search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rice factory"

    டெங்கு கொசுக்கள் உற்பத்தி ஆகும் வகையில் சுகாதாரமின்றி செயல்பட்டு வந்த 2 அரிசி ஆலைகளுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து காஞ்சீபுரம் கலெக்டர் உத்தரவிட்டார். #Dengu
    காஞ்சீபுரம்:

    தமிழகம் முழுவதும் டெங்கு-பன்றிக் காய்ச்சல் நோய் பரவி உயிர் பலி ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் கலெக்டர் பொன்னையா உத்தரவுப்படி நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கலெக்டர் பொன்னையா மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். அப்போது சுகாதார கேடாக இருக்கும் நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் காஞ்சீபுரம் நகராட்சிக்குட்பட்ட பல்லவர்மேடு, தாயண்குளம், பகுதிகளில் உள்ள அரிசி ஆலைகளில் கலெக்டர் பொன்னையா திடீர் ஆய்வு செய்தார்.

    அப்போது டெங்கு கொசுக்கள் உற்பத்தி ஆகும் வகையில் சுகாதாரமின்றி 2 அரிசி ஆலைகள் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து கலெக்டர் பொன்னையா அந்த 2 அரிசி ஆலைகளுக்கு தலா 12 ஆயிரத்து 500 வீதம் மொத்தம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார்.

    இந்த ஆய்வின் போது நகராட்சி பொறியாளர் மகேந்திரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். #Dengu
    ×