search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agricultural Machinery"

    • ரூ.1.40 கோடி மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன
    • கலெக்டர் தகவல்

    வேலூர்:

    தமிழ்நாட்டில் நிலவும் வேளாண்மை தொழிலாளர் பற்றாக்குறையை போக்கவும், குறித்த நேரத்தில் குறைந்த செலவில் வேளாண் பணிகளை தொடங்கவும், பயிர் பாதுகாப்பு பணி களை மேற்கொள்ளவும், அறுவடை பணிகளை மேற்கொள்ளவும், தமிழ்நாடு அரசு வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

    இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு நவீன வேளாண் எந்திரங்களான டிராக்டர்,பவர் டில்லர், நாற்று நடும் எந்திரம், களையெடுக்கும் எந்திரம், அறுவடை எந்திரம்உ ள்ளிட்ட எந்திரங்களும், கல்டி வேட்டர், ரோட்ட வேட்டர், வைக்கோல் கட்டும் எந்திரம் உள்ளிட்ட இணைப்பு கருவிகளும் மானிய விலையில் வழங்கப்ப டுகிறது.

    வேலூர் மாவட்டத்தில் 2023-24-ம் ஆண்டில், 2022-23 ஆண்டு 2-ம் தவணை நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரூ.206 கோடி மதிப்பிலான 60 வேளாண் எந்திரங்கள் ரூ.84.55 லட்சம் மானியத்தில் விவசாயி களுக்கு வழங்கப்ப ட்டுள்ளது.

    மேலும், 2023-24-ம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு

    முதல்-அமைச்சர் அறிவுரையின்படி தமிழ்நாடு முழுவதும் 5000 பவர்டில்லர், பவர் வீடர் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.1.57 கோடி மதிப்பிலான 62 பவர் டில்லர் மற்றும் 11 களையெடுக்கும் கருவிகள் ரூ.55.81 லட்சம் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது.

    நடப்பாண்டில் இதுவரை வேலூர் மாவட்டதில் விவசாயிகளுக்கு ரூ.3.63 கோடி மதிப்பிலான 133 வேளாண் இயந்திரங்கள் ரூ.1.40 கோடி மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியுள்ளார்.

    விவசாயிகள் வேளாண் எந்திரங்களை மானியத்தில் பெற உழவன் செயலியில் தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.
    புதுக்கோட்டை:

    இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள ஒரு செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    வேளாண் பொறியியல் துறையின் மூலம் வேளாண்மையை எந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ், நடப்பு 2018-19-ம் நிதி ஆண்டில் மானிய விலையில் வேளாண்மை எந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்குதல் மற்றும் வேளாண் எந்திரங்கள், கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்களை மானிய விலையில் அமைத்தல் முதலான திட்டங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது.

    இந்த திட்டத்தில் அதிக சக்தி கொண்ட டிராக்டர்கள், பவர் டிரில்லர், நெல்நடவு எந்திரம், வைக்கோல் கட்டும் கருவி, கதிர் அறுக்கும் எந்திரம், சுழல் கலப்பை, விசை களையெடுப்பான், விதைக்கும் கருவி, வரப்பு அமைக்கும் கருவி, நிலம் சமன் செய்யும் கருவி, தட்டை வெட்டும் கருவி, விசை தெளிப்பான், டிராக்டரால் இயங்கும் தெளிப்பான், டிராக்டரால் இயங்கும் துகளாக்கும் கருவி மற்றும் மனித சக்தியால் இயக்கப்படும் கருவிகள் முதலான வேளாண் எந்திரங்களையும், கருவிகளையும் விவசாயிகள் மானிய உதவியுடன் வாங்கலாம்.

    இதற்கு மத்திய அரசின் வேளாண் எந்திரமயமாக்கும் துணை இயக்க வழிகாட்டி நெறிமுறைகளின்படி மானியம் வழங்கப்படும். சிறு, குறு, ஆதி திராவிட, பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளுக்கு 35 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையும், இதர விவசாயிகளுக்கு 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானிய தொகை இவற்றில் எது குறைவோ? அந்த தொகை மானியமாக வழங்கப்படுகிறது. உயர் தொழில்நுட்ப, அதிக விலை உள்ள எந்திரங்களை வாங்கிட அதிக பட்சமாக ரூ.2 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

    வேளாண் எந்திரங்களை மானியத்தில் பெற விவசாயிகள் உழவன் செயலியில் தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின்னர் அவரது விண்ணப்பம் மத்திய அரசின் இணையதளமான agrimachinery.nic.in&™ இணைக்கப்படும். விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளையும் மற்றும் ஒப்புதல் வழங்கப்பட்ட முகவரையும் தங்களது சுய விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்யலாம். விவசாயிகள் முகவரின் விற்பனை விலையை பேச்சு வார்த்தை மூலம் பேரம் பேசி குறைத்திடலாம். குறைக்கப்பட்ட விலைக்குரிய மானியம் இணைய தளத்திலேயே கணக்கிடப்படும்.

