search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Virudhunagar collector"

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தாமரை கோலம் அழிக்கப்பட்டதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்று கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார். #LSPolls SrivilliputhurTemple
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் புராணங்களை விளக்கக்கூடிய ஓவியங்கள் மற்றும் பல்வேறு வகையான பூக்கள் நுழைவு வாயில் மற்றும் உள் பிரகாரத்தில் வரையப்பட்டிருந்தது.

    அதில் தாமரைப்பூக்கள் பாரதிய ஜனதா கட்சியின் சின்னம் என கருதிய ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி அதனை அழிக்குமாறு கோவில் செயல் அலுவலரிடம் கூறி உள்ளார்.

    இதனைத்தொடர்ந்து கோவில் பணியாளர்கள் சுண்ணாம்பு கலவையால் தாமரை பூ சின்னத்தை அழித்தனர். அந்த இடத்தில் வேறு கோலம் வரையப்பட்டது. இதற்கு இந்து அமைப்புகள் மற்றும் பக்தர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜ ஜீயர் கூறுகையில், தாமரை பூ ஓவியத்தை அழித்தது கண்டனத்துக்குரியது. தாமரை என்பது தாயாரின் அவதார பூ. கோவிலுக்குள் வந்து ஓவியங்களை அழிக்க தேர்தல் ஆணையத்துக்கு உரிமை இல்லை. இந்த வி‌ஷயத்தில் அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்றார்.

    தாமரை கோலம் அழிக்கப்பட்டு அந்த இடத்தில் வேறு கோலம் வரையப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஓவியங்கள் அழிக்கப்பட்டது குறித்து விருதுநகர் கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான சிவஞானத்திடம் கேட்டபோது, ஆண்டாள் கோவிலில் தாமரை பூ கோலம் அழிக்கப்பட்டது குறித்து விசாரித்து வருகிறோம்.

    கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் பிரசாரம் செய்வதற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவிலில் நிரந்தரமாக போடப்பட்ட பெயிண்ட் கோலத்தை அழித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

    தாமரை சின்னம் தேர்தல் கட்டுப்பாட்டு விதிகளுக்குள் வரக்கூடும் என கோவில் நிர்வாகத்திடம் போலீஸ் டி.எஸ்.பி. அறிவுரைதான் கூறியுள்ளார். கோவில் நிர்வாகத்தினர்தான் கோலங்களை அழித்துள்ளனர். யாரும் கோவில் நிர்வாகத்திடம் வற்புறுத்தவில்லை. தாமரை பூ கோலம் அழிக்கப்பட்டதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்றார். #LSPolls SrivilliputhurTemple
    விருதுநகர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி டிஜிட்டல் போர்டு, பிளக்ஸ், விளம்பர பதாகைகள் வைத்தால் ஜெயில் தண்டனை வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் இடைக்கால உத்தரவின் அடிப்படையில், டிஜிட்டல் போர்டு, பிளக்ஸ், விளம்பர பதாகைகள் வைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் சிவஞானம் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராசராஜன் முன்னிலையில் நடந்தது.

    டிஜிட்டல் போர்டு, பிளக்ஸ், விளம்பர பதாகைகள் வைப்பதற்கான பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன.

    சென்னை உயர்நீதிமன்ற வழக்குகளில் வழங்கிய இடைக்கால உத்தரவின் அடிப்படையில் டிஜிட்டல் போர்டு, பிளக்ஸ், விளம்பர பதாகைகள் போன்றவைகளால், சாலையினை பயன்படுத்துவோர் மற்றும் வாகன ஒட்டிகளிடம் கவன சிதறலை ஏற்படுத்துவதாலும் சாலையினை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவதாலும் விருதுநகர் மாவட்டத்திலுள்ள இணைப்புச் சாலைகள், சாலை சந்திப்புகள் பிளாட்பாரங்கள், நடைபாதைகள் மற்றும் மாவட்டத்திலுள்ள முக்கிய சாலைகள், வழிபாட்டு தலங்கள், மருத்துவமனை அருகில் மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் போன்றவற்றில் அங்கீகாரம் பெற்ற மற்றும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள், திருவிழாக்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகள் சார்பில் அனுமதியின்றி டிஜிட்டல் போர்டு, பிளக்ஸ், விளம்பர பதாகைகள் வைப்பதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தேவையான சமயங்களில் மட்டும் டிஜிட்டல் பேனர்கள் வைக்க வேண்டும். எந்த இடத்தில் வைக்க வேண்டும், யாரிடம் அனுமதி பெற வேண்டும், அவற்றை எப்பொழுது அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதை அனைவரும் நன்றாக அறிந்திருக்க வேண்டும். விண்ணப்பங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்படுவதால், வெளிப்படை தன்மை உள்ளது.

