search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Disability"

    • விண்ணப்பங்கள் வரவேற்பு
    • நிரந்தர ஊனத்திற்கான மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட ஊனமுற்றோர் அடையாள அட்டை ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை தொழிலாளர் துறை ஆணையரும், அமைப்புசாரா நிரந்தர தொழிலாளர் நலச்சங்க உறுப்பினருமான மாணிக்கதீபன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் மூலம் அமைப்புசாரா தொழிலா ளர்களை முறையாக கண்டறியும் பொருட்டு இ-ஷரம் இணைய முகப்பில் நேரடியாகவோ அல்லது பொது எண் சேவை மையம் மூலமாகவோ கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு 26-ந் தேதி முதல் 2022-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை பதிவு செய்த அமைப்புசாரா தொழிலா ளர்களுக்கு இழப்பீடு வழங்க அறிவித்துள்ளது.

    அதன் படி விபத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், ஊனம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், பகுதி ஊனம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் இழப்பீடு தொகையாக வழங்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

    விபத்து மரணத்துக்கு இழப்பீடு தொகை பெற விண்ணப்பத்துடன் விண்ணப்பதாரர் ஆதார் அடையாள அட்டை. இ-ஷரம் அடையாள அட்டை, யூ.ஏ.என். இறப்பு சான்றிதழ், இறப்புக்கான மருத்துவ சான்றிதழ், முதல் விசாரணை அறிக்கை (எப்.ஐ.ஆர்), பிரேத பரி சோதனை அறிக்கை, 18 வயதுக்குள் இருக்கும் வாரிசு தாரர், பாதுகாவலர் விண்ணப்பிக் கும்போது மாவட்ட கலெக்டர் வழங்கிய பாதுகாவலர் சான்றிதழை ஆகியவற்றை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

    விபத்து ஊனத்துக்கு இழப்பீடு தொகை பெற விண்ணப்பத்துடன் விண்ணப்பதாரரின் அடையாள அட்டை, இ-ஷரம் அடையாள அட்டை, யூ.ஏ.என். எண், விபத்தின் காரணமாக மருத்துவமனையில் உள்ள நோயாளியாக சிகிச்சை பெற்று கொண்ட தற்கான மருத்துவ குறிப்பு அடங்கிய ஊனத்தின் தன்மைக்கான சான்றிதழ், அரசு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ அதிகாரியால் வழங்கப்பட்ட ஊனமுற்றோர் சான்றிதழ், நிரந்தர ஊனத்திற்கான மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட ஊனமுற்றோர் அடையாள அட்டை ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

    மேற்கண்ட அனைத்து ஆவணங்களும் வலை தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டி இருப்பதால், இழப்பீடு கோரும் விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட அசல் மற்றும் நகல் ஆவணங்களுடன் புதுவை அமைப்புசாரா தொழிலாளர் நலச்சங்க அலுவலகத்தில் நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • எல்லா இடங்களிலும் தொடர்ந்து பரவிவருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
    • மத்திய அரசு பெரிதாக எந்தக் கண்டனமும் தெரிவிப்பதில்லை.

    மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் ஹாரூன் ரசீது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    டெல்லியில் சுந்தர் நகரி பகுதியில் இருக்கும் கோயில் ஒன்றில் பிரசாதம் சாப்பிட்டதற்காக மனநலம் பாதிக்கப்பட்ட அப்பாவி இஸ்லாமிய இளைஞர் முகமது இஸ்ரார் என்பவரை மரத்தில் கட்டி வைத்து கடுமையாக தாக்கி படுகொலை செய்துள்ளது ஒரு மதவெறி வன்முறை கும்பல்.

    இந்த வன்முறை செயல்கள் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது. இது எல்லா இடங்களிலும் தொடர்ந்து பரவிவருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தவறு செய்ததற்கான முகாந்திரங்கள் ஏதுமின்றி இஸ்லாமியர்கள் என்பதால் மட்டும் தாக்கப்படுவது இந்தியாவில் அன்றாட வழக்கமாகிவிட்டது, ஆனால் இதற்கு மத்திய அரசு பெரிதாக எந்தக் கண்டனமும் தெரிவிப்பதில்லை. சமீபகாலமாக மத வெறுப்பு பேச்சு, கும்பல் படுகொலைகள் அரங்கேறி வருவது அன்றாடமாகிவிட்டது .

