search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Election-2024"

    • வாக்குப்பதிவிற்காக காலை முதலே அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் வாக்களித்து வருகின்றனர்.
    • நடிகர் அஜித்குமார் தனது வாக்கினை செலுத்த சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பே வருகை தந்து வாக்களித்தார்.

    மக்களவை தேர்தல் இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வாக்குப்பதிவிற்காக காலை முதலே அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் வாக்களித்து வருகின்றனர்.

    அந்த வகையில், நடிகர் அஜித்குமார் தனது வாக்கினை செலுத்த சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பே வருகை தந்து வாக்களித்தார்.

    இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

    முன்னதாக, நடிகர் சிவகாத்திகேயன் தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார். நடிகர் கார்த்திக், பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

    அதைத்தொடர்ந்து நடிகர் விஜய் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குசாவடியில் அலையென திரண்ட மக்களுக்கு மத்தியில் வாக்களித்தார். நடிகர் சூர்யா, கார்ஹ்த்டி, சிவகுமார் குடும்பத்துடன் வந்து வாக்களித்தனர்.

    நடிகர்களான விக்ரம், விஜய் சேதுபதி, செல்வ ராகவன், தனுஷ், வெற்றி மாறன் ரத்ன குமார், கமல்ஹாசன், திரிஷா, ஹரிஷ் கல்யாண் மற்றும் பலர் அவர்களின் ஜனநாயக கடமையை சிறப்பாக செய்தனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விஜய பிரபாகரன் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட தேமுதிகவினர் தீர்மானம்
    • திருமங்கலத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட தேமுதிகவினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.

    தேமுதிகவின் மதுரை புறநகர் தெற்கு மாவட்டத்தின் சார்பாக மதுரை திருமங்கலத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், விஜயகாந்தின் மனைவியும் தேமுதிகவின் பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த், நாடாளுமன்ற கூட்டணி தொடர்பாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில் மதுரை புறநகர் தெற்கு மாவட்டத்தின் சார்பாக மதுரை திருமங்கலத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விஜய பிரபாகரன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டுமென தேமுதிகவினர் விருப்பங்களை தெரிவித்தனர். பின்னர் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிட வேண்டுமென தேமுதிகவினர் தீர்மானம் நிறைவேற்றினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுமார் 25க்கும் மேற்பட்ட மாநில கட்சிகள் எதிர்கட்சி கூட்டணியை உருவாக்கின
    • 3 சந்திப்புகளுக்கு பிறகு ஒன்றும் நடக்கவில்லை என்றார் நிதிஷ்குமார்

    இந்திய பாராளுமன்றத்திற்கு அடுத்த வருடம் தேர்தல் நடக்க இருக்கிறது. இம்மாதம் இந்தியாவின் 5 மாநிலங்களுக்கு வெவ்வேறு தேதிகளில் சட்டசபை தேர்தல்களும் நடக்க உள்ளது.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து அகற்ற பா.ஜ.க.விற்கு எதிராக காங்கிரஸை உள்ளடக்கி இந்தியாவின் பல மாநிலங்களை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட மாநில கட்சிகள் ஒருங்கிணைந்து "இந்தியா கூட்டணி" எனும் கூட்டணியை அமைத்தன.

    இதில் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் அடக்கம்.

    இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்து நிதிஷ்குமார் விமர்சித்துள்ளார்.

    அவர் இது குறித்து தெரிவித்ததாவது:

    இந்தியாவில் பல கட்சிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி, இந்தியாவின் வரலாற்றை மாற்ற முயற்சிப்பவர்களுக்கு எதிராக ஒன்று திரள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, கடின முயற்சிகளுக்கு பிறகு உருவானதே இந்தியா கூட்டணி. கூட்டணி உருவானதும் பாட்னாவிலும், பெங்களூரூவிலும், மும்பையிலும் பல சந்திப்புகள் நடந்தன. ஆனால், அதற்கு பிறகு ஒன்றுமே நடைபெறவில்லை. குறிப்பாக காங்கிரஸ் கட்சி, அடுத்த வருடம் நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தல் குறித்து அக்கறை காட்டவில்லை. அக்கட்சியின் கவனம் முழுவதும் நடக்க இருக்கும் 5 மாநில தேர்தல்களிலேயே உள்ளது. 5 மாநில தேர்தல்கள் முடிவடைந்ததும் மீண்டும் காங்கிரஸ் கட்சியினர் அனைவரையும் அழைப்பார்கள்.

    இவ்வாறு நிதிஷ்குமார் பேசினார்.

