search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "indian parliament"

    • சட்டசபை தேர்தல் வெற்றி பா.ஜ.க.வை ஊக்கமடைய செய்துள்ளது
    • இந்தியா கூட்டணி கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை

    இவ்வருடம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில், தலைவர்களுக்கான வெற்றி வாய்ப்புகள் குறித்து பிரபல பத்திரிகையில் ஒரு ஆய்வு கட்டுரை வெளியாகியுள்ளது.

    அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

    மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தல் வெற்றி பா.ஜ.க.வை ஊக்குவிக்கும் விதமாக அமைந்து விட்டது.

    மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்க போவது மோடிதான். இது தவிர்க்க முடியாதது.

    மனோதிடம் மிக்க அரசியல் தலைவராக தன்னை வெளிப்படுத்தி கொண்டுள்ள மோடி, இந்துக்கள் அதிகம் உள்ள நாட்டில், இந்துத்வா சித்தாந்தத்தினால் மிக பிரபலமான தலைவராக உருவெடுத்துள்ளார்.

    மாநிலங்கள் அளவிலும், மத்திய அளவிலும் மோடிக்கு சாதகமான சூழலே நிலவுகிறது.

    பிரதான தேசிய கட்சியான காங்கிரஸ், நாடு முழுவதிலுமே 3 மாநிலங்களில் மட்டுமே உள்ளது. மேலும், உட்கட்சி குழப்பங்கள் அக்கட்சியில் அதிகம் காணப்படுகிறது.

    பா.ஜ.க.விற்கு எதிரான "இந்தியா கூட்டணி" கட்சிகளிடம் முக்கிய விஷயங்களில் ஒற்றுமை இல்லை.

    மோடியின் வெற்றி உறுதி; ஆனால், வெற்றியின் அளவை எந்தெந்த காரணிகள் முடிவு செய்யும் என்பதை வரும் காலம் தெரிவிக்கும்.

    2019ல் பெற்ற பெரும் வெற்றியை மீண்டும் பெறுமா என்பதை தற்போது கூற இயலவில்லை.

    இவ்வாறு அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • டெல்லி காவல்துறை இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்துகிறது
    • எதிர்ப்பு குரல்களை நசுக்கி மசோதாக்களை நிறைவேற்ற முயல்வதாக கார்கே குற்றச்சாட்டு

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4 அன்று தொடங்கியது. இக்கூட்டத்தொடர் இம்மாதம் 22 வரை நடக்க உள்ளது.

    டிசம்பர் 13 அன்று பாராளுமன்றத்தின் புதிய கட்டிடத்தில் மக்களவை அலுவல்கள் வழக்கம் போல் நடந்து கொண்டிருந்த போது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து 2 பேர் அவையில் குதித்தனர். ஒருவர் கோஷமிட்டு கொண்டே உடலில் மறைத்து வைத்திருந்த புகை குப்பியை வீசினார். இதில் மஞ்சள் நிற புகை வெளிக்கிளம்பி பல எம்.பி.க்களின் கண்களில் எரிச்சலை ஏற்படுத்தியது. அந்த நபர் மேசைகளின் மீது தாவி குதித்து கொண்டே சபாநாயகர் இருக்கை அருகே செல்ல முயன்றார். மற்றொரு நபர் கோஷமிட்டு கொண்டே அங்கும் இங்கும் ஓடினார். சில உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்து நின்ற போதும் ஒரு சில எம்.பி.க்கள் துணிந்து அந்த இருவரையும் மடக்கி பிடித்து, அங்கு விரைந்து வந்த சபைக்காவலர்களிடம் ஒப்படைத்தனர்.

    இச்சம்பவம் நடைபெற்ற அதே நேரம், அவைக்கு வெளியே பாராளுமன்ற வளாகத்தில் ஒரு ஆணும் பெண்ணும் இதே போன்று கோஷமிட்டு, வர்ண புகை குப்பிகளை வீசினர்.

    நால்வரையும் கைது செய்துள்ள டெல்லி காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது.

