search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் மின் பகிர்மான வட்டத்தில் தட்கல் முறையில் மின் இணைப்பு
    X

    வேலூர் மின் பகிர்மான வட்டத்தில் தட்கல் முறையில் மின் இணைப்பு

    • விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்
    • மின்வாரிய அதிகாரி தகவல்

    வேலூர்:

    வேலூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் மதியழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- தமிழக முதல் அமைச்சரின் உத்தரவுப்படி விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் உள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக விவசாய மின் இணைப்பு பெறும் வகையில் விரைவு (தட்கல்) மின் இணைப்பு வழங்கல் திட்டம் 2017 முதல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.

    விரைவு (தட்கல்)முறையில் ஏற்கெனவே பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கும், தற்போது பதிவு செய்யும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும்.

    எனவே, வேலூர் மின் பகிர்மான வட்டத்துக்குட்பட்ட வேலூர், காட்பாடி, ஆற்காடு, ராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய கோட்டங்களில் ஏற்கெனவே விவசாய மின் இணைப்பு கோரி பதிவு செய்துள்ள விவசாயிகளில் விருப்பம் உள்ளவர்கள் இந்த தட்கல் சிறப்பு திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெறலாம்.

    இதற்காக தங்கள் பகுதி மின்வாரிய செயற் பொறியாளரை (இயக்குதல் மற்றும் பராமரித்தல்) தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×