search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "candidate selection"

    • பாஜனதா தேர்தல் பொறுப்பாளராக நிர்மல்குமார் சுரானா நியமிக்கப்பட்டுள்ளார்.
    • முதலமைச்சர் ரங்கசாமியின் முடிவால் புதுச்சேரி அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜனதா தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    அமைச்சரவையில் என்.ஆர்.காங்கிரசில் முதலமைச்சர் ரங்கசாமி அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார் உள்ளனர்.

    பா.ஜனதாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார் உள்ளனர்.

    இதற்கிடையே புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணியில் பா.ஜனதா போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.


    பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை ஓராண்டுக்கு முன்பே பா.ஜனதா தொடங்கிவிட்டது. தொகுதிதோறும் மக்கள் சந்திப்பு, நிர்வாகிகள் சந்திப்பை மத்திய மந்திரி எல்.முருகன் நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் பாஜனதா தேர்தல் பொறுப்பாளராக நிர்மல்குமார் சுரானா நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் கட்சி நிர்வாகிளை தொடர்ந்து சந்தித்து வருகிறார்.

    இருப்பினும் பா.ஜனதா வேட்பாளர் யார்? என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது. யூனியன் பிரதேசமான புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் என 4 பிராந்தியமாக உள்ளது. 4 பிராந்தியங்களிலும் அறிமுகமான வேட்பாளரை நிறுத்தினால்தான் வெற்றிக்கு வழி வகுக்கும். அத்தகைய வேட்பாளரை போட்டியிட செய்ய வேண்டும் என பா.ஜனதாவினர் வற்புறுத்தி வருகின்றனர்.

    இதனிடையே மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், கவர்னர் தமிழிசை ஆகியோர் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியானது.

    இதற்கு உள்ளூர் பா.ஜனதா தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பிற மாநிலங்களைப்போல இல்லாமல், புதுச்சேரி ஒரு தொகுதிதான். அதையும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்குவதா? என கேள்வி எழுப்பிவருகின்றனர். மேலும் வெளி மாநிலத்தினரை புதுவை மக்கள் ஆதரிப்பார்களா? என்ற தயக்கமும் பா.ஜனதாவுக்கு உள்ளது.


    இந்த நிலையில் பா.ஜனதா வேட்பாளர் தேர்வில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமி, பா.ஜனதா வேட்பாளருக்காக ஒரு பெயரை பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    என்ஆர்.காங்கிரஸ் தலைவர் முதலமைச்சர் ரங்கசாமி தயவு இல்லாமல் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது சிரமமான காரியமாகும்.

    அதோடு அவர் பரிந்துரைக்கும் வேட்பாளர் என்றால் தேர்தல் பணியில் எந்தவித சுணக்கமும் இன்றி ரங்கசாமி தீவிர பிரசாரம் செய்வார்.

    இது பா.ஜனதாவின் வெற்றி மேலும் பிரகாசமாகும். ஏற்கனவே ராஜ்யசபா பதவியை பா.ஜனதாவுக்கு தர முதலமைச்சர் ரங்கசாமி முன்வந்தார். அப்போது 3 பேர் கொண்ட பட்டியலை பா.ஜனதா தலைமை அளித்து அதில் ஒருவரை எம்.பி.யாக தேர்வு செய்ய பரிந்துரைக்கும்படி கேட்டது. அதனடிப்படையில்தான் தற்போதைய பா.ஜனதா மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.


    2011-ல் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வுக்கு ராஜ்யசபா எம்.பி.யை முதலமைச்சர் ரங்கசாமி விட்டுக் கொடுத்தார். அப்போதும் அவருக்கு நெருக்கமான கோகுல கிருஷ்ணனை அ.தி.மு.க. ராஜ்யசபா எம்.பி. யாக்கினார்.

    இதேபோல தற்போதும் பாஜனதா வேட்பாளராக பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவரின் பெயரை முதலமைச்சர் ரங்கசாமி பரிந்துரை செய்துள்ளார். இது பா.ஜனதா தலைமைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா தலைமை முதலமைச்சர் ரங்கசாமியின் பரிந்துரையை ஏற்றால், அவர் பா.ஜனதா வேட்பாளராககளம் இறங்குவார்.

    முதலமைச்சர் ரங்கசாமியின் முடிவால் புதுச்சேரி அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

    அதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை, வேட்பாளர்கள் தேர்வு பற்றி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தினார்கள். #ADMK #EdappadiPalaniswami #OPS
    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்தார்.

    அவருடன் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர், அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் ஆகியோர் வந்தனர்.



    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கு அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். நாளை 18 தொகுதி இடைத்தேர்தல் நேர்காணல் நடைபெற உள்ளது.

