search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இலங்கையுடனான வளர்ச்சி கூட்டாண்மையை வலுப்படுத்த இந்தியா எதிர்நோக்குகிறது- ஜனாதிபதி திரவுபதி முர்மு
    X

    இலங்கையுடனான வளர்ச்சி கூட்டாண்மையை வலுப்படுத்த இந்தியா எதிர்நோக்குகிறது- ஜனாதிபதி திரவுபதி முர்மு

    • இலங்கை அதிபர் விக்ரமசிங்கே ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசினார்.
    • இந்தியா- இலங்கை வளர்ச்சி கூட்டாண்மை இலங்கையர்களின் வாழ்க்கையை நேர்மறையான வழியில் கொண்டு செல்லும்.

    இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று இந்தியா வந்தார்.

    டெல்லிக்கு வந்தடைந்த அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கை அதிபர் விக்ரமசிங்கே இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது விக்ரமசிங்கேவை பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார்.

    பின்னர் இருவரும் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர்.

    பிறகு, இலங்கை அதிபர் விக்ரமசிங்கே ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசினார்.

    சந்திப்பிற்கு பின்னர் ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியதாவது:-

    கடந்த ஒரு வருடத்தில் இலங்கையின் பொருளாதார சவால்களை முறியடிக்க இந்தியா அளித்த பலமுனை ஆதரவு இலங்கையுடனான இருதரப்பு உறவுகளுக்கான இந்தியாவின் நீண்டகால அர்ப்பணிப்புக்கு சான்றாகும்.

    இந்தியா எப்போதுமே இலங்கைக்குத் தேவையான நேரத்தில் துணை நிற்கிறது, எதிர்காலத்திலும் அதைத் தொடரும்.

    இந்தியா- இலங்கை கூட்டாண்மை நீடித்து வருகிறது. நமது இரு நாடுகள் மற்றும் பெரிய இந்தியப் பெருங்கடல் பகுதியின் சாமானிய மக்களுக்கு நன்மை பயக்கும். இலங்கையுடனான வளர்ச்சி கூட்டாண்மையை வலுப்படுத்த இந்தியா எதிர்நோக்குகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த சந்திப்பின் போது, இந்தியாவும் இலங்கையும் பல துறைகளில் பல முக்கிய திட்டங்களில் பணியாற்றி வருவதாகவும், இந்தியா- இலங்கை வளர்ச்சி கூட்டாண்மை இலங்கையர்களின் வாழ்க்கையை நேர்மறையான வழியில் தொட்டுள்ளது என்றும் இரு தலைவர்களும் குறிப்பிட்டனர்.

    Next Story
    ×