என் மலர்
நீங்கள் தேடியது "வேட்பாளர் தேர்வு"
- துணை ஜனாதிபதியை பாராளுமன்றத்தின் இரு சபை எம்.பி.க்களும் ஓட்டுப்போட்டு தேர்வு செய்வார்கள்.
- பா.ஜ.க. கூட்டணி சார்பில் பெண் வேட்பாளர் ஒருவரை களம் இறக்கலாமா? என்றும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
புதுடெல்லி:
துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் துணை ஜனாதிபதி பதவி இடம் காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த நிலையில் புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய செப்டம்பர் மாதம் 9-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. 21-ந்தேதி மனுதாக்கலுக்கான கடைசி நாளாகும்.
துணை ஜனாதிபதியை பாராளுமன்றத்தின் இரு சபை எம்.பி.க்களும் ஓட்டுப்போட்டு தேர்வு செய்வார்கள். பாராளுமன்ற மக்களவையில் தற்போது 542 எம்.பி.க்களும், மேல்சபையில் 240 எம்.பி.க்களும் இருக்கிறார்கள். இவர்களில் 391 வாக்குகள் பெறும் வேட்பாளர் புதிய ஜனாதிபதியாக தேர்வு பெறுவார்.
பாராளுமன்ற இரு அவைகளிலும் பா.ஜ.க. கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. பாராளுமன்ற மக்களவையில் பா.ஜ.க. கூட்டணிக்கு 293 பேரும், மேல்சபையில் 129 பேரும் உள்ளனர். எனவே பா.ஜ.க. கூட்டணி நிறுத்தும் வேட்பாளர் எளிதில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
மனுதாக்கல் தொடங்கி உள்ள நிலையில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கி உள்ளன. இது தொடர்பாக நேற்று மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர் நட்டா இருவரும் ஆலோசித்து தேர்வு செய்யும் வேட்பாளரை ஏகமனதாக ஏற்பது என்று முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து பிரதமர் மோடியும், பா.ஜ.க. தலைவரும் மத்திய மந்தியுமான நட்டாவும் துணை ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதற்கான ஆலோசனையை தொடங்கி உள்ளனர். முன்னாள் கவர்னர்கள் அல்லது பா.ஜ.க. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரை துணை ஜனாதிபதி பதவிக்கு நிறுத்தலாம் என்று பிரதமர் மோடி விரும்புவதாக தெரிகிறது.
தற்போதைய நிலவரப்படி குஜராத் கவர்னர் ஆச்சார்யா தேவ்ரத், கர்நாடகா கவர்னர் தவர்சந்த் கெலாட் மற்றும் சேஷாத்திரி சாரி ஆகிய 3 பேர் பெயர் பா.ஜ.க. வேட்பாளருக்கு அடிபடுகிறது. பா.ஜ.க. கூட்டணி சார்பில் பெண் வேட்பாளர் ஒருவரை களம் இறக்கலாமா? என்றும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
இன்னும் ஒரு வாரத்துக்குள் பா.ஜ.க. வேட்பாளரை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அவரது பெயரை கூட்டணி கட்சி தலைவர்களிடம் கலந்து ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.
அதன் பிறகு பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் வருகிற 18-ந்தேதி முதல் 20-ந்தேதிக்குள் அறிவிக்க பா.ஜ.க. மூத்த தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே இந்தியா கூட்டணியும் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது. இதனால் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டி உறுதியாகி இருக்கிறது. இந்தியா கூட்டணி சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று ஆலோசனை தொடங்கி உள்ளது. டெல்லியில் நேற்று ராகுல்காந்தி தனது வீட்டில் இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு விருந்து அளித்தார். இந்த விருந்தில் இந்தியா கூட்டணியில் உள்ள 25 கட்சிகளின் 50 தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களிடம் 2024-ம் ஆண்டு தேர்தலில் நடந்த வாக்குகள் திருட்டு தொடர்பான தகவல்களை ராகுல்காந்தி தெரிவித்ததாக தெரிகிறது. அவர்களிடம் பெங்களூரு மத்திய தொகுதியில் வாக்குகள் எப்படி தில்லுமுள்ளு செய்யப்பட்டுள்ளன என்று ராகுல் காந்தி விளக்கி கூறினார்.
