search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "srilanka president"

    • இலங்கை அதிபர் விக்ரமசிங்கே ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசினார்.
    • இந்தியா- இலங்கை வளர்ச்சி கூட்டாண்மை இலங்கையர்களின் வாழ்க்கையை நேர்மறையான வழியில் கொண்டு செல்லும்.

    இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று இந்தியா வந்தார்.

    டெல்லிக்கு வந்தடைந்த அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கை அதிபர் விக்ரமசிங்கே இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது விக்ரமசிங்கேவை பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார்.

    பின்னர் இருவரும் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர்.

    பிறகு, இலங்கை அதிபர் விக்ரமசிங்கே ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசினார்.

    சந்திப்பிற்கு பின்னர் ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியதாவது:-

    கடந்த ஒரு வருடத்தில் இலங்கையின் பொருளாதார சவால்களை முறியடிக்க இந்தியா அளித்த பலமுனை ஆதரவு இலங்கையுடனான இருதரப்பு உறவுகளுக்கான இந்தியாவின் நீண்டகால அர்ப்பணிப்புக்கு சான்றாகும்.

    இந்தியா எப்போதுமே இலங்கைக்குத் தேவையான நேரத்தில் துணை நிற்கிறது, எதிர்காலத்திலும் அதைத் தொடரும்.

    இந்தியா- இலங்கை கூட்டாண்மை நீடித்து வருகிறது. நமது இரு நாடுகள் மற்றும் பெரிய இந்தியப் பெருங்கடல் பகுதியின் சாமானிய மக்களுக்கு நன்மை பயக்கும். இலங்கையுடனான வளர்ச்சி கூட்டாண்மையை வலுப்படுத்த இந்தியா எதிர்நோக்குகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த சந்திப்பின் போது, இந்தியாவும் இலங்கையும் பல துறைகளில் பல முக்கிய திட்டங்களில் பணியாற்றி வருவதாகவும், இந்தியா- இலங்கை வளர்ச்சி கூட்டாண்மை இலங்கையர்களின் வாழ்க்கையை நேர்மறையான வழியில் தொட்டுள்ளது என்றும் இரு தலைவர்களும் குறிப்பிட்டனர்.

    • சட்டத்திருத்த வரைவு மசோதா இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டு இரண்டு நாட்கள் விவாதம் நடந்தது.
    • 225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் 179 எம்.பி.க்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

    இலங்கையில் கோத்தபய ராஜபக்சே அதிபராக இருந்தபோது, பாராளுமன்றத்தைவிட அதிபருக்கு அதிக அதிகாரங்களை வழங்க வகை செய்யும் 20-ஏ சட்ட திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

    அந்நாட்டு பொருளாதார நெருக்கடி காரணமாக கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே விலகினார்.

    அதன்பின் புதிய அதிபராக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அதிபருக்கான அதிகாரங்களை குறைத்து பாராளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்க அரசியல் சாசனத்தில் 21ஏ சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி 21-ஏ என்ற பெயரிலான அரசியல் சாசன 22-வது திருத்த வரைவு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து கடந்த ஆகஸ்டு மாதம் அரசிதழில் வெளியிடப்பட்டது.

    இந்த சட்டத்திருத்த வரைவு மசோதா இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டு இரண்டு நாட்கள் விவாதம் நடந்தது.

    இந்த மசோதா மீது நேற்று வாக்கெடுப்பு நடந்தது. 225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் 179 எம்.பி.க்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

    இதையடுத்து அந்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியது. இதன் மூலம் இலங்கை அதிபரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு பாராளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    • அதிபர் தேர்தலில் 134 வாக்குகள் பெற்று ரணில் வெற்றி பெற்றார்.
    • 2024-ம் ஆண்டு நவம்பர் வரை ரணில் விக்ரமசிங்சே அதிபர் பதவியில் நீடிப்பார்.

    கொழும்பு :

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொருளாதார நெருக்கடிக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசைக் கண்டித்து நடைபெற்று வரும் மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்ததால், அதிபர் கோத்தபய ராஜபட்ச அண்மையில் ராஜினாமா செய்தாா்.

