search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Knitwear Exporters"

    • ஏற்றுமதி படிப்படியாக அதிகரிக்கும் என்று நம்பிக்கையில் உள்ளோம்.
    • தொகையை ரெப்போ விகிதத்தில் ரிசர்வ் வங்கி மறுநிதியளித்துக்கொள்ளலாம்.

     திருப்பூர் :

    ரெப்போ விகித உயர்வு பாதிப்பில் இருந்து தடுக்க, வட்டி சமன்படுத்தும் திட்டத்தில் வட்டி மானியத்தை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறியதாவது:- ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 6.5 சதவீதமாக உயர்த்தி உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. உலக அளவில் பொருளாதாரத்தில் நிலவி வரும் ஏற்ற இறக்க சூழ்நிலை, பணவீக்கம், மூலதனத்தின் ஓட்டத்தை கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. சமீபத்தில் அமெரிக்க மத்திய வங்கியும் 25 அடிப்படை புள்ளிகளையும், பாங்க் ஆப் இங்கிலாந்து 50 அடிப்படை புள்ளிகளையும் உயர்த்தியது.

    வெளிநாட்டு பணங்களில் அதிக ஏற்ற இறக்கம், பணவீக்கம், மக்களிடம் வாங்கும் சக்தி குறைதல், பொருளாதார மந்தநிலை போன்றவற்றால் உலக வெளிநாட்டு வர்த்தகம் கடினமான கட்டத்தை கடந்து வருகிறது. ஏற்றுமதி கடன் விகிதங்களில் மேலும் அதிகரிப்பு என்பது போட்டித்தன்மையை மழுங்கடிக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

    குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் பணத்தின் அதிக ஏற்ற இறக்கம் உள்ள நாடுகளின் வர்த்தகத்தை நமது போட்டியாளர்களிடம் இருந்து நாம் இழந்து வருகிறோம். கொரோனா காலத்துக்கு முந்தைய நிலையை விட வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ளதால் வட்டி சமன்படுத்தும் திட்டத்தில் வட்டி மானியத்தை அனைத்து சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் 5 சதவீதமாக அதிகரிக்க வேண்–டும்.

    அன்னிய செலாவணியில் ஏற்றுதிக்கடன் காலத்தை 180 நாட்களில் இருந்து 365 நாட்களாக நீட்டிக்க வேணடும். ஏற்றுமதி மறுநிதியளிப்பு வசதியை வங்கிகளுக்கும் நீட்டிக்க வேண்டும். ஏற்றுமதியளர்களுக்கு ஏற்றுமதி கடனை ரூபாயில் வழங்க வங்கிகள் ஊக்குவிக்கப்படலாம். அதே தொகையை ரெப்போ விகிதத்தில் ரிசர்வ் வங்கியால் மறுநிதியளிப்பு செய்யலாம். இது குறித்து மத்திய நிதி மந்தி–ரிக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

    திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கூறியதாவது:- ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தியுள்ளதால் வங்கிகள் கடன் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்று ஏற்றுமதியாளர்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

    இது திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களின் நிதி செயல்திறனை நேரடியாக பாதிக்கும். ஏற்றுமதியில் டாலரை பொறுத்தவரை திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி கடந்த ஆகஸ்டு மாதம் முதல் எதிர்மறை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஏற்றுமதி குறைந்துள்ளது. வரும் மாதங்களில் ஏற்றுமதி படிப்படியாக அதிகரிக்கும் என்று நம்பிக்கையில் உள்ளோம்.

    வட்டி விகித உயர்வில் இருந்து பாதுகாக்க, ஏற்றுமதிக்கடனை அதிகரிக்க வங்கிகளுக்கு ஏற்றுமதி மறு நிதியளிப்பு திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். அதுபோல் வட்டி சமன்படுத்தும் திட்டத்தில் வட்டி மானியத்தை 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக அதிகரிப்பது காலத்தின் தேவையாக உள்ளது. இதை ரிசர்வ் வங்கி கவர்னர் செயல்படுத்திக்கொடுக்க வேண்டும். ரூபாய் மதிப்பில் வங்கிகள் ஏற்றுமதிக்கடனை வழங்க வேண்டும். ஏற்றுமதியாளர்களுக்கும் அதே தொகையை ரெப்போ விகிதத்தில் ரிசர்வ் வங்கி மறுநிதியளித்துக்கொள்ளலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.  

