search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "doubt"

    • சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
    • அவர்களிடமிருந்து 130 கிராம் எடையுள்ள கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே நாகலூர் மின்சார வாரிய அலுவலகம் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக வரஞ்சரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற னர். அப்போது அங்கு சந்தேகப்படு ம்படியாக மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த வர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

    விசாரணையில் சங்கராபுரம் பொய் குணம் ரோடு பகுதியைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (வயது 30) மற்றும் சங்கராபுரம் அருகே புதுபாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வல்லரசு (23) என்பதும், இவர்கள் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 130 கிராம் எடையுள்ள கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சுபாஷ் சந்திர போஸ் மற்றும் வல்லரசு ஆகியோரை கைது செய்தனர். மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    • விஜயா (வயது 20) இவருக்கும் முருகன் (25) என்பவருக்கும் 3ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.3 மாதங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விஜயா தனது தாய் வீட்டிற்கு சென்றார்
    • அவரது கணவர் முருகன் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜயாவை சரமாரியாக குத்தினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே மோ. வன்னஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயா (வயது 20) இவருக்கும் தியாகதுருகம் அருகே பல்லக்கச்சேரி கிராமத்தைச் சேர்ந்த முருகன் (25) என்பவருக்கும் 3ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு திருமணம் ஆன 3 மாதங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விஜயா மோ. வன்னஞ்சூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார்   இதனை யடுத்து தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு விஜயாவை பலமுறை முருகன் அழைத்துள்ளார். அதற்கு விஜயா முருகனுடன் சேர்ந்து வாழ மறுத்துள்ளார். மேலும் கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருடன் விஜயாவுக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும் இதனை முருகன் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. விஜயாவை மீண்டும் தன்னுடன் வாழ வருமாறு முருகன் அழைத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தால் நேற்று மாலை கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்திலிருந்து மோ. வன்னஞ்சூர் கிராமத்திற்கு தனியார் மினி பஸ்சில் விஜயா சென்றார்.

    அப்போது மழை பெய்ததால் பஸ்சிலிருந்து இறங்கி விஜயா அம்பேத்கர் சிலை அருகில் உள்ள ஒரு கடை பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முருகன் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜயாவை சரமாரியாக குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் விஜயா துடித்துடித்து உயிரிழந்தார். மேலும் விஜயாவை கத்தியால் குத்தி விட்டு தப்ப முயன்ற முருகனை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கி கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலனையும் முருகன் கத்தியால் குத்தினார். பின்னர் முருகனை போலீசார் கைது செய்து கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை கொலை செய்ததை முருகன் ஒப்புக்கொண்டார். உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தியதோடு விசாரிக்கச் சென்ற சப் இன்ஸ்பெக்டர் கத்தியால் குத்திய முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • தணிகைவேல் (வயது 20). வெல்டிங் கடையில் வேலை செய்து வருகிறார்
    • தணிகைவேல் (வயது 20). வெல்டிங் கடையில் வேலை செய்து வருகிறார்

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த காரை கிராமத்தை சேர்ந்த சர்க்கரை என்பவரது மகன் தணிகைவேல் (வயது 20). வெல்டிங் கடையில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று இரவு அவரது வீட்டின் அருகே உள்ள வாலிபால் விளையாடும் மைதானத்தில் உள்ள வாலிபால் போஸ்டரில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியடி உயிரிழந்த நிலையில் இருந்தார்.

    இது குறித்து அக்கம் பக்கத்தினர் அனந்தபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த செஞ்சி போலீஸ் துணை சூப்பிரண்டு பிரியதர்ஷினி விசாரணை செய்தார். அப்போது தனது மகன் சாவில் சந்தேகம் இருப்ப தாக கூறி உறவினர்கள் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மேலும், உடலை எடுக்க விடாமல் முற்றுகை யிட்டனர். இவரை அடித்து கொலை செய்து யாரோ தூக்கில் மாட்டி இருக்கி றார்கள் எனவும், இது குறித்து உரிய விசாரணை செய்ய வேண்டும் எனவும் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்பு போலீசாரின் பேச்சு வார்த்தைக்கு இணங்கிய பொதுமக்கள் உடலை எடுக்க விட்டனர். உடனடியாக உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கொலையா? அல்லது தற்கொலையா? என விசாரித்து வருகின்றனர்.

