிடம் தவறான கண்ணோட்டத்தில் நடந்து வருகிறார். மேலும் அவர் கல்லூரியில் பணியாற்றும் சில பேராசிரியைகளின் செல்போன் எண்களை அவர்களுக்கு தெரியாமல் பெற்று இரவு நேரங்களில் ஆபாச குறுந்தகவல் மற்றும் ஆபாச வீடியோக்களை அனுப்பி தொல்லை கொடுத்து வருகிறார்.

    இதேபோல பேராசிரியர் கல்லூரியில் படிக்கும் மாணவிகளின் செல்போன் எண்களையும் வாங்கி அவர்களுக்கு இரவு நேரங்களில் ஆபாச தகவல் மற்றும் வீடியோக்களை அனுப்பி தொல்லை கொடுத்து வருகிறார்.

    இதனால் பாதிக்கப்பட்ட பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் என்னிடம் நேரடியாகவும், கடிதம் மூலமாகவும் தொடர்ந்து புகார்கள் அளித்து வருகின்றனர். நான் அவரை நேரில் அழைத்து கண்டித்தும் அவர் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து ஆபாச வீடியோ மற்றும் குறுந்தகவல்களை அனுப்பி தொல்லை கொடுத்து வருகிறார். எனவே பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு முதல்வர் அளித்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் கோவில்பாளையம் போலீசார் என்ஜினீயரிங் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கு இரவு நேரங்களில் ஆபாச வீடியோ மற்றும் குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்து வரும் பேராசிரியரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ரிஷி ஆச்சார்யா குடும்பத்தினர் மும்பையில் வசித்து வருகின்றனர்.
    • நள்ளிரவில் ரிஷி ஆச்சார்யாவுக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த பேட்டை-சேரன்மகாதேவி சாலையில் அமைந்துள்ள சாஸ்திரிநகரை சேர்ந்தவர் வினோத் கண்ணன். இவரது மகன் ரிஷி ஆச்சார்யா (வயது 20). இவரது குடும்பத்தினர் மும்பையில் வசித்து வருகின்றனர்.

    ரிஷி ஆச்சார்யா சாஸ்திரிநகரில் தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். நேற்றிரவு வழக்கம் போல் வீட்டில் உறவினர்களுடன் அமர்ந்து ரிஷி தோசை சாப்பிட்டுள்ளார்.

    பின்னர் தூங்க சென்ற அவருக்கு நள்ளிரவில் திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே உறவினர்கள் அவரை மீட்டு தனியார் ஆம்புலன்சு மூலமாக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு இன்று அதிகாலையில் ரிஷி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஐ.ஓ.டி. தொழில்நுட்பங்களின் பயன்பாடு என்ற தலைப்பில் லட்சுமிநாராயணன் பயிற்சி வழங்கினார்.
    • பயிற்சி பட்டறையில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் ஐ.இ.இ.இ. மாணவர்கள் பிரிவு எண்-61401 மற்றும் மின்னணுவியல் தொடர்பியல் துறை சார்பில், ஐ.இ.இ.இ. மெட்ராஸ் பிரிவு நிதியுதவியுடன் 'மருத்துவ சேவையில் ஐ.ஓ.டி. தொழில்நுட்பங்களின் பயன்பாடு என்ற தலைப்பில் தேசிய அளவிலான பயிற்சி பட்டறை கடந்த 2 நாட்கள் நடந்தது. கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் மஞ்சித் வரவேற்று பேசினார்.

    டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவரும், பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி இணை பேராசிரியருமான லட்சுமிநாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஐ.ஓ.டி. தொழில்நுட்பங்களின் பயன்பாடு என்ற தலைப்பில் பயிற்சி வழங்கினார். துறைத்தலைவர் பெனோ வாழ்த்தி பேசினார்.

    இதில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். ஏற்பாடுகளை துறை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.

    • கல்லூரி முதல்வர் பேராசிரியர் ஜின்னா ஷேக் முகம்மது தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.
    • மாணவர்களுக்கு ரத்ததானம் செய்வதின் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர்.