    2011 டிசம்பர் 13 அன்று பாராளுமன்ற வளாகத்திற்குள் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய 22-வது நினைவு தினத்தன்றே இந்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

    இச்சம்பவம் குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என்றும், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அவையில் விளக்கமளிக்க வேண்டும் என்றும் எதிர்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்து அமளியில் ஈடுபட்டனர். ஆனால், அமளியில் ஈடுபட்ட எம்.பி.க்களில் 47 எம்.பி.க்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்துள்ளார்.

    இந்நிலையில் ஆளும் பா.ஜ.க.வை விமர்சித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்திருப்பதாவது:

    பாதுகாப்பு குறைபாடு காரணமாக மர்ம நபர்கள் பாராளுமன்றத்தையே தாக்க துணிந்தனர். ஆனால், மோடி பாராளுமன்றத்தையும் ஜனநாயக மாண்புகளையும் தாக்குகிறார். 47 பாராளுமன்ற உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்ததன் மூலம் அனைத்து ஜனநாயக மாண்புகளையும் மோடி குப்பை தொட்டிக்குள் போட்டு விட்டார்.

    எங்களுக்கு 2 கோரிக்கைகள்தான்: பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டது மன்னிக்க முடியாதது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் விளக்கம் அளிக்க வேண்டும். மற்றொன்று, இச்சம்பவம் குறித்த ஆழமான விவாதம் நடைபெற்றே ஆக வேண்டும்.

    அச்சு ஊடகத்தில் பிரதமர் பேட்டியளிக்கிறார்; தொலைக்காட்சி சேனல்களில் உள்துறை அமைச்சர் பேட்டி அளிக்கிறார். ஆனால், இந்திய மக்களின் பிரதிநிதித்துவ அமைப்பான பாராளுமன்றத்திற்கு ஆற்ற வேண்டிய கடமையில் இருந்து இருவரும் தவறி, பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறார்கள்.

    இதன் மூலம் எதிர்கட்சிகள் இல்லாத பாராளுமன்றத்தை உருவாக்கி, எதிர்ப்பு குரல்களை நசுக்கி, அவர்கள் விரும்பும் வகையில் அவர்கள் கொண்டு வர துடிக்கும் சட்டங்களை எந்த வித விவாதங்களோ எதிர்ப்புகளோ இல்லாமல் எளிதாக கொண்டு வர முடியும்.

    இவ்வாறு கார்கே குற்றம் சாட்டினார்.

    • 2001 தாக்குதலின் 22-வது நினைவு தினத்தன்று மீண்டும் அத்துமீறல் நடந்தது
    • சுதந்திரம் அடைந்ததிலிருந்து பாராளுமன்றத்திற்கு உள்ளே தாக்குதல் நடந்ததில்லை என்றார் திவாரி

    கடந்த டிசம்பர் 13 அன்று புதிய பாராளுமன்ற கட்டிட மக்களவையில் அலுவல் நேரத்தில் பார்வையாளர்கள் அரங்கில் இருந்து அவையின் மைய பகுதிக்கு 2 பேர் குதித்தனர். ஒருவர் எம்.பிக்களை தாண்டி மேசைகள் மீது குதித்தவாறு சபாநாயகர் அருகே செல்ல முயன்றார். தன் உடலில் மறைத்து வைத்திருந்த வர்ண புகை குப்பிகளை அங்கு வீசினார். அதிலிருந்து கிளம்பிய மஞ்சள் நிற புகை சில எம்.பி.க்களின் கண்களில் எரிச்சலை ஏற்படுத்தியது. இன்னொரு நபர் கோஷமிட்டவாறே அவையில் அங்கும் இங்கும் ஓடினார்.

    இந்த எதிர்பாராத சம்பவத்தால் அவையிலிருந்த சில எம்.பி.க்கள் அதிர்ச்சியடைந்து செய்வதறியாது நின்றிருந்தாலும், சில எம்.பி.க்கள் துணிச்சலுடன் அந்த இருவரையும் நெருங்கி பிடித்து விரைந்து வந்த பாதுகாப்பு வீரர்களிடம் ஒப்படைத்தனர். அதே நேரத்தில் அவைக்கு வெளியே பாராளுமன்ற வளாகத்தில் ஒரு ஆணும் பெண்ணும் கோஷமிட்டு கொண்டே வர்ண குப்பிகளை வீசினர். அதிலிருந்தும் வர்ண புகை வெளிக்கிளம்பியது


