search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Smart meter"

    • ஸ்மார்ட் மீட்டரில் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிய முடியும்.
    • மின்வாரியத்துக்கு அரசு வழங்கி வரும் 10 சதவீத மானியம் நிறுத்தப்படும்போது அரசுக்கு நிதிச்சுமை குறையும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் குறு-சிறு தொழில் நிறுவனங்கள் 2 லட்சத்துக்கும் அதிகமாக இயங்கி வருகிறது. சென்னை கிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டை, திருப்பூர், கோவை, ஈரோடு, ராணிப்பேட்டை, திருச்சி, நெல்லை பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் அதிகமாக இந்த தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

    'எம்.எஸ்.எம்.இ' என்று அழைக்கப்படும் இந்நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் மின்சார பயன்பாட்டுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொழிற் கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர். 25 சதவீத கூடுதல் மின்கட்டணத்தை குறைக்க கோரி வலியுறுத்தினார்கள்.

    இதனால் தமிழக அரசு அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. 25 சதவீத கூடுதல் கட்டணத்தை 15 சதவீதமாக அரசு குறைத்தது. மீதி 10 சதவீதத்தை மின் வாரியத்துக்கு அரசு மானியமாக வழங்கியது. இதனால் அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை உருவானது.

    இந்த பேச்சுவார்த்தையின் போது, எலக்ட்ரானிக் மின் மீட்டரை ஜூன் மாதத்திற்கு பிறகு ஸ்மார்ட் மீட்டராக மாற்ற உள்ளதாகவும் அரசு தெரிவித்திருந்தது. அப்போது மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பயன்படுத்தப்படும் மின் பயன்பாட்டை தனியாக கணக்கிட்டு அதன்படி 25 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர்.

    இதன்படி இப்போது சென்னையில் உள்ள எம்.எஸ்.எம்.இ. நிறுவன தொழிற்பேட்டைகளில், எலக்ட்ரானிக் மீட்டரை ஸ்மார்ட் மீட்டராக மாற்றுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    இதற்காக மார்ச் முதல் வாரம் டெண்டர் முடிவு செய்யப்படுகிறது. அதன் பிறகு சென்னையில் உள்ள குறு-சிறு தொழிற்சாலைகளில் 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தும் பணி ஜூன் மாதம் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த ஸ்மார்ட் மீட்டரில் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதை அறிய முடியும்.

    அதேபோல் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை கண்டறிய முடியும்.

    அதன் அடிப்படையில் 25 சதவீதம் கட்டணம் கூடுதலாக கணக்கிட்டு வசூலிக்கப்படும். இதற்காக சென்னை புறநகரில் உள்ள தொழிற்பேட்டைகளில் 10 ஆயிரம் ஸ்மார்ட் மீட்டர்கள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதன்மூலம் மின்வாரியத்துக்கு அரசு வழங்கி வரும் 10 சதவீத மானியம் நிறுத்தப்படும்போது அரசுக்கு நிதிச்சுமை குறையும்.

    • விருப்ப மாறுதல் வழங்க வேண்டும்.
    • ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதை ரத்து செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யூ) சார்பில் முழுநேர தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    இதற்கு மண்டல செயலாளர் ராஜராமன் தலைமை தாங்கினார்.

    தர்ணா போராட்டத்தை கவுரவ தலைவர் கோவிந்தராஜூ தொடங்கி வைத்தார்.

    இந்த போராட்டத்தில், ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதை ரத்து செய்ய வேண்டும்.

    ஈ டெண்டர் முறையில் அவுட்சோர்சிங் விடுவதை ரத்து செய்ய வேண்டும். காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    கேங்மேன் ஊழியர்களுக்கான சலுகைகள், விருப்ப மாறுதல் வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர், பகுதி நேர ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர்.

    சி.ஐ.டி.யூ மாநில செயலாளர் ஜெயபால், மாவட்ட தலைவர் கண்ணன், ஒய்வு பெற்றோர் நல அமைப்பு முனியாண்டி, பொறியாளர் மஞ்சுளா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    இதில் செயலாளர்கள் காணிக்கைராஜ் (தஞ்சை), கலைசெல்வன் (நாகை), ராஜேந்திரன் (திருவாரூர்), தலைவர்கள் அதிதூதமைக்கேல்ராஜ் (தஞ்சை), வெற்றிவேல் (நாகை), சகாயராஜ் (திருவாரூர்), பொருளாளர்கள் சங்கர், கண்ணன்,முகேஷ், மின்வாரிய விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் தி.நகரில் சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது.
    • முதல்கட்டமாக தமிழகத்தின் 12 வட மாவட்டங்களில் நடைமுறைக்கு வரும்.

    சென்னை:

    தமிழகத்தில் தற்போது ஒவ்வொரு வீட்டிலும் எப்படி மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்பதை மின்வாரிய ஊழியர்கள் வீட்டுக்கு நேரில் வந்து மீட்டர் அளவீட்டை கணக்கிட்டு முடிவு செய்கிறார்கள்.

    அவர்கள் கணக்கிட்டு எழுதும் யூனிட் அடிப்படையில் பொதுமக்கள் மின்சார கட்டணம் செலுத்தி வருகிறார்கள்.

    இந்த நடைமுறைக்கு பதில் மின்சார பயன்பாடு அளவை மிக எளிதாக, துல்லியமாக கணக்கிட 'ஸ்மார்ட் மீட்டர்' இணைப்பு திட்டத்தை அமல்படுத்த தமிழக மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கு மறு சீரமைக்கப்பட்ட மின் வினியோக திட்டத்தின் கீழ் மானியம் வழங்குகிறது.