    • ஏற்றுமதியாளர்களுக்கு நிதி இழப்பு ஏற்படாமல் பாதுகாப்பு அளிக்கிறது.
    • இ.சி.ஜி.சி., கிளைகள் மூலம் நாடு முழுவதும் உள்ள ஏற்றுமதியாளர்களுக்கு பகிரப்படும்.

    திருப்பூர் :

    இ.சி.ஜி.சி., எனப்படும் ஏற்றுமதி காப்பீடு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அரங்கில் நடந்தது. சங்க செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் வரவேற்றார். இதில் சங்க தலைவர் ராஜாசண்முகம் பேசியதாவது:-சிறிய கிராமமாக இருந்த திருப்பூர், இன்று மாவட்டமாக அந்தஸ்து பெற்றுள்ளது.நாட்டின் பின்னலாடை நகராகவும் மாறியுள்ளது.

    தமிழகத்தின் ஏற்றுமதியில், மூன்றாமிடத்தை எட்டிப்பிடித்துள்ளது. பின்னலாடை தொழில் வளர்ச்சியே இதற்கு காரணம்.தொழிலாளராக பணியில் இணைவோர், ஆடை உற்பத்தி நுட்பங்களை கற்றறிந்து, எதிர்காலத்தில் தொழில்முனைவோராக மாறுகின்றனர்.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் உற்பத்தி, அனைத்து நுணுக்கங்களையும் நன்கு தெரிந்துவைத்துள்ளனர்; ஆனால் ஏற்றுமதி ஆவண தயாரிப்பு, இ.சி.ஜி.சி., போன்ற காப்பீடு அவற்றின் அவசியம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை.

    இ.சி.ஜி.சி., சார்பில் மாதம் ஒரு குறைகேட்பு கூட்டம் நடத்தி ஏற்றுமதியாளர் பிரச்னைகளை கேட்டறியவேண்டும். காப்பீடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். இ.சி.ஜி.சி., தென்மண்டல துணை பொதுமேலாளர் சுபாஷ்சாகர் பேசியதாவது:- ஏற்றுமதியாளர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பிய பொருட்களுக்கான தொகை, பல்வேறு காரணங்களால், குறித்த நாட்களுக்குள் வர்த்தகர்களிடமிருந்து கிடைக்காமல் போகவாய்ப்பு உள்ளது. இத்தகைய இக்கட்டான சூழல்களில், ஏற்றுமதியாளர்களுக்கு நிதி இழப்பு ஏற்படாமல் பாதுகாப்பு அளிக்கிறது, இ.சி.ஜி.சி., காப்பீடு.உலக அளவில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் குறித்த முழு விவரங்கள் இ.சி.ஜி.சி., வசம் உள்ளது. குறிப்பிட்ட ஒரு வர்த்தகர் தொகை வழங்காமல் இழுத்தடிக்கும்பட்சத்தில், அவ்விவரங்கள் இ.சி.ஜி.சி., கிளைகள் மூலம் நாடு முழுவதும் உள்ள ஏற்றுமதியாளர்களுக்கு பகிரப்படும்.

    இ.சி.ஜி.சி., குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், காப்பீடு சார்ந்த குறைகள், சிக்கல்களை கண்டறிந்து களையும் வகையிலும், ஏற்றுமதியாளர் சங்கத்துடன் இணைந்து மாதம்தோறும் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படும்.திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் தங்கள் அனைத்து ஆர்டர்களுக்கும், இ.சி.ஜி.சி.,ன் காப்பீடு மூலம் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.