    இதையடுத்து அந்நாட்டின் இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றாா். இலங்கையின் பிரதமராகப் பதவியேற்றிருந்த ரணில் விக்கிரமசிங்கே, அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் பதவி விலகலுக்குப் பிறகு, இலங்கையின் இடைக்கால அதிபராகவும் பதவியேற்றார்.

    இந்தநிலையில், இலங்கையில் முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்கெடுப்பு மூலம் நேற்று நடத்தப்பட்ட அதிபர் தேர்தலில் 134 வாக்குகள் பெற்று ரணில் வெற்றி பெற்றார்.

    இந்தத் தேர்தலில் அதிபர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கே, டலஸ் அழகப்பெருமா, அனுரா திசநாயக்க ஆகியோர் போட்டியிட்டனர். அதிகபட்சமாக 134 வாக்குகள் பெற்ற ரணில் விக்கிரமசிங்கே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

    இதனைத் தொடர்ந்து அவர் இன்று அதிகாரப்பூர்வமாக பதவியேற்கவுள்ளார். இதனை அதிபர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

    2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை ரணில் விக்கிரமசிங்கே, அதிபர் பதவியில் நீடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    • இலங்கையின் புதிய அதிபராக ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • 2024-ம் ஆண்டு நவம்பர் வரை ரணில் விக்ரமசிங்சே அதிபர் பதவியில் நீடிப்பார்.

    இலங்கையில் மக்களின் புரட்சி போராட்டம் காரணமாக அதிபரான கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பி சென்றார். பின்னர் சிங்கப்பூருக்கு சென்ற அவர் அங்கிருந்தபடி அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை இ-மெயில் மூலம் சபாநாயகருக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து தற்காலிக அதிபராக ரணில் விக்ரம சிங்கே நியமிக்கப்பட்டார்.

    புதிய அதிபர் தேர்வு 20-ந்தேதி (இன்று) பாராளுமன்றத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே போட்டியிடுவதாக அறிவித்தார்.

    அவருக்கு ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி ஆதரவு தெரிவித்தது. அதேபோல் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, இலங்கை பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி டல்லஸ் அழகப்பெருமா, ஜனதா விமுக்தி பெரமுன (ஜெ.வி.பி.) தலைவர் அனுரா குமார திஸ்சநாயகே ஆகி யோரும் போட்டியிடுவதாக அறிவித்தனர். நேற்று அதிபர் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்வ தற்காக பாராளுமன்றம் கூடியது.

    இதற்கிடையே எதிர்க்கட்சி தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தலைவருமான பிரேமதாசா போட்டியில் இருந்து விலகுவதாக திடீரென்று அறிவித்தார்.

    மேலும் டல்லஸ் அழகப் பெருமாவுக்கு ஆதரவு அளிப்பதாகவும் அறிவித்தார். இதையடுத்து நேற்று ரணில் விக்ரமசிங்கே, டல்லஸ் அழகப் பெருமா, அனுராகுமார திஸ்சநாயகே ஆகிய 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

    பின்னர் அதிபர் தேர்தலில் போட்டியிடும் மூன்று பேரின் பெயரும் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும் அதிபர் தேர்வுக்காக ரகசிய வாக்களிப்பு 20-ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என்று சபையில் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி புதிய அதிபரை தேர்வு செய்வதற்காக இலங்கை பாராளுமன்றம் இன்று காலை கூடியது. எம்.பி.க்கள் ஒவ்வொருவராக பாராளுமன்றத்துக்கு வந்தனர்.

    பின்னர் காலை 10 மணிக்கு ரகசிய வாக்கெடுப்பு தொடங்கியது. எம்.பி.க்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இந்நிலையில், இலங்கையின் புதிய அதிபராக ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இடைக்கால அதிபராக இருந்தநிலையில், 134 எம்பிக்கள் ஆதரவுடன் முறைப்படி அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வாகியுள்ளார்.