    அந்த 4 பேரையும் கைது செய்துள்ள புது டெல்லி காவல்துறை இந்த பாதுகாப்பு குறைபாடு குறித்தும், இதில் ஈடுபட்டவர்களின் நோக்கம் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

    இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    இச்சம்பவம் நடந்து சில தினங்கள் ஆன நிலையில் தற்போது பிரதமர் மோடி, "எந்த வகையிலும் குறைத்து மதிப்பிட கூடாத இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது மட்டுமல்ல; கவலைக்குரியது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தகுந்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். விசாரணை அமைப்புகள் தீவிரமாக விசாரித்து வருகின்றன" என தெரிவித்தார்.

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எதிர்கட்சி துணை தலைவரான பிரமோத் திவாரி இது குறித்து கருத்து தெரிவித்திருப்பதாவது:

    இந்தியா சுதந்திரமடைந்ததிலிருந்து இதுவரை பாராளுமன்றத்திற்கு உள்ளே மக்களவையிலோ அல்லது மாநிலங்களவையிலோ எந்த வித பாதுகாப்பு குறைபாடோ அத்துமீறலோ ஏற்பட்டதில்லை என்பதை பிரதமர் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் தற்போது நடந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவிக்கும் பிரதமர் வெளியிலிருந்து அறிக்கை விடுகிறார்; ஆனால் அவைக்கு வந்து பேச மறுக்கிறார். அவர் ஏன் அவைக்கு வந்து உறுப்பினர்களிடையே தனது விளக்கத்தை முன்வைக்க மறுக்கிறார்?

    இவ்வாறு திவாரி கூறினார்.

    2011 டிசம்பர் 13 அன்று பாராளுமன்ற வளாகத்திற்குள் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய 22-வது நினைவு தினத்தன்றே இந்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

    • இரண்டு நபர்களும் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்
    • முதலில் எவரோ தவறி விழுந்ததாக நினைத்தோம் என அகர்வால் தெரிவித்தார்

    மக்களவையில் இன்று அலுவல் நடைபெற்று கொண்டிருந்த போது பார்வையாளர் அரங்கில் இருந்து இருவர் அவையின் மத்தியில் குதித்து ஓடினர். அவர்கள் கைகளில் கண்ணீர் புகை குண்டு இருந்தது. கோஷமிட்டு கொண்டே சபாநாயகரை நோக்கி ஓடிய அவர்கள் அதை வீசினர். அதிலிருந்து மஞ்சள் நிற புகை எழும்பியது.

    இச்சம்பவத்தால் சில உறுப்பினர்கள் அச்சத்துடன் அங்குமிங்கும் ஓடினர். சில நொடிகளில் அந்த இருவரும் பிடிக்கப்பட்டு பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    பெரும் பாதுகாப்பு குளறுபடியாக விமர்சிக்கப்படும் இந்த சம்பவம் குறித்து அவை தலைவராக இன்று இருந்த பா.ஜ.க. எம்.பி. ராஜேந்திர அகர்வால் தெரிவித்ததாவது:

    பாதுகாப்பு குளறுபடிகள் கண்டிப்பாக இருக்கிறது. முதல் நபர் இறங்கி ஓடி வந்த போது எவரோ தவறி விழுந்ததாக கருதப்பட்டது. இரண்டாவதாக ஒருவர் வந்ததும் நாங்கள் அனைவரும் எச்சரிக்கையடைந்தோம். ஒரு நபர் தனது காலணியை கழற்ற முற்பட்டது போல் இருந்தது. அதிலிருந்து எதனையோ எடுத்தார். உடனே புகை வெளிக்கிளம்பியது. நிச்சயம் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். சபாநாயகரும் இதற்கான பொறுப்பில் உள்ளவர்களும் இது குறித்து முடிவு எடுப்பார்கள். இது நடக்கும் போதே ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் விரைந்து வந்து விட்டார்.

    இவ்வாறு அகர்வால் தெரிவித்தார்.