    வர்த்தகரிடமிருந்து குறிப்பிட்ட நாட்களுக்குள் தொகை கிடைக்காவிட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்கவேண்டும். உரிய ஆவணங்களுடன் அணுகினால் வர்த்தகரிடமிருந்து கிடைக்கவேண்டிய தொகை, இ.சி.ஜி.சி., மூலம் சுலபமாக கிடைத்துவிடும்.இவ்வாறு அவர் பேசினார்.இ.சி.ஜி.சி., முடிவில் திருப்பூர் கிளை மேலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் பங்கேற்று காப்பீடு சார்ந்த தங்கள் சந்தேகங்களை கேட்டறிந்தனர்.

    • கொரோனாவுக்குப்பின் கொழும்பு துறைமுக செயல்பாடுகள் மந்தமாகியுள்ளன.
    • திருப்பூரிலிருந்து 70 சதவீத பின்னலாடைகள், சென்னை துறைமுகம் வாயிலாகவே அனுப்ப வேண்டியுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள், பின்னலாடை ரகங்களை வெளிநாடுகளுக்கு கடல் வழியே ஏற்றுமதி செய்கின்றன. இதற்கு தூத்துக்குடி மற்றும் கொச்சி துறைமுகங்களையே திருப்பூர் நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்தி வந்தன.தூத்துக்குடி துறைமுகத்துக்கு அனுப்பப்படும் சரக்குகள், சிறிய கப்பல்களில் (பீடர் வெசல்) ஏற்றப்பட்டு, கொழும்பு சென்று அங்கு பெரிய கப்பலுக்கு (மதர் வெசல்) மாற்றப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.

    கொரோனாவுக்குப்பின் கொழும்பு துறைமுக செயல்பாடுகள் மந்தமாகியுள்ளன. இதனால் சரக்குகள் வெளிநாடுகளை சென்றடைய தாமதமாகிறது. இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:-

    தூத்துக்குடி துறைமுகத்துக்கு அனுப்பும் சரக்குகள், கொழும்புவை அடைந்து பெரிய கப்பல்களில் ஏற்றப்படுவதற்கு இரண்டு வாரத்துக்கு மேலாகிறது. சீசனுக்காக தயாரிக்கப்படும் ஆடைகள் குறிப்பிட்ட நாட்களுக்குள் வெளிநாட்டைச் சென்றடைவது அவசியம். தாமதத்தை வெளிநாட்டு வர்த்தகர்கள் விரும்புவதில்லை.திருப்பூரின் 90 சதவீத சரக்கு போக்குவரத்துக்கு கைகொடுத்துவந்த தூத்துக்குடி துறைமுகத்தை புறக்கணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.சென்னையில் போதுமான சரக்கு ஏற்றப்பட்டால் பல பெரிய கப்பல்கள் கொச்சி துறைமுகத்தை புறக்கணித்து விடுகின்றன. திருப்பூரிலிருந்து 250 கி.மீ., தூரத்தில் கொச்சி, 330 கி.மீ.,ல் தூத்துக்குடி துறைமுகங்கள் இருந்தாலும், இந்த துறைமுகங்களை பயன்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன.

    விரைவில் சரக்கை அனுப்ப 500 கி.மீ., தொலைவில் உள்ள சென்னை துறைமுகத்தை நாட வேண்டியுள்ளது. செலவும் அதிகரிக்கிறது.திருப்பூரிலிருந்து 70 சதவீத பின்னலாடைகள், சென்னை துறைமுகம் வாயிலாகவே அனுப்ப வேண்டியுள்ளது. தூத்துக்குடி துறைமுக அதிகாரிகளின் அலட்சியமும், தொலைநோக்கு பார்வையில்லாததும், தமிழக ஏற்றுமதி, இறக்குமதியாளர்களை பாதிக்க செய்கிறது.எனவே, துறைமுக கடல் பகுதியை ஆழப்படுத்தி, தூத்துக்குடிக்கு பெரிய கப்பல்கள் நேரடியாக வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கொழும்பு துறைமுக சார்பு நிலை தொடர்ந்தால், தூத்துக்குடி துறைமுக வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    ×