    நெல்லை:

    மருதகுளம் நெல்லை பொறியியல் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மற்றும் முனைஞ்சிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய ஒத்துழைப்புடன் ரத்ததான முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பேராசிரியர் ஜின்னா ஷேக் முகம்மது தலைமை தாங்கி ரத்ததானம் செய்து முகாமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் ரவிசங்கர் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அய்யப்பன், சுகாதார ஆய்வாளர் வெங்கடேஷ் ஆகியோர் வழி நடத்தினர்.

    மேலும் மாணவர்களுக்கு ரத்ததானம் அவசியம் பற்றியும், அதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் எடுத்துரைத்தனர். கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் மற்றும் உதவி பேராசிரியர் முஜீப் முகம்மது முஸ்தபா மற்றும் கல்லூரி அலுவலர்கள் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கினார்.
    • கட்டுமான துறை குறித்த மாணவர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் கட்டிடவியல் துறை சார்பில், கட்டுமான துறையினருக்கான சிறப்பு கருத்தரங்கம் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கி, வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் நாராயணராஜன் வாழ்த்தி பேசினார்.

    கோவில்பட்டி ஜெய் கன்ஸ்ட்ரக்சன் நிர்வாகி சதீஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்டுமான தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கி கூறினார். நெல்லை ஆர்.ஆர்.கன்ஸ்ட்ரக்சன் நிர்வாகி சார்லஸ் எதிர்கால மேற்படிப்புகள், வேலைவாய்ப்புகள், கல்வி உதவித்தொகை பெற உதவும் ஆயத்த தேர்வுகள் குறித்து எடுத்துரைத்தார். தூத்துக்குடி கில்மெட் என்ஜினீயரிங் உரிமையாளர் கில்பெர்ட் ராஜேஷ் 'ஸ்டெப் அப்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.

    கட்டிடம் கட்டும்போது ஏற்படும் சவால்கள், அரசு உள்ளாட்சி துறையில் சர்வேயர் லைசென்ஸ் பெறும் முறைகள், கட்டிட வரைபட அனுமதி பெறும் முறைகள் குறித்து நாகர்கோவில் மனாஸ் என்ஜினீயரிங் கன்சல்டன்ஸ் நிர்வாகி லிங்கேஸ்வரன், திசையன்விளை பேஷன் கன்ஸ்ட்ரக்சன் நிர்வாகி எடிசன், தென்காசி டி.கே.எஸ்.பில்டர்ஸ் உரிமையாளர் தங்கபாண்டி ஆகியோர் விளக்கி கூறினர்.

    பின்னர் மாணவர்களுடன் கலந்துரையாடினர். கட்டிடம் கட்ட தேவையான அரசு உதவிகள், மானியம் பெறுதல், கட்டிடவியல் பிரச்சினைகளை சமாளிக்கும் முறைகள் குறித்த கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர். இதில் கட்டிடவியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமையில், கட்டிடவியல் துறைத்தலைவர் தமிழரசன், பேராசிரியர்கள் தனகர், முத்துகுமார், சந்திரசேகர், நிஷாந்தி மற்றும் ஆய்வக உதவியாளர்கள், அலுவலர்கள், மாணவர்கள் செய்து இருந்தனர்.

    • மருதகுளம் நெல்லை பொறியியல் கல்லூரியில் தேசிய குடற்புழு நீக்க தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மூலைக்கரைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கலந்து கொண்டு குடற்புழு உருவாக்கம், அதை நீக்குவது குறித்து எடுத்து கூறினார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மருதகுளம் நெல்லை பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு பொது சுகாதாரதுறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜின்னா ஷேக் முகம்மது தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மூலைக்கரைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கலந்து கொண்டு குடற்புழு உருவாக்கம், அதை நீக்குவது குறித்து மாணவ, மாணவிகளுக்கு எடுத்து கூறினார்.

    தொடர்ந்து கல்லூரி மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் அவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது. கல்லூரி நூலகர் முகம்மது முகைதீன் நன்றி கூறினார்.