    தமிழகத்தில் முதலில் பரீட்சார்த்த அடிப்படையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் சென்னை தி.நகரில் செயல்படுத்தப்பட்டது. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் தி.நகரில் சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இது வெற்றிகரமாக அமைந்துள்ளது.

    இதையடுத்து தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் ஸ்மார்ட் மீட்டர் மின் இணைப்பை நடைமுறைக்கு கொண்டுவர தமிழ்நாடு மின்வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று (திங்கட் கிழமை) ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் வெளியிடப்படுகிறது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை 3 கட்டமாக செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    முதல்கட்டமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், தருமபுரி உள்பட தமிழகத்தின் 12 வட மாவட்டங்களில் நடைமுறைக்கு வரும். அதன் பிறகு 2-வது, 3-வது கட்டமாக ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும்.

    தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்துக்காக 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்கப்பட உள்ளன. இதில் முதல்கட்டமாக 13 மாவட்டங்களில் 1 கோடியே 17 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் பயன்படுத்தப்படும்.

    2-வது கட்டமாக 1 கோடியே 2 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களும், 3-வது கட்டமாக சுமார் 80 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களும் பயன்படுத்தப்படும்.

    இதற்கான டெண்டர் இன்று வெளியிடப்படும் நிலையில் அடுத்த 45 நாட் களில் இறுதி முடிவுகள் மேற்கொள்ளப்படும். குறிப்பிட்ட காலத்துக்குள் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்தினால் தான் மத்திய அரசின் மறுசீரமைக்கப்பட்ட மின் வினியோகத் திட்டத்தின் கீழ் மானியத்தை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பகிர்மானக் கழகத்தின் இழப்பு 2021-22-ம் ஆண்டில் ரூ.11,955 கோடியில் இருந்து நடப்பாண்டில் ரூ.7,825 கோடியாக குறைய வாய்ப்புள்ளது.
    • தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு அரசால் வழங்கப்படும் மானியங்களுக்காக ரூ.14,063 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    2023-24-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்பு விவரம் வருமாறு:-

    மின் பயன்பாட்டுத் தரவுகளை தானியங்கி முறையில் பெறுவதற்கு, முழு சீரமைக்கப்பட்ட மின் பகிர்மானத் திட்டத்தின் கீழ் கட்டணம் செலுத்தும் அனைத்து நுகர்வோர் இணைப்புகளுக்கும் முன் கூட்டியே கட்டணம் செலுத்தும் வசதியுடன் திறன்மிகு மின் அளவிகள் (ஸ்மார்ட் மீட்டர்) நிறுவப்படும்.

    அரசால் மேற்கொள்ளப்பட்ட அடிப்படைச் சீர்திருத்தங்களின் விளைவாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் நிதிநிலை சற்று மேம்பட்டுள்ளது. இதனால் இக்கழகத்தின் இழப்பு 2021-22-ம் ஆண்டில் ரூ.11,955 கோடியில் இருந்து நடப்பாண்டில் ரூ.7,825 கோடியாக குறைய வாய்ப்புள்ளது.

    இந்த வரவு-செலவு திட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு அரசால் வழங்கப்படும் மானியங்களுக்காக ரூ.14,063 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    • தூத்துக்குடி மாநகர தெற்கு பகுதி மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வடக்கு முத்தையாபுரம் பிரிவு அலுவலகத்தில் நடைபெற்றது.
    • மின்சாரம் தொடர்பான குறைகளை கேட்டறிந்த அதிகாரிகள் குறைகளை நிவர்த்தி செய்வதாக உறுதி அளித்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர தெற்கு பகுதி மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வடக்கு முத்தையாபுரம் பிரிவு அலுவலகத்தில் நடைபெற்றது.

    தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் தலைமை தாங்கினார். தூத்துக்குடி நகர தெற்கு உதவி செயற்பொறியாளர் உமையொருபாகம்,உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம், உதவிபொறியாளர்கள் பெருமாள், சகாயமங்களராணி சுப்புலட்சுமி, இளமின் பொறியாளர்கள் ரமேஷ், சோமலிங்கம், கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்தில் நடைபெற்ற மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்ட முத்தையாபுரம், முள்ளக்காடு, அத்திமரப்பட்டி, சுந்தர் நகர், கிருஷ்ணா நகர், தங்கம்மாள்புரம், பாரதிநகர், சேசுநகர், குமாரசாமி நகர், பொன்னான்டி நகர் ஆகிய பகுதிகளின் மின் நுகர்வோர்கள் தங்கள் குறைகளை கூறினார்.

    அவர்களின் மின்சாரம் தொடர்பான குறைகளை கேட்டறிந்த அதிகாரிகள் குறைகளை நிவர்த்தி செய்வதாக உறுதி அளித்தனர். மேலும் சென்னையில் நடைமுறைப்படுத்துவது போல் தூத்துக்குடியிலும் விரைவில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

    மேலும் அலுவலகர்கள், களப்பணியாளர்கள் அவர்களுக்கு மின்பாதுகாப்பு, மின் நுகர்வோர் சேவை, தடையற்ற மின்சாரம் வழங்குவது குறித்தும் கூட்டத்தில் விளக்கிக் கூறப்பட்டது.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர கவுன்சிலர்கள் வெற்றிச்செல்வன், ராஜதுரை, சுயம்பு, விஜயகுமார் மற்றும் சிவணைந்த பெருமாள், ஜேசுதாஸ், சுப்பிரமணியன் சேகர், ரகுபதி முத்துகிருஷ்ணன் நலச்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி நகர் செயற்பொறியாளர் ராம்குமார் நன்றிகூறினார்.

    ×