search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Raghuram Rajan"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2023-ம் ஆண்டு இந்திய பொருளாதாரத்திற்கும், மற்ற உலக நாடுகளுக்கும் கடினமானதாக இருக்கும்.
    • வளர்ச்சிக்கு தேவையான சீர்திருத்தங்களை உருவாக்க நாடு தவறிவிட்டது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி பாரத் ஜோடோ யாத்திரையை நடத்தி வருகிறார்.

    கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை பல்வேறு மாநிலங்கள் வழியாக சென்று காஷ்மீரில் முடிவடைய உள்ளது. யாத்திரையின் போது பல்வேறு பிரபலங்களும், முன்னாள் அதிகாரிகளும் பங்கேற்று வருகின்றனர்.

    அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற யாத்திரையின் போது ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் பங்கேற்று கலந்துரையாடினார்.

    இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் டாவோஸ் நகரில் உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்ற ரகுராம் ராஜனிடம், ராகுல் காந்தி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில், ராகுல் காந்தி எந்த வகையிலும் பப்பு அல்ல.

    அவரை பற்றிய இமேஜ் துரதிர்ஷ்டவசமானது என்று நான் நினைக்கிறேன். அவர் ஒரு புத்திச்சாலி, இளைஞர், ஆர்வமுள்ள மனிதர். முன்னுரிமைகள் என்ன, அடிப்படை அபாயங்கள் மற்றும் அவற்றை மதிப்பிடும் திறன் ஆகியவற்றை நன்கு புரிந்து கொள்வது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். ராகுல் காந்தி அதை செய்யக்கூடிய திறன் கொண்டவர் என்று நான் நினைக்கிறேன் என்றார். தொடர்ந்து பொருளாதாரம் குறித்து அவர் கூறியதாவது:-

    2023-ம் ஆண்டு இந்திய பொருளாதாரத்திற்கும், மற்ற உலக நாடுகளுக்கும் கடினமானதாக இருக்கும். வளர்ச்சிக்கு தேவையான சீர்திருத்தங்களை உருவாக்க நாடு தவறிவிட்டது.

    கொரோனா தொற்று நோயால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள கீழ் நடுத்தர வர்க்கத்தை மனதில் வைத்து கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.

    சீனாவுடன் ஒப்பிடும் போது இந்திய பொருளாதாரம் சிறியது. எனவே உலக பொருளாதாரத்தில் சீனாவின் இடத்தை இந்தியா வகிக்கும் என்ற விவாதம் முதிர்ச்சியற்றது. ஏற்கனவே 5-வது பெரிய பொருளாதாரமாக உள்ள இந்தியா தொடர்ந்து எழுச்சி காணும் போது குறிப்பிட்ட காலங்களில் இந்நிலை மாறலாம் என்றார்.

    • இந்தியா வளர்ந்து வருகிறது.
    • மேலும் வளர வாய்ப்பு இருக்கிறது.

    டாவோஸ் :

    சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பேட்டி அளித்தார்.

    அப்போது, சர்வதேச பொருளாதார வளர்ச்சியை தீர்மானிப்பதில் சீனாவின் இடத்தை இந்தியா பிடிக்குமா? என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-

    சீனாவின் இடத்தை இந்தியா பிடிக்குமா என்று இப்போதே சொல்ல முடியாது. ஏனென்றால், தற்போதைய நிலையில் இந்தியா மிகவும் சிறிய பொருளாதாரத்தை கொண்டது. இருப்பினும், அது உலக பொருளாதாரத்தில் 5-வது இடத்தில் இருப்பதால், நிலைமை மாறலாம். இந்தியா வளர்ந்து வருகிறது. மேலும் வளர வாய்ப்பு இருக்கிறது.

