search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெங்கு கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்
    X

    டெங்கு கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்

    • ஜலதோசம், காய்ச்சல் போன்ற நோய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்
    • அதிகாரி உத்தரவு

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தினமும் விட்டு, விட்டு மழை பெய்து வருகின்றது.

    இதனால் ஜலதோசம், காய்ச்சல் போன்ற நோய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    இந்நிலையில் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் பார்த்துக்கொள்ளும் விதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு விழிப்புணர்வு மற்றும் புகை மருந்து அடிக்கப்பட்டு வருகின்றது.

    அதன்படி பள்ளிகொண்டா பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி உத்தரவின்பேரில் தூய்மை பணியாளர்கள் பேரூராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு புகை மருந்து அடித்து வருகின்றனர்.

    Next Story
    ×