search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "one election"

    • இதனால் பெருமளவில் பொருள், நேரம், மனிதவளங்கள் மிச்சமாகும் என பா.ஜ.க. எதிர்பார்க்கிறது
    • முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர் மட்ட கமிட்டி அமைக்கப்பட்டது

    "ஒரே நாடு, ஒரே தேர்தல்" எனும் முறையில் நாடு முழுவதும் மக்களவைக்கும் அனைத்து மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் கொண்டு வர இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் ஆலோசனை செய்து வருகிறது. இதனால் பெருமளவில் பொருள், நேர மற்றும் மனிதவள விரையங்கள் தடுக்கப்படுவதுடன், மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் முக்கிய முடிவுகளை தொலைநோக்கோடு எடுப்பதற்கும் இது உதவும் என்பதால் இதனை தீவிரமாக ஆளும் பா.ஜ.க. அரசு பரிசீலித்து வருகிறது.

    இதற்காக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு உயர் மட்ட கமிட்டி உருவாக்கப்பட்டிருக்கிறது.

    இன்று அந்த கமிட்டியின் முதல் சந்திப்பு நடைபெற்றது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், முன்னாள் மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், முன்னாள் நிதி ஆணைய இயக்குனர் என் கே சிங், முன்னாள் மக்களவை பொது செயலாளர் சுபாஷ் கஷ்யப் மற்றும் முன்னாள் தலைமை கண்காணிப்பு ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கு பெற்றனர்.

    முதல் கட்டமாக அங்கீகரிக்கப்பட்ட தேசிய அரசியல் கட்சிகள், மாநிலங்களில் உள்ள ஆளும் கட்சிகள், பாராளுமன்றத்தில் உறுப்பினர்களை கொண்ட கட்சிகள் மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் ஆகியோரை அழைத்து அவர்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும், நிலைப்பாட்டையும் தெரிந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. இவை மட்டுமல்லாமல் சட்ட ஆணையத்தின் கருத்தை கேட்கவும் சட்டத்துறை முடிவெடுத்துள்ளது.

    இந்த சந்திப்பில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கலந்து கொள்ளவில்லை. அவரையும் உறுப்பினராக்கியிருந்தும், தான் இதில் பங்கு பெற விரும்பவில்லை என அவர் அமித் ஷாவிற்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிகிறது.

    தமிழ்நாட்டில் 2021ல் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மேலும் சில மாநிலங்களுக்கு இவ்வருட இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. "ஒரே நாடு, ஒரே தேர்தல்" திட்டம் அமலுக்கு வந்தால் இந்த மாநிலங்களில் ஆட்சிகள் கலைக்கப்படுமா என விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    • ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லை என்று மாணிக்கம்தாகூர் எம்.பி. பேட்டியளித்தார்.
    • பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் தேர்தல் முதல், பாராளுமன்ற உறுப்பினர் தேர்தல் வரை ஒரே நேரத்தில் நடத்த சாத்தியமே இல்லை.

    விருதுநகர்

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் நிறைவடைந்து ஓராண்டு ஆகியுள்ளது. இதையொட்டி சிவகாசியில் காங்கிரஸ் சார்பில் ஊர்வலம் நடந்தது.

    இதில் மாணிக்கம்தாகூர் எம்.பி., அசோகன் எம்.எல்.ஏ., மாவட்ட தலை வர்கள் ராஜாசொக்கர். ரங்கசாமி, மாநகர் தலைவர் சேர்மத்துரை, மாநில மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னதம்பி, மாவட்ட செய்தி தொடர்பா ளர் மீனாட்சிசுந்தரம், கவுன்சிலர் ரவிசங்கர், ஜீ.பி.முருகன், முன்னாள் கவுன்சிலர் கணேசன், வட்டார தலைவர் பைபாஸ் வைரகுமார், ஷேக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகாசி காமராஜர் சிலையில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியா காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம் சென்றனர்.

    பின்னர் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராகுல்காந்தி நடைபயணம் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு புதிய திசையை கொடுத்தது. அதை போலவே இந்தியாவுக்கும் புதிய அரசியலை கொடுத்துள்ளது.

    இந்த அரசியல் மாற்றம் என்பது கடந்த ஆண்டு செப்.7-ந்தேதி தொடங்கி யது. இதை கொண்டாடும் வகையில் இந்தியா முழுவதும் 900 இடங்களில் இந்த நடைபயணம் நடக்கி றது. இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தினரையும் காங்கிரஸ் கட்சி மதிக்கிறது. பா.ஜ.க. மதஅடிப்படையில் விவாதம் செய்கிறது. இந்தியா என்பது பாரதத்தை தான் குறிக்கிறது. ஆனால் வேண்டும் என்றே பா.ஜ.க. இதனை விவாதமாக்கி வருகிறது.

    எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைத்த போதே பா.ஜ.க.வுக்கு பயம் வந்துவிட்டது. இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்து தேர்தல் காலத்தில் உரிய முறையில் அறிவிக்கப்படும். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லை.

    பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் தேர்தல் முதல், பாராளுமன்ற உறுப்பினர் தேர்தல் வரை ஒரே நேரத்தில் நடத்த சாத்தியமே இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரே நாடு ஒரே தேர்தல் அறிவிப்பை கண்டு தி.மு.க.வினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
    • முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    விருதுநகர்

    எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாளையொட்டி விருதுநகா் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் விருதுநகர் பாண்டியன் நகர் எம்.ஜி.ஆர். திடலில் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் விஜயகுமரன் தலைமை தாங்கினார்.

    விருதுநகர் நகர செயலாளர் நைனார் முகமது, சிவகாசி வடக்கு ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, விருதுநகர் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.கே.கண்ணன், கிழக்கு ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம, விருதுநகர் வடக்கு ஒன்றிய செயலாளர் மச்சராஜா, விருதுநகர் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் முத்துலட்சுமி, மாவட்ட கவுன்சிலர் நாகராஜ், விருதுநகர் கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் பாலகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பசாமி, ராமலட்சுமி, ராஜம்மாள் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அமைப்புச் செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர்-முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசியதாவது:-

    குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருவோம் என்று கூறினார்கள். சிலிண்டர் மானியம் தருவோம் என்று கூறினார்கள், 2 வருடமாக எதுவுமே செய்யவில்லை. பொய் சொல்லியே ஓட்டு வாங்கி விட்டனர். உதயநிதி ஸ்டாலின் ஒரு செங்கலை எடுத்துக்கொண்டு ஓட்டு கேட்டு வந்தார். அந்த செங்கலின் விலை தற்போது 12 ரூபாய் உயர்ந்து விட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு செங்கல் ரூ.5 மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. தற்போது தி.மு.க. ஆட்சியில் 12 ரூபாய்க்கு சென்று விட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் 300 ரூபாய்க்கு விற்பனை செய்த சிமெண்ட் விலை இன்றைக்கு 600 ரூபாய்க்கு மேல் சென்றுவிட்டது. கம்பி விலைகள் அனைத்தும் கூடிவிட்டன. 10 லட்ச ரூபாய்க்கு வீடு கட்ட நினைத்தால் கூட அதன் செலவு தற்போது விலைவாசி உயர்வு காரணமாக 20 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. எல்லா விலையும் உயர்ந்து விட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2 வருடங்கள் கூட ஆகாத நிலையில் எல்லா விலையும் ஏற்றி விட்டனர்.

    தற்போது ஒரே நாடு ஒரே தேர்தல் அறிவிப்பை கண்டு தி.மு.க. அரசு அதிருப்தி அடைந்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்படுத்தப்பட்டால் தமிழகத்தில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் வரும். தமிழகத்தில் சரியான ஆளுநர் கிடைத்துள்ளார். ஆளுநருக்கும் தி.மு.க.வுக்கும் சரியான போட்டி நடக்கிறது. தி.மு.க.வினரால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. இவர்கள் என்ன செய்தாலும் கடைசியாக ஆளுநரிடம் சென்று கையெழுத்து வாங்க வேண்டி உள்ளது. சட்டசபையில் ஆளுநரை கடுமையாக விமர்சித்து விட்டு கையெழுத்து வாங்க மட்டும் கவர்னர் மாளிகைக்கு ஏன் செல்கின்றனர்?

    மத்திய அமைச்சர்களை விமர்சனம் செய்வது இந்திய பிரதமரை விமர்சனம் செய்வது ஆளுநரை விமர்சனம் செய்வது ஆளுநரை ஒருமையில் பேசுவது, கடைசியில் அவர்களிடமே சென்ற கையெழுத்து கேட்பது திட்டங்களுக்கு நிதி கேட்பது. எப்படி தமிழகத்திற்கு நல்லது நடக்கும். ஏதாவது பரபரப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தி.மு.க.வினர் எதையாவது செய்கின்றனர்.

    தற்போது சேதுசமுத்திர திட்டத்தை கையில் எடுத்துள்ளனர். ஒன்றுமே கிடைக்கவில்லை என்றால் ஏதாவது ஒன்றை கையில் எடுத்துக் கொள்கின்றனர். 2 ஏக்கர் நிலம் தருகின்றோம் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி மக்களை ஏமாற்றி வாக்கு சேகரித்தார். கடைசியில் 2 ஏக்கர் நிலம் கொடுக்கவே இல்லை. வருகிற பாராளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வரவுள்ளது. மக்கள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நாடாளுமன்றம், சட்ட சபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனை குறித்து தேசிய சட்ட ஆணையம் நேற்று 2-வது நாளாக கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியது.
    புதுடெல்லி:

    ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கூறி உள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ள தேசிய சட்ட ஆணையம், இது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கருத்துகளை கேட்டு அறிய முடிவு செய்தது.