    எனவே, விருதுநகர் மாவட்டத்தில் டிஜிட்டல் போர்டு, பிளக்ஸ், விளம்பர பதாகைகள் வைப்பதற்கு முன்பு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடமிருந்து முறையாக அனுமதி பெற வேண்டும். அச்சக உரிமையாளர்கள் டிஜிட்டல் போர்டு, பிளக்ஸ், விளம்பர பதாகைகள் பிரிண்ட் செய்ய வரும் நபர்களிடம் உறுதிமொழி பெற வேண்டும்.

    விதிகளுக்கு முரணாக பேனர், விளம்பர பதாகைகள் மற்றும் பிளக்ஸ் வைத்திருப்பது கண்டறியப்பட்டால் ரூ. 5000 அபராதம் அல்லது ஒரு வருட சிறைத்தண்டனை அல்லது அபராதம் மற்றும் சிறை தண்டனை ஆகிய இரண்டும் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில், அனைத்து கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையாளர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள், விளம்பர அச்சக உரிமையாளர்கள் உட்பட அரசு அலுவலர்கள், காவல் துறையினர்கள் பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    விருதுநகர் மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள் வழங்கப்படும் என்று கலெக்டர் சிவஞானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிவஞானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில், வேளாண்மையை எந்திர மயமாக்கும் திட்டத்தின் கீழ், விவசாயிகளின் நலன் சார்ந்த பல்வேறு சிறப்பான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

    வேளாண்மைக் கருவிகளும், எந்திரங்களும் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், சிறு, குறு ஆதி திராவிட பழங்குடி மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம் வரையும் இதர விவசாயிகளுக்கு 40 சதவீதம் வரையும் அல்லது அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ச மானியத் தொகை இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது.

    விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும் எந்திரங்கள் மற்றும் கருவிகளை வேளாண் பொறியியல் துறையால் ஒப்புதல் மற்றும் அங்கீகாரம் வழங்கப்பட்ட உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து தங்களின் முழு விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்து மானிய உதவியுடன் வாங்கி பயனடையும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதன் அடிப்படையில் வேளாண்மை வளர்ச்சித் திட்டம் மற்றும் வேளாண்மை எந்திரமயமாக்கலின் உப இயக்கம் திட்டங்களின் கீழ் டிராக்டர், பவர் டில்லர், சுழற்கலப்பை, தட்டை வெட்டும் கருவி, விசைத் தெளிப்பான், நேரடி நெல் விதைப்புக் கருவி, விசை களையெடுக்கும் எந்திரங்கள் போன்ற வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் கடந்த 2016-ம் ஆண்டு முதல் தற்போது வரை விருதுநகர் மாவட்டத்தில் 1080 பயனாளிகளுக்கு ரூ.783.71 லட்சம் மானிய விலையில் இத்துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும் கருவிகளை பெறுவதற்கு தங்களது விண்ணப்பத்தினை www.agrimachinery.nic.in என்ற இணைய தளத்தின் வாயிலாகவும், உழவன் செயலியின் வாயிலாகவும் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மேலும், விபரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட செயற் பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை) அலுவலகம் மற்றும் உதவி செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை) அலுவலகத்தையும், விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி வட்டார விவசாயிகள் 04562 - 252192 என்ற தொலைபேசி எண்ணிலும், சாத்தூர், சிவகாசி, வெம்பக் கோட்டை, வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் வட்டார விவசாயிகள் 04563-289290 என்ற தொலை பேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

    மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    விருதுநகரில் ரூ.28 ஆயிரம் மதிப்பிலான நல உதவிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் சிவஞானம் வழங்கினார். #VirudhunagarCollector
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுதிறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக்குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மொத்தம் 15 மனுக்கள் பெறப்பட்டு அதில் உதவி உபகரணங்கள் கோரிய 4 மனுக்களுக்கு உடனடியாக வழங்கப்பட்டது.

