search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "twitter ceo"

    • 2022 மார்ச் மாதம் இரவு விருந்தில் இருவரும் சந்தித்து கொண்டனர்
    • அக்ரவால் பணிநீக்கம் செய்யப்பட்டது தற்போது வரை பேசுபொருளாக உள்ளது

    உலகின் முன்னணி இணையவழி சமூக கருத்து பரிமாற்ற வலைதளமாக இருந்து வந்த டுவிட்டரை, உலகின் நம்பர் 1 பணக்காரரும், அமெரிக்க தொழிலதிபருமான எலான் மஸ்க், கடந்த அக்டோபர் 2022-ல் சுமார் ரூ. 37 ஆயிரம் ($44 பில்லியன்) கோடிக்கு விலைக்கு வாங்கினார்.

    2022 மார்ச் மாதம் அதன் அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த பராக் அக்ரவால் எனும் இந்திய-அமெரிக்கரை ஒரு இரவு நேர விருந்தில் எலான் மஸ்க் சந்தித்தார்.

    2022 அக்டோபர் மாதம் மஸ்க் டுவிட்டரை விலைக்கு வாங்கியதும், முதல் வேலையாக பராக் அக்ரவாலை பணிநீக்கம் செய்தார்.

    டுவிட்டர் வலைதளத்தின் லாபத்தை பெருக்கும் நோக்கில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தற்போது வரை எடுத்து வரும் மஸ்க் அதன் பெயரை எக்ஸ் என மாற்றம் செய்திருக்கிறார். அக்ரவால் பணிநீக்கம் செய்யப்பட்டது தற்போது வரை பேசுபொருளாக உள்ளது.

    இந்நிலையில், எலான் மஸ்க்கின் வாழ்க்கை சரிதத்தை வால்டர் ஐசக்ஸன் என்பவர் ஒரு புத்தகமாக எழுதி இருக்கிறார். இந்த புத்தகம் வரும் வாரங்களில் வெளியிடுவதற்கான பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். அந்த புத்தகத்தில் பராக் அக்ரவாலை, எலான் மஸ்க் நீக்கியதற்கான காரணங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    மஸ்க், பராக் அகர்வால் குறித்து என்ன நினைத்தார் என வால்டர் எழுதியுள்ளார். "அக்ரவால் ஒரு 'நல்ல மனிதர்.' ஆனால், ஒரு தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பதற்கு 'நல்ல மனிதர்' எனும் குணம் மட்டும் போதாது. மக்களால் ஒரு தலைமை நிர்வாக அதிகாரி விரும்பப்பட வேண்டும் எனும் அவசியமில்லை. நெருப்பை உமிழும் டிராகனை போல் உள்ள ஒரு தலைமை தான் டுவிட்டருக்கு தேவை. அந்த குணம் பராக் அக்ரவாலிடம் இல்லை," இவ்வாறு மஸ்க் கருதியதாக வால்டர் ஐசக்ஸன், மஸ்கின் சுயசரிதையில் எழுதியுள்ளார்.

    கடந்த அக்டோபரில் பராக்கை பணிநீக்கம் செய்த மஸ்க், இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை தானே அந்த பொறுப்பை வகித்து வந்தார்.

    2023 ஜூன் மாதம், விளம்பர துறையில் வல்லவரான லிண்டா யாக்கரினோ எனும் பெண்மணியை நியமித்த பிறகு மஸ்க் அந்த பொறுப்பில் இருந்து விலகி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தேர்தலின்போது சமூக வலைத்தளங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி வரும் 25-ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. #TwitterCEO #JackDorsey #TwitterCEOsummoned #parliamentarypanel
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பல்வேறு கட்சிகளின் சார்பில் வாக்கு சேகரிக்கும் பிரசாரங்கள் ஏற்கனவே தொடங்கி விட்டது.

    மாற்றுக்கட்சி தலைவர்களை தாக்கி பதிவுகளை இடுவதும் அதற்கு எதிர்தரப்பினர் பதில் கருத்து தெரிவிப்பதுமான அரசியல் விமர்சனங்களும், அரசியல் நையாண்டிகளும் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற பதிவுகளில் பல, சம்பந்தப்பட்ட நபர்களின் சொந்த கணக்குகள் மூலம் வெளியிடப்படவில்லை போலியான கணக்குகள் மூலம் வெளியாகி வருகிறது எனவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், தேர்தலின்போது சமூக வலைத்தளங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக 7-2-2019 அன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரவை தொடர்பான பாராளுமன்றக்குழு சார்பில் பிரபல சமூக வலைத்தளங்களின் நிர்வாகத்தினருக்கு முன்னர் அழைப்பு அனுப்பப்பட்டது.

    மிக குறுகிய காலத்தில் ஆஜராகுமாறு அழைப்பு அனுப்பப்பட்டதாக சுட்டிக்காட்டி பாராளுமன்றக்குழுவுக்கு பதில் அனுப்பிய டுவிட்டர் நிர்வாகம் ஆஜராக வேண்டிய காலக்கெடுவை நீட்டிக்குமாறு முன்னர் கோரி இருந்தது. அதன்படி அந்த ஆலோசனை கூட்டத்துக்கான தேதி 11-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது.

