search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parliamentary panel"

    பாராளுமன்ற நிலைக்குழு ‘டுவிட்டர்’ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது. அப்போது தேர்தலில் வெளிநாட்டு சக்திகள் தலையிடுவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. #ElectionCommission #Twitter #ParliamentaryPanel
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையின் 31 எம்.பி.க்களை கொண்ட தகவல் தொழில்நுட்பத்துக்கான நிலைக்குழு நேற்று ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தின் உலக பொதுக் கொள்கை பிரிவு துணைத்தலைவர் காலின் குரோவெல் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.

    நிலைக்குழுவின் தலைவர் அனுராக் தாகூர் தலைமையில் இந்த கூட்டம் சுமார் 3½ மணி நேரம் நடைபெற்றது. கூட்டத்தில், டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சே எழுதிய கடிதம் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து நிலைக்குழு உறுப்பினர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு டுவிட்டர் அதிகாரிகள் பதில் அளித்தனர். மேலும் பல கேள்விகளுக்கு 10 நாட்களுக்குள் எழுத்து மூலமாக பதில் அளிக்கும்படியும் கூறப்பட்டுள்ளது.



    நடைபெற இருக்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் சில பிரச்சினைகளை தீர்க்க இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டதாக அனுராக் தாகூர் தெரிவித்தார். அதேபோல, தேர்தலை வலுவிழக்கச் செய்யும் பணிகளில் ஈடுபடுவதோ, தேர்தலில் வெளிநாட்டு சக்திகள் தலையிடுவதோ தவிர்க்கப்பட வேண்டும் என்றும் டுவிட்டர் அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது.

    இதர சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வாட்ஸ்-ஆப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் மார்ச் 6-ந் தேதி இந்த நிலைக்குழு முன்பு ஆஜராக வேண்டும் என்றும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அனுராக் தாகூர் கூறினார். #ElectionCommission #Twitter #ParliamentaryPanel 
    நாடாளுமன்ற நிலைக்குழு முன் ஆஜராக முடியாது என ‘டுவிட்டர்’ தலைமை செயல் அதிகாரியும், மூத்த அதிகாரிகளும் மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #TwitterCEO #ParliamentaryPanel
    புதுடெல்லி:

    சமூக ஊடகங்களில் குடிமக்களின் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக தகவல் தொடர்பு துறைக்கான நாடாளுமன்ற குழு விசாரணை ஒன்றை நடத்துகிறது.

    பாரதீய ஜனதா கட்சி எம்.பி. அனுராக் தாக்குர் தலைமையிலான இந்தக்குழு கடந்த 7-ந் தேதி கூட இருந்தது. இதில் கலந்து கொள்வதற்கு ‘டுவிட்டர்’ நிறுவனத்துக்கு 1-ந் தேதி கடிதம் அனுப்பப்பட்டது.

    பின்னர் அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, மூத்த அதிகாரிகள் வந்து கலந்து கொள்வதற்கு வசதியாக இந்த கூட்டம் 11-ந் தேதிக்கு (நாளை) ஒத்தி போடப்பட்டது.

    ஆனாலும் நாடாளுமன்ற நிலைக்குழு முன் ஆஜராக முடியாது என ‘டுவிட்டர்’ தலைமை செயல் அதிகாரியும், மூத்த அதிகாரிகளும் மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    குறைந்த கால அவகாசத்தில் வர முடியாது என அவர்கள் கூறி உள்ளதாக அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.  #TwitterCEO #ParliamentaryPanel 
    வாராக் கடன்களை கட்டுப்படுத்துவது பற்றி குழுவின் உறுப்பினர்களுக்கு விரிவாக விளக்கம் அளிக்கும்படி இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான ரகுராம் ராஜனுக்கு நாடாளுமன்ற குழு அழைப்பு விடுத்துள்ளது. #RahuramRajan #ParliamentaryPanel
    புதுடெல்லி:

    நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் தொகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதை சமாளிக்க முடியாமல் வங்கிகள் கடுமையாக திணறி வருகின்றன.

    இந்த நிலையில் மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம், பா.ஜனதா தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற மதிப்பீடுகள் குழுவில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான ரகுராம் ராஜன் வாராக் கடன்களை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டது பற்றி எடுத்துக் கூறி இருந்தார். மேலும் அவரை அழைத்து இதுபற்றி ஆலோசனைகளை கேட்டுப் பெற வேண்டும் என்றும் அரவிந்த் சுப்பிரமணியம் வலியுறுத்தி இருந்தார்.

    இதையடுத்து முரளி மனோகர் ஜோஷி, தற்போது அமெரிக்காவின் சிகாகோ நகர வர்த்தக பள்ளியில் பேராசிரியராக பணியாற்றி வரும் ரகுராம் ராஜனை நாடாளுமன்ற மதிப்பீடுகள் குழு கூட்டத்தில் பங்கேற்று வாராக் கடன்களை கட்டுப்படுத்துவது பற்றி குழுவின் உறுப்பினர்களுக்கு விரிவாக விளக்கம் அளிக்கும்படி கடிதம் எழுதி உள்ளார். #RahuramRajan #ParliamentaryPanel
    ரூபாய் நோட்டு தட்டுப்பாடு, வங்கிக்கடன் மோசடி, கடன் கொள்கை ஆகியவை தொடர்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேலிடம் நிதித்துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. #UrjitPatel
    புதுடெல்லி:

    ரிசர்வ் வங்கி கவர்னராக உள்ள உர்ஜித் பட்டேல் நிதித்துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழு முன்னிலையில் இன்று ஆஜரானார். காங்கிரஸ் எம்.பி வீரப்ப மொய்லி தலைமையிலான இந்த நிலைக்குழுவில் உறுப்பினராக உள்ள பல்வேறு கட்சி எம்.பி.க்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று வெளிநாட்டுக்கு ஓடிய தொழிலதிபர்கள் குறித்து உர்ஜித் பட்டேலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், சமீபத்தில் ஏற்பட்ட ரூபாய் நோட்டு தட்டுப்பாடு, வங்கியில் கடன் பெறுவதற்கான விதிமுறைகளில் உள்ள கோளாறுகள், பணமதிப்பிழப்புக்கு பின்னர் வங்கிகளுக்கு வந்த ரூபாய் குறித்தும் கேள்வி எழுப்பட்டது.

    இதற்கு பதிலளித்து பேசிய உர்ஜித் பட்டேல், வங்கி அமைப்பை மேலும் வலிமையானதாக மாற்றுவதற்கான பணிகள் நடந்து வருவதாக கூறியுள்ளார். சமீபத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

    கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி தினேஷ் திரிவேதி, “பணமதிப்பிழப்புக்கு பின்னர் வங்கிகளுக்கு திரும்பி வந்த நோட்டுகள் குறித்து ரிசர்வ் வங்கி எந்த தகவல்களும் வெளியிடவில்லை. நிச்சயமாக அது நிலைக்குழுவிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். நாளை கவர்னர் அதனை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கிறோம்” என கூறினார்.

    நாளையும் நிலைக்குழு முன்னிலையில் உர்ஜித் பட்டேல் ஆஜராகி விளக்கமளிக்க உள்ளார். 
    ×