என் மலர்tooltip icon

    இந்தியா

    கடித்த கொசுவை பிடித்து மாநகராட்சி அலுவலகத்திற்கு எடுத்து வந்த வாலிபர்! - பின்னணி என்ன?
    X

    கடித்த கொசுவை பிடித்து மாநகராட்சி அலுவலகத்திற்கு எடுத்து வந்த வாலிபர்! - பின்னணி என்ன?

    • கொசுவை பரிசோதிக்குமாறு அதிகாரிகளிடம் அந்த இளைஞர் வலியுறுத்தி போராட்டம் நடத்தியுள்ளார்.
    • இதனையடுத்து அந்த இளைஞர் நிம்மதி பெருமூச்சு விட்டார்.

    சத்தீஸ்கர் தலைநகர் ராய்பூரில் தன்னை கடித்த கொசுவை பாலித்தீன் பையில் பிடித்து மாநகராட்சி அலுவலகத்திற்கு எடுத்து வந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

    இளைஞர் ஒருவர் தன்னை கடித்த கொசு டெங்கு கொசுவாக இருக்குமோ என்ற அச்சத்தில் அதனை பிடித்து பாலித்தீன் பையில் அடைத்து மாநகராட்சி அலுவலகத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

    இந்த கொசுவை பரிசோதிக்குமாறு அதிகாரிகளிடம் அந்த இளைஞர் வலியுறுத்தி போராட்டம் நடத்தியுள்ளார். இதையடுத்து மருத்துவர்கள் அந்த கொசுவைப் பரிசோதித்ததில், அது சாதாரண கொசு என்பது உறுதியானது. இதனையடுத்து அந்த இளைஞர் நிம்மதி பெருமூச்சு விட்டார்.

    இந்தச் சம்பவத்தை சுட்டிக்காட்டி, "மாநகராட்சி நிர்வாகம் கொசுக்களைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது" என எதிர்க்கட்சித் தலைவர் ஆகாஷ் திவாரி விமர்சனம் செய்துள்ளார்.

    Next Story
    ×