search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆலோசனை"

    • தி.மு.க.வில் கட்சி ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ளன. இதில் சில மாவட்டத்தில் 4 அல்லது 5 சட்டசபை தொகுதிகள் வரை உள்ளன.
    • அனேகமாக டிசம்பர் மாதத்திற்குள் அதற்கான நடவடிக்கைகளை தலைவர் மேற்கொள்வார் என்று கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் இப்போதே தேர்தலுக்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

    அந்த வகையில் தி.மு.க.வில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் மண்டல அளவில் நடத்தப்பட்டு வருகிறது. தேர்தல் சமயத்தில் பி.எல்.ஏ.-2 முகவர்கள் மூலமாகத்தான் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படும்.

    இதனால் தகுதியான கட்சி நிர்வாகிகளை பார்த்து அதில் நியமித்துள்ளனர். இவர்களை ஒன்றிய, நகர கழக செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் மாவட்டச் செயலாளர்கள் ஒருங்கிணைத்து வருகின்றன.

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

    இந்நிலையில் சில மாவட்டங்களில் கோஷ்டி பிரச்சினை காரணமாக ஒருங்கிணைந்து செயல்படாமல் சில நிர்வாகிகள் மனக்கசப்புடன் இருப்பதாக தலைமைக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

    இதனால் எந்தெந்த மாவட்டங்களில் பிரச்சினை அதிகம் உள்ளதோ அங்கு கட்சி நிர்வாகிகளிடையே சமரசம் ஏற்படுத்தும் நிகழ்வும் நடந்து வருகிறது. கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு இந்த சமரச முயற்சியை மேற்கொண்டு வருகிறார்.

    தற்போது பாராளுமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் அ.தி.மு.க.வில் 2 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் உள்ளதை போன்று தி.மு.க. விலும் அதே போன்று மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என்று கட்சி மேலிடத்தில் சில நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

    தற்போது தி.மு.க.வில் கட்சி ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ளன. இதில் சில மாவட்டத்தில் 4 அல்லது 5 சட்டசபை தொகுதிகள் வரை உள்ளன.

    தேர்தல் சமயத்தில் ஏதாவது பிரச்சினை என்றால் அந்த தொகுதிக்கு உடனடியாக செல்வதில் சுணக்கம் ஏற்படும் என்றும் இதை தவிர்க்க எல்லையை சுருக்கினால் பணிகள் வேகமாக நடைபெறும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக 2 தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர்களை நியமித்தால் அ.தி.மு.க.வுக்கு சரிசமமாக ஈடுகொடுக்க வசதியாக இருக்கும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக ஏற்கனவே இப்பிரச்சினை தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டாலும் அவர் அதை விரும்பவில்லை. அந்த ஆலோசனையை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியதாக தெரிகிறது.

    இந்நிலையில் இப்போது மாவட்டங்களை பிரிக்கும் கோரிக்கை மீண்டும் வலியுறுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அனேகமாக டிசம்பர் மாதத்திற்குள் அதற்கான நடவடிக்கைகளை தலைவர் மேற்கொள்வார் என்று கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

    • ஜோதிமணிக்கு தலைவர் பதவி வழங்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
    • புதிய தலைவரா? அல்லது இருக்கும் தலைவருக்கே பதவி நீட்டிப்பா என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியின் பதவிக்காலம் ஏற்கனவே நிறைவடைந்துவிட்டதால் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்ற பேச்சு கடந்த ஒரு வருடமாகவே அடிபடுகிறது. ஆனால் டெல்லி மேலிடம் எந்த முடிவும் எடுக்கவில்லை.

    இந்நிலையில் தற்போது புதிய தலைவர் நியமனம் தொடர்பாக டெல்லி மேலிடம் பரிசீலித்து வருகிறது.

    இதையடுத்து தலைவர் பதவிக்கான ரேசில் பலர் இறங்கி இருக்கிறார்கள். இந்த போட்டியில் எம்.பி.க்கள் ஜோதிமணி, செல்வக்குமார், கார்த்திக் சிதம்பரம், முன்னாள் எம்.பி. பி.விசுவநாதன், செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் இருக்கிறார்கள்.

    செல்வப்பெருந்தகை தலித் என்ற துருப்பு சீட்டை வைத்துள்ளார். அதே நேரம் அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து காங்கிரசுக்கு வந்தவர். அவருக்கு எதிராக கட்சியினரும் பல புகார்களை மேலிடத்துக்கு அனுப்பி உள்ளார்கள்.