    பிறதுறை தொடர்புடைய மனுக்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    மேலும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.415 மதிப்பிலான ஊன்று கோல்களையும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.7 ஆயிரத்து 240 மதிப்பிலான 3 சக்கர சைக்கிள்களையும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.5 ஆயிரத்து 910 மதிப்பிலான சக்கர நாற்காலிகளையும், 1 பயனாளிக்கு ரூ.1050 மதிப்பிலான ப்ரெய்லி கைக்கடிகாரம் மற்றும் ரூ.135 மதிப்பிலான கருப்புக்கண்ணாடியையும் என மொத்தம் 7 பயனாளிகளுக்கு ரூ.28 ஆயிரத்து 315 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சிவஞானம் வழங்கினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் உதய குமார், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் சிவசங்கரன், தனித்துணை ஆட்சியர் உஷா உள்பட பலர் கலந்து கொண்டனர். #VirudhunagarCollector
    விருதுநகர் மாவட்ட 11, 12-ம் வகுப்பு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் சிவஞானம் பரிசுத்தொகை வழங்கினார்.

    விருதுநகர்:

    தமிழகப்பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் பேச்சுத்திறன் மற்றும் படைப்புத்திறனை வெளிக் கொணரும் நோக்கத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஆண்டுதோறும் மாவட்டம் வாரியாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி நடைபெற்ற போட்டி களில், கவிதைப் போட்டியில் திருத்தங்கல் சிவசுப்பிரமணிய நாடார் குருவம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சுவீட்டி சுவேதா முதலிடத்தினையும், மே.சின்னையாபுரம் தேவ சகாயம் அன்னத்தாயம்மாள் மேல்நிலைப்பள்ளி மாணவி ராஜலட்சுமி 2-ம் இடத்தையும், விருதுநகர் வித்யா பதின்ம மேல்நிலைப் பள்ளி மாணவி திவ்யா 3-ம் இடத்தினையும் பெற்றனர்.

    கட்டுரைப்போட்டியில் சாரதா சக்தி பதின்ம மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி முதலிடத்தினையும், திருத்தங்கல் சிவசுப்பிரமணிய நாடார் குருவம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜோதிகா 2-ம் இடத்தினையும், சாத்தூர் சா.இ.நா.எட்வர்டு மேல் நிலைப்பள்ளி மாணவன் திருச்செந்தில் 3-ம் இடத்தையும் பெற்றனர்.

    பேச்சுப்போட்டியில் ராஜ பாளையம் ரமணா வித்யாலயா மாணவி நேக மீனா முதலிடத்தினையும், விருதுநகர் வித்யா பதின்ம மேல்நிலைப்பள்ளி மாணவி ஜெயஸ்ரீ 2-ம் இடத்தையும், வில்லிபுத்தூர் திரு இருதய பெண்கள் மேல் நிலைப் பள்ளி மாணவி விஷ்ணுப்பிரியா 3-ம் இடத்தையும் பெற்றனர்.

    ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரமும் என கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற 9 மாணவ, மாணவிகளுக்கு ரூ.66 ஆயிரம் பரிசுத்தொகைக்கான காசோலைகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் கலெக்டர் சிவஞானம் வழங்கினார்.

    நிகழ்வுகளில் விருதுநகர் மாவட்ட தமிழ்வளர்ச் சித்துறை உதவி இயக்குநர் சுசிலா உள்பட பள்ளி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    சுதந்திர தின விழாவில் 106 பயனாளிகளுக்கு ரூ. 78 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சிவஞானம் வழங்கினார். #IndependenceDayIndia
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் முதன் முறையாக சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாவட்டம் தொடங்கி கடந்த 33 ஆண்டுகளாக ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்று வந்த சுதந்திர தின விழா இந்த ஆண்டு தான் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

    இதையொட்டி விழா திடல் பிரமாண்ட முறையில் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் திரண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் சிவஞானம் தேசியக்கொடி ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.  தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். 142 அரசு அலுவலர் களுக்கு நற்சான்றிதழ் களையும், வெம்பக் கோட்டை தனிபிரிவு சிறப்பு  சப்-இன்ஸ்பெக்டர்  காளிராஜ் உள்பட 70 காவல் துறையினரின் சிறப்பு சேவைகளை பாராட்டியும், தொடர்ந்து சிறப்பான சேவை செய்யவும் சான் றிதழ்களையும் கலெக்டர் சிவஞானம் வழங்கினார்.

