search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "official"

    • கோவையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் 1.60 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
    • 1.57 லட்சம் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

    திருப்பூர் :

    பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு வசதியாக கோவையில் பாஸ்போர்ட் சேவை மையமும் சேலம், ராசிபுரம், குன்னூர் மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையங்களும் செயல்படுகின்றன.

    2022-23ம் ஆண்டில் கோவையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் 1.60 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 1.57 லட்சம் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இது 2021ம் ஆண்டை விட 35 சதவீதம் அதிகம்.நடப்பாண்டு மே மாதம் வரை கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் 78 ஆயிரத்து914 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 76 ஆயிரத்து 134 பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் பூபதி கணேஷ் கூறுகையில், பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். பாஸ்போர்ட் குறித்த சந்தேகங்களுக்கு 1800 258 1800 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

    • பயன்படுத்தாத செட்டாப் பாக்ஸ்களை ஜூலை மாத இறுதிக்குள் ஒப்படைக்க வேண்டுமென கேபிள் ஆபரேட்டர்களுக்கு உத்தரவிட்டது.
    • மொத்தம் 532 ஆபரேட்டர்கள் நிறுவனத்துக்கு, கட்டண பாக்கியும் வைத்துள்ளனர்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி., நிறுவனம், கடந்த ஜூன் மாதம் கணக்கிட்டு பயன்படுத்தாத செட்டாப் பாக்ஸ்களை ஜூலை மாத இறுதிக்குள் ஒப்படைக்க வேண்டுமென கேபிள் ஆபரேட்டர்களுக்கு உத்தரவிட்டது. பிறகு செப்டம்பர் மாதம் இறுதிவரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

    இது குறித்து அரசு கேபிள் டி.வி., நிறுவன தனி தாசில்தார் ரவீந்திரன் கூறியதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் அரசு செட்டாப் பாக்ஸ்களை, ஆபரேட்டர்கள் பயன்படுத்தாமல் வைத்துள்ளனர். மொத்தம் 532 ஆபரேட்டர்கள் நிறுவனத்துக்கு, கட்டண பாக்கியும் வைத்துள்ளனர். இவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு முதல்கட்டமாக போலீசில் புகார் அளிக்கப்படுகிறது. திருப்பூர் மாநகர போலீஸ் எல்லையில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, வீரபாண்டி, அனுப்பர்பாளையம், பூண்டி போலீஸ் நிலையங்கள், அவிநாசி, சேவூர், ஊத்துக்குளி, பல்லடம், உடுமலை, அமராவதி, மூலனூர் நிலையங்களில் 14 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    மொத்தம் 56 லட்சம் ரூபாய் அளவுக்கு பாக்கி வைத்துள்ளனர். ஒரு செட்டாப் பாக்ஸ் மதிப்பு 1,726 ரூபாய் என கணக்கிட்டு அதற்கான தொகையை செலுத்தக்கோரி போலீசில் புகார் அளித்து வருகிறோம். மொத்தம் 20 வகை பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஒவ்வொரு பட்டியல் வரிசைப்படி புகார் அளிக்கிறோம் என்றார். 

    • தூத்துக்குடி மாநகர தெற்கு பகுதி மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வடக்கு முத்தையாபுரம் பிரிவு அலுவலகத்தில் நடைபெற்றது.
    • மின்சாரம் தொடர்பான குறைகளை கேட்டறிந்த அதிகாரிகள் குறைகளை நிவர்த்தி செய்வதாக உறுதி அளித்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர தெற்கு பகுதி மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வடக்கு முத்தையாபுரம் பிரிவு அலுவலகத்தில் நடைபெற்றது.

    தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் தலைமை தாங்கினார். தூத்துக்குடி நகர தெற்கு உதவி செயற்பொறியாளர் உமையொருபாகம்,உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம், உதவிபொறியாளர்கள் பெருமாள், சகாயமங்களராணி சுப்புலட்சுமி, இளமின் பொறியாளர்கள் ரமேஷ், சோமலிங்கம், கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்தில் நடைபெற்ற மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்ட முத்தையாபுரம், முள்ளக்காடு, அத்திமரப்பட்டி, சுந்தர் நகர், கிருஷ்ணா நகர், தங்கம்மாள்புரம், பாரதிநகர், சேசுநகர், குமாரசாமி நகர், பொன்னான்டி நகர் ஆகிய பகுதிகளின் மின் நுகர்வோர்கள் தங்கள் குறைகளை கூறினார்.