    இந்த அசாதாரண சூழல் இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை உணர்ந்து ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். அப்பாவி இஸ்லாமிய இளைஞர் முகமது இஸ்ராரை படுகொலை செய்த கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், இதுபோன்ற மதவெறி வன்முறை கும்பலை அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • விபத்து நிவாரணத்தை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
    • மாற்றுத்திறனாளிகள் மகன் மற்றும் மகள் கல்வி பயில வருடாந்திர உதவித் தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் வாயிலாக வழங்கப்பட்டு வரும் விபத்து நிவாரணத்தை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இதன்படி மருத்துவம், கல்வி மற்றும் இதர உதவித் தொகையினை உயர்த்தி வழங்க இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    விபத்தினால் இறக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஒரு லட்ச ரூபாய் நிவாரணத்தொகை, இரண்டு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    கை அல்லது கால் இழப்பு, இரு கண்பார்வை இழப்பு ஏற்பட்டால் வழங்கப்படும் நிவாரணத் தொகை ஒரு லட்சத்திலிருந்து இரண்டு லட்சமாக அதிகரித்து வழங்கப்படும்.

    மாற்றுத்திறனாளிகள் மகன் மற்றும் மகள் கல்வி பயில வருடாந்திர உதவித் தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது.

    இதன்படி பத்தாம் வகுப்பு பயிலும் மகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ஆயிரத்திலிருந்து இரண்டாயிரமாக வழங்கப்படும்.

    12-ம் வகுப்பு பயிலும் மகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1500-ல் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தியும், விடுதியில் தங்கி பயிலும் மகன் மகளுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.1200-லிருந்து ரூ.2500-ஆக உயர்த்தியும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    • மனுதாரர் பிற்படுத்தப்பட்டோருக்கான சிறப்பு மாற்றுத்திறனாளி பிரிவில் இட ஒதுக்கீட்டின் கீழ் பணி நியமனம் பெற்றுள்ளார்.
    • மாவட்ட கலெக்டர் தவறாக புரிந்து கொண்டு மனுதாரர் பணி நியமனத்தை ரத்து செய்ய முயற்சிக்கின்றனர் என கூறினார்.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    60 சதவீதம் மாற்றுத்திறனாளியான நான், கடந்த டிசம்பர் மாதம் முத்தையாபுரம் ஊராட்சி எழுத்தர் பணிக்கு முறைப்படி விண்ணப்பித்து தேர்வு எழுதினேன். மேலும் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவில் தேர்வு செய்யப்பட்டு கிராம உதவியாளராக பணிபுரிந்து வருகிறேன்.

    இந்நிலையில் எனக்கு வழங்கப்பட்ட பணியானது இட ஒதுக்கீடு அடிப்படையில் தவறாக வழங்கப்பட்டுள்ளதாக கூறி என்னை பணியிலிருந்து நீக்குவதாக கலெக்டர் எனக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். எனவே எனக்கு அனுப்பிய மாவட்ட கலெக்டரின் நோட்டீசுக்கு தடை விதித்து, நான் தொடர்ந்து கிராம உதவியாளராக பணியாற்ற அனுமதித்து உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு தனது மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் மாரீஸ் குமார் ஆஜராகினார். அவர் மனுதாரர் பிற்படுத்தப்பட்டோருக்கான சிறப்பு மாற்றுத்திறனாளி பிரிவில் இட ஒதுக்கீட்டின் கீழ் பணி நியமனம் பெற்றுள்ளார். ஆனால் பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு பெற்றுள்ளதாக மாவட்ட கலெக்டர் தவறாக புரிந்து கொண்டு மனுதாரர் பணி நியமனத்தை ரத்து செய்ய முயற்சிக்கின்றனர் என கூறினார்.

    இதனை பதிவு செய்த நீதிபதி, மாவட்ட கலெக்டரின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தும், இந்த வழக்கு குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உரிய பதில் அளிக்கும்படியும் உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.

