search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் கட்டுமான துறையினருக்கான சிறப்பு கருத்தரங்கம்
    X

    கருத்தரங்கம் நடைபெற்றபோது எடுத்த படம்.

    டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் கட்டுமான துறையினருக்கான சிறப்பு கருத்தரங்கம்

    • கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கினார்.
    • கட்டுமான துறை குறித்த மாணவர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் கட்டிடவியல் துறை சார்பில், கட்டுமான துறையினருக்கான சிறப்பு கருத்தரங்கம் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கி, வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் நாராயணராஜன் வாழ்த்தி பேசினார்.

    கோவில்பட்டி ஜெய் கன்ஸ்ட்ரக்சன் நிர்வாகி சதீஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்டுமான தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கி கூறினார். நெல்லை ஆர்.ஆர்.கன்ஸ்ட்ரக்சன் நிர்வாகி சார்லஸ் எதிர்கால மேற்படிப்புகள், வேலைவாய்ப்புகள், கல்வி உதவித்தொகை பெற உதவும் ஆயத்த தேர்வுகள் குறித்து எடுத்துரைத்தார். தூத்துக்குடி கில்மெட் என்ஜினீயரிங் உரிமையாளர் கில்பெர்ட் ராஜேஷ் 'ஸ்டெப் அப்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.

    கட்டிடம் கட்டும்போது ஏற்படும் சவால்கள், அரசு உள்ளாட்சி துறையில் சர்வேயர் லைசென்ஸ் பெறும் முறைகள், கட்டிட வரைபட அனுமதி பெறும் முறைகள் குறித்து நாகர்கோவில் மனாஸ் என்ஜினீயரிங் கன்சல்டன்ஸ் நிர்வாகி லிங்கேஸ்வரன், திசையன்விளை பேஷன் கன்ஸ்ட்ரக்சன் நிர்வாகி எடிசன், தென்காசி டி.கே.எஸ்.பில்டர்ஸ் உரிமையாளர் தங்கபாண்டி ஆகியோர் விளக்கி கூறினர்.

    பின்னர் மாணவர்களுடன் கலந்துரையாடினர். கட்டிடம் கட்ட தேவையான அரசு உதவிகள், மானியம் பெறுதல், கட்டிடவியல் பிரச்சினைகளை சமாளிக்கும் முறைகள் குறித்த கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர். இதில் கட்டிடவியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமையில், கட்டிடவியல் துறைத்தலைவர் தமிழரசன், பேராசிரியர்கள் தனகர், முத்துகுமார், சந்திரசேகர், நிஷாந்தி மற்றும் ஆய்வக உதவியாளர்கள், அலுவலர்கள், மாணவர்கள் செய்து இருந்தனர்.

    Next Story
    ×