    • பொறியியல் கல்லூரி வளாகத்தில் உண்டு உறைவிடப்பள்ளி செயல்படத் தொடங்கும் கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தார்.
    • வரும் கல்வியாண்டு முதல் 6 -ம் வகுப்பிலிருந்து பிளஸ் 2 வரையில் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட த்தில் உண்டு உறைவிட பள்ளிக்கு தற்காலிக மாக செய்யது அம்மாள் பொறி யியல் கல்லுாரியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    அங்கு ஓரிரு வாரத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்க உள்ளது. தமிழகத்தில் 15 மாவட்டங்களில் உண்டு உறைவிடப் பள்ளிகளை (மாதிரிபள்ளிகள்) தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    ராமநாதபுரத்தில் உண்டு உறைவிட பள்ளிக்கு அரசு கட்டடங்கள் இல்லாததால் தனியார் இடத்தில் வாடகை அடிப்படையில் பள்ளியை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இதன்படி ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி வளாகத்தில் விடுதி அறைகள், உண்டு உறைவிட பள்ளிக்குரிய வகுப்பறைகள் அமைக்கும் பணி நடக்கிறது.

    முதல் கட்டமாக பிளஸ் -2 வகுப்புகளில் ஆங்கில வழி வகுப்புக்கு 40 பேரும், தமிழ் வழி வகுப்புக்கு 40 பேரும் என 80 போ் சோ்க்கப்பட்டுள்ளனா். ஓரிரு வாரங்களில் பிளஸ்-1 வகுப்புகளும் தொடங்கப்பட உள்ளதாக வும், வரும் கல்வியாண்டு முதல் 6 -ம் வகுப்பிலிருந்து பிளஸ் 2 வரையில் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

    அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தேர்ச்சி விகித பட்டியலில் 6 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை.
    சென்னை:

    தமிழ்நாட்டில் 540-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன.

    அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என இக்கல்லூரிகள் அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்று இயங்கி வருகின்றன.

    என்ஜினீயரிங் கல்லூரிகள் வாரியாக மாணவர்களின் தேர்ச்சி விகித பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

    2018-ம் ஆண்டு நவம்பர்- டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற பல்கலைக் கழக செமஸ்டர் தேர்வுகளில் பி.இ., பி.டெக்., மாணவர்களின் தேர்ச்சி விகிதங்கள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டன.

    இதில் 481 இணைப்பு அங்கீகார கல்லூரிகளின் தேர்ச்சி விகித விவரங்களை கல்லூரிகள் வாரியாக உள்ளன. ஒவ்வொரு கல்லூரியிலும் எத்தனை மாணவர்கள் தேர்வு எழுதினர்? அவர்களில் எவ்வளவு பேர் தேர்ச்சி பெற்றனர்? தேர்ச்சி விகிதம் எவ்வளவு? ஆகிய விவரங்கள் இடம் பெற்றுள்ளன.



    தேர்ச்சி விகித பட்டியலின் படி 6 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட தேர்ச்சி பெறவில்லை. இந்த கல்லூரிகளில் இருந்து பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கு 682 மாணவர்கள் தேர்வு எழுதினர். இவர்கள் அனைவரும் தோல்வி அடைந்துள்ளனர்.

    59 கல்லூரிகளில் மட்டுமே 50 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறந்த தேர்ச்சி விகிதத்தை கொண்ட கல்லூரியில் கூட 85.57 சதவீத மாணவர்கள்தான் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்தத்தில் 3 கல்லூரிகள் மட்டுமே 80 சதவீதத்துக்கும் அதிகமான தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளன.
    பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் பதிவு தொடங்கிய ஒரு வாரத்தில் 60 ஆயிரத்திற்கும் மேலான மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். #AnnaUniversity
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள 550 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 2-ந்தேதி தொடங்கியது.

    மாணவ- மாணவிகளுக்கு உதவி செய்வதற்காக 43 இடங்களில் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டத்திலும் உள்ள மாணவர்களும் விண்ணப்பிக்க வேண்டும் என்பதற்காக இந்த சேவை மையங்கள் செயல்படுகின்றன.

    ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க உதவி செய்வதற்காக செயல்படும் இந்த மையங்களில் மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் சென்று விண்ணப்பித்து வருகின்றனர். நேற்று வரை 61 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

    இந்த மாதம் 30-ந்தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் 60 ஆயிரத்திற்கும் மேலான மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருப்பதால் 1.50 லட்சத்துக்கும் மேல் விண்ணப்பிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    இந்த வருடம் பொறியியல் கலந்தாய்வை தொழில் நுட்ப கல்வி இயக்ககம் நடத்துகிறது. கலந்தாய்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் துறையின் இயக்குனர் தலைமையில் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். சான்றிதழ் சரிபார்ப்பு பணி முதல் கலந்தாய்வு நடத்தப்படும் நாட்கள், நேரம் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் திட்டமிட்டு வருகிறார்கள்.

