search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chicken feed production plant"

    கோழித்தீவன உற்பத்தி ஆலையில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் நிலையில் இருந்ததையடுத்து காஞ்சீபுரம் கலெக்டர் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தார். #Dengu
    காஞ்சீபுரம்:

    டெங்கு-பன்றி காய்ச்சலால் ஏற்படும் உயிர் பலியால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் டெங்கு-பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சுகாதார அதிகாரிகள் தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளில் அதிரடி ஆய்வு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை காஞ்சீபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாலு செட்டிசத்திரம், திருப்புட்குழி, ஆரியபெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கலெக்டர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டார்.

    ஆரிய பெரும்பாக்கத்தில் உள்ள கோழித்தீவன உற்பத்தி ஆலையில் ஆய்வு செய்த போது அங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் நிலையில் இருந்தது. இதையடுத்து அந்த ஆலைக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தார். மேலும் ஆலையை உடனடியாக சுகாதாரமாக வைக்க உத்தரவிட்டார். ஆய்வின் போது வட்டார மருத்துவ அலுவலர் அருள் மொழி, வட்டார வளர்ச்சி அலவலர் திருஞானசம் மந்தன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    கலெக்டர் பொன்னையா மாவட்டம் முழுவதும் ஒரகடம் தொழிற்சாலை பகுதிகள், காஞ்சீபுரம் ராஜாஜி மார்க்கெட் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் பொது மக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரகடம் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலைக்கு ஏற்கனவே ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தது இருந்தார். #Dengu
    ×