என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசுக் கல்லூரி"

    • அவர்கள் இந்த ராகிங் சம்பவத்தை வீடியோ எடுத்து, ஜூனியர் மாணவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
    • கல்லூரியில் மாணவராக அல்லாத ஒரு வெளி நபரும் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஆந்திர மாநிலத்தில் அரசு கல்லூரியில் முதலாமாண்டு மாணவன் சீனியர்களால் குரூரமான முறையில் ராகிங் செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

    ஆந்திராவின் பலநாடு மாவட்டத்தில் உள்ள தச்சபள்ளி அரசு ஜூனியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர், சீனியர் மாணவர்களால் தாக்கப்பட்டு, மின்சார அதிர்ச்சி அளிக்கப்பட்டு ராகிங் செய்யப்பட்டுள்ளார்.

    இந்தச் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் என்றும், அவர்கள் இந்த ராகிங் சம்பவத்தை வீடியோ எடுத்து,  ஜூனியர் மாணவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

    கல்லூரியில் மாணவராக அல்லாத ஒரு வெளி நபரும் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு மாணவர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.   

    • பல்வேறு புகைப்படங்களும் 59 வீடியோக்களும் ஆதாரமாக இணைக்கப்பட்டிருந்தன.
    • பரீட்சையில் நல்ல கிரேட் தருவது, வேலை வாங்கி தருவது ஆகிய ஆசைகளை காட்டி பேராசிரியர் ரஜ்னீஷ் குமார் இந்த செயல்களில் 20 வருடமாக ஈடுபட்டு வந்தார்.

    உத்தரப் பிரதேசத்தில் 59 வயதான கல்லூரி அரசுக்கல்லூரி பேராசிரியர் பல மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

    உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் அரசு நடத்தி வரும் சேத் பூல் சந்த் பாக்லா முதுகலை கல்லூரியில் புவியியல் துறையின் தலைவராக (HOD) ஆக உள்ளவர் ரஜ்னீஷ் குமார் (59 வயது).

    இவர் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக  அக்கல்லூரி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார். அதை வீடியோ எடுத்தும் வந்துள்ளார்.  இதுதொடர்பாக நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்படாத பின், உள்விசாரணை நடத்திய கல்லூரி நிர்வாகம் அவர் குற்றமற்றவர் என்று கூறிவிட்டது.

    இதனையடுத்து கடந்த ஆண்டு தேசிய மகளிர் ஆணையம் (NCW), உயர் காவல்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் ரஜ்னீஷ் குமார் மீது பாதிக்கப்பட்டவர் பெயர் குறிப்பிடப்படாமல் பாலியல் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

    அந்தப் புகாரில், பாதிக்கப்பட்ட மாணவிகளுடன் பேராசிரியர் ரஜ்னீஷ் குமார் ஆபாசமான நிலையில் இருப்பதைக் காட்டும் பல்வேறு புகைப்படங்களும் 59 வீடியோக்களும் ஆதாரமாக இணைக்கப்பட்டிருந்தன.

     

    இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த மார்ச் 13 அன்று தான் அவர் மீது எப்ஐஆர் பதவு செய்யப்பட்டது. பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 64 (பாலியல் வன்கொடுமை), பிரிவு 68 (அதிகாரத்தில் உள்ள ஒருவரால் பாலியல் வல்லுறவு), மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 66 (சைபர் குற்றங்கள்) ஆகியவற்றின் கீழ் ரஜ்னீஸ் குமார் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து கடந்த சனிக்கிழமை அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் காவல்துறை நடவடிக்கை எடுப்பதை அறிந்ததும், ரஜ்னீஷ் குமார் தலைமறைவாகியுள்ளார்.

     மாணவிகளுக்கு பரீட்சையில் நல்ல கிரேட் தருவது, வேலை  வாங்கி தருவது ஆகிய ஆசைகளை காட்டி பேராசிரியர் ரஜ்னீஷ் குமார் இந்த செயல்களில் 20 வருடங்களுக்கும் மேலாக ஈடுபட்டு வந்ததாக ஹத்ராஸ் மாவட்ட எஸ்பி சிரஞ்சீவி நாத் சின்ஹா தெரிவித்துள்ளார்.

    பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் மகளிர் ஆணையத்தில் சமர்ப்பித்த படங்களில் 12, ரஜ்னீஷ் சின்ஹா, காலேஜின் டீன் ஆபீசில் வைத்தே மாணவிகளிடம் அத்துமீறுவதைக் காட்டுகிறது.

    அதில் உள்ள மாணவிகளை அடையாளம் காண போலீசார் முயன்றனர். ஆனால் கல்லூரி நிர்வாகம் அதற்கு ஒத்துழைக்கவில்லை என்று அவர் தெரிவித்தார். இதற்கிடையே தலைமறைவான பேராசிரியர் ரஜ்னீஷ் சின்ஹாவை தேடும் பணியில் ஹத்ராஸ் போலீஸ் ஈடுபட்டுள்ளது. 

     

    • விடுதியில் தயாரிக்கப்படும் 90 சதவீத உணவுகள் கெட்டுபோனவை.
    • மாணவர்கள் போராட்டத்தைக் கைவிடுமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    பீகாரில் உள்ள அரசுக் கல்லூரியின் தங்கும் விடுதியில் சமைக்கப்பட்ட மெஸ் உணவில் இறந்த பாம்பின் உடல் பாகங்கள் கிடந்த சம்பவம் மாணவர்களின் போராட்டத்தை அடுத்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த உணவை சாப்பிட 10 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பீகார் மாநிலம் பாங்காவில் உள்ள அரசுப் பொறியியல் கால்லூரி தங்கும் விடுதியில் கடந்த வாரம் வியாழனன்று சமைக்கப்பட்ட இரவு உணவில் இறந்த பாம்பின் பாகங்கள் கிடந்துள்ளது. இதனையடுத்து போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் குறித்து அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ளனர். விடுதியில் தயாரிக்கப்படும் 90 சதவீத உணவுகள் கெட்டுப்போனவை. அவற்றை சாப்பிடாவிட்டாலோ, மெஸ் கட்டணம் செலுத்தாவிட்டாலோ தேர்வு எழுத அனுமதிக்க மாட்டார்கள் என்று மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

     

    இதன் உச்சமாகவே தற்போது பாம்பு கிடந்த உணவு பரிமாறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் மாணவர்களின் போராட்டத்தை அடுத்து பூதாகரமான நிலையில் மாவட்ட நிர்வாகம் இது குறித்த விசாரணையை தொடங்கியுள்ளது. மேலும் மாணவர்கள் தங்களின் போராட்டத்தைக் கைவிடுமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். 

     

    • தூய்மையான மற்றும் ஆரோக்கியமான கல்விச் சூழலை உருவாக்க இந்த நடவடிக்கை என்று அரசு கூறியுள்ளது
    • மேஜைகளே பற்றாக்குறையாக உள்ள நிலையில் பொதுமக்களின் பணத்தை அரசியலுக்காக செலவிடுகிறது

    ராஜஸ்தானில் கடந்த வருடம் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியமைத்தது. சமீப காலமாக ராஜஸ்தான் அரசு பிறப்பிக்கும் வித்தியாசமான உத்தரவுகள் அரசியல் ரீதியாகப் பேசுபொருளாகி வருகிறது. சமீபத்தில் தெருவில் திரியும் மாடிகளை ஆதரவற்ற மாடுகள் என்றுதான் மரியாதையோடு மக்கள் அழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இந்நிலையில் தற்போது அரசுக் கல்லூரிகளின் நுழைவாயிலில் இருக்கும் கதவுகளுக்கு ஆரஞ்சு நிறம் பூச வேண்டும் என்ற அதிரடி உத்தரவை ராஜஸ்தான் உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

