search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "large ship"

    கேப் வகையை சேர்ந்த கேப் பிரீஸ் என்ற ராட்சத சரக்கு கப்பல் முதன்முதலாக வ.உ.சி. துறைமுகத்துக்குள் வந்துள்ளது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சிறந்த உட்கட்டமைப்பு, சிறந்த உள்நாட்டு இணைப்பு, திறன் வாய்ந்த துறைமுக உபயோகிப்பாளர்கள் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் தென்னிந்தியாவின் சிறந்த துறைமுகாக தூத்துக்குடி துறைமுகம் விளங்கி வருகிறது.

    நிலக்கரி, சரக்குபெட்டங்கள், சுண்ணாம்பு கல், ஜிப்சம், காற்றாலை இறகுகள், எந்திர உதிரிபாகங்கள், உரங்கள் மற்றும் உணவு தானியங்கள் என தற்போது பல்வேறு வகை சரக்குகளை கையாண்டு வருகிறது.

    தூத்துக்குடி துறைமுகத்துக்கு பல்வேறு வகையான கப்பல்களும் வரத்தொடங்கி உள்ளன. பனாமாக்ஸ் வகையை சேர்ந்த ராட்சத கப்பல்கள் தூத்துக்குடிக்கு வந்தநிலையில் கேப் வகையை சேர்ந்த கேப் பிரீஸ் என்ற ராட்சத சரக்கு கப்பல் முதன் முதலாக நேற்று வ.உ.சி. துறைமுகத்துக்குள் வந்து உள்ளது.

    இந்த கப்பல் 292 மீட்டார் நீளமும், 45.05 மீட்டர் அகலமும் உடையது. இதன் கொள்ளளவு 1 லட்சத்து 80 ஆயிரம் டன் ஆகும். இதன் மிதவை ஆழம் 11.4 மீட்டர் ஆகும்.

    இந்த கப்பல் ஓமன் நாட்டில் உள்ள சலாலா துறைமுகத்தில் இருந்து 92 ஆயிரத்து 300 டன் சுண்ணாம்புக்கல் மற்றும் ஜிப்சத்துடன் வ.உ.சி. துறைமுகத்துக்கு வந்தது. அங்கு 9-வது கப்பல் தளத்தில் நிறுத்தப்பட்டு சரக்குகள் கையாளப்பட்டன.

    கடந்த 2015-ம் ஆண்டு வந்த கேப் வகை கப்பல் துறைமுகத்தின் வெளிப்பகுதியில் நிறுத்தப்பட்டு, மிதவை பளு தூக்கிகள் மூலம் சரக்கு கையாளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    ×