    இந்நிலையில், டுவிட்டர் நிர்வாகத்தில் பணியாற்றும் சில அதிகாரிகள் இன்று பாராளுமன்றக்குழுவின் முன்னர் ஆஜராவதற்காக பாராளுமன்ற வளாகத்துக்கு வந்தனர். ஆனால், இளநிலை அதிகாரிகளான அவர்களுடன் ஆலோசனை நடத்த தொழில்நுட்பத்துறை அமைச்சரவை தொடர்பான பாராளுமன்றக்குழு மறுத்து விட்டதாக தெரிகிறது.

    டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அல்லது அந்நிறுவனத்தின் சார்பில் சர்வதேச அளவில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களிடம் மட்டுமே இவ்விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தலாம் என தொழில்நுட்ப அமைச்சரவை தொடர்பான பாராளுமன்றக்குழு உறுப்பினர்கள் ஏற்கனவே ஒருமித்த கருத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதால் டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்சே 15 நாட்களுக்குள் (25-ம் தேதியன்று) நேரில் ஆஜராக வேண்டுமென இன்று சம்மன் அனுப்பப்பட்டது. #TwitterCEO #JackDorsey #TwitterCEOsummoned #parliamentarypanel
    நாடாளுமன்ற நிலைக்குழு முன் ஆஜராக முடியாது என ‘டுவிட்டர்’ தலைமை செயல் அதிகாரியும், மூத்த அதிகாரிகளும் மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #TwitterCEO #ParliamentaryPanel
    புதுடெல்லி:

    சமூக ஊடகங்களில் குடிமக்களின் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக தகவல் தொடர்பு துறைக்கான நாடாளுமன்ற குழு விசாரணை ஒன்றை நடத்துகிறது.

    பாரதீய ஜனதா கட்சி எம்.பி. அனுராக் தாக்குர் தலைமையிலான இந்தக்குழு கடந்த 7-ந் தேதி கூட இருந்தது. இதில் கலந்து கொள்வதற்கு ‘டுவிட்டர்’ நிறுவனத்துக்கு 1-ந் தேதி கடிதம் அனுப்பப்பட்டது.

    பின்னர் அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, மூத்த அதிகாரிகள் வந்து கலந்து கொள்வதற்கு வசதியாக இந்த கூட்டம் 11-ந் தேதிக்கு (நாளை) ஒத்தி போடப்பட்டது.

    ஆனாலும் நாடாளுமன்ற நிலைக்குழு முன் ஆஜராக முடியாது என ‘டுவிட்டர்’ தலைமை செயல் அதிகாரியும், மூத்த அதிகாரிகளும் மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    குறைந்த கால அவகாசத்தில் வர முடியாது என அவர்கள் கூறி உள்ளதாக அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.  #TwitterCEO #ParliamentaryPanel 
    சமீபத்தில் இந்தியா வந்த ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி ஜேக் டார்சி ஏ.ஆர்.ரஹ்மான், ஷாருக் கானை சந்தித்த நிலையில், இந்தியாவின் ட்விட்டர் ஆலோசகராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. #ARRahman #JackDorsey
    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் டுவிட்டரில் தொடர்ந்து இயங்குபவர். ட்விட்டரில் அவரை 2 கோடிக்கும் அதிகமானோர் பின் தொடர்கிறார்கள். இதனால் ட்விட்டர் நிறுவனத்தின் முக்கியமான நபராக ஏ.ஆர்.ரஹ்மான் இருக்கிறார்.

    இந்த நிலையில் இந்தியா வந்துள்ள ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேக் டார்சி, ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்து பேசினார். இந்தியாவில் ட்விட்டர் எந்த அளவிற்கு பொதுமக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், மாணவர்களுக்கும், கலைஞர்களுக்கும் பயன்படுகிறது.

    அதில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்பது குறித்து இங்குள்ள முக்கிய பிரபலங்களிடம் கருத்து கேட்கவே வந்திருக்கிறார் ஜேக். கலைத்துறையில் அவர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஷாருக் கானை சந்தித்து பேசியுள்ளார். ரஹ்மானுடனான அவரது சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்துள்ளது.

    ட்விட்டர் நிறுவனம் ஒவ்வொரு நாட்டிலும் தங்களின் ஆலோசகர்களை நியமிக்க இருப்பதாகவும், இந்தியாவில் கலைத்துறையின் சார்பில் ஆலோசகராக பணியாற்ற ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஷாருக் கானுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜேக் டார்சி, தன்னை சந்தித்த புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் “ஜேக் டார்சிவுடனான சந்திப்பு ஊக்கம் அளிப்பதாக உள்ளது” என்று குறிப்பிட்டிருக்கிறார். #ARRahman #JackDorsey

    ×