    இது தொடர்பான 2 நாள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள சட்ட ஆணைய அலுவலகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் கலந்து கொண்ட அ.தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளின் பிரதிநிதிகள் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    நேற்று 2-வது நாளாக சட்ட ஆணையத்தின் தலைவர் பல்பீர் சிங் சவுகான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தி.மு.க., ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.

    நேற்றைய கூட்டத்தில் தி.மு.க. சார்பில் கலந்து கொண்ட திருச்சி சிவா எம்.பி. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனைக்கு தங்கள் கட்சியின் எதிர்ப்பை தெரிவித்தார்.

    இதுபற்றி பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் விஷயத்தில் தி.மு.க.வின் நிலை என்ன? என்பது பற்றி செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்ட ஆணையத்துக்கு ஒரு கடிதம் தந்துள்ளார். அந்த கடிதத்தை நான் வழங்கி தி.மு.க.வின் நிலையை விளக்கினேன்.

    ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை தி.மு.க. கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியாவில் அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவை பயன்படுத்தி மாநில அரசை மத்திய அரசு எந்த நேரத்திலும் கலைக்கலாம் என்ற நிலை உள்ளது. சில வழக்குகளில் தீர்ப்பு மாறி வந்திருந்தாலும் கூட இந்த பிரிவை எந்த நேரத்திலும் பயன்படுத்தும் சாத்தியக்கூறுகள் உள்ளன.

    மேலும் மக்களவையும் தொடர்ந்து 5 ஆண்டுகள் செயல்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இதற்கு முன்பு பல அரசுகள் கவிழ்ந்ததை இதற்கு உதாரணமாக சொல்ல முடியும். அப்படி மக்களவை கலைக்கப்பட்டால் எல்லா மாநில சட்டசபைகளையும் கலைத்துவிட்டு தேர்தல் நடத்துவார்களா? என்றும் கேள்வி எழுகிறது. எனவே, இந்த முயற்சியால் ஜனநாயகத்துக்கு பாதிப்பு ஏற்படும்.

    இவ்வாறு திருச்சி சிவா கூறினார்.

    இதேபோல் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆம் ஆத்மி கட்சியின் பிரதிநிதிகளும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதுபற்றி அக்கட்சியின் சார்பில் கூட்டத்தில் பங்குகொண்ட மூத்த தலைவர் ஆஷிஷ் கேதான் டுவிட்டரில் தெரிவித்துள்ள கருத்தில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பாராளுமன்ற ஜனநாயகத்துக்கும், கூட்டாட்சி தத்துவத்துக்கும் விரோதமானது என்றும், இது தொடர்பாக சட்ட ஆணையத்திடம் தங்கள் கட்சி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். 
    நாடாளுமன்றம், சட்ட சபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனை குறித்து அரசியல் கட்சிகளின் பிரதி நிதிகளுடன் தேசிய சட்ட ஆணையம் ஆலோசனை நடத்தியது. #OneNationOneElection #LawCommission
    புதுடெல்லி:

    ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசு யோசனை தெரிவித்து உள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் நிறைய செலவு மிச்சமாகும், காலவிரயமும் தவிர்க்கப்படும் என்றும், வளர்ச்சிப்பணிகளில் அரசு கவனம் செலுத்த முடியும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

    மத்திய அரசின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்று பரிந்துரைத்துள்ள தேசிய சட்ட ஆணையம், இதற்காக அரசியல் சட்டத்திலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும் திருத்தம் செய்ய வேண்டும் என்று யோசனை தெரிவித்து இருக்கிறது.

    ஆனால் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு அ.தி. மு.க., திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றன. பிஜூ ஜனதாதளம், போடோலாந்து மக்கள் முன்னணி உள்ளிட்ட சில கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

    நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவேண்டும் என்றால், சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கூறி உள்ளது.

    ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை நடத்தும் பிரச்சினை தொடர்பாக தேசிய சட்ட ஆணையம் அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்டு இருந்தது. அதன்படி கட்சிகள் தங்கள் கருத்துகளை கடிதம் மூலம் சட்ட ஆணையத்துக்கு அனுப்பி வைத்தன.