    • கடந்த சில மாதங்களாக சம்சுதீன் கடன் தொல்லையால் மன உளைச்சல்.
    • போலீசார் கடையை திறந்து பார்த்தபோது அங்கு சம்சுதீன் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பண்டாரவடை ஊராட்சி அவுரி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சம்சுதீன் (வயது 52).

    இவர் திருமருகல் சீராக்குளம் தெருவில் இறைச்சி கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த சில மாதங்களாக சம்சுதீன் கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று காலை கடை வெகு நேரமாகியும் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகத்தின் பேரில் திட்டச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    தகவல் அறிந்து வந்த போலீசார் கடையை திறந்து பார்த்தபோது அங்கு சம்சுதீன் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார்.

    உடன் போலீசார் சம்சுதீன் உடலை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சில அடி உயரத்தில் நின்று கொண்டு கீழே குதித்து தற்கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுத்தார்.
    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்த எனது பாட்டி மரணத்தில் சந்தேகம் உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 30) என்ஜினீயரிங் படித்துள்ளார்.

    இன்று அவர் தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையம் அருகே உள்ள போலீஸ் குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள வயர்லெஸ் டவரில் திடீெரன வேக வேகமாக ஏறினார்.

    இதனை பார்த்த போலீசார், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது ராம்குமார், சில அடி உயரத்தில் நின்று கொண்டு கீழே குதித்து தற்கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுத்தார். அதிர்ச்சியடைந்த போலீசார் எதுவாக இருந்தாலும் கீழே இறங்கி வாருங்கள். பேசி சரிசெய்து கொள்ளலாம் என்றனர்.

    ஆனால் ராம்குமார் இறங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் உங்களது கோரிக்கையை கீழே இறங்கி வந்து தெரிவியுங்கள் என்றனர். இதையடுத்து ராம்குமார் டவரில் இருந்து கீழே இறங்கினார்.

    பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதற்கு ராம்குமார் போலீசாரிடம் கூறும்போது:-

    எனது பாட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

    அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது.

    அவரது பிரேத பரிசோதனை அறிக்கையை என்னிடம் தர வேண்டும் என்று கேட்டேன்.

    ஆனால் கொடுக்கவில்லை. இதனால் மனமுடைந்த நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து டவரில் ஏறினேன் என்றார்.

    இதனை தொடர்ந்து போலீசார் ராம்குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ராம்குமார் ஏற்கனவே ஒருமுறை டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்திருந்தார்.

    தற்போது அவர் 2-வது முறையாக தற்கொலை மிரட்டல் விடுத்திருப்பது குறிப்பிடதக்கது.

    • இன்றைய காலகட்டத்தில் காளாண் வளர்ப்பின் அவசியம் அதன் முக்கியத்துவம் பற்றி எடுத்து கூறினார்.
    • விவசாயிகள் காளான் வளர்ப்பில் உள்ள சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சி அருள்மொழிதேவன் கிராமத்தில் 2022-23 வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் காளான் வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி நடைப்பெற்றது.

    திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பொறுப்பு கலைச்செல்வன் தலைமையில் பயிற்சி நடைப்பெற்றது. பயிற்சிக்கு ஆலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்ரமணியன் வரவேற்றார்.

    வட்டார தொழில்நுட்ப மேலாளர் மகேஸ்வரி இன்றைய காலகட்டத்தில் காளாண் வளர்ப்பின் அவசியம் அதன் முக்கியத்துவம் பற்றி எடுத்து கூறினார். சிக்கல் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் சந்திரசேகரன் காளாண் வளர்ப்பு தொழில்நுட்பங்கள் பற்றி விரிவுரை மற்றும் செயல்முறை விளக்கம் அளித்தார்.

