search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Commissioner of Police"

    • பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
    • நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையின் நிர்வாக அலுவலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    நெல்லை:

    தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் இன்று நெல்லை மாவட்டத் தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து வரு கின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையின் நிர்வாக அலுவலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின்போது நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) பிரவேஷ் குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் ஆகியோர் அங்கு வரவில்லை.

    இதனால் அதிருப்தி அடைந்த உறுதிமொழிக் குழுவினர், இன்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ள ஆய்வுக் கூட்டத்தின் போது, போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    அவ்வாறு விளக்கம் அளிக்க தவறும் பட்சத்தில் இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உள்துறை செயலாளர் மற்றும் டி.ஜி.பி.க்கு பரிந்துரைக்கப்படும் என சட்டமன்ற உறுதி மொழிக்குழு தலைவர் வேல்முருகன் கூறினார்.

    • சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் குணசேகரன் (40). இவரது மனைவி மோகனா (35). கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்த நிலையில் கடந்த 8 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
    • மோகனா இன்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு மண்எண்ணை கேனுடன் வந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவரை அழைத்து விசாரித்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் குணசேகரன் (40). இவரது மனைவி மோகனா (35). கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்த நிலையில் கடந்த 8 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் மோகனாவுடன் குணசேகரன் அடிக்கடி தகராறில் ஈடுபடுவதுடன் சந்தேகப்பட்டு தாக்குவதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மோகனா இன்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு மண்எண்ணை கேனுடன் வந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவரை அழைத்து விசாரித்தனர். பின்னர் மோகனாவின் சொந்த ஊர் ஓமலூர் என்பதால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • காளிமுத்து என்பவர் குட்கா வியாபாரிகளிடம் தொடர்பு வைத்துள்ளதாக புகார் எழுந்தது.

    திருச்சி:

    திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக காமினி பொறுப்பேற்றது முதல் பள்ளி மற்றும் கல்லூரி பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் சமூக விரோத செயல்களை தடுக்கவும், சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வரும் காளிமுத்து என்பவர் குட்கா வியாபாரிகளிடம் தொடர்பு வைத்துள்ளதாக புகார் எழுந்தது.

    அதைத் தொடர்ந்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் தொடர்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் காமினி போலீஸ்காரர் காளி முத்துவை அதிரடியாக சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 20-க்கும் மேற்பட்ட போலீஸ் சோதனை சாவடிகளை பார்வையிட்டார்.
    • முக்கிய பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்கள் உபயோகத்தில் உள்ளனவா? என்று கேட்டறிந்தார்.

    திருநின்றவூர்:

    ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர். இவர் நேற்று இரவு 11 மணி முதல் இன்று அதிகாலை வரை ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார். அம்பத்தூர் பஸ் நிலையத்தில் தொடங்கி அதிகாலை 3 மணி வரை விடிய, விடிய 20-க்கும் மேற்பட்ட போலீஸ் சோதனை சாவடிகளை பார்வையிட்டார்.

    ஆவடி, அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, செங்குன்றம், பூந்தமல்லி, நெமிலிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கமிஷனர் சங்கர் ரோந்து பணியில் ஈடுபட்டு போலீசாரின் இரவுநேரக காவல் பணியை பார்வையிட்டார்.

    அப்போது பணியில் இருந்த போலீசாரிடம் பாதுகாப்பு மற்றும் குறைகள் குறித்து கமிஷனர் கேட்டறிந்தார். மேலும் முக்கிய பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்கள் உபயோகத்தில் உள்ளனவா? என்று கேட்டறிந்தார்.

    சமீபத்தில் செங்குன்றம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட போலீஸ் பூத்தில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் என்று கமிஷனர் சங்கர் உத்தரவிட்டார். கமிஷனர் சங்கரின் இரவு நேர ஆய்வு காரணமாக போலீசார் விடிய, விடிய பரபரப்பாக காணப்பட்டனர்.

    • மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில், மனவளக்கலை பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.
    • மெஜஸ்டிக் குழும நிர்வாக இயக்குனர் கந்தசாமி உட்பட பலர் பேசினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி, உலக சமுதாய சேவா சங்கம், சாமுண்டிபுரம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில், மனவளக்கலை பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். ரவீந்திரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாநகர் போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு சிறப்புரை ஆற்றினார் அப்போது அவர் பேசியதாவது:-

    ''ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு தினமும், 30 நிமிடமாவது யோகா பயிற்சி செய்ய வேண்டும், யோகாவால் மனமும், உள்ளமும் துாய்மையாகும்; ஞாபகசக்தியை அதிகரிக்கும். பயிற்சி முடித்த மாணவர்கள் யோகா பயிற்சி எடுக்க தவறக்கூடாது என்றார்.

    அதன்பின், பயிற்சி முடித்த, 650 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மெஜஸ்டிக் குழும நிர்வாக இயக்குனர் கந்தசாமி உட்பட பலர் பேசினர்.

    என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், பேராசிரியர் சங்கமேஸ்வரன் நிகழ்வை ஒருங்கிணைத்தனர். பேராசிரியர் பாரதி நன்றி கூறினார்.

    • நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
    • எஸ்.பி. அலுவலகத்தில் இன்று பிற்பகல் வரை சுமார் 50-க்கும் மேற்பட்டோர் புகார் மனு கொடுத்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு புகார் மனு கொடுக்கின்றனர்.

    அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பபட்டு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் முகாம் இன்று நடைபெற்றது. இதில் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை வாங்கினார்.

    அப்போது பெறப்பட்ட மனுக்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார். அப்போது பொதுமக்களிடம் கமிஷனர் ராஜேந்திரன் கூறும்போது, புதன்கிழமை மட்டுமின்றி வாரத்தின் அனைத்து நாட்களிலும் வேலை நாட்களில் கமிஷனர் அலுவலக்ததில் புகார் மனு பெறப்படும் என்றார்.

    முகாமில் துணை கமிஷ னர்கள் சீனிவாசன், சரவணக்குமார், தலைமை யிடத்து துணை கமிஷனர் அனிதா மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    எஸ்.பி.அலுவலகம்

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்திலும் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது. இதில் எஸ்.பி.சரவணன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

    ஏற்கனவே புகார் மனு கொடுத்தவர்கள் இன்று வரவழைக்கப்பட்டு அவர்கள் மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை கள் குறித்து அவர்களிடம் தெரி விக்கப்பட்டது. இன்று பிற்பகல் வரை சுமார் 50-க்கும் மேற்பட்டோர் புகார் மனு கொடுத்தனர்.

    நிகழ்ச்சியில் நில அபகரிப்பு சிறப்பு தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. பர்னபாஸ், இன்ஸ்பெக்டர் மீராள் பானு மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    • காவல்துறையின் அனுமதியின்றி நடத்துவதற்கு தடை.
    • ஆர்ப்பாட்டம், ஊர்வலம் மற்றும் உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் நடத்த சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் வருகிற 17-ந் தேதி நள்ளிரவு வரை அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் மற்றும் உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் போன்றவை காவல்துறையின் அனுமதியின்றி நடத்துவதற்கு தடைவிதித்து சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் காவல்துறையின் அனுமதி பெற 5 நாட்கள் முன்பே விண்ணப்பிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

    ×