    222 எம்பிக்களில் 2 பேர் ரகசிய வாக்கெடுப்பை புறக்கணித்த நிலையில் 223 எம்பிக்கள் வாக்களித்தனர். 4 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

    முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் பதவிக்காலம் முடியும் 2024-ம் ஆண்டு நவம்பர் வரை ரணில் விக்ரமசிங்சே அதிபர் பதவியில் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலையடுத்து, புர்கா உள்ளிட்ட முக திரைகளை அணிய அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா தடை விதித்துள்ளார். #MaithripalaSirisena #SrilankanBlasts
    கொழும்பு:

    இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி கிறிஸ்தவ ஆலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் 253 பேர் பலியாகினர். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தொடர்ந்து அங்கு அவ்வப்போது தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.

    இதையடுத்து இலங்கை ராணுவமும், போலீஸ் படைகளும் பயங்கரவாதிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள். மேலும் வாகனங்களில் தொடர் சோதனை நடத்தப்பட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்படுகின்றன. இலங்கை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



    இந்த கோர சம்பவத்தையடுத்து தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமியத்தே மில்லாது இப்ராஹிம் ஆகிய இரு அமைப்புகளும் அவசரகால சட்டத்தின் கீழ் தடை செய்யப்படுவதாகவும்,  அந்த அமைப்புகளின் அசையும் மற்றும் அசையா சொத்துகள் முடக்கப்படுவதாகவும்  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா அறிவித்தார்.

    இந்நிலையில் இலங்கையில் மேற்கொண்டு தாக்குதல்களை தடுக்கும் விதமாக மற்றொரு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிக்காப் முக திரைகள், மாஸ்குகள், புர்காக்கள் போன்றவை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு  மக்களை எளிமையாக அடையாளம் காணவும், பாதுகாப்பு கருதியும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  #MaithripalaSirisena #SrilankanBlasts
       

     
    திருப்பதியில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா இன்று காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சென்று சாமி தரிசனம் செய்தார். #Tirupati #Sirisena
    திருமலை:

    இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய நேற்று விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்தார். அவருக்கு சித்தூர் கலெக்டர் பிரத்யும்னா, திருப்பதி உதவி கலெக்டர் மகேஷ்குமார் மற்றும் எஸ்.பி. அன்புராஜன் ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.

    பிற்பகல் 2 மணிக்கு திருமலைக்கு வந்த இலங்கை அதிபர் சிறிசேனா பத்மாவதி கெஸ்ட் ஹவுசில் ஓய்வெடுத்தார். பின்னர் ஸ்ரீவாரி பாதத்தை சாமி தரிசனம் செய்தார்.

    இன்று அதிகாலை 3 மணிக்கு குடும்பத்தினருடன் சுப்ரபாத சேவையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    இதையடுத்து 6.30 மணிக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சென்று சாமி தரிசனம் செய்தார். திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அவருக்கு லட்டு பிரசாதங்களை வழங்கினர். #Tirupati #Sirisena
    ஐ.நா.வில் உரையாற்ற அமெரிக்கா சென்ற இலங்கை அதிபருக்கு எதிராக கொட்டும் மழையில் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #SrilankaPresident #MaithripalaSirisena
    நியூயார்க்:

    ஐ.நா. பொது சபைக் கூட்டம் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. அதில் உரையாற்ற இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா அமெரிக்கா சென்றுள்ளார்.

    அங்கு அவருக்கு எதிராக தமிழர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது மழை பெய்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் திரண்டு வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த இறுதி கட்ட போரின் போது கடைசி 2 வாரங்களும், 5 முறை ராணுவ மந்திரி பொறுப்பிலும் அதிபர் சிறிசேனா இருந்தார். அவரது உத்தரவின் பேரில் தான் 70ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள் என இலங்கை தமிழர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    எனவே இவர் ஒரு சந்தேகத்துக்குரிய போர் குற்றவாளி என்பதை ஐ.நா. பொதுசபை உறுப்பினர்களுக்கும், சர்வதேச ஊடகங்களுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன் கூட்டியே தெரிவித்து இருந்தது. மேலும் போர் குற்றச்சாட்டுகளில் இருந்து இலங்கை ராணுவத்தை விடுவிக்க புதிய யோசனை வைத்திருப்பதாக சிறிசேனா கூறியிருந்தார்.

    மேற்கண்ட காரணங்களுக்காக அதிபர் சிறிசேனாவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது அவருக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. #SrilankaPresident #MaithripalaSirisena
    ×