அதன் பிறகு 12 கட்சி தலைவர்களுடன் மட்டும் ராகுல்காந்தி தனியாக ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில் துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்து விவாதிக்கப்பட்டது. எனவே இந்தியா கூட்டணி சார்பில் இந்த 12 கட்சிகளின் தலைவர்கள் எடுக்கும் முடிவுதான் இறுதியானது என்று தெரிய வருகிறது.
இவர்கள் மீண்டும் டெல்லியில் கூடி ஆலோசிக்க உள்ளனர். அப்போது இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் யார்? என்பது தெரிய வரும்.
- அ.தி.மு.க. வேட்பாளர் தேர்வு குறித்து அறிக்கை வெளியிடுவேன் என ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார்.
- மாவட்ட செயலாளர்கள் முன்னாள் எம்.பி. கோபால கிருஷ்ணன், அய்யப்பன் எம்.எல்.ஏ., உள்பட பலர் உடனிருந்தனர்.
மதுரை
மதுரை விமான நிலையத்திற்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வருகை தந்தார். அவரிடம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் தேர்வு படிவம் குறித்து நிருபர்கள் கேட்டனர்.
இதற்கு பதில் அளிக்க மறுத்த ஓ.பி.எஸ். மாலை 3 மணிக்கு மேல் இதுகுறித்து அறிக்கை வெளியிடுவேன் என்று தெரிவித்தார்.
மாவட்ட செயலாளர்கள் முன்னாள் எம்.பி. கோபால கிருஷ்ணன், அய்யப்பன் எம்.எல்.ஏ., முருகேசன், மாநில இளைஞரணி செயலாளர் ராஜ்மோகன், வி.கே.எஸ்.மாரிசாமி, பி.எஸ்.கண்ணன், பேரவை குணசேகரன், சோலை இளவரசன், ராமநாதன், ஆட்டோ கருப்பையா, அர்ஜுன், கிரி உள்பட பலர் உடனிருந்தனர்.
- பாஜனதா தேர்தல் பொறுப்பாளராக நிர்மல்குமார் சுரானா நியமிக்கப்பட்டுள்ளார்.
- முதலமைச்சர் ரங்கசாமியின் முடிவால் புதுச்சேரி அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜனதா தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
அமைச்சரவையில் என்.ஆர்.காங்கிரசில் முதலமைச்சர் ரங்கசாமி அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார் உள்ளனர்.
பா.ஜனதாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார் உள்ளனர்.
இதற்கிடையே புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணியில் பா.ஜனதா போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை ஓராண்டுக்கு முன்பே பா.ஜனதா தொடங்கிவிட்டது. தொகுதிதோறும் மக்கள் சந்திப்பு, நிர்வாகிகள் சந்திப்பை மத்திய மந்திரி எல்.முருகன் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் பாஜனதா தேர்தல் பொறுப்பாளராக நிர்மல்குமார் சுரானா நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் கட்சி நிர்வாகிளை தொடர்ந்து சந்தித்து வருகிறார்.
இருப்பினும் பா.ஜனதா வேட்பாளர் யார்? என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது. யூனியன் பிரதேசமான புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் என 4 பிராந்தியமாக உள்ளது. 4 பிராந்தியங்களிலும் அறிமுகமான வேட்பாளரை நிறுத்தினால்தான் வெற்றிக்கு வழி வகுக்கும். அத்தகைய வேட்பாளரை போட்டியிட செய்ய வேண்டும் என பா.ஜனதாவினர் வற்புறுத்தி வருகின்றனர்.
இதனிடையே மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், கவர்னர் தமிழிசை ஆகியோர் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியானது.
இதற்கு உள்ளூர் பா.ஜனதா தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பிற மாநிலங்களைப்போல இல்லாமல், புதுச்சேரி ஒரு தொகுதிதான். அதையும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்குவதா? என கேள்வி எழுப்பிவருகின்றனர். மேலும் வெளி மாநிலத்தினரை புதுவை மக்கள் ஆதரிப்பார்களா? என்ற தயக்கமும் பா.ஜனதாவுக்கு உள்ளது.

இந்த நிலையில் பா.ஜனதா வேட்பாளர் தேர்வில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமி, பா.ஜனதா வேட்பாளருக்காக ஒரு பெயரை பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
என்ஆர்.காங்கிரஸ் தலைவர் முதலமைச்சர் ரங்கசாமி தயவு இல்லாமல் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது சிரமமான காரியமாகும்.
