என் மலர்
நீங்கள் தேடியது "தூத்துக்குடி துறைமுகம்"
- கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- மீன்பிடி துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
தூத்துக்குடி:
வங்கக்கடல் பகுதியில் இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வங்கக்கடலில் இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலை கொண்டு வருகிறது.
இலங்கை கடல் பகுதியில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது,
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரிம், ஆந்திர கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கடல் பகுதியிலும் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுத்து அறிவித்துள்ளது
இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 4-வது நாளாக விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மற்றும் விசைப்படகுகள் மீன்பிடி துறைமுக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக மீன்பிடி துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாத காரணத்தால் மாவட்டம் முழுவதும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வங்கக்கடலில் உருவாகி உள்ள இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை தூத்துக்குடி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
- அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும்.
- மன்னார் வளைகுடா, கொமாரின் பகுதி, அதை ஒட்டிய தமிழக கடற்கரையில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும்.
இதுதவிர தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்றும் நிலவுகிறது. இதன் காரணங்களால் தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை நீடிக்கும் என்றும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
மன்னார் வளைகுடா, கொமாரின் பகுதி, அதை ஒட்டிய தமிழக கடற்கரையில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். சில சமயங்களில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
- தூத்துக்குடி துறைமுகத்தில் இன்று 1-ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
- மீன்வளத்துறை சார்பில் மீனவர்கள் கடலுக்கு மீன்படிக்க செல்ல வேண்டாம் எனவும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:
வானிலை மாற்றம் காரணமாக கடலோர பகுதியில் அதிக காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் ஏற்பட்டுள்ளது. பலமான காற்று வீசக்கூடும் என்பதனை வலியுறுத்தும் வகையில் தூத்துக்குடி துறைமுகத்தில் இன்று 1-ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மேலும் மீன்வளத்துறை சார்பில் மீனவர்கள் கடலுக்கு மீன்படிக்க செல்ல வேண்டாம் எனவும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இதனால் இன்று விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. சுமார் 260 விசைப்படகுகள் இன்று தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை.
- போலீசார் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் பகுதியில் நேற்று நள்ளிரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- சந்தேகத்திற்கு இடமாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 11 பேரல்களில் 2,200 லிட்டர் டீசல் இருந்தது தெரியவந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் வழியாக வாகனம் மூலம் டீசல் கடத்தி செல்லப்படுவதாக தூத்துக்குடி தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைதொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுரைப்படி சப்-இன்ஸ்பெக்டர் சேகர், தனிப்பிரிவு காவலர்கள் ராஜேஷ் குமார், ஆனந்த கிருஷ்ணன், ஜான்சன், செல்வின் ராஜா, முருகேசன், கிளிப்டன் மற்றும் போலீசார் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் பகுதியில் நேற்று நள்ளிரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 11 பேரல்களில் 2,200 லிட்டர் டீசல் இருந்தது தெரியவந்தது. அவை கீழ அரசரடியில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்டதும் தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து டீசலுடன் வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் வாகனத்தை ஓட்டி வந்த தூத்துக்குடி வர்த்தக ரெட்டிபட்டி தெற்கு தெருவை சேர்ந்த முத்துசாமி (வயது 24) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
மேலும் கடத்தலில் தொடர்புடை யவர்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைத்தனர்.
- பாரத் கப்பலில் உள்ள கிரேன் மூலம் லாரிகளில் இருந்து நிலக்கரியை கப்பலில் ஏற்றி கொண்டிருந்தார்.
- தெர்மல்நகர் கடலோர காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் பனாமா நாட்டின் கியானா கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் எகிப்து நாட்டுக்கு நிலக்கரி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதனை தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் உள்ள மீனவர் காலனி பகுதியை சேர்ந்த பாரத் (வயது40) என்பவர் லேபர் காண்ட்ராக்ட் மூலம் பணிகளை செய்து வந்தார். அதன்படி கப்பலில் உள்ள கிரேன் மூலம் லாரிகளில் இருந்து நிலக்கரியை கப்பலில் ஏற்றி கொண்டிருந்தார்.
அப்போது திடீரென கிரேன் உடைந்து கப்பலின் உள்ளே அவர் கிரேனுடன் விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கு நின்றவர்கள் உடனடியாக மற்றொரு கிரேன் மூலமாக பாரத்தை மீட்டனர்.
அவருக்கு தலையில் பலத்த காயத்துடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தெர்மல்நகர் கடலோர காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெளி துறைமுக கப்பல், தூத்துக்குடி துறைமுகத்திற்குள் கப்பலில் உள்ள பொருட்களை இறக்கும் போதும், ஏற்றும் போதும் பாதுகாப்பு அதிகாரிகள் கப்பலில் சோதனையிட வேண்டும்.
