search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை போராட்டம்: 2 பெண்கள் உள்பட  53 பேர் கைது
    X

    கள்ளக்குறிச்சியில் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

    காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை போராட்டம்: 2 பெண்கள் உள்பட 53 பேர் கைது

    • காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் 2 பெண்கள் உள்பட 53 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கண்டிக்கின் றோம், கண்டிக்கின்றோம், மத்திய அரசை கண்டிக்கிறோம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பி.எஸ்.என்.எல் மற்றும் தபால் அலுவலகங்களில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் இளையராஜா, நகர தலைவர் குமார், நகராட்சி கவுன்சிலர் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், இதில் மந்தைவெளியில் இருந்து 50 -க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் சிலிண்டருக்கு பாடைகட்டி தூக்கிக்கொண்டு ஊர்வலமாக வந்து பி.எஸ்.என்.எல் அலுவலகம் மற்றும் அதன் அருகில் உள்ள தபால் அலுவலகங்களில் முன்பு முற்றுகையிட்டனர். அப்போது கண்டிக்கின் றோம், கண்டிக்கின்றோம், மத்திய அரசை கண்டிக்கிறோம், குறைத்திடு குறைத்திடு பெட்ரோல், டீசல், சிலிண்டர் மறறும் விலைவாசி உயர்வை குறைத்திடு, போடாதே, போடாதே, காங்கிரஸ் தலைவர்கள் மீது பொய் வழக்கு போடாதே என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பி முற்றுகையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மாவட்டத் தலைவர் மற்றும் 2 பெண்கள் உள்ளிட்ட 53 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தார் மாலை அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    Next Story
    ×