    அவர்களின் மின்சாரம் தொடர்பான குறைகளை கேட்டறிந்த அதிகாரிகள் குறைகளை நிவர்த்தி செய்வதாக உறுதி அளித்தனர். மேலும் சென்னையில் நடைமுறைப்படுத்துவது போல் தூத்துக்குடியிலும் விரைவில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

    மேலும் அலுவலகர்கள், களப்பணியாளர்கள் அவர்களுக்கு மின்பாதுகாப்பு, மின் நுகர்வோர் சேவை, தடையற்ற மின்சாரம் வழங்குவது குறித்தும் கூட்டத்தில் விளக்கிக் கூறப்பட்டது.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர கவுன்சிலர்கள் வெற்றிச்செல்வன், ராஜதுரை, சுயம்பு, விஜயகுமார் மற்றும் சிவணைந்த பெருமாள், ஜேசுதாஸ், சுப்பிரமணியன் சேகர், ரகுபதி முத்துகிருஷ்ணன் நலச்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி நகர் செயற்பொறியாளர் ராம்குமார் நன்றிகூறினார்.

    • ஏற்றுமதியாளர்களுக்கு நிதி இழப்பு ஏற்படாமல் பாதுகாப்பு அளிக்கிறது.
    • இ.சி.ஜி.சி., கிளைகள் மூலம் நாடு முழுவதும் உள்ள ஏற்றுமதியாளர்களுக்கு பகிரப்படும்.

    திருப்பூர் :

    இ.சி.ஜி.சி., எனப்படும் ஏற்றுமதி காப்பீடு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அரங்கில் நடந்தது. சங்க செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் வரவேற்றார். இதில் சங்க தலைவர் ராஜாசண்முகம் பேசியதாவது:-சிறிய கிராமமாக இருந்த திருப்பூர், இன்று மாவட்டமாக அந்தஸ்து பெற்றுள்ளது.நாட்டின் பின்னலாடை நகராகவும் மாறியுள்ளது.

    தமிழகத்தின் ஏற்றுமதியில், மூன்றாமிடத்தை எட்டிப்பிடித்துள்ளது. பின்னலாடை தொழில் வளர்ச்சியே இதற்கு காரணம்.தொழிலாளராக பணியில் இணைவோர், ஆடை உற்பத்தி நுட்பங்களை கற்றறிந்து, எதிர்காலத்தில் தொழில்முனைவோராக மாறுகின்றனர்.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் உற்பத்தி, அனைத்து நுணுக்கங்களையும் நன்கு தெரிந்துவைத்துள்ளனர்; ஆனால் ஏற்றுமதி ஆவண தயாரிப்பு, இ.சி.ஜி.சி., போன்ற காப்பீடு அவற்றின் அவசியம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை.

    இ.சி.ஜி.சி., சார்பில் மாதம் ஒரு குறைகேட்பு கூட்டம் நடத்தி ஏற்றுமதியாளர் பிரச்னைகளை கேட்டறியவேண்டும். காப்பீடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். இ.சி.ஜி.சி., தென்மண்டல துணை பொதுமேலாளர் சுபாஷ்சாகர் பேசியதாவது:- ஏற்றுமதியாளர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பிய பொருட்களுக்கான தொகை, பல்வேறு காரணங்களால், குறித்த நாட்களுக்குள் வர்த்தகர்களிடமிருந்து கிடைக்காமல் போகவாய்ப்பு உள்ளது. இத்தகைய இக்கட்டான சூழல்களில், ஏற்றுமதியாளர்களுக்கு நிதி இழப்பு ஏற்படாமல் பாதுகாப்பு அளிக்கிறது, இ.சி.ஜி.சி., காப்பீடு.உலக அளவில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் குறித்த முழு விவரங்கள் இ.சி.ஜி.சி., வசம் உள்ளது. குறிப்பிட்ட ஒரு வர்த்தகர் தொகை வழங்காமல் இழுத்தடிக்கும்பட்சத்தில், அவ்விவரங்கள் இ.சி.ஜி.சி., கிளைகள் மூலம் நாடு முழுவதும் உள்ள ஏற்றுமதியாளர்களுக்கு பகிரப்படும்.

