search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராகுல் காந்தி பப்பு அல்ல... புத்திசாலி- ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் புகழாரம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ராகுல் காந்தி பப்பு அல்ல... புத்திசாலி- ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் புகழாரம்

    • 2023-ம் ஆண்டு இந்திய பொருளாதாரத்திற்கும், மற்ற உலக நாடுகளுக்கும் கடினமானதாக இருக்கும்.
    • வளர்ச்சிக்கு தேவையான சீர்திருத்தங்களை உருவாக்க நாடு தவறிவிட்டது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி பாரத் ஜோடோ யாத்திரையை நடத்தி வருகிறார்.

    கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை பல்வேறு மாநிலங்கள் வழியாக சென்று காஷ்மீரில் முடிவடைய உள்ளது. யாத்திரையின் போது பல்வேறு பிரபலங்களும், முன்னாள் அதிகாரிகளும் பங்கேற்று வருகின்றனர்.

    அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற யாத்திரையின் போது ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் பங்கேற்று கலந்துரையாடினார்.

    இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் டாவோஸ் நகரில் உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்ற ரகுராம் ராஜனிடம், ராகுல் காந்தி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில், ராகுல் காந்தி எந்த வகையிலும் பப்பு அல்ல.

    அவரை பற்றிய இமேஜ் துரதிர்ஷ்டவசமானது என்று நான் நினைக்கிறேன். அவர் ஒரு புத்திச்சாலி, இளைஞர், ஆர்வமுள்ள மனிதர். முன்னுரிமைகள் என்ன, அடிப்படை அபாயங்கள் மற்றும் அவற்றை மதிப்பிடும் திறன் ஆகியவற்றை நன்கு புரிந்து கொள்வது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். ராகுல் காந்தி அதை செய்யக்கூடிய திறன் கொண்டவர் என்று நான் நினைக்கிறேன் என்றார். தொடர்ந்து பொருளாதாரம் குறித்து அவர் கூறியதாவது:-

    2023-ம் ஆண்டு இந்திய பொருளாதாரத்திற்கும், மற்ற உலக நாடுகளுக்கும் கடினமானதாக இருக்கும். வளர்ச்சிக்கு தேவையான சீர்திருத்தங்களை உருவாக்க நாடு தவறிவிட்டது.

    கொரோனா தொற்று நோயால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள கீழ் நடுத்தர வர்க்கத்தை மனதில் வைத்து கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.

    சீனாவுடன் ஒப்பிடும் போது இந்திய பொருளாதாரம் சிறியது. எனவே உலக பொருளாதாரத்தில் சீனாவின் இடத்தை இந்தியா வகிக்கும் என்ற விவாதம் முதிர்ச்சியற்றது. ஏற்கனவே 5-வது பெரிய பொருளாதாரமாக உள்ள இந்தியா தொடர்ந்து எழுச்சி காணும் போது குறிப்பிட்ட காலங்களில் இந்நிலை மாறலாம் என்றார்.

    Next Story
    ×