search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுதந்திரதின விழா ஏற்பாடு குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்
    X

    சுதந்திரதின விழா ஏற்பாடு குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்

    விழுப்புரம் மாவட்டத்தில் சுதந்திர தின விழா ஏற்பாடுகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் கலெக்டர் சுப்பிரமணியன் ஆலோசனை நடத்தினார்.
    விழுப்புரம்:

    நாட்டின் 72-வது சுதந்திர தின விழா அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாக அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, சப்-கலெக்டர்கள் சாருஸ்ரீ, மெர்சிரம்யா, உதவி கலெக்டர் (பயிற்சி) சரவணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கார்த்திகேயன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் சுப்பிரமணியன் பேசியதாவது:-

    சுதந்திர தின விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் அனைத்துத்துறை அதிகாரிகளும் செய்திட வேண்டும், சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்ட தியாகிகளை கவுரவிப்பதோடு அவர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தவும் ஏற்பாடு செய்ய வேண்டும், கல்வித்துறையினர் மாணவ- மாணவிகள் மூலம் சிறப்பான கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும், அரசுத்துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களை தேர்வு செய்து பரிசு வழங்க வேண்டும். காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய போலீசாரை பாராட்டி சான்றிதழ் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 
    Next Story
    ×