    • கள்ளக்குறிச்சி அருகே மாற்றுத்திறனாளி சாவில் சந்தேகம் என உறவினர்கள் மனு கொடுத்துள்ளனர்.
    • பஸ் நிறுத்தத்தில் இறக்கிவிடாமல் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் இறக்கிவிட்டுள்ளனர்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சிஅருகே மூங்கில்துறைப்பட்டு அருகே பொருவளூர் கிராமத்தை சேர்ந்தவர் மலர் (36) மாற்றுத்திறனாளி. இவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்த அவரது சகோதரி ஜெயந்தி மற்றும் உறவினர்கள் கள்ளக்குறிச்சியில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபுவிடம் புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:- எனது தங்கை மலர் கடந்த 27- ந் தேதி பெருமனம் கிராமத்திற்கு துக்கம் விசாரிக்க தனியார் மினிபேருந்தில் பயணம் சென்றார். அப்போது அவரை மணலூர்பேட்டை பஸ் நிறுத்தத்தில் இறக்கிவிடாமல் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் இறக்கிவிட்டுள்ளனர்.

    எனது அக்கா மலருக்கு கண் பார்வை குறைபாடு உள்ளது. இதனால் எனது அக்கா மலர் இரவு முழுவதும் பெட்ரோல் பங்கிலேயே இருந்துள்ளார். அந்த மினி பேருந்தும் அங்கேயே நிறுத்தப்பட்டு இருந்தது. மறுநாள் 28- ந் தேதி பெட்ரோல் பங்க் வேலையாட்கள் மூலம் எனது அக்கா மலர் அங்கு இருப்பது குறித்த தகவல் வந்தது. பின்னர்மலரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். தொடர்ந்து புதுவை ஜிப்மர் மருத்து வமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அவரை வீட்டுக்கு அழைத்து வந்த போது கடந்த 29- ந் தேதி இறந்துவிட்டார். எனது அக்கா மலர் இறப்பில் சந்தேகம் உள்ளது. எனவே அக்கா மலர் உடலை தோண்டி எடுத்து உடல் கூறாய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்டவாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    விருதுநகரில் ரூ.28 ஆயிரம் மதிப்பிலான நல உதவிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் சிவஞானம் வழங்கினார். #VirudhunagarCollector
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுதிறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக்குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மொத்தம் 15 மனுக்கள் பெறப்பட்டு அதில் உதவி உபகரணங்கள் கோரிய 4 மனுக்களுக்கு உடனடியாக வழங்கப்பட்டது.

    பிறதுறை தொடர்புடைய மனுக்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    மேலும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.415 மதிப்பிலான ஊன்று கோல்களையும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.7 ஆயிரத்து 240 மதிப்பிலான 3 சக்கர சைக்கிள்களையும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.5 ஆயிரத்து 910 மதிப்பிலான சக்கர நாற்காலிகளையும், 1 பயனாளிக்கு ரூ.1050 மதிப்பிலான ப்ரெய்லி கைக்கடிகாரம் மற்றும் ரூ.135 மதிப்பிலான கருப்புக்கண்ணாடியையும் என மொத்தம் 7 பயனாளிகளுக்கு ரூ.28 ஆயிரத்து 315 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சிவஞானம் வழங்கினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் உதய குமார், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் சிவசங்கரன், தனித்துணை ஆட்சியர் உஷா உள்பட பலர் கலந்து கொண்டனர். #VirudhunagarCollector
    சென்னை ஐகோர்ட்டிற்கு வழக்கு சம்பந்தமாக வந்த மாற்று திறனாளி ஒருவர் கழிவறை பற்றாக்குறையால் பாட்டிலில் சிறுநீர் கழித்தார். #chennaihighcourt
    சென்னை:

    சென்னையை சேர்ந்தவர் விஜயகுமார். மாற்று திறனாளியான இவர் ஒரு வழக்கு சம்பந்தமாக சென்னை ஐகோர்ட்டுக்கு அடிக்கடி சென்று வருகிறார். சக்கர நாற்காலியில் செல்லும் விஜயகுமார் நேற்று வழக்கு சம்பந்தமாக கோர்ட்டிற்கு வந்திருந்தார்.

