search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pazha nedumaran"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அய்யா அவர்களை இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்தேன்.
    • ஒரே பிளாக்கில் இருந்த நாங்கள் பல்வேறு உரையாடல்களில் ஈடுபட்டதை நினைவு கூர்ந்து பகிர்ந்துகொண்டோம்.

    மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் முழு உருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். அவருடன் அமைச்சர்கள் மற்றும் பழ. நெடுமாறனின் குடும்பத்தினர் இருந்தனர்.

    அதன் பிறகு தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

    மதுரைக்குச் சென்றிருந்தபோது, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் அய்யா பழ.நெடுமாறன் அவர்கள் உடல்நலிவுற்றிருக்கும் செய்தியறிந்து, அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்தேன்.

    POTA-வில் கைது செய்யப்பட்டு அவர் கடலூர் சிறைச்சாலையில் இருந்தபோது, நான் வேறொரு போராட்ட வழக்கில் அதே சிறைச்சாலையில் அடைக்கப்பட்டேன். அப்போது ஒரே பிளாக்கில் இருந்த நாங்கள் பல்வேறு உரையாடல்களில் ஈடுபட்டதை நினைவுகூர்ந்து பகிர்ந்துகொண்டோம்.

    அய்யா பழ.நெடுமாறன் அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன்.

    • மரபணு சோதனை செய்ய வேண்டும் என்றால் பிரபாகரனின் ரத்தத்துடன், அவருடைய அப்பா, அம்மா அல்லது குழந்தைகள், உடன் பிறந்தவர்களின் ரத்தத்தையும் ஒப்பிட்டு சோதனை செய்ய வேண்டும்.
    • பிரபாகரனின் பெற்றோர்களிடம் சோதனை செய்ததாக தெரியவில்லை.

    உலக தமிழர் பேரியக்க தலைவர் பழநெடுமாறன் தனியார் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    பிரபாகரன் இறந்துவிட்டதாக கூறுவது இது முதல் தடவை அல்ல. ஏராளமான தடவை சிங்கள அரசும், சிங்கள ராணுவமும் அறிவித்திருக்கிறது. 1984, 1989, 2004, 2007-ம் ஆண்டுகளிலும் இவ்வாறு அறிவித்தது.

    உலகம் பூராவும் வாழும் தமிழர்களின் நம்பிக்கையை குலைக்க வேண்டும். அவர்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்கிறார்கள்.

    2009-ல் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதிக்கட்ட போராட்டத்தில் பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற செய்தியை அறிவித்ததில் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதால் குழப்பம் உள்ளது. 2009-மே மாதம் 17-ந்தேதி அன்று முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதிக்கட்ட போராட்டத்தில் பிரபாகரனும், முக்கிய தலைவர்களும் இறந்துவிட்டதாக சிங்கள ராணுவம் அறிவித்தது.

    அவருடைய உடல் போன்று ஒரு உடல் கிடைத்திருக்கிறது. அந்த உடலை நாங்கள் பரிசோதனைக்கு அனுப்பி இருக்கிறோம். பரிசோதனை முடிவில் முடிவு அறிவிக்கப்படும் என்று ராணுவ அதிகாரி ஒருவர் ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி கொடுத்தார். ஆனால் உடனடியாக இலங்கை அரசின் பாதுகாப்பு துறையின் செய்தித்தொடர்பாளர் அதை மறுத்துவிட்டார். முதல் நாளில் மறுத்த அவரே மறுநாள் இறந்துவிட்டதாக அறிவித்தார்.

    மே 18 முள்ளிவாய்க்காலுக்கு சென்றபோது ஒரு ஆம்புலன்ஸ் விரைந்து சென்றது. அதை நாங்கள் சூழ்ந்துகொண்டு சுட்டோம். அவர்களும் பதிலுக்கு சுட்டார்கள். சிறிது நேரத்தில் ஆம்புலன்சில் இருந்து குண்டுகள் பாயவில்லை அமைதியாயிற்று அதற்கு பிறகு சோதனை போட்டபோது அதில் பிரபாகரனின் உடலும், பொட்டு அம்மனின் உடலும் கிடைத்தது என்று அறிவித்தார்கள்.

    அந்த 2 உடலும் மரபணு சோதனைக்காக அனுப்பி இருக்கிறோம் என்று சொன்னார்கள். இப்படி காலை 11 மணிக்கு அறிவித்தார்கள். 12.15 மணிக்கு அது பிரபாகரனின் உடல் தான் என்பது மரபணு சோதனையில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று சிங்கள ராணுவத்தின் தளபதியான பொன்சேகா அறிவித்தார். பிரபாகரனின் உடல் போன்ற ஒரு உடலின் படத்தையும், உடனே பத்திரிகை துறைகளுக்கும், தொலைக்காட்சிக்கும் வழங்கினார்கள்.