    இ.சி.ஜி.சி., குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், காப்பீடு சார்ந்த குறைகள், சிக்கல்களை கண்டறிந்து களையும் வகையிலும், ஏற்றுமதியாளர் சங்கத்துடன் இணைந்து மாதம்தோறும் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படும்.திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் தங்கள் அனைத்து ஆர்டர்களுக்கும், இ.சி.ஜி.சி.,ன் காப்பீடு மூலம் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.

    வர்த்தகரிடமிருந்து குறிப்பிட்ட நாட்களுக்குள் தொகை கிடைக்காவிட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்கவேண்டும். உரிய ஆவணங்களுடன் அணுகினால் வர்த்தகரிடமிருந்து கிடைக்கவேண்டிய தொகை, இ.சி.ஜி.சி., மூலம் சுலபமாக கிடைத்துவிடும்.இவ்வாறு அவர் பேசினார்.இ.சி.ஜி.சி., முடிவில் திருப்பூர் கிளை மேலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் பங்கேற்று காப்பீடு சார்ந்த தங்கள் சந்தேகங்களை கேட்டறிந்தனர்.

    • சட்டம், 2014”, பிரிவு 4-ன்படி உரிமம் பெற வேண்டும் .
    • வழிமுறைகள் குறித்து விவரம் அறிய மற்றும் கருத்துருக்கள் சமர்ப்பிக்க அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசுப்பள்ளிகள் மூலம் நடத்தப்படும் விடுதிகள் "தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் (நெறிமுறைப்படுத்தும்) சட்டம், 2014", பிரிவு 4-ன்படி உரிமம் பெற வேண்டும் .அவ்வாறு உரிமம் பெறாது நடத்தும் விடுதிகள் மேற்படி சட்டப்பிரிவு 20-ன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆதலால் அனைத்து தனியார் மற்றும் அரசுப்பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து வகையான விடுதிகளும் உரிமம் பெற்று நடத்திட விடுதி உரிமம் பெறுவதற்கான விண்ணப்பம் மற்றும் வழிமுறைகள் குறித்து விவரம் அறிய மற்றும் கருத்துருக்கள் சமர்ப்பிக்க மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:

    மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு , மாவட்ட ஆட்சியர் வளாகம், தளம்-6, அறை எண் : 627, பல்லடம் ரோடு , திருப்பூர். தொலைபேசி : 0421 - 2971198, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம்)கைபேசி எண் : 6382614880.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

    வீட்டு வேலைக்கார பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.700 இருந்தது, 32 மாதங்களில் சொத்து மதிப்பு ரூ.75 லட்சமாக அதிகரித்துள்ளது. அந்த பெண், அவருக்கு வேலை கொடுத்த சென்னை அரசு அதிகாரி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
    புதுடெல்லி:

    இது ஏதோ கடின உழைப்பால் உயர்ந்த ஒருவரின் கதை போல இருக்கலாம் என நீங்கள் கருதினால் ஏமாந்துபோவீர்கள். இது, தான் தப்பித்துக்கொள்வதற்காக கள்ளத்தனமாக சேர்த்த சொத்துகளை வேலைக்கார பெண்ணின் பெயரில் வாங்கிய ஒரு அரசு அதிகாரியின் செயல்.

    சென்னையில் உள்ள மத்திய அரசு நிறுவனமான பெட்ரோலியம் வெடிபொருள் மற்றும் பாதுகாப்பு அமைப்பில் இணை தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டாளராக பணியாற்றியவர் ஏ.கே.யாதவ். இவர் இந்த பதவியில் 2015-ம் ஆண்டு ஆகஸ்டு 12-ந்தேதியில் இருந்து 2018-ம் ஆண்டு ஏப்ரல் 7-ந்தேதி வரை பணியில் இருந்தார். பின்னர் அவர் ஓய்வுபெற்றார்.