    அதன்படி முதற்கட்டமாக, 10 மண்டலங்களில் உள்ள 20 அரசு கல்லூரிகளின் வாசற்கதவுகளுக்கு அடுத்த 7 நாட்களுக்குள் ஆரஞ்சு நிறம் பூச வேண்டும் என்றும், அதனைப் புகைப்படமாக எடுத்து கல்வித்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கல்லூரியில் சேரும் போதே மாணவர்கள் நேர்மறையாக உணரும் வகையில் கல்லூரிகளின் கல்விச் சூழலும் சூழ்நிலையும் இருக்க வேண்டும். கல்லூரிகளில் நேர்மறையான, தூய்மையான மற்றும் ஆரோக்கியமான கல்விச் சூழலை உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால்  இது கல்வித்துறையைக் காவி மயமாக்கும் முயற்சி என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து பேசியுள்ள காங்கிரஸ் மாணவர் அணியின் மாநில தலைவர் வினோத் ஜாகர், மாநிலத்தில் ஆயிரக்கணக்கான விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கல்லூரிகளுக்கு தேவையான கட்டிட வசதிகள் இல்லை, மேசைகள் இல்லை. ஆனால் இந்த சூழலில் மாநில அரசு பொதுமக்களின் பணத்தை அரசியலுக்காக செலவிடுகிறது என்று தெரிவித்தார்.

    அரசு சார்ந்த நிறுவனங்களான தூர்தர்சன் தொலைக்காட்சி லோகோ , பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனம் லோகோ , வந்தே பாரத் ரெயில்கள் என அனைத்தின் வண்ணமும் காவி நிறத்தை ஒத்த நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

     

     

    • சீனியர்களுக்கு எதிராக போலீசில் புகார் அளித்திருந்தார்.
    • அவரைக் காணவில்லை என்பதும், அவருடன் இருந்த மற்றொரு மாணவரை அவர்களுடன் அழைத்துச் சென்றனர்.

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் ஏழு சீனியர்கள் முதலாம் ஆண்டு மாணவரை கொடூரமான முறையில் ரேகிங் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    திருவனந்தபுரத்தில் உள்ள கரியவட்டம் அரசு கல்லூரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த பிப்ரவரி 11 அன்று கரியவட்டம் அரசுக் கல்லூரியில் சீனியர்களுக்கும் ஜூனியர்களுக்கும் இடையே ஒரு சண்டை நடந்தது. இதில் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் காயமடைந்தார். அவர் சீனியர்களுக்கு எதிராக போலீசில் புகார் அளித்திருந்தார்.

    காவல்துறையிடம் புகார் செய்ததால், சீனியர்கள் மேலும் கோபமடைந்தனர். புகார் அளித்த முதலாமாண்டு மாணவரின் விடுதிக்குள் நுழைந்து அவரை தேடினர். அவரைக் காணவில்லை என்பதும், அவருடன் இருந்த மற்றொரு மாணவரை அவர்களுடன் அழைத்துச் சென்றனர்.

    ஒரு அறையில் வைத்து அந்த ஜூனியர் மாணவரை மண்டியிட்டு உட்கார வைத்து சுமார் ஒரு மணி நேரம் அடித்ததுள்ளனர். குடிக்க தண்ணீர் கேட்டபோது, அதில் எச்சில் துப்பிய பிறகு தண்ணீர் கொடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட மாணவர் தெரிவித்தார். அவர் இந்த தண்ணீரைக் குடிக்க மறுத்தபோது, மேலும் தாக்கப்பட்டார்.

    கல்லூரியின் ராகிங் தடுப்புப் பிரிவு ஜூனியர் மாணவரின் புகாரை விசாரித்தது. கல்லூரி மற்றும் விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளையும் அவர்கள் ஆராய்ந்ததில் நடந்தது உண்மைதான் என்பதை கண்டறிந்து கல்லூரியிடம் அறிக்கை சமர்ப்பித்தனர்.

    அதன் அடிப்படையில் 7 சீனியர் மாணவர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் போலீசார் ராகிங் தடுப்புச் சட்டத்தின கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  

    ×