என் மலர்
நீங்கள் தேடியது "குடும்ப அரசியல்"
- தலைவர்கள் திறமைகளை விட குடும்பப் பெயர்களை நம்பியிருக்க அனுமதிக்கிறது.
- கடந்த 25 ஆண்டுகளில், 40 வயதுக்குட்பட்ட எந்த எம்.பி.யும் குடும்ப வம்சாவளி இல்லாமல் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை.
'குடும்ப அரசியல் இந்திய ஜனநாயகத்திற்கு ஒரு அச்சுறுத்தல்' என்ற தலைப்பில் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், "அரசியல் குடும்பங்களின் ஆதிக்கம் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். குடும்ப ஆட்சியிலிருந்து இந்தியா விலகி தகுதி அடிப்படையிலான தலைமைக்கு மாற வேண்டும்.
குடும்ப அடிப்படையிலான அரசியல் பொறுப்புணர்வை பலவீனப்படுத்துகிறது. நிர்வாகத்தின் தரத்தை குறைக்கிறது மற்றும் தலைவர்கள் திறமைகளை விட குடும்பப் பெயர்களை நம்பியிருக்க அனுமதிக்கிறது.
இத்தகைய குடும்பங்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் மிகப்பெரிய நிதி ஆதாயங்களை ஈட்டியுள்ளன. கடந்த 25 ஆண்டுகளில், 40 வயதுக்குட்பட்ட எந்த எம்.பி.யும் குடும்ப வம்சாவளி இல்லாமல் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை.
149 அரசியல் குடும்பங்கள் மாநில சட்டமன்றங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளன என்றும், 11 மத்திய அமைச்சர்கள் மற்றும் ஒன்பது முதலமைச்சர்கள் குடும்ப உறவுகளைக் கொண்டுள்ளனர் என்றும் ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளதாக தரூர் சுட்டிக்காட்டுகிறார்.
மேலும் தனது கட்டுரையில், ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ்யை தொடர்ந்து ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்ட வாரிசுகளின் செல்வாக்கு, அரசியல் தலைமை என்பது மரபுரிமையாகக் கிடைத்த ஒரு உரிமை என்ற கருத்தை வளர்த்துள்ளது.
காங்கிரஸ் மட்டுமின்றி, சிவசேனா, சமாஜ்வாடி கட்சி, லோக் ஜனசக்தி கட்சி, சிரோமணி அகாலிதளம், மக்கள் ஜனநாயகக் கட்சி, திமுக மற்றும் பாரத ராஷ்டிர சமிதி போன்ற கட்சிகளும் இதற்கு சான்று என்றும் தரூர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சிகளில் வெளிப்படையான உள்கட்சித் தேர்தல்கள், சட்டப்பூர்வ கால வரம்புகள் மற்றும் தகுதி அடிப்படையிலான தலைமையை மேம்படுத்துவதற்கான சீர்திருத்தங்கள் தேவை என்றும் சசி தரூர் தனது கட்டுரையில் வலியுறுத்தி உள்ளார். இந்த கட்டுரை காங்கிரசார் இடையே சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
- அடுத்த தேர்தலில் தி.மு.க. காணாமல் போய்விடும் என்று முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேசினார்.
- இந்த திராவிட மாடல் என்பது பூச்சாண்டி காட்டக்கூடிய வேலை.
சிவகங்கை
சிவகங்கை அரண்மனை வாயில் முன்பு எம்.ஜி.ஆர். 106-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்-சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தலைமையில் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பங்கேற்று பேசியதாவது:-
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் திராவிட மாடல் என்ற பெயரில் குடும்ப அரசியல் செய்து வருகிறார். ஒரு சாதாரண எளிய தலித் தி.மு.க. தொண்டனை வருகிற 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளராக ஸ்டாலினால் அறிவிக்க முடியுமா?
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் தலைவராக ஒரு சாதாரண எளிய தொண்டன் கட்சியின் கிளை செயலாளரை ஸ்டாலினால் அறிவிக்க முடியுமா? அப்படி சொன்னால்தான் திராவிட மாடல் ஆகும். இந்த திராவிட மாடல் என்பது பூச்சாண்டி காட்டக்கூடிய வேலை.
திராவிட மாடல் என்ற பெயரில் குடும்ப அரசியல் செய்து வரும் தி.மு.க. அடுத்த தேர்தலில் காணா மல் போய்விடும்
இவ்வாறு அவர் பேசி னார். இதில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் செல்வமணி, கருணாகரன், அருள்ஸ்டிபன், சிவாஜி , சிவசிவஸ்ரீதர், சேவியர், பழனிச்சாமி, கோபி, மண்டல தகவல் தொழி ல்நுட்ப இணை செயலாளர் தமிழ்செல்வன்.
மகளிரணி செயலாளர் ஜாக்குலின், மாவட்ட மகளிரணி வெண்ணிலா சசிகுமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன், ஊராட்சி மன்ற தலைவர்கள் நாலுகோட்டை மணிகண்டன், மணிமுத்து, பாசறை பொருளாளர் சரவணன்.
பாசறை இணை செயலாளர் சதீஸ்பாலு, கவுன்சிலர்கள் ராபர்ட், கிருஷ்ணகுமார், தாமு, மாணவரணி நகரசெய லாளர் ராஜபாண்டி, பாசறை இணை செயலாளர் மோசஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
+2
- என்னோடு சித்தாந்தத்தில் வேறுபட்டுள்ளதாக அவர்கள் (எதிர்க்கட்சிகள்) சொல்கிறார்கள்.
- முதலில் குடும்பம் என அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் நான் முதலில் தேசம் என்று நம்புகிறேன்.
பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின்போது எதிர்க்கட்சிகளை வாரிசு அரசியல் என விமர்சனம் செய்வது உண்டு. குறிப்பாக லாலு பிரசாத், திமுக-விற்கு எதிராக இந்த விமர்சனத்தை வைப்பது உண்டு.
இந்த நிலையில்தான் லாலு பிரசாத், பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை என விமர்சனம் செய்தார். ஆனால் ஒட்டு மொத்த தேசம்தான் என்னுடைய குடும்பம் என பிரதமர் மோடி பதில் கொடுத்தார்.

இந்த நிலையில் இன்று தெலுங்கானா மாநிலம் சங்கர்ரெட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-
என்னோடு சித்தாந்தத்தில் வேறுபட்டுள்ளதாக அவர்கள் (எதிர்க்கட்சிகள்) சொல்கிறார்கள். முதலில் குடும்பம் என அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் நான் முதலில் தேசம்தான் என்று நம்புகிறேன். அவர்களுக்கு அவர்களுடைய குடும்பம்தான் எல்லாமே. என்னை பொறுத்தவரையில் என்னுடைய நாடுதான் எனக்கு எல்லாமே. அவர்களுடைய குடும்ப நலுனுக்காக அவர்கள் நாட்டை தியாகம் செய்கிறார்கள். நாட்டின் நலனுக்காக நான் என்னையே தியாகம் செய்துள்ளேன்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.