    இந்த காலகட்டத்தில் அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ.க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தியதில் யாதவ் ரூ.98.89 லட்சம், அதாவது அவரது சட்டபூர்வ வருமானத்தைவிட 311.30 சதவீதம் அதிகமான சொத்து வைத்துள்ளதாக தெரியவந்தது.

    ஓய்வுபெறும்போது அவரது சொத்து மதிப்பு ரூ.1.37 கோடி. அவை அவரது பெயரிலும், அவரது வீட்டில் வேலை செய்துவந்த பெண் சரிதா என்பவர் பெயரிலும் இருந்தது. யாதவின் சட்டபூர்வ வருமானம் ரூ.31.76 லட்சம் மட்டும் தான். இதில் அவரது செலவுகள் போக ரூ.98.89 லட்சம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.



    சரிதா 2015-ம் ஆண்டு வேலைக்கு சேர்ந்தபோது அவரது வங்கி கணக்கில் ரூ.700 இருந்தது. 32 மாதங்களில் அவரது அசையா சொத்துகள் ரூ.44.35 லட்சமாகவும், அசையும் சொத்துகள் ரூ.30.94 லட்சமாகவும் இருந்தது. இதில் வங்கியில் இருப்பு தவிர 2 இடங்களில் வீட்டுமனை, ஒரு வீடு, 547 கிராம் தங்கம் ஆகியவையும் அடங்கும். ஆனால் சரிதாவின் வருமானம் மாதம் ரூ.8,300 சம்பளம் வீதம் இந்த காலகட்டத்தில் மொத்தம் ரூ.2.66 லட்சம் மட்டுமே.

    இதுதவிர இதர சொத்துகள் ஏ.கே.யாதவ் மற்றும் அவரது மனைவி புஷா பெயரிலும் இருந்தன. இதிலிருந்து யாதவ் தனது வீட்டு வேலைக்கார பெண் பெயரில் சொத்துகளை வாங்கி தப்பிக்க நினைத்தது தெரியவந்தது. யாதவின் ஏஜெண்டாக டி.வி.கே.குமரேசன் என்பவர் செயல்பட்டு வந்ததும் சி.பி.ஐ. விசாரணையில் தெரிந்தது.

    இதனைத்தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் ஏ.கே.யாதவ், குமரேசன், சரிதா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    சென்னிமலை அருகே குடிநீர் தட்டுப்பாடு காரணமாக அதிகாரியின் ஜீப்பை சிறை பிடித்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், முகாசிபிடாரியூர் ஊராட்சி மற்றும் ஓட்டப்பாறை ஊராட்சி பகுதிகளுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

    நாள் ஒன்றுக்கு முகாசி பிடாரியூர் ஊராட்சி பகுதிக்கு 5 லட்சம் லிட்டரும். ஓட்டப்பாறை ஊராட்சிக்கு 2.75 லிட்டரும் சப்ளை செய்யப்பட வேண்டும். கடந்த 20 நாட்களாக காவிரியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் மின் மோட்டார்கள் நீரில் முழ்கி குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்பட்டனர்.

    இந்த நிலையில் தற்போது மின் மோட்டார் சரி செய்யப்பட்டு தண்ணீர் சப்ளை ஆகிறது. இதில் முகாசிபிடாரியூர் ஊராட்சி பகுதிக்கு மட்டும் குடிநீர் சப்ளை ஆகி உள்ளது. ஓட்டப்பாறை கிராம பகுதிகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படவில்லை. இதற்கு ஓட்டப்பாறை கிராமமக்கள் சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

    அதில் முகாசிபிடாரியூர் ஊராட்சி பகுதியில் வீட்டு இணைப்புகள் அனைத்தும் காவிரி கூட்டு குடிநீர் திட்ட மெயின் குழாய்களில் கொடுத்துள்ளதால் ஓட்டப்பாறை ஊராட்சி பகுதிக்கு தண்ணீர் வருவதில்லை என கூறி உள்ளனர்.

    இதை ஆய்வு செய்ய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் ஜீப்பில் வந்து என்.பி.என்., காலனி பகுதியில் உள்ள நீர் ஏற்றும் தரை தொட்டியை பார்வையிட்டனர்.