    சீன பொருளாதாரம் இந்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் மீண்டு எழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால், சர்வதேச பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்திய பொருளாதாரம் 7 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளதாக எந்த புள்ளிவிவரப்படி கூறியிருக்கிறார்கள் என்பது தனக்கு தெரியவில்லை என ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். #RaghuramRajan
    புதுடெல்லி:

    ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் இதுபற்றி கூறியதாவது:-

    இந்திய பொருளாதாரம் 7 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளதாக எந்த புள்ளிவிவரப்படி கூறியிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இந்தியாவின் உண்மையான வளர்ச்சி விகிதத்தை அறிய ஒரு சீரமைப்பு நடவடிக்கை தேவை. ‘ஒரு மத்திய மந்திரி, போதிய வேலைவாய்ப்பு இல்லாமல் நாம் எப்படி 7 சதவீத வளர்ச்சி அடைய முடியும். நாம் 7 சதவீத வளர்ச்சி அடையவில்லை’ என்று கூறியது எனக்கு தெரியும்.எனவே ஒரு நடுநிலையான குழுவை அமைத்து உண்மையான வளர்ச்சி விகிதம் என்ன என்பதையும், புள்ளிவிவரத்தில் குழப்பம் ஏற்பட என்ன காரணம் என்பதையும் கண்டறிந்து உறுதிப்படுத்த வேண்டியது அவசியம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மத்திய மந்திரி பெயரை அவர் கூறவில்லை என்றாலும், நிதி மந்திரி அருண் ஜெட்லி தான் இந்த தகவலை தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    உர்ஜித் பட்டேல் ராஜினாமா பற்றி அனைத்து இந்தியர்களும் கவலைப்பட வேண்டும் என்று முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார். #UrjitPatel #raghuramrajan #reservebankgovernor
    புதுடெல்லி:

    ரிசர்வ் வங்கி கவனர் உர்ஜித் படேலுக்கும் மத்திய அரசுக்கும் இடையே உரசல் நிலவி வந்த நிலையில் உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறுகையில், உர்ஜித் படேல் ராஜினாமா எதிர்ப்பை பதிவு செய்வதாகும். ராஜினாமா பற்றி அனைத்து இந்தியர்களும் கவலைப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அருண் ஜெட்லி மத்திய வங்கியை விமர்சனம் செய்த நிலையில் உர்ஜித் பட்டேல் ராஜினாமா அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

    "ஆர்.பி.ஐ. கவர்னர் உஜ்ஜிதே பட்டேல் பதவி விலகல் பெரும் கவலைக்குரிய விஷயமாகும். அரசு அதிகாரி தன்னுடைய ராஜினாமாவை அறிவிப்பது என்பது எதிர்ப்பை பதிவு செய்யும் விஷயமாகும். அவர்கள் தீர்க்க முடியாத சூழ்நிலையை எதிர்க்கொள்ளும் நிலையில் எதிர்ப்பை பதிவு செய்கிறார்கள்,” என்று கூறியுள்ளார் ரகுராம் ராஜன். மத்திய அரசுடனான மோதல் போக்கிற்கு இடையே உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்துள்ளது பங்குச் சந்தைகளிலும் மிகப்பெரிய தாக்கத்தை வரும் நாட்களில் ஏற்படுத்தும் என பார்க்கப்படுகிறது.

    மத்திய ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு நியமனம் செய்த வாரியக் குழுவின் தலையீடு அதிகமாக இருந்ததால் இருதரப்பு இடையேயும் மறைமுகமாக மோதல் காணப்பட்டது. இந்நிலையில் ஆர்.பி.ஐ. குழுவிலிருந்து தொழில் அதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளை தள்ளிவைக்க வேண்டும் என்றும் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.  #UrjitPatel #raghuramrajan #reservebankgovernor 
    ஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி பதில் அளித்துள்ளார். #gst #arunjaitley #RaghuramRajan

    புதுடெல்லி:

    ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜன் அளித்த பேட்டியில், ஜி.எஸ்.டி. வரி மற்றும் பணம் மதிப்பு இழப்பு திட்டத்தால் இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    உலக பொருளாதாரம் வளர்ந்து வரும் நிலையிலும் இந்தியா பின்னடைவை சந்தித்து வருகிறது என்று கூறினார்.