    ஜோதிமணி எம்.பி ராகுலுக்கு நெருக்கமானவர். எனவே ராகுலின் தேர்வு ஜோதிமணியாகத் தான் இருக்கும் என்கிறார்கள்.

    ஆனால் ஜோதிமணிக்கும் கூட்டணியின் பிரதான கட்சியான தி.மு.க.வுக்கும் சுமூகமான உறவு இல்லை. கரூர் தொகுதியை சேர்ந்த அமைச்சர் செந்தில்பாலாஜி ஜோதிமணிக்கு எதிராக உள்ளார்.

    வருகிற தேர்தலிலும் கரூர் தொகுதியில் தி.மு.க. போட்டியிட விரும்புகிறது. எனவே ஜோதிமணிக்கு தலைவர் பதவி வழங்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    டாக்டர் செல்வக்குமார் எம்.பி. இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது கட்சியை திறம்பட வளர்த்தவர். தனக்கு தலைவர் பதவி கொடுத்ததால் ஏற்க தயார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    கார்த்தி ப.சிதம்பரம் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தனக்கு அனைத்து தகுதியும் இருப்பதாக பகிரங்கமாகவே கூறினார். அவரும் தலைவர் பதவியை பெறுவதற்கு டெல்லியில் தலைவர்களை சந்தித்து வருகிறார். தனது தந்தையான ப.சிதம்பரத்திடமும் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

    முன்னாள் எம்.பி. பி.விசுவநாதன் தலித் சமூகத்தை சேர்ந்தவர். இதுவரை தலித்துக்கு தலைவர் பதவி வழங்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக எந்த பதவியிலும் இல்லை. அதேநேரம் கேரள மாநில பொறுப்பாளராக இருந்து கட்சியை வளர்த்ததையும், ராகுல் யாத்திரையை சிறப்பாக நடத்தியதையும் குறிப்பிட்டுள்ளார். மாநில தலைவர் பதவி வழங்கினால் எம்.பி. தேர்தலில் சீட் கேட்கப்போவதில்லை என்றும் அவர் உத்தரவாதம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

    திருநாவுக்கரசர் ஒரு முறை தலைவராக இருந்துள்ளார். மற்ற தலைவர்களை போல் தனக்கும் மீண்டும் ஒரு முறை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

    இதற்கிடையில் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சசிகாந்த் செந்தில் தலைவர் பதவிக்கு முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இது பற்றி அவர் கூறும்போது, தலைவர் பதவிக்கான ரேசில் நான் இருக்கிறேனா? இல்லையா என்பது எனக்கு தெரியாது. அது கட்சி மேலிடம் எடுக்க வேண்டிய முடிவு என்றார்.

    இதற்கிடையில் கே.எஸ்.அழகிரியும் டெல்லி சென்றுள்ளார். தனது பதவி காலத்தில் கோஷ்டி பூசல் இல்லை. சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. எனவே அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலையும் சிறப்பாக எதிர்கொள்ள தனக்கு பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

    இன்று பிற்பகலில் காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் ஆகியோர் தமிழகத்துக்கு புதிய தலைவர் நியமனம் தொடர்பாக ஆலோசிக்கிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் கூட் டணி கட்சிகளுடன் சுமூகமாக செல்லக்கூடியவர், கூட்டணி கட்சிகள் விரும்பக் கூடியவருக்கு முன்னுரிமை கொடுத்து புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

    புதிய தலைவரா? அல்லது இருக்கும் தலைவருக்கே பதவி நீட்டிப்பா என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.

    அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பண்ணைகுடி ஊராட்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது. 

    ஒன்றிய செயலாளர் வக்கீல் கோடீஸ்வரன் தலைமை தாங்கினார். இணை செயலாளர் ரியாஸ்கான், நகர் செயலாளர் ராஜபிரபு, அவை தலைவர் அய்யணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    தெற்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் சிறப்புரையாற்றினார்.
     
    ஆலோசனை கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சோழவந்தான் தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். 
    மாற்று கட்சியில் இணைந்த உறுப்பினர்களை நீக்கி புதிய நிர்வாகிகளுக்கு பொறுப்பு வழங்கி கிளைகளை பலப்படுத்தி ஊராட்சியில் கட்சியின் கொடி ஏற்றுவது உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    ×