search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "inform"

    • தமிழ்நாடு கட்டுமான கழகத்தால் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாத கால திறன் பயிற்சி மற்றும் ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
    • ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சியையும் தமிழ்நாடு கட்டுமான கழகம் மற்றும் எல் அண்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையமும் சேர்ந்து நடத்த உள்ளன.

    நெல்லை:

    கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளதாக நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) நா.முருகப்பிரசன்னா தெரிவித்துள்ளர். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திறன் மேம்பாட்டு பயிற்சி

    தமிழ்நாடு கட்டுமான கழகத்தால் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாத கால திறன் பயிற்சி மற்றும் ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

    தமிழ்நாடு கட்டுமான கழகமானது எல் அண்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையத்துடன் இணைந்து மூன்று மாத கால திறன் பயிற்சியை நடத்த உள்ளது. பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்களின் கல்வித்தகுதி 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. படித்து இருக்கலாம். வயது 18-ல் இருந்து 40 ஆக இருத்தல் வேண்டும். கொத்தனார், பற்ற வைப்பவர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துனர், மரவேலை, கம்பி வளைப்பவர் ஆகிய பயிற்சிகள் வழங்கப்படும். பயிற்சிக்கு கட்டணம் ஏதும் கிடையாது. உணவு, தங்குமிடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். மேலும் பயிற்சி பெறுபவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

    மத்திய அரசு சான்றிதழ்

    இதேபோல் ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சியையும் தமிழ்நாடு கட்டுமான கழகம் மற்றும் எல் அண்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையமும் சேர்ந்து நடத்த உள்ளன. பயிற்சி காலம் 7 நாட்கள் ஆகும். தையூரில் அமையவுள்ள தமிழ்நாடு கட்டுமான கழகத்தில் பயிற்சி நடைபெறும். பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்கள் தமிழ் மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது 18-க்கு மேல் இருத்தல் வேண்டும். பயிற்சி பெறுபவர் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்து 3 வருடம் உறுப்பினராக இருத்தல் வேண்டும். கொத்தனார், பற்ற வைப்பவர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துனர், மரவேலை, கம்பி வளைப்பவர் ஆகிய பயிற்சி வழங்கப்படும் தொழில்களாகும். பயிற்சியாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுவதை ஈடுசெய்ய தினமும் ரூ.800 வழங்கப்படும்.

    தமிழ்நாடு கட்டுமான கழகம், எல் அண்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையத்துடன் இணைந்து மத்திய அரசின் கீழ் உள்ள தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.

    இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பயிற்சிகள் வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி தொடங்குகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த 2 மாதங்களில் 110 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளது.
    • ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மையில் கோடை உழவு முக்கிய தொழில்நுட்பமாகும்.

    கோவை,

    கோவையில் தற்போது பெய்து வரும் மழையைப் பயன்படுத்தி கோடை உழவு மேற்கொள்ள விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை இணை இயக்குநர் கா.முத்துலட்சுமி அறிவுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் 110 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளது. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக நிலங்கள் ஈரத்தன்மையுடன் காணப்படுகின்றன. இதனைப் பயன்படுத்தி விவசாயிகள் கோடை உழவு மேற்கொள்ளலாம்.

    கோடை உழவு மேற்கொள்ளப்படும் போது மண்ணில் புதையுண்டு கிடக்கும் பூச்சிகளின் கூட்டுப்புழுக்கள் வெளியே கொண்டுவரப்பட்டு அழிக்கப்படுகின்றன.

    தீமை செய்யும் பூச்சிகளின் கூட்டுப்புழுக்களும், முட்டைகளும் அழிக்கப்படுவதால் அடுத்து சாகுபடி செய்யப்படும் பயிர்களில் நோய், பூச்சி தாக்குதல் குறைந்து பயிர்களின் வளர்ச்சியும், மகசூலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மையில் கோடை உழவு முக்கிய தொழில்நுட்பமாகும். அதேபோல, உழவின் போது களைச்செடிகளும், அதன் விதைகளும் அழிக்கப்படுவதால் பயிர் சாகுபடியின் போது களைகள் பிரச்சனையும் குறைகிறது. கோடை உழவின் மூலம் கிடைக்கும் மழைநீரை வீணாக்காமல் நிலத்துக்குள் சேகரிக்க முடியும். இது மண்ணின் தன்மையை அதிகரித்து காற்றோட்டத்தை ஏற்படுத்தி, நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை அதிகரிக்க செய்கிறது.