    • சபாநாயகரை நோக்கி ஓடிய அவர்கள் புகை குண்டுகளை வீசினர்
    • வெளிவந்த புகை மஞ்சள் நிறமாக இருந்ததாக எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்

    2001ல் இந்திய பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடைபெற்று அது முறியடிக்கப்பட்ட 22-வது வருட நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

    இந்நிலையில், இந்திய பாராளுமன்றத்தில் மக்களவையில் இன்று அலுவல் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து திடீரென 2 பேர் கூச்சலிட்டு கொண்டே அத்துமீறி உறுப்பினர்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் உள்ளே குதித்தனர். அவர்கள் கைகளில் கண்ணீர் புகை குண்டுகள் இருந்தது. சபாநாயகரை நோக்கி ஓடிய அவர்கள் புகை குண்டுகளை வீசினர்.

    இதனால் அவையில் இருந்த உறுப்பினரகள் அச்சத்துடன் ஓடினர்.


    கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதால் கண்களில் எரிச்சல் ஏற்பட்டதாக காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்திருக்கிறார்.

    வெளிவந்த புகை மஞ்சள் நிறமாக இருந்ததாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

    அத்துமீறிய அந்த இருவரும் சில உறுப்பினர்களால் பிடிக்கப்பட்டு பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

    இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுமார் 25க்கும் மேற்பட்ட மாநில கட்சிகள் எதிர்கட்சி கூட்டணியை உருவாக்கின
    • 3 சந்திப்புகளுக்கு பிறகு ஒன்றும் நடக்கவில்லை என்றார் நிதிஷ்குமார்

    இந்திய பாராளுமன்றத்திற்கு அடுத்த வருடம் தேர்தல் நடக்க இருக்கிறது. இம்மாதம் இந்தியாவின் 5 மாநிலங்களுக்கு வெவ்வேறு தேதிகளில் சட்டசபை தேர்தல்களும் நடக்க உள்ளது.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து அகற்ற பா.ஜ.க.விற்கு எதிராக காங்கிரஸை உள்ளடக்கி இந்தியாவின் பல மாநிலங்களை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட மாநில கட்சிகள் ஒருங்கிணைந்து "இந்தியா கூட்டணி" எனும் கூட்டணியை அமைத்தன.

    இதில் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் அடக்கம்.

    இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்து நிதிஷ்குமார் விமர்சித்துள்ளார்.

    அவர் இது குறித்து தெரிவித்ததாவது:

    இந்தியாவில் பல கட்சிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி, இந்தியாவின் வரலாற்றை மாற்ற முயற்சிப்பவர்களுக்கு எதிராக ஒன்று திரள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, கடின முயற்சிகளுக்கு பிறகு உருவானதே இந்தியா கூட்டணி. கூட்டணி உருவானதும் பாட்னாவிலும், பெங்களூரூவிலும், மும்பையிலும் பல சந்திப்புகள் நடந்தன. ஆனால், அதற்கு பிறகு ஒன்றுமே நடைபெறவில்லை. குறிப்பாக காங்கிரஸ் கட்சி, அடுத்த வருடம் நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தல் குறித்து அக்கறை காட்டவில்லை. அக்கட்சியின் கவனம் முழுவதும் நடக்க இருக்கும் 5 மாநில தேர்தல்களிலேயே உள்ளது. 5 மாநில தேர்தல்கள் முடிவடைந்ததும் மீண்டும் காங்கிரஸ் கட்சியினர் அனைவரையும் அழைப்பார்கள்.

    இவ்வாறு நிதிஷ்குமார் பேசினார்.

    • இதனால் பெருமளவில் பொருள், நேரம், மனிதவளங்கள் மிச்சமாகும் என பா.ஜ.க. எதிர்பார்க்கிறது
    • முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர் மட்ட கமிட்டி அமைக்கப்பட்டது

    "ஒரே நாடு, ஒரே தேர்தல்" எனும் முறையில் நாடு முழுவதும் மக்களவைக்கும் அனைத்து மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் கொண்டு வர இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் ஆலோசனை செய்து வருகிறது. இதனால் பெருமளவில் பொருள், நேர மற்றும் மனிதவள விரையங்கள் தடுக்கப்படுவதுடன், மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் முக்கிய முடிவுகளை தொலைநோக்கோடு எடுப்பதற்கும் இது உதவும் என்பதால் இதனை தீவிரமாக ஆளும் பா.ஜ.க. அரசு பரிசீலித்து வருகிறது.