அதன் பின்னரே கப்பலில் உள்ள பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும். ஆனால் அதிகாரிகள் சோதனை செய்வதில்லை.
இதனாலேயே இந்த சம்பவம் நடைபெற்றதாக துறைமுக தொழிலாளர்கள் புகார் தெரிவித்தனர்.
- தமிழகம், புதுச்சேரியில் வரும் 27-ந்தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
- ஹாமூன் புயல் அதிதீவிர சூறாவளி புயலாக வலுப்பெற்று உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்தது.
தூத்துக்குடி:
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற கூடும் என அறிவித்தது. மேலும் புயலாக வலுப்பெற்று வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை ( 25-ந் தேதி) அதிகாலை வங்காளதேசம் டிங்கோனா தீவு-சந்திவிப் இடையே கரையை கடக்கும்.
இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் வரும் 27-ந்தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், தென் கிழக்கு, மத்திய கிழக்கு வங்கக்கடல், ஒடிசா, மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்தது.
இந்நிலையில் ஹாமூன் புயல் அதிதீவிர சூறாவளி புயலாக வலுப்பெற்று உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்தது. மேலும் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன்படி, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
- அம்பர் கிரீஸ் மற்றும் கொட்டப்பாக்குகள் கடத்தல் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.
- கண்டெய்னர்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு விரலி மஞ்சள் உள்ளிட்ட மருத்துவ குணம் கொண்ட பொருட்களும், கஞ்சா, அபின் போன்ற போதை பொருட்களும் படகுகள் மூலம் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது.
இதனை தடுக்க கடலோர காவல் படையினரும், போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே அம்பர் கிரீஸ் மற்றும் கொட்டப்பாக்குகள் கடத்தல் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.
நேற்று துபாயில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்ட கண்டெய்னர்களை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியதில் சுமார் ரூ.2½ கோடி மதிப்பிலான 28 டன் கொட்டை பாக்குகள் மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு சட்டவிரோதமாக கொட்டை பாக்குகள் கடத்தி வரப்படுவதாக சென்னை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இன்று தூத்துக்குடி துறைமுகத்திற்கு சென்று, அங்கிருந்த கண்டெய்னர்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது இயற்கை உரங்கள் கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்ட 2 கண்டெய்னர்களில் சோதனை நடத்தினர். அதில் சுமார் 25 டன் எடையுள்ள கொட்டை பாக்குகள் மூட்டை, மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
இதன் மதிப்பு ரூ. 2 கோடியே 60 லட்சம் ஆகும். இதனை கைப்பற்றிய மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதில் இருந்த சிலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சரக்கு பெட்டக முனையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.
- இது இந்தியாவின் கடல் உள்கட்டமைப்பின் புதிய நட்சத்திரம்.
தூத்துக்குடி துறைமுகத்தில் புதிய சர்வதேச சரக்கு பெட்டக முனையத்தை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-
விக்சித் பாரத யாத்திரையில் இது ஒரு முக்கியமான கட்டமாகும்.
இந்த புதிய தூத்துக்குடி சர்வதேச கொள்கலன் முனையம் இந்தியாவின் கடல் உள்கட்டமைப்பின் புதிய நட்சத்திரம். இந்த புதிய முனையத்தின் மூலம், வ.உ.சிரதம்பரனார் துறைமுகத்தின் திறன் விரிவடையும்.
இது வ.உ.சி துறைமுகத்தில் தளவாடச் செலவுகளைக் குறைக்கும் மற்றும் இந்தியாவின் அன்னிய செலாவணியை காப்பாற்றும்.
இவ்வாறு அவர் குறி்பபிட்டுள்ளார்.