    மாணவர்கள் எவ்வித குழப்பமும் இல்லாமல் கல்லூரிகள் பாடப்பிரிவுகளை தெரிவு செய்யவும், ஒதுக்கீட்டு ஆணை வழங்கவும், சான்றிதழ் சரிபார்ப்பு பணியினை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கவும் ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகின்றன.

    இதுகுறித்து மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் புருஷோத்தமன் கூறியதாவது:-

    நேற்று வரை 61,723 பேர் விண்ணப்பித்தனர். சான்றிதழ் சரிபார்ப்புக்கு முன்னதாக ரேண்டம் எண் வழங்கப்படும். 43 மையங்களில் சான்றிதழ் சரிபார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள மையங்களை ஒதுக்குவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு அந்தந்த மையங்களில் சான்றிதழ் சரிபார்க்கப்படும். விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு சென்னையில் தான் சான்றிதழ் சரிபார்க்கப்படும். விளையாட்டு பிரிவின் ஒதுக்கீடு பெற விரும்புபவர்கள் கட்டாயம் சென்னைக்கு வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #AnnaUniversity
    செம்மஞ்சேரியில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சட்னியில் உயிருடன் எலி இருந்த சம்பவம் குறித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சோழிங்கநல்லூர்:

    செம்மஞ்சேரியில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இங்குள்ள விடுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியுள்ளனர். இன்று காலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சட்னியில் உயிருடன் இருந்த எலி ஒன்று தத்தளித்தபடி இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் காலை உணவு சாப்பிடவில்லை.

    இந்தநிலையில் இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவர்கள் வகுப்பிற்கு செல்லாமல் கல்லூரி வளாகத்திலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் கல்லூரி நிர்வாகத்தினர், செம்மஞ்சேரி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    வி.ஐ.டி. கல்லூரியின் மாணவர்கள் தங்கும் விடுதியில் பப்ஜி விளையாட தடை விதிக்கப்பட்டு இருப்பது மாணவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. #PUBG



    ஸ்மார்ட்போன் ஆன்லைன் கேமிங்கில் இந்த ஆண்டின் பிரபல கேமாக பப்ஜி இருக்கிறது. பப்ஜி விளையாட்டு உலகில் அதிகம் விற்பனையாகும் கணினிக்கான் கேம்களில் முன்னணி இடம் பிடித்திருக்கிறது. பப்ஜி விளையாடுவதால் மாணவர் தங்கும் விடுதியின் சூழல் பாதிக்கப்படுவதால் தங்கும் விடுதியில் பப்ஜி விளையாட வி.ஐ.டி. மாணவர் தங்கும் விடுதி தடை விதித்துள்ளது.

    இத்தகவலை தங்கும் விடுதியின் காப்பாளர் மின்னஞ்சல் மூலம் தெரிவித்ததாக ரெடிட் தளத்தில் வெளியாகும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    பப்ஜி விளையாடுவதை தவிர்த்து உடல் மற்றும் மன வலிமையை பரைசாற்றும் விளையாட்டுக்களில் கவனம் செலுத்தவும், மாணவர்கங்கள் தங்களின் எதிர்காலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என விடுதியின் காப்பாளர் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.



    புதிய விதிமுறையை மாணவர்கள் பின்பற்ற தவறும் பட்சத்தில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மாணவர்கள் தங்கும் விடுதிக்கு மட்டும் பப்ஜி விளையாட தடை விதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படும் நிலையில், மாணவிகள் தங்கும் விடுதியில் இதுபோன்ற தடை விதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    பொறியியல் கல்லூரியில் பப்ஜி விளையாட மாணவர்களுக்கு தடை விதிக்ககப்பட்டு இருப்பது மாணவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் கேமிற்கான தடை இருபாலினத்தவருக்கும் பொருந்தாதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் உலக சுகாதார மையம் கேமிங்கை ஆரோக்கிய சீர்கேடாக அறிவித்தது. இத்துடன் மனநல ஆரோக்கியம் மற்றும் நரம்பியல் அறிவியல் துறைக்கான தேசிய ஆணையம் பப்ஜி கேம் பலரை அடிமையாக்கி இருப்பதாக தெரிவித்திருந்தது.
    ×