    அப்போது சென்னையில் அரசாங்கத்தின் தடயவியல் துறையில் இருந்த டாக்டர் சந்திரசேகரன் என்பவர் பத்திரிகைகளுக்கு ஒரு தகவலை தெரிவித்தார். அவர் தான் ராஜீவ் குண்டு வெடிப்பில் இறந்தபோது சோதனை செய்து அறிவித்தவர். அவர் கூறும்போது, 'பிரபாகரனின் மரபணு மாதிரிகள் ஏற்கனவே சிங்கள ராணுவத்திடம் இருந்தாலும் உடனடியாக ஒரு மணி நேரத்தில் சோதனை செய்து அறிக்கை கொடுக்க முடியாது.

    மரபணு சோதனை செய்ய வேண்டும் என்றால் குறைந்தது 4 நாட்கள் தேவைப்படும். ஒரு மணிநேரத்தில் அறிவித்தது சந்தேகத்தை அளிக்கிறது. மரபணு சோதனை செய்ய வேண்டும் என்றால் பிரபாகரனின் ரத்தத்துடன், அவருடைய அப்பா, அம்மா அல்லது குழந்தைகள், உடன் பிறந்தவர்களின் ரத்தத்தையும் ஒப்பிட்டு சோதனை செய்ய வேண்டும். ஆனால் பிரபாகரனின் பெற்றோர்களிடம் சோதனை செய்ததாக தெரியவில்லை.

    பிரபாகரனுக்கு அப்போது 54 வயது. அவரது முகத்தில் சுருக்கங்கள் உண்டு. ஆனால் அவர்கள் காட்டிய முகத்தில் சுருக்கங்கள் இல்லை. இதுவே சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடல் கிடைத்தால் 1¼ மணிநேரத்தில் மரபணு சோதனை செய்ததாக சொல்வது அறிவியலை கொச்சைப்படுத்துவது என்றும் கூறினார்.

    விடுதலை புலிகள் மரபுப்படி அவர்கள் சுற்றிவளைக்கப்பட்டால் உடனடியாக சயனைடு குப்பியை கடித்துவிடுவார்கள். கழுத்தில் சயனைடு குப்பி எப்போதும் இருக்கும். பிரபாகரன் சயனைடு குப்பியை கடித்தாரா என்பதற்கான குடல் சோதனை எதுவுமே நடத்தப்படவில்லை. அவர் கழுத்திலும் சயனைடு குப்பி எதுவும் இல்லை.

    பிரபாகரனின் உடல் தான் என்று அவர்களுக்கு தெரிய வந்தவுடன் அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும், அந்த உடலை உடனடியாக கொழும்புவுக்கு கொண்டுபோய் சிங்கள மக்கள் பார்வைக்கு மட்டுமல்ல அங்குள்ள வெளிநாட்டு தூதர்கள் எல்லோரையும் அழைத்து, சர்வதேச பத்திரிகையாளர்களை அழைத்து அவர்கள் காட்டி இருக்க வேண்டும்.

    ஏனென்றால் சிங்கள ராணுவத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி அது. சிங்கள மக்களுக்கு வெற்றிக்களிப்பையும், உற்சாகத்தையும் அளிக்கக்கூடிய வெற்றி. ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள்? பிரபாகரனின் உடல் கிடைத்தது. நாங்கள் உடனடியாக கடலில் வீசிவிட்டோம் என்று கூறினார்கள்.

    வெற்றிபெற்றால் அவருடைய உடலை கொண்டு வந்து காண்பித்து மக்கள் நம்பும் படியாக அந்த செய்தி இருந்திருக்க வேண்டும். இப்போது அவர் உயிரோடு இருப்பதற்கு ஆதாரம் என்ன என்கிறார்கள்.

    நான் அவர் இருக்கிறார் என்பதை மட்டும் தான் உறுதிப்படுத்தி இருக்கிறேன். அவர் எப்போது வருவார்? எப்போது அவர் தன்னுடையை மக்களுக்கு ஏதாவது அறிவிப்பார்.

    அவருடைய முக்கிய தளபதிகள் பேசியதை வைத்து தான் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நான் கூறினேன். இப்போது அவருடைய குடும்பத்தினரிடம் இருந்து எனக்கு கிடைத்த தகவல்களை வைத்து அதை உறுதி செய்திருக்கிறேன். என்னுடன் அவர் தொடர்பில் இல்லை. அவரது குடும்பத்தினர் தொடர்பில் இருக்கிறார்கள். இந்த உண்மையை கண்டறிவதற்காகத்தான் சிங்கள அரசும், இந்திய அரசின் உளவுத்துறையும் படாதபாடு படுகிறது.

