என் மலர்
உள்ளூர் செய்திகள்

அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பண்ணைகுடி ஊராட்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது.
ஒன்றிய செயலாளர் வக்கீல் கோடீஸ்வரன் தலைமை தாங்கினார். இணை செயலாளர் ரியாஸ்கான், நகர் செயலாளர் ராஜபிரபு, அவை தலைவர் அய்யணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தெற்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் சிறப்புரையாற்றினார்.
ஆலோசனை கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சோழவந்தான் தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்.
மாற்று கட்சியில் இணைந்த உறுப்பினர்களை நீக்கி புதிய நிர்வாகிகளுக்கு பொறுப்பு வழங்கி கிளைகளை பலப்படுத்தி ஊராட்சியில் கட்சியின் கொடி ஏற்றுவது உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
Next Story