search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flex"

    • தமிழகம் முழுவதும் அனுமதி இன்றி விளம்பர பதாகைகள், பிளக்ஸ் பேனர்கள் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள், விளம்பர பதாகைகளை அகற்றும்படி உதவி கமிஷனர் வெங்கட் ராமன் அறிவுறுத்தினார்.

    நெல்லை:

    நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் அனுமதி இன்றி விளம்பர பதாகைகள், பிளக்ஸ் பேனர்கள் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி வைப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 3 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கலாம் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

    பேனர்கள் அகற்றம்

    அதன் பேரில் நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி, நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் திட்டத்தின் கீழ் இன்று 4 மண்டலங்களிலும் பிளக்ஸ், பேனர்களை அகற்ற அவர் உத்தரவிட்டிருந்தார்.

    மாநகர பகுதியில் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அந்தந்த பகுதி மண்டல அலுவலர்கள் கணக்கெடுத்து அவற்றில் உரிமம் பெறாமல் வைக்கப்பட்டவை களை அகற்றும்படி அவர் தெரிவித்திருந்தார்.அதன் பேரில் கடந்த சில வாரங்களாக மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின் பேரில் பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டு வருகிறது.

    டவுன் ரத வீதிகளில்...

    இந்நிலையில் நெல்லை யப்பர் கோவில் தேரோட்டத்தை ஒட்டி ரத வீதிகளில் அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள், விளம்பர பதாகைகளை அகற்றும்படி உதவி கமிஷனர் வெங்கட் ராமன் அறிவுறுத்தினார்.இதையடுத்து அவற்றை அகற்றும் பணி சுகாதார அலுவலர் இளங்கோ மேற்பார்வையில் இன்று நடைபெற்றது.

    டவுனில் 4 ரத வீதிகளிலும் போக்குவரத்துக்கு இடையூறாகவும், அனுமதி பெறாமலும் வைக் கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை தூய்மை இந்தியா திட்ட பரப்புரை யாளர்கள் மனோஜ், சேக், முத்துராஜ், மாரியப்பன் ஆகியோர் அகற்றி மாநகராட்சி குப்பை லாரியில் ஏற்றிச் சென்றனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி டிஜிட்டல் போர்டு, பிளக்ஸ், விளம்பர பதாகைகள் வைத்தால் ஜெயில் தண்டனை வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் இடைக்கால உத்தரவின் அடிப்படையில், டிஜிட்டல் போர்டு, பிளக்ஸ், விளம்பர பதாகைகள் வைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் சிவஞானம் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராசராஜன் முன்னிலையில் நடந்தது.

    டிஜிட்டல் போர்டு, பிளக்ஸ், விளம்பர பதாகைகள் வைப்பதற்கான பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன.

    சென்னை உயர்நீதிமன்ற வழக்குகளில் வழங்கிய இடைக்கால உத்தரவின் அடிப்படையில் டிஜிட்டல் போர்டு, பிளக்ஸ், விளம்பர பதாகைகள் போன்றவைகளால், சாலையினை பயன்படுத்துவோர் மற்றும் வாகன ஒட்டிகளிடம் கவன சிதறலை ஏற்படுத்துவதாலும் சாலையினை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவதாலும் விருதுநகர் மாவட்டத்திலுள்ள இணைப்புச் சாலைகள், சாலை சந்திப்புகள் பிளாட்பாரங்கள், நடைபாதைகள் மற்றும் மாவட்டத்திலுள்ள முக்கிய சாலைகள், வழிபாட்டு தலங்கள், மருத்துவமனை அருகில் மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் போன்றவற்றில் அங்கீகாரம் பெற்ற மற்றும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள், திருவிழாக்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகள் சார்பில் அனுமதியின்றி டிஜிட்டல் போர்டு, பிளக்ஸ், விளம்பர பதாகைகள் வைப்பதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தேவையான சமயங்களில் மட்டும் டிஜிட்டல் பேனர்கள் வைக்க வேண்டும். எந்த இடத்தில் வைக்க வேண்டும், யாரிடம் அனுமதி பெற வேண்டும், அவற்றை எப்பொழுது அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதை அனைவரும் நன்றாக அறிந்திருக்க வேண்டும். விண்ணப்பங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்படுவதால், வெளிப்படை தன்மை உள்ளது.

    எனவே, விருதுநகர் மாவட்டத்தில் டிஜிட்டல் போர்டு, பிளக்ஸ், விளம்பர பதாகைகள் வைப்பதற்கு முன்பு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடமிருந்து முறையாக அனுமதி பெற வேண்டும். அச்சக உரிமையாளர்கள் டிஜிட்டல் போர்டு, பிளக்ஸ், விளம்பர பதாகைகள் பிரிண்ட் செய்ய வரும் நபர்களிடம் உறுதிமொழி பெற வேண்டும்.

    விதிகளுக்கு முரணாக பேனர், விளம்பர பதாகைகள் மற்றும் பிளக்ஸ் வைத்திருப்பது கண்டறியப்பட்டால் ரூ. 5000 அபராதம் அல்லது ஒரு வருட சிறைத்தண்டனை அல்லது அபராதம் மற்றும் சிறை தண்டனை ஆகிய இரண்டும் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில், அனைத்து கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையாளர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள், விளம்பர அச்சக உரிமையாளர்கள் உட்பட அரசு அலுவலர்கள், காவல் துறையினர்கள் பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    ×