    இதற்காக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு உயர் மட்ட கமிட்டி உருவாக்கப்பட்டிருக்கிறது.

    இன்று அந்த கமிட்டியின் முதல் சந்திப்பு நடைபெற்றது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், முன்னாள் மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், முன்னாள் நிதி ஆணைய இயக்குனர் என் கே சிங், முன்னாள் மக்களவை பொது செயலாளர் சுபாஷ் கஷ்யப் மற்றும் முன்னாள் தலைமை கண்காணிப்பு ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கு பெற்றனர்.

    முதல் கட்டமாக அங்கீகரிக்கப்பட்ட தேசிய அரசியல் கட்சிகள், மாநிலங்களில் உள்ள ஆளும் கட்சிகள், பாராளுமன்றத்தில் உறுப்பினர்களை கொண்ட கட்சிகள் மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் ஆகியோரை அழைத்து அவர்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும், நிலைப்பாட்டையும் தெரிந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. இவை மட்டுமல்லாமல் சட்ட ஆணையத்தின் கருத்தை கேட்கவும் சட்டத்துறை முடிவெடுத்துள்ளது.

    இந்த சந்திப்பில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கலந்து கொள்ளவில்லை. அவரையும் உறுப்பினராக்கியிருந்தும், தான் இதில் பங்கு பெற விரும்பவில்லை என அவர் அமித் ஷாவிற்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிகிறது.

    தமிழ்நாட்டில் 2021ல் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மேலும் சில மாநிலங்களுக்கு இவ்வருட இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. "ஒரே நாடு, ஒரே தேர்தல்" திட்டம் அமலுக்கு வந்தால் இந்த மாநிலங்களில் ஆட்சிகள் கலைக்கப்படுமா என விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    • சட்டத்திருத்த வரைவு மசோதா இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டு இரண்டு நாட்கள் விவாதம் நடந்தது.
    • 225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் 179 எம்.பி.க்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

    இலங்கையில் கோத்தபய ராஜபக்சே அதிபராக இருந்தபோது, பாராளுமன்றத்தைவிட அதிபருக்கு அதிக அதிகாரங்களை வழங்க வகை செய்யும் 20-ஏ சட்ட திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

    அந்நாட்டு பொருளாதார நெருக்கடி காரணமாக கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே விலகினார்.

    அதன்பின் புதிய அதிபராக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அதிபருக்கான அதிகாரங்களை குறைத்து பாராளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்க அரசியல் சாசனத்தில் 21ஏ சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி 21-ஏ என்ற பெயரிலான அரசியல் சாசன 22-வது திருத்த வரைவு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து கடந்த ஆகஸ்டு மாதம் அரசிதழில் வெளியிடப்பட்டது.

    இந்த சட்டத்திருத்த வரைவு மசோதா இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டு இரண்டு நாட்கள் விவாதம் நடந்தது.

    இந்த மசோதா மீது நேற்று வாக்கெடுப்பு நடந்தது. 225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் 179 எம்.பி.க்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

    இதையடுத்து அந்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியது. இதன் மூலம் இலங்கை அதிபரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு பாராளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமலாக்கத்துறையை அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறி அமளியில் ஈடுபட்டனர்.
    • எதிர்க்கட்சியினர் சபையின் மைய பகுதிக்கு வந்த அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கி வந்தன.

    பாராளுமன்ற மக்களவை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. காங்கிரஸ் உள்ளிடட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்து கோஷங்களை எழுப்பினார்கள்.

    நேஷனல் ஹெரால்டு நிதி முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள யங் இந்தியா நிறுவனத்தின் ஆபீசுக்கு அமலாக்கத்துறை யினர் தற்காலிகமாக சீல் வைத்தனர்.

    காங்கிரஸ் எம்.பி.க்கள் இதை முன்வைத்து அவையில் பிரச்சினையை கிளப்பினார்கள். சபையின் மைய பகுதிக்கு வந்த அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.