    விழாவில் பல்வேறு அரசுத்துறைகளின் கீழ் 106 பயனாளிகளுக்கு ரூ. 78 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. 
    தொடர்ந்து 14 பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகளின் கண் கவர் கலை நிகழ்ச்சிகள் விழாவில் இடம் பெற்றன. 
    முன்னதாக விழாவிற்கு வந்த கலெக்டர் சிவ ஞானத்தை, மாவட்ட வருவாய் அலுவலர் உதய குமார், போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன்,மக்கள் தொடர்பு அலுவலர் ஜெக வீரபாண்டியன் வரவேற் றனர்.

    மாவட்டத்தில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளிலும் சுதந்திர தினவிழா இன்று விமரிசையாக கொண் டாடப்பட்டது. நகராட்சி, பஞ்சாயத்து அலுவல கங்கள், கோர்ட்டு உள் ளிட்ட அரசுத்துறை அலுவல கங்களிலும் கொடியேற்றப்பட்டது. விருதுநகர் தேசப்பந்து திடலில் உள்ள தியாகிகள் நினைவுத்தூணிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. கே.வி.எஸ். பள்ளிகளில் பள்ளி செயலாளர் மதன்மோகன் தலைமையில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. #IndependenceDayIndia 
    விருதுநகர் மாவட்டத்தில் வருகிற 15-ந்தேதிக்குள் வேளாண் எந்திரங்களை மானிய விலையில் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    விருதுநகர்:

    ஒவ்வொரு விவசாயிகளின் வருமானத்தையும் வருகிற 2022-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கும் வகையில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை நாடு முழுவதும் வளரும் மாவட்டங்களாக 111 மாவட்டங்களை தேர்வு செய்து உள்ளது.

    இந்த விவசாயிகளின் நலவாழ்வு இயக்கத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர் வட்டாரத்தில் காசி ரெட்டியாபட்டி, தாதம் பட்டி, அருப்புக்கோட்டை வட்டாரத்தில் கட்டங்குடி, வேலாயுதபுரம், காரியாபட்டி வட்டாரத்தில் மறைக்குளம், முடுக்கன்குளம், தோனுகால், தோப்பூர், கழுவனச்சேரி, வழுக்கலொட்டி, திருச்சுழி வட்டாரத்தில் பிள்ளையார் தொட்டியான்குளம், முத்துராமலிங்காபுரம், புரசலூர், சவ்வாசுபுரம், நரிக்குடி வட்டாரத்தில் பூம்பிடாகை, உலக்குடி, சாத்தூர் வட்டாரத்தில் ஒத்தையால், சாத்தூர் சடையம்பட்டி, சிவகாசி வட்டாரத்தில் நெடுங்குளம், வெம்பக்கோட்டை வட்டாரத்தில் சூரார்பட்டி, ஊத்துப்பட்டி, கங்கர்செவல், வத்திராயிருப்பு வட்டாரத்தில் ஆயர்தர்மம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்தில் முள்ளிக்குளம் மற்றும் ராஜபாளையம் வட்டாரத்தில் கோவிலூர் ஆகிய 25 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    அந்த கிராமங்களில் உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு டிராக்டர் எந்திர மயமாக்கல் உப இயக்க திட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்திற்கு விருதுநகர் மாவட்டத்திற்கு ரூ.97.05 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

    எனவே இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற ஆர்வம் உள்ள மேற்கண்ட 25 கிராமங்களில் உள்ள விருதுநகர், காரியாபட்டி, அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி வட்டார விவசாயிகள் வருகிற 15-ந் தேதிக்குள் உதவி செயற்பொறியாளர் வேளாண்மைப் பொறியியல் துறை, இரண்டாம் தளம், வேளாண்மை இணை இயக்குநர் வளாகம், மாவட்ட ஆட்சியரகம், விருதுநகர், அலுவலகத்தையும், சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டை, வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் வட்டார விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் வேளாண்மை பொறியியல் துறை, கலசலிங்கம் பல்கலைக்கழகம் எதிரில், கிருஷ்ணன்கோவில் அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.
    ×