- வ.உ.சி. துறைமுகம் வழியாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
- போதைப்பொருள் கடத்தலுக்கு துறைமுகத்தில் பணிபுரிந்த மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர் மாரிமுத்து உதவியது தெரியவந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள பழைய வ.உ.சி. துறைமுகம் வழியாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து பழைய துறைமுகத்திற்கு வரும் நபர்கள் குறித்து தீவிர கண்காணிப்பில் மத்திய வருவாய் புலனாய்வு துறை உதவி இயக்குனர் முரளி தலைமையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இதில் நேற்று இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் தோணி மூலம் மாலத்தீவு நாட்டிற்கு 12 கிலோ செறிவூட்டப்பட்ட கஞ்சா ஆயில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதனுடைய சர்வதேச மதிப்பு ரூ. 30 கோடி என்றும் தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் பணிபுரிந்த மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர் மாரிமுத்து உதவியதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கடத்தலில் தொடர்புடைய தூத்துக்குடி பாத்திமா நகரை சேர்ந்த சுதாகர் (வயது36), ஜேசுராஜ் (34), தோணியின் மாலுமியான கிங்சிலி (56), மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் மாரிமுத்து ஆகிய 4 பேரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி பழைய துறைமுக பகுதியில் இருந்து மத்திய தொழிற் பாதுகாப்படை வீரர் துணையுடன் தோணி மூலம் போதைப்பொருள் கடத்த இருந்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல் துறைமுகத்தில் இருந்து வெளியேற்றப்படும் பல கோடிக்கணக்கான ரூபாய் பொருட்கள் அதிகாரிகள் உடந்தையுடன் வெளி ஆட்கள் உதவிகள் மூலம் கண்டெய்னர் மற்றும் டாரஸ் லாரிகள் மூலம் வெளியே கொண்டு சென்று தூத்துக்குடியை சுற்றியுள்ள பல்வேறு குடோன்களில் கடத்தி பதுக்கி வைக்கப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
இதுகுறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- வேம்பார் ஆகிய கடற்கரையோரத்தில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி:
தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரிய தாழை வரை சுமார் 1000-க்கும் மேற்பட்ட நாட்டு மற்றும் பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதே போன்று தூத்துக்குடி மீன் பிடி துறைமுகம் மற்றும் வேம்பார் ஆகிய கடற்கரையோரத்தில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சிறந்த உட்கட்டமைப்பு, சிறந்த உள்நாட்டு இணைப்பு, திறன் வாய்ந்த துறைமுக உபயோகிப்பாளர்கள் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் தென்னிந்தியாவின் சிறந்த துறைமுகாக தூத்துக்குடி துறைமுகம் விளங்கி வருகிறது.
நிலக்கரி, சரக்குபெட்டங்கள், சுண்ணாம்பு கல், ஜிப்சம், காற்றாலை இறகுகள், எந்திர உதிரிபாகங்கள், உரங்கள் மற்றும் உணவு தானியங்கள் என தற்போது பல்வேறு வகை சரக்குகளை கையாண்டு வருகிறது.
தூத்துக்குடி துறைமுகத்துக்கு பல்வேறு வகையான கப்பல்களும் வரத்தொடங்கி உள்ளன. பனாமாக்ஸ் வகையை சேர்ந்த ராட்சத கப்பல்கள் தூத்துக்குடிக்கு வந்தநிலையில் கேப் வகையை சேர்ந்த கேப் பிரீஸ் என்ற ராட்சத சரக்கு கப்பல் முதன் முதலாக நேற்று வ.உ.சி. துறைமுகத்துக்குள் வந்து உள்ளது.
இந்த கப்பல் 292 மீட்டார் நீளமும், 45.05 மீட்டர் அகலமும் உடையது. இதன் கொள்ளளவு 1 லட்சத்து 80 ஆயிரம் டன் ஆகும். இதன் மிதவை ஆழம் 11.4 மீட்டர் ஆகும்.
இந்த கப்பல் ஓமன் நாட்டில் உள்ள சலாலா துறைமுகத்தில் இருந்து 92 ஆயிரத்து 300 டன் சுண்ணாம்புக்கல் மற்றும் ஜிப்சத்துடன் வ.உ.சி. துறைமுகத்துக்கு வந்தது. அங்கு 9-வது கப்பல் தளத்தில் நிறுத்தப்பட்டு சரக்குகள் கையாளப்பட்டன.
கடந்த 2015-ம் ஆண்டு வந்த கேப் வகை கப்பல் துறைமுகத்தின் வெளிப்பகுதியில் நிறுத்தப்பட்டு, மிதவை பளு தூக்கிகள் மூலம் சரக்கு கையாளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- மிகப் பெரிய கப்பல்களை கையாளும் வகையில் பணிகள் நடைபெறுகின்றன.
- பொருளாதார வளர்ச்சிக்கு பயனுடையதாக அமையும் என தகவல்
தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள ஒன்பதாவது சரக்கு தளம், சரக்கு பெட்டக தளம், கப்பல் நுழைவு வாயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மிகப் பெரிய அளவிலான கப்பல்களை கையாளும் வகையில் துறைமுகத்தில் மிதவையானம் அதிகரிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி துறைமுகத்தை சரக்கு பெட்டக மையமாக மாற்றும் வகையில், தொலைநோக்கு அடிப்படையில் இந்த வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் எம். அண்ணாதுரை தெரிவித்துள்ளார். இந்த பணிகள் குறித்து செய்தியாளர்களுக்கு துறைமுகத்தில் நேரில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அப்போது பேசிய அவர், இதன் மூலம் இலங்கை துறைமுகத்திற்கு செல்லும் கப்பல்களில் பெரும்பாலானவை தூத்துக்குடிக்கு துறைமுகத்திறகு வரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது என்றும், இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.