    விவசாயிகள் முகவரை ஒருமுறை தேர்வு செய்தபின், வேறு முகவரை தேர்வு செய்ய இயலாது. ஒரு நிதியாண்டில் தனக்கு தேவைப்படும் எதாவது 2 வேளாண் எந்திரங்கள் அல்லது கருவிகளை மட்டுமே மானிய விலையில் விவசாயிகள் வாங்க இயலும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு பின்னர்தான் அதே வகையான வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை மானிய விலையில் வாங்க இயலும். வழங்கப்பட்ட வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை சம்பந்தப்பட்ட விவசாயி மற்றும் ஆய்வு அலுவலர் ஆகியோருடன் கூடிய புகைப்படத்தினை இணைய தளத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் ஆய்வு அலுவலரால் பதிவேற்றம் செய்யப்படும். பின்னர் ஆய்வுகள் அனைத்தும் முடிந்த பின்னர் இறுதியாக விவசாயியின் வங்கி கணக்கில் உரிய மானியமானது ஆய்வு முடிந்த 10 நாட்களுக்குள் வரவு வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    விருதுநகர் மாவட்டத்தில் வருகிற 15-ந்தேதிக்குள் வேளாண் எந்திரங்களை மானிய விலையில் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    விருதுநகர்:

    ஒவ்வொரு விவசாயிகளின் வருமானத்தையும் வருகிற 2022-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கும் வகையில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை நாடு முழுவதும் வளரும் மாவட்டங்களாக 111 மாவட்டங்களை தேர்வு செய்து உள்ளது.

    இந்த விவசாயிகளின் நலவாழ்வு இயக்கத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர் வட்டாரத்தில் காசி ரெட்டியாபட்டி, தாதம் பட்டி, அருப்புக்கோட்டை வட்டாரத்தில் கட்டங்குடி, வேலாயுதபுரம், காரியாபட்டி வட்டாரத்தில் மறைக்குளம், முடுக்கன்குளம், தோனுகால், தோப்பூர், கழுவனச்சேரி, வழுக்கலொட்டி, திருச்சுழி வட்டாரத்தில் பிள்ளையார் தொட்டியான்குளம், முத்துராமலிங்காபுரம், புரசலூர், சவ்வாசுபுரம், நரிக்குடி வட்டாரத்தில் பூம்பிடாகை, உலக்குடி, சாத்தூர் வட்டாரத்தில் ஒத்தையால், சாத்தூர் சடையம்பட்டி, சிவகாசி வட்டாரத்தில் நெடுங்குளம், வெம்பக்கோட்டை வட்டாரத்தில் சூரார்பட்டி, ஊத்துப்பட்டி, கங்கர்செவல், வத்திராயிருப்பு வட்டாரத்தில் ஆயர்தர்மம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்தில் முள்ளிக்குளம் மற்றும் ராஜபாளையம் வட்டாரத்தில் கோவிலூர் ஆகிய 25 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    அந்த கிராமங்களில் உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு டிராக்டர் எந்திர மயமாக்கல் உப இயக்க திட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்திற்கு விருதுநகர் மாவட்டத்திற்கு ரூ.97.05 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

    எனவே இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற ஆர்வம் உள்ள மேற்கண்ட 25 கிராமங்களில் உள்ள விருதுநகர், காரியாபட்டி, அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி வட்டார விவசாயிகள் வருகிற 15-ந் தேதிக்குள் உதவி செயற்பொறியாளர் வேளாண்மைப் பொறியியல் துறை, இரண்டாம் தளம், வேளாண்மை இணை இயக்குநர் வளாகம், மாவட்ட ஆட்சியரகம், விருதுநகர், அலுவலகத்தையும், சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டை, வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் வட்டார விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் வேளாண்மை பொறியியல் துறை, கலசலிங்கம் பல்கலைக்கழகம் எதிரில், கிருஷ்ணன்கோவில் அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.
    ×