    விவசாயிகள் காளாண் வளர்ப்பில் உள்ள சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர். துணை வேளாண்மை அலுவலர் தெய்வகுமார் வட்டாரத்தில் நடைமுறை படுத்தப்படும் திட்டங்கள் குறித்து எடுத்து கூறினார். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலவலர் சிந்து மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர் பிரபு ஆகியோர் செய்து இருந்தனர்.

    • கள்ளக்குறிச்சி அருகே மாற்றுத்திறனாளி சாவில் சந்தேகம் என உறவினர்கள் மனு கொடுத்துள்ளனர்.
    • பஸ் நிறுத்தத்தில் இறக்கிவிடாமல் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் இறக்கிவிட்டுள்ளனர்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சிஅருகே மூங்கில்துறைப்பட்டு அருகே பொருவளூர் கிராமத்தை சேர்ந்தவர் மலர் (36) மாற்றுத்திறனாளி. இவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்த அவரது சகோதரி ஜெயந்தி மற்றும் உறவினர்கள் கள்ளக்குறிச்சியில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபுவிடம் புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:- எனது தங்கை மலர் கடந்த 27- ந் தேதி பெருமனம் கிராமத்திற்கு துக்கம் விசாரிக்க தனியார் மினிபேருந்தில் பயணம் சென்றார். அப்போது அவரை மணலூர்பேட்டை பஸ் நிறுத்தத்தில் இறக்கிவிடாமல் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் இறக்கிவிட்டுள்ளனர்.

    எனது அக்கா மலருக்கு கண் பார்வை குறைபாடு உள்ளது. இதனால் எனது அக்கா மலர் இரவு முழுவதும் பெட்ரோல் பங்கிலேயே இருந்துள்ளார். அந்த மினி பேருந்தும் அங்கேயே நிறுத்தப்பட்டு இருந்தது. மறுநாள் 28- ந் தேதி பெட்ரோல் பங்க் வேலையாட்கள் மூலம் எனது அக்கா மலர் அங்கு இருப்பது குறித்த தகவல் வந்தது. பின்னர்மலரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். தொடர்ந்து புதுவை ஜிப்மர் மருத்து வமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அவரை வீட்டுக்கு அழைத்து வந்த போது கடந்த 29- ந் தேதி இறந்துவிட்டார். எனது அக்கா மலர் இறப்பில் சந்தேகம் உள்ளது. எனவே அக்கா மலர் உடலை தோண்டி எடுத்து உடல் கூறாய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்டவாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    கர்நாடகாவில் திருமண நாளன்று வாந்தி எடுத்ததால் கன்னித்தன்மை பரிசோதனை செய்த கணவரை மனைவி உதறி தள்ளிய சம்பவம் நடந்துள்ளது.
    பெங்களூர்:

    வடக்கு கர்நாடகாவை சேர்ந்தவர் சரத் (வயது 29). எம்.பி.ஏ. படித்து இருந்த அவர் முன்னணி நிறுவனத்தில் மனித ஆற்றல் துறையில் வேலை பார்த்து வந்தார்.

    இவர் திருமணத்துக்காக திருமண தகவல் அலுவலகம் மூலம் பெண் தேடினார். அப்போது தனது பகுதியை சேர்ந்த ரக்‌ஷா (26) என்ற பெண் பொருத்தமான வரனாக அமைந்தது. அவரும் எம்.பி.ஏ. படித்து வேலை பார்த்து வந்தார்.

    இருவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. இதன்படி இருவருக்கும் திருமணம் நடந்தது.

    திருமணம் முடிந்து சிறிது நேரத்தில் ரக்‌ஷா வாந்தி எடுத்தார். வயிற்றில் ஜீரண பிரச்சனை ஏற்பட்டதால் அவருக்கு வாந்தி ஏற்பட்டது.

    ஆனால் சரத்துக்கு வேறு மாதிரி சந்தேகம் ஏற்பட்டது. திருமணத்துக்கு 15 நாட்களுக்கு முன்பு ரக்‌ஷாவின் தாயார் புற்றுநோயால் மரணம் அடைந்தார். இதனால் அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார். திருமணம் பிடிக்காததால் தான் ரக்‌ஷா இப்படி இருப்பதாக சரத் கருதினார்.