    அமலாக்கத்துறையை அரசு தவறாக பயன்படுத்து வதாக கூறி அமளியில் ஈடுபட்டனர். இதே போல் ஜி.எஸ்.டி. உள்பட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்தும் அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளி காரணமாக அவை 11.30 மணிவரை ஒத்திவைக்கப் பட்டது.

    பின்னர் அவை கூடியதும் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அவையை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதால் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    மேல்சபையிலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் இதே பிரச்சினையை முன்வைத்து கோஷங்களை எழுப்பினார்கள்.

    விசாரணை அமைப்புகளை அரசு தவறாக பயன்படுத்துவதாக கங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டினார்.

    இதற்கு பா.ஜனதா உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் விடுத்த கோரிக்கையை அவை தலைவர் நிராகரித்தார்.

    இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்து அமளியில் ஈடு பட்டனர். இதனால் அவை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் தொடர் முழுக்கம் காரணமாக பாராளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    • இந்த சுற்றறிக்கை மக்களவை எம்.பி.க்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
    • ஜனநாயகத்துக்கு எதிரானது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைகால கூட்டத் தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது. இந்நிலையில் பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்த எம்.பி.க்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு செயலாளர் பி.சி.மோடி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், உறுப்பினர்கள், பாராளுமன்ற வளாகத்தை ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணாவிரதம், ஸ்டிரைக் அல்லது எந்த மத விழாவையும் நடத்தும் நோக்கத்திற்காக பயன்படுத்தகூடாது. இதற்கு ஒத்துழைக்க உறுப்பினர்கள் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த சுற்றறிக்கை மக்களவை எம்.பி.க்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற கூட்டத்தில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ள நிலையில் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    மழைக்கால கூட்டத்தொடர் குறித்து அனைத்து கட்சி கூட்டம் நடக்கும்போது பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

    கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடர்களில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப அமளியில் ஈடுபட்டதால் சபை பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.

    அதேபோல் பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தனர். இதையடுத்து, போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நேற்று முன்தினம் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பயன்படுத்த கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா தாக்கல் செய்யப்படுமென மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் இன்று தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதை அடுத்து பிரதமர் மோடி இந்த வேளாண் சட்டங்கள் வாபஸ் பெற போவதாக அறிவித்தார் ஆனால் விவசாயிகள் வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

     

    பிரதமர் மோடி

    இந்த நிலையில் நாளை மறுநாள் (29-ந் தேதி) பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது. இதன் முதல் நாளில் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா தாக்கல் செய்யப்படுமென மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் இன்று தெரிவித்தார்.

    இதையும் படியுங்கள்... ஜெயலலிதா வீட்டு சாவியை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்- கலெக்டரிடம் தீபா, தீபக் மனு

    சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் முதல் சுற்று முடிவின்படி 200 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
    அரியலூர் :

    சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் 7,36,655 ஆண்கள், 7,42,394 பெண்கள் மற்றும் 59 மூன்றாம் பாலி னத்தவர்கள் என மொத்தம் 14,79,108 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு சிதம்பரம், அரியலூர், குன்னம், ஜெயங்கொண்டம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

    அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகர், தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அ.ம.மு.க. வேட்பாளர் இளவரசன், மக்கள் நீதி மய்யம் சார்பில் ரவி, நாம் தமிழர் கட்சியில் சிவஜோதி உள்பட மொத்தம் 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    வாக்குப்பதிவு முடிந்ததும் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபேட் எந்திரங்கள் அனைத்தும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையமான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.

    இன்று காலை வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

    அடுத்ததாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. மொத்தம் 23 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. வாக்கு எண்ணும் பணியில் மத்திய அரசில் பணியாற்றும் நுண் பார்வையாளர் ஒருவர், மாநில அரசில் பணியாற்றும் கண்காணிப்பாளர் ஒருவர், ஒரு மேஜைக்கு 3 பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு வருமாறு:-

    திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்)-20,867

    சந்திரசேகர் (அ.தி. மு.க.)-20,686

    முதல் சுற்று முடிவின்படி 200 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் முன்னிலையில் இருந்தார்.
    ×