search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்கு கொசுக்கள் உற்பத்தி: கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்- திருவாரூர் கலெக்டர் உத்தரவு
    X

    டெங்கு கொசுக்கள் உற்பத்தி: கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்- திருவாரூர் கலெக்டர் உத்தரவு

    கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறத்தை முறையாக பராமரிக்காத தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு கலெக்டர், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். #Dengu
    திருவாரூர்:

    திருவாரூர் காட்டுக்கார தெரு, திருமஞ்சன வீதி, தெற்கு வீதி உள்ளிட்ட நகர் பகுதிகளில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல் ராஜ் இன்று காலை டெங்கு கொசு ஒழிப்பு குறித்து நேரடி ஆய்வு நடத்தினார்.

    அப்போது கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறத்தை முறையாக பராமரிக்காத தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு கலெக்டர், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.

    மேலும் ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைக்க வேண்டும் என்று பள்ளி ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் பார்வையிட்டு தேவையற்ற குப்பைகளை பொது வெளியில் கொட்ட வேண்டாம் என கலெக்டர் அறிவுறுத்தினார்.

    பின்னர் திருவாரூர் கலெக்டர் நிர்மல்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை சுற்றுப்புறத்தை முறையாக பராமரிக்காத வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #Dengu
    Next Story
    ×