    இதற்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய நிதி மந்திரி அருண்ஜேட்லி கருத்து வெளியிட்டுள்ளார். டெல்லியில் யூனியன் வங்கியின் 100- வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அருண்ஜேட்லி பேசியதாவது:-

    குறை சொல்பவர்கள் எப்போதும் குறை சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள்.

    ஜி.எஸ்.டி.வரி என்பது இந்தியாவில் கொண்டு வரப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க சீர் திருத்தமாகும். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மிக பெரிய சீர்திருத்தமாக இதை கொண்டு வந்துள்ளோம்.


    ஜி.எஸ்.டி. வரி திட்டம் உருவாக்கப்பட்டு 2017 ஜூலை 1-ந்தேதி அமலுக்கு வந்தது. அதன் பின்னர் முதல் 2 காலாண்டுகளில் மட்டும் வளர்ச்சியில் சில பாதிப்புகள் ஏற்பட்டன.

    அதன் பிறகு தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. அடுத்த காலாண்டுகளில் 7 சதவீதமும், 7.7 சதவீதமும் வளர்ச்சியை கண்டுள்ளன. கடைசி காலாண்டில் 8.2 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

    2012-2014-ம் ஆண்டுகளில் இந்திய வளர்ச்சி விகிதம் 5-ல் இருந்து 6 சதவீதம் என்ற வகையிலேயே இருந்தது. அதை விட சிறப்பான வளர்ச்சியை இப்போது பெற்று வருகிறோம்.

    வங்கிகளை பொறுத்த வரை செயல்படாத சொத்துக்கள், கணக்குகளை குறைத்தால் வங்கிகளின் வளர்ச்சி இன்னும் அதிகமாகும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    மேலும் இதில் உறுதியான திட்டங்களை உருவாக்க வேண்டும். அதற்கு பல வழிகள் உள்ளன. அதை செய்தால் நல்ல முடிவுகள் கிடைக்கும்.

    வங்கிகளை வலுப்படுத்துவதன் மூலம் அதன் பணப்புழக்கம் வளர்ச்சி அடைந்து மார்க்கெட்டில் நிலையான தன்மையை அடைய முடியும்.

    இவ்வாறு அருண்ஜேட்லி பேசினார். #gst #arunjaitley #RaghuramRajan

    பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. ஆகியவை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முடக்கி விட்டன என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறினார். #GST #RaghuramRajan #IndiaEconomicGrowth
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் பெர்க்லி நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ‘இந்தியாவின் எதிர்காலம்’ என்ற தலைப்பில், ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பேசினார். அவர் பேசியதாவது:-

    கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து 2016-ம் ஆண்டுவரை, இந்தியா வேகமாக வளர்ந்து வந்தது. ஆனால், பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. ஆகியவை கடந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முடக்கி விட்டன.

    கடந்த ஆண்டு சர்வதேச பொருளாதாரம் வளர்ந்து வந்த நிலையில், இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருப்பது வியப்பாக உள்ளது.

    இந்தியா தற்போது 7 சதவீத பொருளாதார வளர்ச்சியை கண்டு வருகிறது. ஆனால், வேலைவாய்ப்பு சந்தையில் புதிதாக சேரும் மக்களுக்கு இது போதாது. அவர்களுக்காக மாதத்துக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். எனவே, நமக்கு பொருளாதார வளர்ச்சி அதிகம் தேவை. இந்த வளர்ச்சியுடன் திருப்தி அடையக் கூடாது.

    இந்தியாவின் வளர்ச்சி மீண்டும் சுதாரித்து எழும்போது, கச்சா எண்ணெய் விலை உயர்வு பாதிப்பை உருவாக்கி உள்ளது. பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. ஆகியவற்றில் இருந்து இந்தியா மீண்டு எழுந்தாலும் கூட கச்சா எண்ணெய் விலை, இந்திய பொருளாதாரத்துக்கு சற்று கடினமானதாகவே இருக்கும்.

    வாராக்கடன் பிரச்சினையும் இந்தியாவை பாதித்துள்ளது. அதற்கு திவால் சட்டம் தீர்வு அல்ல. பன்முனை அணுகுமுறை தேவை.