    அவர் நிச்சயம் வருவார். ஈழத்தமிழர்களுக்கு புதிய நம்பிக்கையை தருவார். அப்போது பல்வேறு குழுக்களாக இருப்பவர்கள் ஒன்றுபடுவார்கள். அவர்களுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் இருக்கக்கூடிய தமிழர்கள் ஒற்றுமை உணர்வோடு அணி திரள்வார்கள்.

    விடுதலைப்புலிகள் வலிமையாக இருந்தவரை எந்த நாடும் இலங்கையில் கால்பதிக்க முடியவில்லை. இந்தியாவுக்கு எதிரான நாடுகளிடம் இருந்து பிரபாகரனும் எந்த உதவியையும் பெறுவதை தவிர்த்துவிட்டார். அவர்கள் இந்தியாவை நட்பு நாடாகத்தான் கருதினார்கள்.

    ஈழத்தமிழர் பிரச்சினையும் இந்தியாவுக்கு சீனாவால் வரும் அபாயமும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்தது. ஒன்றை தவிர்த்து இன்னொன்றை தீர்த்துவிட முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரபாகரன் குறித்து வெளியிட்ட தகவல் தொடர்பாக நெடுமாறன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்தவும் உளவுப் பிரிவினர் முடிவு செய்துள்ளனர்.
    • நெடுமாறன் மற்றும் அவரது தொடர்புடையவர்களின் நடமாட்டம் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    சென்னை:

    விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று பழ.நெடுமாறன் நேற்று தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு இலங்கை ராணுவம் உடனடியாக மறுப்பு தெரிவித்தது.

    இது ஒருபுறம் இருக்க, நெடுமாறனின் இந்த கருத்தை முழுமையாக புறந்தள்ளிவிட முடியாது என்பதால், பிரபாகரன் பற்றிய தகவல்களை மீண்டும் திரட்ட மத்திய உளவு பிரிவினர் உத்தரவிட்டுள்ளனர்.

    பிரபாகரன் தொடர்பான தகவல்களை தமிழக கியூ பிரிவு போலீசாரும் திரட்டத் தொடங்கியுள்ளனர். தமிழக காவல்துறையின் உளவுப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம். அப்பிரிவு ஐ.ஜி.செந்தில்வேலன், கியூ பிரிவு எஸ்.பி.கண்ணம்மாள் தலைமையிலான போலீசார் மீண்டும் விசாரணையில் இறங்கியுள்ளனர். பிரபாகரன் மரணமடைந்ததாக ஏற்கனவே திரட்டப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் மீண்டும் கையிலெடுக்கப்பட்டு புலனாய்வு நடத்தப்பட்டு வருகிறது.

    பிரபாகரன் குறித்து வெளியிட்ட தகவல் தொடர்பாக நெடுமாறன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்தவும் உளவுப் பிரிவினர் முடிவு செய்துள்ளனர். நெடுமாறன் மற்றும் அவரது தொடர்புடையவர்களின் நடமாட்டம் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    • எந்த சூழ்நிலையிலும் நாட்டை விட்டு போகமாட்டேன் என்று வீரமாக சண்டை புரிந்தவர் எங்கள் அண்ணன்.
    • 15 ஆண்டுகள் ஒரு இடத்தில் பதுங்கி பேசாமல் இருப்பார் என் அண்ணா என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

    ஈரோடு:

    விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நெடுமாறன் கூறிய தகவல் பற்றி சீமான் கூறியதாவது:

    என்னிடம் பதில் இல்லை, சில கேள்விகள் தான் இருக்கிறது. என் தம்பி பாலசந்திரனை பலி கொடுத்துவிட்டு என் அண்ணன் பத்திரமாக தப்பி சென்றிருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? எந்த சூழ்நிலையிலும் இந்த நாட்டை விட்டு போக மாட்டேன் என்று வீரமாக சண்டை புரிந்தவர் எங்கள் அண்ணன். தன் உயிரை மட்டும் தற்காத்துக் கொண்டு தப்பி செல்லும் கோழை என்று நினைக்கிறீர்களா? போர் புரிந்து ஒரு பெரிய பேரழிவை சந்தித்துள்ளோம் 15 ஆண்டுகள் பத்திரமாக ஒரு இடத்தில் பதுங்கி பேசாமல் இருப்பார் என் அண்ணா என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

    சொல்லிவிட்டு வருபவர் அல்ல எங்கள் அண்ணன் வந்துவிட்டு தான் சொல்லுவார். அதுதான் அவரின் பழக்கம். தேவையில்லாமல் குழம்ப வேண்டாம். அவர்கள் கூறியது போல் ஒரு நாள் மக்கள் முன் தோன்றுவார் என்று கூறியதுபோல் தோன்றும்போது தோன்றட்டும். ஐயா பெரியாரிடம் கடவுள் இல்லை இல்லை என்று சொல்லி கொண்டிருக்கிறீர்களே திடீர் என்று கடவுள் நேரில் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்பவருக்கு அவர் அன்றுமுதல் கடவுள் இருக்கிறார் என்று சொல்லுவோம் என்றார்.