    இந்த நிலையில், இந்த பிரச்சினை குறித்து அனைத்துக்கட்சிகளுடனும் 2 நாட்கள் ஆலோசனை நடத்த முடிவு செய்த சட்ட ஆணையம், இது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகளுக்கும், 59 மாநில கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து இருந்தது. அதன்படி சட்ட ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது.

    தேசிய சட்ட ஆணையத்தின் தலைவர் பல்பீர் சிங் சவுகான் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அ.தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, சிரோமணி அகாலிதளம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

    அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், நாடாளுமன்ற அ.தி.மு.க. தலைவர் டாக்டர் வேணுகோபால், எம்.பி.க்கள் டாக்டர் மைத்ரேயன், நவநீத கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை இவர்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அந்த கால வரையறையில் அவர்கள் தங்கள் கருத்துகளை எடுத் துரைத்தனர்.

    கூட்டம் முடிந்த பின்னர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டம் எந்த ஆண்டில் இருந்து தொடங்கும்? என்று நாங்கள் கேள்வி கேட்டோம். அவர்கள் அதற்கு சரியான பதிலை தரவில்லை. இது ஒரு தொடக்கம் என்றுதான் அவர்கள் கூறினர். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடத்தக்கூடாது என்று நாங்கள் சொன்னோம்.

    ஏனென்றால் 5 ஆண்டுகள் பணியாற்ற மக்கள் எங்களுக்கு வாக்கு அளித்து இருக்கிறார்கள். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. வேண்டுமென்றால், போதிய அவகாசம் கொடுத்து, எல்லா கட்சிகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளையும் கேட்டு அவர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டால் 2024-ம் ஆண்டு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தலாம் என்று கூறினோம்.

    அமெரிக்காவைப் போல, நாடாளுமன்றத்துக்கு ஒருமுறை, அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒருமுறை என்று இருமுறை தேர்தலை நடத்தலாம். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை 2 தேர்தல்களை நடத்தலாம்.

    இவ்வாறு தம்பிதுரை கூறினார்.

    கூட்டம் முடிந்து வெளியே வந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி நிருபர்களிடம் பேசுகையில், நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியம் இல்லாதது என்ற தங்கள் கட்சியின் கருத்தை கூட்டத்தில் தெரிவித்ததாக கூறினார். மத்தியிலோ அல்லது மாநிலத்திலோ உள்ள கூட்டணி அரசு கவிழ்ந்துவிட்டால் ஓரிரு ஆண்டுகளிலேயே ஒட்டுமொத்த தேசத்துக்கும் தேர்தல் நடத்த வேண்டுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

    பாரதீய ஜனதாவின் கூட்டணி கட்சியான கோவா பார்வர்டு கட்சியின் தலைவர் விஜய் சர்தேசாய் நிருபர்களிடம் கூறுகையில், நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது கூட்டாட்சி தத்துவத்துக்கும், அரசியல் சாசனத்தின் அடிப்படை அம்சங்களுக்கும் எதிரானது என்றார். ஒரு மாநில முதல்-மந்திரி சட்டசபையை கலைக்குமாறு சிபாரிசு செய்தால் என்ன ஆகும்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

    விஜய் சர்தேசாய் கோவா மாநிலத்தில் அமைந்துள்ள பாரதீய ஜனதா-கோவா பார்வர்டு கூட்டணி அரசில் வேளாண்மை துறை மந்திரியாக இருக்கிறார்.

    நேற்றைய கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. பாரதீய ஜனதாவின் கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளம் ஆதரவு தெரிவித்து இருக்கிறது.

    2-வது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேசிய சட்ட ஆணையம் ஆலோசனை நடத்துகிறது.

    இன்றைய கூட்டத்தில் காங்கிரஸ், பாரதீய ஜனதா, தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்கிறார்கள்.  #OneNationOneElection #LawCommission  #tamilnews
    ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் பிரச்சினை குறித்து காங்கிரஸ் அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆர்.பி.என்.சிங் தெரிவித்துள்ளார். #Congress #RPNSingh
    புதுடெல்லி:

    நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் பிரச்சினையில், காங்கிரசின் முடிவில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானத்தில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் பாரதீய ஜனதாவின் யோசனை தவறானது என்று கூறப்பட்டு இருந்தது.

    ஆனால் இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆர்.பி.என்.சிங் நேற்று டெல்லியில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிருபர்களிடம் பேசுகையில், நாடாளுமன்றம், மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் பிரச்சினை குறித்து காங்கிரஸ் அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கும் என்றார்.

    இதன்மூலம், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனைக்கு ஆதரவா? எதிர்ப்பா? என்பதில், காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை இன்னும் தெளிவுபடுத்த இயலாத நிலையில் இருப்பது தெரிகிறது. #Congress #RPNSingh 
    ×