    கோடை உழவை சரிவுக்கு குறுக்கே உழவு செய்ய வேண்டும். இதனால், மண் அரிமானம் கட்டுப்படுத்தப்படுகிறது. கோடை உழவு செய்யாத வயல்களில் நீர் வேகமாக வழிந்ேதாடி மண் அரிமானம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, கோடை உழவு செய்வது விவசாயிகளுக்கு பல்வேறு வழிகளில் பயன்களைத் தருகிறது.

    கோடை உழவின் போது ஏக்கருக்கு 100 முதல் 150 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட்டு உழவு செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு மேலும் பல நன்மைகள் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
    • எஸ்.பி. அலுவலகத்தில் இன்று பிற்பகல் வரை சுமார் 50-க்கும் மேற்பட்டோர் புகார் மனு கொடுத்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு புகார் மனு கொடுக்கின்றனர்.

    அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பபட்டு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் முகாம் இன்று நடைபெற்றது. இதில் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை வாங்கினார்.

    அப்போது பெறப்பட்ட மனுக்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார். அப்போது பொதுமக்களிடம் கமிஷனர் ராஜேந்திரன் கூறும்போது, புதன்கிழமை மட்டுமின்றி வாரத்தின் அனைத்து நாட்களிலும் வேலை நாட்களில் கமிஷனர் அலுவலக்ததில் புகார் மனு பெறப்படும் என்றார்.

    முகாமில் துணை கமிஷ னர்கள் சீனிவாசன், சரவணக்குமார், தலைமை யிடத்து துணை கமிஷனர் அனிதா மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    எஸ்.பி.அலுவலகம்

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்திலும் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது. இதில் எஸ்.பி.சரவணன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

    ஏற்கனவே புகார் மனு கொடுத்தவர்கள் இன்று வரவழைக்கப்பட்டு அவர்கள் மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை கள் குறித்து அவர்களிடம் தெரி விக்கப்பட்டது. இன்று பிற்பகல் வரை சுமார் 50-க்கும் மேற்பட்டோர் புகார் மனு கொடுத்தனர்.

    நிகழ்ச்சியில் நில அபகரிப்பு சிறப்பு தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. பர்னபாஸ், இன்ஸ்பெக்டர் மீராள் பானு மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி மாநகர தெற்கு பகுதி மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வடக்கு முத்தையாபுரம் பிரிவு அலுவலகத்தில் நடைபெற்றது.
    • மின்சாரம் தொடர்பான குறைகளை கேட்டறிந்த அதிகாரிகள் குறைகளை நிவர்த்தி செய்வதாக உறுதி அளித்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர தெற்கு பகுதி மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வடக்கு முத்தையாபுரம் பிரிவு அலுவலகத்தில் நடைபெற்றது.

    தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் தலைமை தாங்கினார். தூத்துக்குடி நகர தெற்கு உதவி செயற்பொறியாளர் உமையொருபாகம்,உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம், உதவிபொறியாளர்கள் பெருமாள், சகாயமங்களராணி சுப்புலட்சுமி, இளமின் பொறியாளர்கள் ரமேஷ், சோமலிங்கம், கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்தில் நடைபெற்ற மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்ட முத்தையாபுரம், முள்ளக்காடு, அத்திமரப்பட்டி, சுந்தர் நகர், கிருஷ்ணா நகர், தங்கம்மாள்புரம், பாரதிநகர், சேசுநகர், குமாரசாமி நகர், பொன்னான்டி நகர் ஆகிய பகுதிகளின் மின் நுகர்வோர்கள் தங்கள் குறைகளை கூறினார்.

    அவர்களின் மின்சாரம் தொடர்பான குறைகளை கேட்டறிந்த அதிகாரிகள் குறைகளை நிவர்த்தி செய்வதாக உறுதி அளித்தனர். மேலும் சென்னையில் நடைமுறைப்படுத்துவது போல் தூத்துக்குடியிலும் விரைவில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

    மேலும் அலுவலகர்கள், களப்பணியாளர்கள் அவர்களுக்கு மின்பாதுகாப்பு, மின் நுகர்வோர் சேவை, தடையற்ற மின்சாரம் வழங்குவது குறித்தும் கூட்டத்தில் விளக்கிக் கூறப்பட்டது.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர கவுன்சிலர்கள் வெற்றிச்செல்வன், ராஜதுரை, சுயம்பு, விஜயகுமார் மற்றும் சிவணைந்த பெருமாள், ஜேசுதாஸ், சுப்பிரமணியன் சேகர், ரகுபதி முத்துகிருஷ்ணன் நலச்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி நகர் செயற்பொறியாளர் ராம்குமார் நன்றிகூறினார்.

    ×