    • உடையார்பட்டியில் அ.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம், பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் சந்திப்பு உடையார்பட்டியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. மாநகர் மாவட்ட செய லாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் சுதா பரம சிவன், மாநில கொள்கை பரப்பு துணைச் செய லாளர் பாப்புலர் முத்தையா, முன்னாள் எம்.பி. முத்து கருப்பன், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் கல்லூர் வேலாயுதம், மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செய லாளர் ஜெகநாதன், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, டவுன் கூட்டுறவு வங்கி தலைவர் பால் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் கங்கை வசந்தி, துணை செயலாளர் பள்ளமடை பாலமுருகன், முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன், வக்கீல் ஜெயபாலன், பகுதி செய லாளர்கள் சிந்து முருகன், திருத்து சின்னத்துரை, ஜெனி, சண்முக குமார், மோகன், சக்தி குமார், காந்தி வெங்கடாசலம், பாளை பகுதி மாணவரணி செயலாளர் புஷ்பராஜ் ஜெய்சன், கவுன்சிலர் சந்திரசேகர், பகுதி துணைச் செயலாளர் மாரீசன், பகுதி இளைஞர் பாசறை சம்சு சுல்தான், முன்னாள் எம்.பி. வசந்தி முருகேசன், இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சிவந்தி மகாராஜேந்திரன், தொழில்நுட்ப அணி விக்னேஷ், ஜெயலலிதா பேரவை பகுதி செயலாளர் சீனி முகம்மது சேட், வட்ட செயலாளர் பாறையடி மணி, மாணவரணி சிவபாலன், மாவட்ட பிரதிநிதி ஈஸ்வரி கிருஷ்ணன், மணி, பழைய பேட்டை கணேஷ், பக்கீர் மைதீன், தங்க பிச்சையா, பழனி சுப்பையா மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த 2 சட்டமன்ற தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைப்பது, வருகிற பாராளுமன்ற தேர்தலில் நெல்லை உள்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றிக்கு பாடுபடுவது குறித்து நிர்வாகிகள் பேசினர்.

    • பூத் கமிட்டி அமைக்கும் பணியை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கும் கூட்டம் வார்டு வாரியாக நடை பெற்றது.
    • 11 வார்டுகளில் அ.தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி நிர்வாகிகளை, எஸ்.பி. சண்முக நாதன் சந்தித்து ஆலோசனை வழங்கினார்.

    தூத்துக்குடி:

    2024-ல் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி அமை க்கும் பணியை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து அதனை விரைந்து முடிக்க மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டார்.

    அதன்படி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் தூத்துக்குடி மத்திய வடக்கு பகுதியில் இளை ஞர், இளம் பெண்கள் பாசறை, மகளிர் அணி மற்றும் அ.தி.மு.க. பூத் கமி ட்டி அமைக்கும் பணியை ஆய்வு செய்து ஆலோ சனை வழங்கும் கூட்டம் வார்டு வாரியாக நடை பெற்றது. மத்திய வடக்கு பகுதி அ.தி.மு.க. செயலாளர் ஜெய் கணேஷ் தலைமை தாங்கினார்.

    இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலா ளரும், முன்னாள் அமைச்சரு மான எஸ்.பி. சண்முக நாதன் கலந்து கொண்டு 11 வார்டுகளில் அ.தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை சந்தித்தும், பணிகளை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் சின்னத்துரை, மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள்சாமி, முன்னாள் நகர்மன்ற தலைவர் ஹென்றி, தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் வக்கீல் பிரபு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ஜோதிமணி, முன்னாள் தொகுதி இணை செயலாளர் பெருமாள், மாவட்ட பிற அணி செயலாளர்கள் நடராஜன், பில்லா விக்னேஷ், பிரபாகர், பகுதி செய லாளர்கள் முன்னாள் துணை மேயர் சேவியர், முருகன், பகுதி துணை செயலாளர் செண்பக செல்வன், வட்ட செய லாளர்கள் திருச்சிற்ற ம்பலம், நவ்சாத், ஜெயக்குமார், ஈஸ்வரன், உதயசூரியன், ரகுநாதன், ராஜன், அந்தோணிராஜ், ரெங்கன், பொன்சிங், வக்கீல் முனிய சாமி, சரவண பெருமாள், சிவசங்கர், சரவணன், ரமேஷ், செண்பகராஜ், ராஜ்குமார், தலைமை நிலைய பேச்சாளர் முருகானந்தம், டைகர் சிவா, முன்னாள் கவுன்சிலர்கள் தமிழரசி, மெஜூலா, பகுதி மகளிர் அணி செயலாளர் ராஜேஸ்வரி, நிலா சந்திரன், கொம்பையா மற்றும் பாலஜெயம், சாம்ராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு சகாயராஜா, ராஜா, ஆனந்த், ரியாஸ், மைதீன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. செயற்குழு கூட்டம் வண்ணார்பேட்டையில் உள்ள மத்திய மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் நெல்லை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் வசந்தம் ஜெயக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    நெல்லை:

    நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் வண்ணார்பேட்டையில் உள்ள மத்திய மாவட்ட அலுவலகத்தில் நடை பெற்றது.

    மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான் தலைமை தாங்கினார். நெல்லை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும், மாநில நெசவாளர் அணி துணை அமைப்பாளருமான வசந்தம் ஜெயக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பாராளுமன்ற தேர்தல் பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும், பூத் கமிட்டி அமைக்கும் பணி களை செய்ய வேண்டும், வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளி லும் வெற்றி பெற தீவிரமாக உழைக்க வேண்டும் என ஆலோசனை வழங்கி பேசினார்.

    கூட்டத்தில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன், அன்டன் செல்லத்துரை, மாநில மகளிர் தொண்டரணி அமைப்பாளர் விஜிலா சத்தியானந்த், மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டை யப்பன், மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வின்சென்ட் மணிதுரை, துணை அமைப்பாளர் மீரான் மைதீன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மாயா, கவுன்சிலர்கள் நித்ய பாலையா, சுந்தர், ஒன்றிய செயலாளர்கள் அருள்மணி, விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பா ளர்கள் பல்லிக்கோட்டை செல்லத்துரை, வீரபாண்டி யன், மாணவரணி துணை அமைப்பாளர் ஆறுமுக ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×