    அப்போது அங்கு திரண்ட பொதுமக்கள் எங்களுக்கு வழங்க வேண்டிய நீரில் அளவினை சரியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து அதிகாரிகள் வந்த ஜீப்பை சிறை பிடித்து பெண்கள் கோரிக்கை வைத்தனர்.

    ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேல் பொதுமக்களை சமாதானம் செய்து இனி வரும் நாட்களில் கூடுதல் தண்ணீர் கொடுத்து குறிப்பிட்ட அளவு தண்ணீர் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். #tamilnews
    மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டது குறித்து பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    மதுரை:

    நாகர்கோவிலைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு, மாசுக்கட்டுப் பாட்டு வாரியத் தலைவராக பணியாற்றி வந்த அதிகாரி நசிமுதீன், அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

    நசிமுதீனுக்கு பதிலாக சுற்றுச்சூழல் துறை செயலாளராகவும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ள மூத்த. ஐ.ஏ.எஸ். அதிகாரி ‌ஷம்பு கல்லோலிகரும் சிறந்த அதிகாரி ஆவார்.

    ஆனாலும், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நசிமுதீனுக்கு இருக்கும் புரிதலும், அனுபவமும் புதிய அதிகாரி ‌ஷம்பு கல்லோலிகருக்கு இருக்க வாய்ப்பில்லை.

    அடுத்த. சில நாட்களில் தேசியப் பசுமைத் தீர்ப்பாய குழுவின் விசாரணை தொடங்கவுள்ள நிலையில், அதற்குள்ளாக ஸ்டெர்லைட் குறித்த அனைத்து பின்னணி தகவல்களையும் அறிந்து கொண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்வது சாத்தியமற்றதாகும். இது ஸ்டெர்லைட் விவகாரத்தில் பின்னடைவை ஏற்படுத்தும்.

    எனவே, கடந்த 23-ந் தேதி தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரிய தலைவராக இருந்த நசிமுதீனை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின் படி விதிகளை உருவாக்க வேண்டும்.

    மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஸ் என்.சதீஷ்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் ஹென்றி திபேன் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது குறித்து ஆராயும் குழுவில் மாசுக்கட்டுப்பாடு வாரிய தலைவர் நசிமுதீன் உள்ளார்.

    அவருக்கு தான் ஸ்டெர்லைட் ஆலை சம்பந்தமான அனைத்து விபரங்களும் தெரிந்து இருக்கும். அவரது பணியிட மாறுதல் பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுவது போல் உள்ளது.

    அதை கேட்டுக் கொண்ட நீதிபதிகள், பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் சம்பந்தமான விசாரணையில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பழைய அதிகாரி நதிமுதீனும், புதிய அதிகாரியாக பொறுப்பேற்க உள்ள ‌ஷம்பு கல்லோலிக்கரும் இணைந்து ஒத்துழைக்க முடியுமா என தமிழக அரசிடம் கேட்டு தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.

    பின்னர் வழக்கு விசாரணையை வருகிற 3-ந் தேதிக்கு தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

    விழுப்புரம் மாவட்டத்தில் சுதந்திர தின விழா ஏற்பாடுகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் கலெக்டர் சுப்பிரமணியன் ஆலோசனை நடத்தினார்.
    விழுப்புரம்:

    நாட்டின் 72-வது சுதந்திர தின விழா அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாக அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, சப்-கலெக்டர்கள் சாருஸ்ரீ, மெர்சிரம்யா, உதவி கலெக்டர் (பயிற்சி) சரவணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கார்த்திகேயன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் சுப்பிரமணியன் பேசியதாவது:-

    சுதந்திர தின விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் அனைத்துத்துறை அதிகாரிகளும் செய்திட வேண்டும், சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்ட தியாகிகளை கவுரவிப்பதோடு அவர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தவும் ஏற்பாடு செய்ய வேண்டும், கல்வித்துறையினர் மாணவ- மாணவிகள் மூலம் சிறப்பான கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும், அரசுத்துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களை தேர்வு செய்து பரிசு வழங்க வேண்டும். காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய போலீசாரை பாராட்டி சான்றிதழ் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 
    ×