அதோடு அவர் பரிந்துரைக்கும் வேட்பாளர் என்றால் தேர்தல் பணியில் எந்தவித சுணக்கமும் இன்றி ரங்கசாமி தீவிர பிரசாரம் செய்வார்.
இது பா.ஜனதாவின் வெற்றி மேலும் பிரகாசமாகும். ஏற்கனவே ராஜ்யசபா பதவியை பா.ஜனதாவுக்கு தர முதலமைச்சர் ரங்கசாமி முன்வந்தார். அப்போது 3 பேர் கொண்ட பட்டியலை பா.ஜனதா தலைமை அளித்து அதில் ஒருவரை எம்.பி.யாக தேர்வு செய்ய பரிந்துரைக்கும்படி கேட்டது. அதனடிப்படையில்தான் தற்போதைய பா.ஜனதா மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.

2011-ல் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வுக்கு ராஜ்யசபா எம்.பி.யை முதலமைச்சர் ரங்கசாமி விட்டுக் கொடுத்தார். அப்போதும் அவருக்கு நெருக்கமான கோகுல கிருஷ்ணனை அ.தி.மு.க. ராஜ்யசபா எம்.பி. யாக்கினார்.
இதேபோல தற்போதும் பாஜனதா வேட்பாளராக பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவரின் பெயரை முதலமைச்சர் ரங்கசாமி பரிந்துரை செய்துள்ளார். இது பா.ஜனதா தலைமைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா தலைமை முதலமைச்சர் ரங்கசாமியின் பரிந்துரையை ஏற்றால், அவர் பா.ஜனதா வேட்பாளராககளம் இறங்குவார்.
முதலமைச்சர் ரங்கசாமியின் முடிவால் புதுச்சேரி அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.
- முன்னணி கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்துவிட்டது.
- கட்சியில் இருக்கும் நிர்வாகிகளை தேர்வு செய்து போராடுவதைவிட பிரபலங்களை களம் இறக்கி மோதிப்பார்ப்பது என்ற முடிவுடன் வேட்பாளர்களை தேர்வு செய்து அசத்தி இருக்கிறது.
சென்னை:
தேர்தல் வந்தால் கூட்டணி அமைப்பது, தொகுதிகளை ஒதுக்குவது, வேட்பாளர்களை தேர்வு செய்வது பல காட்சிகள் ஒவ்வொரு கட்சியிலும் திரைமறைவில் நடப்பது வழக்கமானதுதான்.
முன்னணி கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்துவிட்டது. இதில் பலர் எதிர்பார்க்கப்பட்டவர்கள். சிலர் புதுமுகங்கள் ஆவார்கள்.
ஆனால் பா.ஜனதா ஓசையின்றி தொகுதிகளையும் அதில் பிரபலங்களையும் தேர்வு செய்து வந்துள்ளது.
தெலுங்கானா கவர்னராக இருந்த டாக்டர் தமிழிசையை மீண்டும் அரசியலுக்குள் கொண்டு வந்து தென்சென்னையில் களம் இறக்கி உள்ளது.
அதே போல் மத்திய மந்திரி எல்.முருகன் மத்திய பிரதேசத்தில் இருந்து டெல்லி மேல்சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட போதும் நீலகிரியில் தி.மு.க.வின் ஆ.ராசாவை எதிர்த்து களம் இறக்கி உள்ளது.
அண்ணாமலை போட்டியிடுவாரா? என்று எதிர்பார்த்த நிலையில் அவரை கோவை தொகுதியில் களம் இறக்கி இருக்கிறது. எம்.எல்.ஏ.வாக இருக்கும் நயினார் நாகேந்திரனை நெல்லை தொகுதியில் போட்டியிட வைத்துள்ளது.
கன்னியாகுமரியில் நன்கு அறிமுகமான முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை மீண்டும் களம் இறக்கி உள்ளது. புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை வேலூரிலும் பாரிவேந்தரை பெரம்பலூரிலும் களத்தில் இறக்கி உள்ளது.
அதே போல் கிருஷ்ணகிரியில் முன்னாள் எம்.பி.யான நரசிம்மன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சியில் இருக்கும் நிர்வாகிகளை தேர்வு செய்து போராடுவதைவிட பிரபலங்களை களம் இறக்கி மோதிப்பார்ப்பது என்ற முடிவுடன் வேட்பாளர்களை தேர்வு செய்து அசத்தி இருக்கிறது.






