என் மலர்

    நீங்கள் தேடியது "Periyar dam"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்த உத்தரவிட கோரிக்கை.
    • ஜனவரி மாதத்தில் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள பரிசீலிக்கப்படும்.

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த அஜய் ஜோஸ் உள்ளிட்ட 6 பேர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பெரியாற்றின் குறுக்கே புதிதாக அணை கட்டவும், வைகை அணையின் கொள்ளளவை அதிகரிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

    மேலும் தற்போது உள்ள முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்த மத்திய அரசு, தமிழக மற்றும் கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர்கள் கூறியிருந்தனர். இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு முன்பு மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் மேத்யுஸ் நெடும்பாறா முறையிட்டார்.

    இதை நிராகரித்த தலைமை நீதிபதி, இந்த வாரம் புதிய வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். உங்களது மனுவை கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின் ஜனவரி மாதத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தெரிவித்தது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெரியாறு அணைக்கு எதிராக கேரள அரசு பொய் பிரசாரம் செய்து வருவதாக முன்னாள் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
    • ஆவணப்படம் எடுக்க இணைய வழி கையெழுத்து இயக்கத்தை கேரளா நடத்தி வருகிறது.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முல்லைப் பெரியாறு அணையின் தென் மாவட்ட உயிர்நாடி பிரச்சினையில் மக்களின் உரிமையை காக்க அ.தி.மு.க. அரசு எடுத்த முயற்சியை யாராலும் மறுக்க முடியாது. முல்லைப் பெரியாரை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள பல லட்சம் விவசாயி குடும்பங்களும், 80 லட்சம் மக்களுக்கும், பாசனத்திற்கும் குடிநீரையும் நம்பி உள்ளனர்.

    தற்போது கேரளா முல்லைப் பெரியாறுக்கு எதிராக ஆவணப்படம் எடுக்க இணைய வழி கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகிறது. இதனால் அணை குறித்து அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

    கேரளா முல்லை பெரியாறுக்கு எதிராக ஏற்கனவே ஆவணப்படம் எடுத்து சர்ச்சை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் ஆவணப்படம் எடுக்க மக்களிடம் வசூல் செய்ய இணைய வழி கையெழுத்து இயக்கத்தை செய்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது.

    தற்போது அணையில் நீர்மட்டம் 127 அடிக்கு மேல் உள்ளது. பேபி அணை பழுது பார்க்கப்பட்ட பின் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    மேலும் அணையை தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு செய்து அணை பலமாக உள்ளது என்று உறுதி செய்துள்ளனர். கண்காணிப்பு குழுவும் ஆய்வு செய்து வருகிறது. இதில் எந்த சந்தேகமும் இல்லை.

    ஆனால் கேரளாவில் உள்ள அரசியல் இயக்கங்கள் சார்பில் பெரியாறு அணைக்கு எதிராக கேரளா பிரசாரம் செய்து வருகிறது. தொழில் நுட்ப வல்லுனர் குழு, கண்காணிப்பு குழு ஆய்வு செய்தும், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பின்பும் இந்த சர்ச்சை வருவது வேதனை அளிக்கிறது.

    குறிப்பாக கேரளாவில் மீண்டும் ஆவணப்படம் எடுக்க சமூக வலைதளத்தில் நிதி வசூல் செய்வது மட்டுமல்லாது கேரள நடிகர்களும் அணைக்கு எதிராக பேசுகின்றனர். இதனால் தென் மாவட்ட விவசாயிகள் கொந்தளித்து போய் உள்ளனர்.கேரளாவின் இந்த பொய் பிரச்சாரத்திற்கு சரியான விளக்கங்களை நாம் சொல்ல வேண்டும்.

    கேரளா, முல்லைப்பெரியாறுக்கு எதிராக பொய் பிரசாரம் செய்ய வேண்டாம் . இது இரு மாநில உறவுகளுக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளது.

    இது தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து உரிமையைநிலை நாட்ட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்ய தொடங்கிய நிலையில் பெரியாறு அணைக்கு நீர் வரத்து வந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    கூடலூர்:

    தமிழகத்தில் சுட்டெரித்து வந்த கோடை வெயிலால் மக்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். சித்திரை மாதம் பிறந்த பிறகு வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்த காரணத்தால் மழை வருமா? என்று ஏங்கித் தவித்தனர்.

    பகலில் வெளியில் நடமாட முடியாத நிலையில் தவித்த மக்களுக்கு இரவு நேரங்களில் வீசிய அதிவேக காற்று மட்டுமே ஆறுதலாக இருந்தது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியிலும் பெய்த மழையினால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர்.

    முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 112.10 அடியாக உள்ளது. நீர் வரத்து இல்லாமல் இருந்த அணையில் தற்போது 100 கன அடி வரை தண்ணீர் வருகிறது. இந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1,247 மில்லியன் கன அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர் மட்டம் 38.48 அடி. வரத்து இல்லாத நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 60 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 33.55 அடி. வரத்து 24 கன அடி. சோத்துப்பாறை அணை நீர் மட்டம் 84.42 அடி வரத்து 9 கன அடி. திறப்பு 3 கன அடி.

    தேக்கடி 7.6, கூடலூர் 10.6, சண்முகாநதி அணை 17, உத்தமபாளையம் 15.4, வீரபாண்டி 32, வைகை அணை 7.2, மஞ்சளாறு 58, சோத்துப்பாறை 11, கொடைக்கானல் 62.8 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது

    கோடை மழை தொடங்கியதால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்து வந்த வெப்பத்தின் தாக்கம் அடியோடு குறைந்து இதமான சூழல் நிலவி வருகிறது. மேலும் சில நாட்கள் மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவதால் முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை ஏமாற்றிய நிலையில் முல்லைப் பெரியாறு உள்பட அனைத்து அணைகளின் நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் அணையின் நீர் திறப்பை குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். அதன்படி 170 கன அடியாக குறைக்கப்பட்டது. தற்போது பெரியாறு அணையின் நீர் மட்டம் 113.95 அடியாக குறைந்துள்ளது.

    மேலும் நீர் பிடிப்பு பகுதியில் மழை ஓய்ந்து விட்டதால் அணைக்கு 32 கன அடி நீரே வருகிறது. இதனால் தண்ணீரை சேமிக்கும் பொருட்டு இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 100 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    இந்த நீர் தேனி மாவட்ட குடிநீருக்காக பயன்படுத்தப்படுகிறது. தண்ணீர் திறப்பு குறைக்கப் பட்டதால் உத்தமபாளையம் பகுதியில் முல்லைப் பெரியாறு வறண்டு காணப்படுகிறது.

    வைகை அணை நீர் மட்டம் 45.12 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 60 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 34.05 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 96.26 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது.
    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை ஏமாற்றியதால் வைகை, பெரியாறு அணகளின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் கோடை காலத்தில் குடிநீர் தேவையை சமாளிக்க முடியுமா? என கேள்வி எழுந்துள்ளது.

    அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று வரை 510 கன அடி நீர் வந்துகொண்டிருந்தது. இன்று காலை அது 615 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 115.85 அடியாக உள்ளது. தமிழக பகுதிக்கு 300 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணயின் நீர்மட்டம் 48.92 அடியாக உள்ளது. 11 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து பாசனம் மற்றும் மதுரை மாநகர குடிநீருக்காக 760 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 39.15 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 88.39 அடியாக உள்ளது. வருகிற 3 கன அடி நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.

    வைகை அணை 2.2., மஞ்சளாறு 7, சோத்துப்பாறை 7 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நீர் வரத்து அடியோடு நின்றதால் முல்லைப் பெரியாறு - வைகை அணை நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    கூடலூர்:

    தென் மேற்கு பருவமழை கைகொடுத்ததால் முல்லைப் பெரியாறு உள்ளிட்ட அணைகளின் நீர் மட்டம் உயர்ந்தது. இதனால் விவசாயிகள் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டனர். மேலும் 4 ஆண்டுகளுக்கு பிறகு கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருபோக நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடபட்டு வருகின்றனர்.

    ஆனால் வடகிழக்கு பருவமழை ஏமாற்றியதால் முல்லைப் பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர் வரத்து அடியோடு நின்றுள்ளது. இதனால் அணைகளின் நீர் மட்டமும் வேகமாக குறையத் தொடங்கியுள்ளது.

    முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம் 117.85 அடியாக உள்ளது. வரத்து இல்லை. 300 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர் மட்டம் 54 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 60 கன அடி நீர் மதுரை மாநகர குடிநீருக்காக திறந்து விடப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 43.85 அடியாக உள்ளது. வரத்து இல்லை. 60 கன அடி நீர் திறக்கப்படுகிறது சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 93.97 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    அணைகளின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவதால் தேனி, மதுரை மாவட்ட குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    தற்போது உள்ள நீரை கொண்டு அடுத்த 3 மாதத்துக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யலாம். அதனைத் தொடர்ந்துமழை பெய்தால் மட்டுமே சமாளிக்க முடியும். இல்லையென்றால் கோடை காலத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து கொண்டே வந்தது. இருந்தபோதும் பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு விவசாயத்திற்காகவும் வைகை அணையின் நீர் மட்டத்தை உயர்த்து வதற்காகவும் தொடர்ந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதனால் அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வந்தது. முதல்போக சாகுபடி முடிவடைந்து 2-ம் போக சாகுபடியில் ஈடுபட்டுள்ள பள்ளத்தாக்கு விவசாயிகள் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை குறைக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

    இதனையடுத்து இன்று காலை முதல் பெரியாறு அணையில் இருந்து திறக்கும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. நேற்று வரை 467 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 300 கன அடியாக குறைக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 118.25 அடியாக உள்ளது. நீர்வரத்து 48 கன அடி. இருப்பு 2312 மி.கன அடி.

    வைகை அணையின் நீர்மட்டம் 55.03 அடி. வரத்து 87 கன அடி. திறப்பு 860 கன அடி. இருப்பு 2724 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.20 அடி. சோத்துப்பாறை நீர்மட்டம் 95.77 அடி.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மழை முற்றிலும் ஓய்ந்துள்ளதால் பெரியாறு அணையின் நீர்மட்டம் 119 அடியாக குறைந்துள்ளது.
    கூடலூர்:

    கேரளா எல்லைப் பகுதியில் உள்ள முல்லைப் பெரியாறு தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.

    கடந்த சில நாட்களாக பருவமழை பொய்த்து போனதால் ஒருபோக நெல்சாகுபடி மட்டுமே நடைபெற்றது. தற்போதும் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யவில்லை. இதனால் அணைக்கு 186 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 467 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மேலும் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து 119.25 அடியாக உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 56.17 அடியாக உள்ளது. 156 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 60 கன அடிநீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 45.60 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 80 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 100.86 அடியாக உள்ளது. 9 கன அடி நீர் வருகிறது. 24 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 122 அடியாக குறைந்துள்ளது. #MullaperiyarDam
    கூடலூர்:

    தென்மேற்கு பருவமழை கைகொடுத்த நிலையில் வைகை, முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்தது. ஆனால் வடகிழக்கு பருவமழை ஏமாற்றியதால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து நீர்மட்டமும் சரிய தொடங்கியுள்ளது.

    தற்போது பனியின் தாக்கம் அதிகரித்து வருவதால் மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை.

    கூடலூர், கம்பம், லோயர்கேம்ப் உள்ளிட்ட இடங்களில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் காலை 10 மணிவரை வெளியேற பொதுமக்கள் தயங்கி வருகின்றனர். மேலும் மழை இல்லாததால் முல்லைபெரியாறு அணைக்கு 132கனஅடி நீரே வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 122.25 அடியாக குறைந்துள்ளது.

    900கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 2-ம் போக சாகுபடிக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் நீர்திறப்பை குறைக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். இருந்தபோதும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 56.25 அடியாக உள்ளது. 630 கனஅடிநீர் வருகிறது. மதுரைமாநகர குடிநீருக்காக 60 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 46.40 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 80 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 111.68 அடியாக உள்ளது. 9 கனஅடிநீர் வருகிறது. 27 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை. #MullaperiyarDam
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    கூடலூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. கடந்த மாதமே தொடங்க வேண்டிய இந்த மழை பல இடங்களில் ஏமாற்றி சென்றது. புயல் காரணமாக அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் வடகிழக்கு பருவ மழையின் அளவு சராசரியை விட குறைவாகவே பதிவானது.

    இந்நிலையில் நேற்று காலை முதல் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியிலும், தேனி மாவட்டத்தின் ஒரு சில இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதனால் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும் என விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    பெரியாறு அணையின் நீர் மட்டம் 125.05 அடியாக உள்ளது. அணைக்கு 186 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 900 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 3,629 மில்லியன் கன அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர் மட்டம் 56.23 அடி. வரத்து 659 கன அடி. திறப்பு 60 கன அடி. இருப்பு 2,921 மில்லியன் கன அடி. மஞ்சளாறு அணை நீர் மட்டம் 50 அடி. வரத்து 9 கன அடி திறப்பு 60 கன அடி. சோத்துப்பாறை நீர் மட்டம் 119.85 அடி. வரத்து 9 கன அடி. திறப்பு 27 கன அடி.

    பெரியாறு 7, தேக்கடி 3.8, கூடலூர் 2.4, சண்முகா நதி அணை 2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print