search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.2.60 கோடி மதிப்பிலான கொட்டை பாக்குகள் பறிமுதல்
    X

    தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.2.60 கோடி மதிப்பிலான கொட்டை பாக்குகள் பறிமுதல்

    • அம்பர் கிரீஸ் மற்றும் கொட்டப்பாக்குகள் கடத்தல் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.
    • கண்டெய்னர்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு விரலி மஞ்சள் உள்ளிட்ட மருத்துவ குணம் கொண்ட பொருட்களும், கஞ்சா, அபின் போன்ற போதை பொருட்களும் படகுகள் மூலம் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது.

    இதனை தடுக்க கடலோர காவல் படையினரும், போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே அம்பர் கிரீஸ் மற்றும் கொட்டப்பாக்குகள் கடத்தல் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.

    நேற்று துபாயில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்ட கண்டெய்னர்களை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியதில் சுமார் ரூ.2½ கோடி மதிப்பிலான 28 டன் கொட்டை பாக்குகள் மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு சட்டவிரோதமாக கொட்டை பாக்குகள் கடத்தி வரப்படுவதாக சென்னை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இன்று தூத்துக்குடி துறைமுகத்திற்கு சென்று, அங்கிருந்த கண்டெய்னர்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது இயற்கை உரங்கள் கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்ட 2 கண்டெய்னர்களில் சோதனை நடத்தினர். அதில் சுமார் 25 டன் எடையுள்ள கொட்டை பாக்குகள் மூட்டை, மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

    இதன் மதிப்பு ரூ. 2 கோடியே 60 லட்சம் ஆகும். இதனை கைப்பற்றிய மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதில் இருந்த சிலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×