    முதல் தளத்தில் உள்ள கோர்ட்டில் நடந்த விசாரணையில் அவர் பங்கேற்ற போது திடீரென்று சிறுநீர் கழிக்க வேண்டியதிருந்தது. உடனே அவர் கோர்ட்டில் இருந்து வெளியே வந்தார். முதல் தளத்தில் கழிவறை இல்லாததால் அவர் பெரும் தவிப்புக்குள்ளானார்.

    இதையடுத்து அவர் முதல் தளத்திலேயே மறைவான இடத்திற்கு சென்று ஒரு பாட்டிலில் சிறுநீர் கழித்தார். கீழ் தளத்தில் உள்ள கழிவறைக்கு அவரால் செல்ல முடியாததால் பாட்டிலிலேயே சிறுநீர் கழிக்கும் அவலம் அவருக்கு ஏற்பட்டது.

    இதுகுறித்து விஜயகுமார் கூறும்போது, ஐகோர்ட்டில் உள்ள கழிவறையை மாற்று திறனாளியான என்னால் உபயோகப்படுத்த முடியவில்லை. இதனால் பாட்டிலில் சிறுநீர் கழிப்பதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. சக்கர நாற்காலியில் செல்லும் என்னை போன்ற மாற்று திறனாளிகளுக்கு ஐகோர்ட்டில் உள்ள கழிவறைகளை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் முதல் மற்றும் 2-வது தளத்தில் கழிவறைகள் இல்லை. கீழ் தளத்தில் தான் உள்ளது.

    இதனால் ஐகோர்ட்டின் மற்ற பகுதிகளிலும் மாற்று திறனாளிகளுக்கான கழிவறைகள் அமைத்தால் பயன் உள்ளதாக இருக்கும் என்றார்.

    இதுகுறித்து மாற்று திறனாளிகள் உரிமைகள் சங்கத்தை சேர்ந்த சுமிதா சதாசிவம் கூறும்போது, நான் ஐகோர்ட்டில் ஒரு நாள் முழுவதும் இருந்த போது கழிவறையை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டேன். இதனால் வீட்டிற்கு சென்று கழிவறையை பயன்படுத்தி விட்டு மீண்டும் கோர்ட்டுக்கு வந்தேன் என்றார்.

    இதுபற்றி ஐகோர்ட்டு பதிவாளர் தேவநந்தன் கூறும் போது, பாரம்பரியமிக்க சென்னை ஐகோர்ட்டு கட்டிடத்தில் முதல் மற்றும் 2-வது தளத்தில் கழிவறைகள் இல்லை. ஆனால் கட்டிடத்திற்கு எந்தவித பாதிப்புகளும் இல்லாமல் கழிவறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்து இருக்கிறோம். மாற்று திறனாளிகள் எந்த நுழைவு வாயிலிலும் சென்று வர வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் லிப்ட் வசதியும் செய்யப்பட்டு இருக்கிறது என்றார். #chennaihighcourt
    சுயதொழில் தொடங்க 81 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 70 லட்சம் கடன் உதவியை முதல்-அமைச்சர் நாராயணசாமி வழங்கினார்.
    புதுச்சேரி:

    புதுவை அரசின் மகளிர் மற்றும் மாற்றுதிறனாளிகள் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் புதுவையில் உள்ள அனைத்து தொகுதிகளையும் சேர்ந்த மாற்றுதிறனாளிகள் சுய தொழில் தொடங்கும் விதமாக கடன் உதவி வழங்கும் விழா சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் இன்று நடந்தது.

    81 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 70 லட்சம் கடன் உதவியை முதல்-அமைச்சர் நாராயணசாமி வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியின் போது, அமைச்சர்கள் கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், சிவா, தனவேலு, பாஸ்கர், தீப்பாய்ந்தான், விஜயவேணி, எம்.என்.ஆர். பாலன் மற்றும் மகளிர் மற்றும் மாற்றுதிறனாளிகள் மேம்பாட்டு கழக தலைவர் ஆலிஸ்வாஸ், மேலாண் இயக்குனர் அனிதா ஆகியோர் உடன் இருந்தனர்.
    ×