    இந்தியாவில், அதிகாரம் முழுவதும் மத்திய அரசிடம் குவிந்திருப்பதும், பிரச்சினையின் ஒரு அங்கம் ஆகும். மத்தியில் இருந்தே இந்தியா செயல்பட முடியாது. பலரும் சுமையை ஏற்றுக்கொள்ளும்போதுதான், இந்தியா இயங்கும்.

    இவ்வாறு ரகுராம் ராஜன் பேசினார். 
    புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் 87½ சதவீத நோட்டுகளை மதிப்பிழக்க செய்தபோது நன்றாக திட்டமிடாமல் செயல்படுத்தி விட்டனர் என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறினார். #Demonetisation #RaghuramRajan
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி அதிரடியாக ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்து, ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்தார்.



    இந்த நடவடிக்கை எடுத்து 2 ஆண்டுகள் முடிந்தும், அது ஏற்படுத்திய தாக்கம் இன்னும் மறையவில்லை. அது எதிர்பார்த்த நோக்கங்களை அடையவில்லை என்ற விமர்சனமும் இருக்கிறது.

    இதுபற்றி ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவிக்கையில், “ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது நல்ல யோசனை அல்ல என்று அரசுக்கு நான் தெளிவுபடுத்தினேன். புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் 87½ சதவீத நோட்டுகளை மதிப்பிழக்க செய்தபோது, அதை நன்றாக திட்டமிடாமல் செயல்படுத்தி விட்டனர்” என்று கூறினார்.

    சர்வதேச நிதியத்தின் (ஐ.எம்.எப்.) தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள கீதா கோபிநாத் கடந்த ஆண்டு ஒரு பேட்டியில் ரகுராம் ராஜனின் கருத்தை எதிரொலித்துள்ளார். அப்போது அவர், “ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு நல்ல யோசனை என்று எந்தவொரு பெரும் பொருளாதார நிபுணரும் கருதுவார் என நான் நினைக்கவில்லை. இந்தியா போன்ற ஒரு நாட்டுக்கு இது ஏற்றதல்ல” என்று குறிப்பிட்டிருந்தார்.

    நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், “சரியாக வழிகாட்டாமல், ஜனநாயக நெறிமுறைகளைப் பின்பற்றாமல் ஒரு தலைபட்சமாக ஏவிய ஏவுகணை இது” என சாடி உள்ளார். #Demonetisation #RaghuramRajan

    வாராக் கடன்களை கட்டுப்படுத்துவது பற்றி குழுவின் உறுப்பினர்களுக்கு விரிவாக விளக்கம் அளிக்கும்படி இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான ரகுராம் ராஜனுக்கு நாடாளுமன்ற குழு அழைப்பு விடுத்துள்ளது. #RahuramRajan #ParliamentaryPanel
    புதுடெல்லி:

    நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் தொகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதை சமாளிக்க முடியாமல் வங்கிகள் கடுமையாக திணறி வருகின்றன.

    இந்த நிலையில் மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம், பா.ஜனதா தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற மதிப்பீடுகள் குழுவில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான ரகுராம் ராஜன் வாராக் கடன்களை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டது பற்றி எடுத்துக் கூறி இருந்தார். மேலும் அவரை அழைத்து இதுபற்றி ஆலோசனைகளை கேட்டுப் பெற வேண்டும் என்றும் அரவிந்த் சுப்பிரமணியம் வலியுறுத்தி இருந்தார்.

    இதையடுத்து முரளி மனோகர் ஜோஷி, தற்போது அமெரிக்காவின் சிகாகோ நகர வர்த்தக பள்ளியில் பேராசிரியராக பணியாற்றி வரும் ரகுராம் ராஜனை நாடாளுமன்ற மதிப்பீடுகள் குழு கூட்டத்தில் பங்கேற்று வாராக் கடன்களை கட்டுப்படுத்துவது பற்றி குழுவின் உறுப்பினர்களுக்கு விரிவாக விளக்கம் அளிக்கும்படி கடிதம் எழுதி உள்ளார். #RahuramRajan #ParliamentaryPanel
    ×