    அதுபோல் ஐயா நெடுமாறன் கூறியவாறு எங்கள் அண்ணன் நேரில் வந்துவிட்டால், இதை பற்றி வந்தவுடன் பேசுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

    • மாநில அரசுகளுக்கு போட்டியாக கவர்னர்கள் தனி அரசாங்கத்தை நடத்துகிறார்கள்.
    • அனைத்து கவர்னர்கள் மீதும் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகப்பட்டினம் :

    நாகை மாவட்டம் நாகூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அரசியல் சட்ட வரம்பை மீறி சட்டத்தை அவமதித்து தமிழக கவர்னர் செயல்பட கூடாது. கவர்னர் ரவி மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் போன்று செயல்படும் அனைத்து கவர்னர்கள் மீதும் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மாநில அரசுகளுக்கு போட்டியாக கவர்னர்கள் தனி அரசாங்கத்தை நடத்துகிறார்கள். அவர்களுடைய குறிக்கோள் மாநில அரசுகளுடன் போட்டி போடுவது மட்டும் தான்.

    தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் காலம் கடத்தி வருகிறார். பா.ஜனதாவுக்கு மாநில கட்சிகள் அகில இந்திய அளவில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பா.ஜனதா ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்றால் பா.ஜனதாவுக்கு எதிராக மாற்று திட்டத்தை எதிர்க்கட்சியினர் முன்மொழிய வேண்டும்.

    ஆனால் எதிர் அணியை அமைக்க நினைக்கும் யாரும் பா.ஜனதாவை எதிர்க்கக்கூடிய மாற்று திட்டத்தை உருவாக்க முன்வரவில்லை.

    ஒரே நாடு பாரதம், ஒரே மொழி சமஸ்கிருதம், ஒரே மதம் இந்து மதம் என்று சொல்லி வரும் பா.ஜனதா, இந்தியாவை இந்து நாடாக மாற்ற துடிக்கிறது. பா.ஜனதாவை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் மாற்று திட்டத்தை கையாளாவிட்டால் எதிர்காலத்தில் பா.ஜனதாவை முறியடிக்க முடியாத நிலை ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இறப்பில் எந்த மர்மமும் இல்லை என்று தஞ்சையில் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் கூறினார்.
    தஞ்சாவூர்:

    '2016 டிசம்பர் 5-ன் சந்தேகங்கள்' என்ற நூல் அறிமுக விழா தஞ்சையில் நடைபெற்றது. விழாவுக்கு உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார்.

    இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது:-

    தமிழக அரசு நம் நாட்டில் இயற்கை வளங்களை அழிக்கும் திட்டத்தை எதிர்த்து யார் குரல் கொடுத்தாலும் அல்லது போராடினாலும் அவர்களை ஒடுக்குவதற்கு முயற்சி செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம், சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்ட எதிர்ப்பு, மீத்தேன் எதிர்ப்பு, எரிவாயு எதிர்ப்பு போராட்டம் என எந்த போராட்டமாக இருந்தாலும் அவை மக்களால் உருவாக்கப்படுகின்றன. இதற்காக குரல் கொடுக்கிற கட்சிகளையோ அல்லது அமைப்புகளையோ ஒடுக்குவதற்கு முயற்சி செய்வது ஒருபோதும் வெற்றி பெறாது, அவ்வாறு ஒடுக்க நினைத்தால் மிகப்பெரிய அளவில் மக்கள் போராட்டம் வெடிக்கும் என்பதற்கு தூத்துக்குடி போராட்டம் எடுத்துக்காட்டு என்பதை அரசு தெரிந்து கொள்ள வேண்டும்.


    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்து போது, புதுடெல்லியில் இருந்து எய்ம்ஸ் டாக்டர்கள், சிங்கபூர், லண்டனில் இருந்து டாக்டர்கள் என பெரிய டாக்டர்கள் கூட்டமே வந்து அவரது உடலை பரிசோதித்தது. அப்போது தேவையான சிகிச்சையை அவர்கள் அளித்தனர். இதில் எந்த மர்மமும் இல்லை.

    இது பற்றி விரிவான தகவல் டிசம்பர் 5-ன் சந்தேகங்கள் என்ற நூலில், ஆசிரியர் விரிவாக குறிப்பிட்டுள்ளார். லோக் ஆயுக்தா சட்டம் நீண்ட காலத்துக்கு முன்பே தமிழகத்தில் அமல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் இந்த சட்டம் தற்போது தாமதமாக கொண்டு வரப்பட்டுள்ளது. இப்போதாவது இந்த லோக் ஆயுக்தா சட்டத்தை சரியான முறையில் செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Jayalalithaa #PazhaNedumaran
    ×