    அதன் பிறகு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டங்களை எப்படி நடத்துவது என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

    அ.தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு, அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் தேர்வு ஆகியவை பற்றியும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தினார்கள்.

    சுமார் 45 நிமிடங்கள் இந்த ஆலோசனை நடைபெற்றது. #ADMK #EdappadiPalaniswami #OPS
    தமிழ்நாட்டில் வருகிற 19-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளது. அதற்கு இன்னும் ஒரு வாரமே அவகாசம் உள்ளதால் அனைத்துக்கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாகி உள்ளன. #Parliamentelection
    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 11-ந்தேதி முதல் மே மாதம் 19-ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் மாதம் 18-ந்தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலும் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து நேற்று மாலை முதலே நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

    தமிழ்நாட்டில் வருகிற 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளது. அதற்கு இன்னும் சரியாக ஒரு வாரமே அவகாசம் உள்ளது. இதனால் அனைத்துக்கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாகி உள்ளன.

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வருகிற 19-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை மனுதாக்கல் செய்யலாம். மனுக்களை திரும்ப பெற 29-ந்தேதி கடைசி நாளாகும். அன்று வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டு விடும்.

    அன்று முதல் ஏப்ரல் மாதம் 16-ந்தேதி வரை மட்டுமே தேர்தல் பிரசாரம் செய்ய முடியும். அந்த வகையில் தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரத்துக்கு வெறும் 19 நாட்களே அவகாசம் உள்ளது. எனவே தலைவர்கள் இப்போதே தேர்தல் பிரசாரத்துக்கு தயாராகி வருகிறார்கள்.

    இதற்கிடையே அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடுகள் முடிந்துவிட்டன. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.-7, பா.ஜனதா-5, தே.மு.தி.க.-4, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. த.மா.கா.வும் இந்த அணியில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. வசம் 21 தொகுதிகள் உள்ளன.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு-10, இரு கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா-2 , ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    தொகுதி பங்கீடுகள் முடிந்துவிட்டதால் அடுத்த கட்டமாக எந்தெந்த தொகுதிகளை எந்த கட்சிகளுக்கு ஒதுக்குவது என்பது தொடர்பாக பேச்சு வார்த்தைகள் மும்முரமாக நடந்து வருகிறது. அதுவும் இன்று மாலைக்குள் முடிவுக்கு வந்துவிடும் என்று தெரிகிறது.

    வருகிற 19-ந்தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்குகிறது. தேர்தலுக்கு ஒரு மாதம் தான் இருப்பதால் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பு அடைந்துள்ளன. தொகுதி முடிவானால் தான் வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியும். பொதுவாக எல்லா கட்சிகளிலுமே வேட்பாளர்களை தேர்வு செய்து வைத்து அவர்களை முன்னிலைப்படுத்தியே தொகுதிகளையும் கட்சி தலைவர்கள் கேட்கிறார்கள்.

    பேச்சு வார்த்தையின்போது எங்கள் தரப்பில் இந்த வேட்பாளருக்காக இந்த தொகுதியை எதிர்பார்க்கிறோம் என்று தான் ஒவ்வொரு கட்சி தலைவர்களும் கோரிக்கையை முன் வைக்கிறார்கள். எங்கள் கட்சியில் இவர் இந்த தொகுதியில் போட்டியிட்டால் தான் வெற்றி வாய்ப்பு இருக்கும் என்ற அடிப்படையிலேயே கூட்டணி கட்சி தலைவர்கள் அமர்ந்து பேசி தொகுதிகளை முடிவு செய்கிறார்கள்.

    எல்லா கூட்டணிகளிலும் இன்று மாலை அல்லது நாளைக்குள் தொகுதி மற்றும் வேட்பாளர்கள் பெயர் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வேட்பாளர்கள் தேர்வு தொடர்பாக தி.மு.க. ஏற்கனவே நேர்காணலை முடித்து விட்டது. அ.தி.மு.க.வில் நேர்காணல் இன்றும், நாளையும் நடக்கிறது.



    எனவே இந்த வார இறுதிக்குள் தி.மு.க.- அ.தி.மு.க. கூட்டணிகளில் களம் இறங்கும் வேட்பாளர்கள் முழு விவரம் தெரிய வாய்ப்பு உள்ளது. இதையடுத்து தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

    அடுத்த வாரம் வேட்பு மனுதாக்கல் தொடங்க இருப்பதால் கட்சி நிர்வாகிகள் அனைவரும் சுறுசுறுப்பான மனநிலைக்கு வந்துள்ளனர். இப்போதே பல இடங்களில் பிரசாரம் தொடங்கி விட்டது. அடுத்த வாரம் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டிவிடும். #Parliamentelection
    ×