ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லை

ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லை என்று மாணிக்கம்தாகூர் எம்.பி. பேட்டியளித்தார். பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் தேர்தல் முதல், பாராளுமன்ற உறுப்பினர் தேர்தல் வரை ஒரே நேரத்தில் நடத்த சாத்தியமே இல்லை.
ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லை
Published on

விருதுநகர்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் நிறைவடைந்து ஓராண்டு ஆகியுள்ளது. இதையொட்டி சிவகாசியில் காங்கிரஸ் சார்பில் ஊர்வலம் நடந்தது.

இதில் மாணிக்கம்தாகூர் எம்.பி., அசோகன் எம்.எல்.ஏ., மாவட்ட தலை வர்கள் ராஜாசொக்கர். ரங்கசாமி, மாநகர் தலைவர் சேர்மத்துரை, மாநில மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னதம்பி, மாவட்ட செய்தி தொடர்பா ளர் மீனாட்சிசுந்தரம், கவுன்சிலர் ரவிசங்கர், ஜீ.பி.முருகன், முன்னாள் கவுன்சிலர் கணேசன், வட்டார தலைவர் பைபாஸ் வைரகுமார், ஷேக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிவகாசி காமராஜர் சிலையில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியா காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம் சென்றனர்.

பின்னர் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

ராகுல்காந்தி நடைபயணம் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு புதிய திசையை கொடுத்தது. அதை போலவே இந்தியாவுக்கும் புதிய அரசியலை கொடுத்துள்ளது.

இந்த அரசியல் மாற்றம் என்பது கடந்த ஆண்டு செப்.7-ந்தேதி தொடங்கி யது. இதை கொண்டாடும் வகையில் இந்தியா முழுவதும் 900 இடங்களில் இந்த நடைபயணம் நடக்கி றது. இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தினரையும் காங்கிரஸ் கட்சி மதிக்கிறது. பா.ஜ.க. மதஅடிப்படையில் விவாதம் செய்கிறது. இந்தியா என்பது பாரதத்தை தான் குறிக்கிறது. ஆனால் வேண்டும் என்றே பா.ஜ.க. இதனை விவாதமாக்கி வருகிறது.

எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைத்த போதே பா.ஜ.க.வுக்கு பயம் வந்துவிட்டது. இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்து தேர்தல் காலத்தில் உரிய முறையில் அறிவிக்கப்படும். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லை.

பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் தேர்தல் முதல், பாராளுமன்ற உறுப்பினர் தேர்தல் வரை ஒரே நேரத்தில் நடத்த சாத்தியமே இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com