search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Blockade protest"

    • திருமங்கலம் அருகே 4 அரசு பஸ்களை சிறைபிடித்து கிராம மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
    • ஒரு மாத காலமாக முறையாக இயக்கப்படவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.கொக்குளம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து நாள்தோறும் நூற்றுக்க ணக்கானோர் மதுரை, திருமங்கலம் உள்ளிட்ட நகரங்களுக்கு அரசு பஸ்களில் சென்று வருகின்றனர். மேலும் மாணவ, மாணவிகளும் பள்ளிக்கு செல்ல அரசு பஸ்களையே நம்பியுள்ளனர்.

    மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு தினமும் காலை, மதியம், மாலை என 3 வேளை டி.கொக்குளம் கிராமத்திற்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக காரியாபட்டி பேருந்து பணிமனைக்கு உட்பட்ட டி.கொக்குளம் கிராமத்திலிருந்து மதுரை அண்ணா பஸ் நிலையத்திற்கு செல்லும் அரசுப் பேருந்து முறையாக இயக்கப்ப டவில்லை. தினமும் காலை நேரத்தில் வரக்கூடிய பேருந்து உரிய நேரத்திற்கு வராமல் தொடர்ந்து கால தாமதமாக வருவதால் வேலைக்கு செல்வோர் பள்ளி கல்லூரிகளுக்கு செல்வோர் பாதிக்கப் பட்டனர்.

    மேலும் மாலை வேளையில் பஸ்கள் வருவதில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இதுகுறித்து பலமுறை போக்குவரத்து அலுவலர்களிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் இன்று காலை கிராமத்திற்கு வந்த திருமால், புதுப்பட்டி, கிருஷ்ணாபுரம் பகுதிகளில் இருந்து பெரியார் பஸ் நிலையம் செல்லும் அரசு பஸ்சை சிறை பிடித்தனர். தொடர்ந்து அடுத்தடுத்து திருமங்கலம் பகுதியில் இருந்து காரியாபட்டி செல்லும் அரசு பஸ், மதுரையில் இருந்து தூம்பக்குளம் செல்லும் அரசு பஸ் என 4 பஸ்களையும் சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

    தகவலறிந்த கூடக்கோவில் போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அலுவலர்கள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தினந்தோறும் காலை மாலை உரிய நேரத்திற்கு பேருந்து வரும் என எழுதி என உறுதி அளித்தனர். அதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

    • தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.
    • தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய மாநாடு கட்சி அலுவலகத்தில் நடந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய மாநாடு கட்சி அலுவலகத்தில் நடந்தது. முருகேசன் தலைமை தாங்கினார். பாக்கியம் கொடி ஏற்றி வைத்தார்.

    விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தங்கமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கண்ணகி, விவசாய தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் சாத்தையா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் சங்கையா, விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கணேசன் உள்ளிட்ட பலர் பேசினர்.

    விவசாய தொழிலாளர் சங்கத்தின் மானாமதுரை ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். செயலா ளராக கணேசன், தலைவராக முருகேசன், பொரு ளாளராக சோனையா, துணைச் செயலாளராக நாகேந்திரன், துணைத் தலைவராக அரியமுத்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் நாகராஜன், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் முருகேசன் மற்றும் விவசாய தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டத்தை நிறுத்தும் நிலையை தடுக்க வேண்டும், மானாமதுரை ஒன்றியம் பதினெட்டான் கோட்டை கிராமத்தில் ஆதி திராவிடர்களுக்கு கொடுக்கப்பட்ட இடத்தில் நடந்துள்ள முறைகேடு குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். புத்தனேந்தல் கிராமத்தில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்ய ப்பட்டதையும், இங்குள்ள மயானத்தை பிற கிராமத்தினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதையும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் 2 பெண்கள் உள்பட 53 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கண்டிக்கின் றோம், கண்டிக்கின்றோம், மத்திய அரசை கண்டிக்கிறோம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பி.எஸ்.என்.எல் மற்றும் தபால் அலுவலகங்களில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் இளையராஜா, நகர தலைவர் குமார், நகராட்சி கவுன்சிலர் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், இதில் மந்தைவெளியில் இருந்து 50 -க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் சிலிண்டருக்கு பாடைகட்டி தூக்கிக்கொண்டு ஊர்வலமாக வந்து பி.எஸ்.என்.எல் அலுவலகம் மற்றும் அதன் அருகில் உள்ள தபால் அலுவலகங்களில் முன்பு முற்றுகையிட்டனர். அப்போது கண்டிக்கின் றோம், கண்டிக்கின்றோம், மத்திய அரசை கண்டிக்கிறோம், குறைத்திடு குறைத்திடு பெட்ரோல், டீசல், சிலிண்டர் மறறும் விலைவாசி உயர்வை குறைத்திடு, போடாதே, போடாதே, காங்கிரஸ் தலைவர்கள் மீது பொய் வழக்கு போடாதே என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பி முற்றுகையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மாவட்டத் தலைவர் மற்றும் 2 பெண்கள் உள்ளிட்ட 53 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தார் மாலை அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    ×