    மேலும் ரக்‌ஷாவின் தாயார் இறந்த நேரத்தில் அந்த ஊரை சேர்ந்த ஆண் நண்பர் ஒருவர் ரக்‌ஷாவுக்கு ஆறுதலாக இருந்து ஏராளமான உதவிகளை செய்தார். இதனால் அவருக்கும் ரக்‌ஷாவுக்கும் இடையே தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்கனவே சரத்துக்கு இருந்தது.

    இந்த நிலையில் திருமண நாளன்று வாந்தி எடுத்ததால் அவர் கர்ப்பமாக இருப்பதால் தான் வாந்தி ஏற்பட்டதாக கருதினார்.

    எனவே ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்து அதை கண்டுபிடிக்க முடிவு செய்தார். இதற்காக ரக்‌ஷாவை வயிற்று பிரச்சனைக்கு சிகிச்சை பெறலாம் என கூறி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

    ஆனால் டாக்டர்களிடம் ரகசியமாக பேசிய அவர் ரக்‌ஷா கன்னித்தன்மையுடன் இருக்கிறாரா? வாந்திக்கு கர்ப்பம் காரணமா? என சோதனை நடத்துமாறு கூறினார்.

    எனவே அதற்கான சோதனையை டாக்டர்கள் மேற்கொண்டனர். சோதனை செய்வது தொடர்பான படிவத்தில் ரக்‌ஷாவிடம் கையெழுத்து வாங்கினார்கள். ஆனால் அவர் படித்து பார்க்காமலேயே கையெழுத்து போட்டு விட்டார்.

    டாக்டர்கள் சோதனை செய்தபோதுதான் கற்பு பரிசோதனை நடந்தது தெரிந்தது. இதனால் கோபம் அடைந்த ரக்‌ஷா உடனே ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறி தனது சகோதரி வீட்டுக்கு சென்று விட்டார்.

    கணவர் அவரை நேரில் சென்று அழைத்தும் வர மறுத்து விட்டார். இதனால் சரத் கர்நாடக அரசு குடும்ப நல ஆலோசனை மையத்தில் புகார் அளித்தார். இருவரையும் ஆலோசனை மைய உறுப்பினர்கள் அழைத்து பேசினார்கள்.

    அப்போது என் மீது சந்தேகப்பட்ட கணவரோடு வாழ முடியாது என்று ரக்‌ஷா பிடிவாதமாக கூறிவிட்டார்.

    இந்த நிலையில் சரத் விவகாரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார். அதற்கு பதிலடியாக ரக்‌ஷா சரத் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் தனது கற்பு மீது சந்தேகப்பட்டு சோதனை நடத்தியதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் கோர்ட்டிலும் மனுதாக்கல் செய்துள்ளார்.
    பெரம்பலூர் அருகே 2 குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதில் குழந்தை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் அருகே உள்ள கல்லப்பட்டியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 35). கூலி தொழிலாளி. இவரது மனைவி ராஜ லட்சுமி (வயது 29). இவர்களுக்கு சஞ்சனாத்ஸ்ரீ (5), சிவனாத்ஸ்ரீ (3) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் சிலம்பரசனுக்கும், ராஜலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ராஜலட்சுமி கணவருடன் கோபித்து கொண்டு தனது 2 குழந்தைகளுடன், பூலாம்பாடியில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதனிடையே சிலம்பரசன் ராஜலட்சுமிக்கு போன் செய்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது தண்ணீரில் எலிமருந்தை கலந்து, தனது 2 குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டு அவரும் குடித்து விட்டார்.

    இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிவனாத்ஸ்ரீ பரிதாபமாக இறந்தாள். ராஜலட்சுமி, சஞ்சனாத்ஸ்ரீ ஆகியோர் உயிருக்கு போராடி வருகிறார்கள். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜ லட்சுமியின் நடத்தையில், சிலம்பரசன் சந்தேகப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என தெரிகிறது.
    நடத்தையில் சந்தேகப்பட்டதால் மனமுடைந்த தாய், தனது 2 குழந்தைகளை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    மதுரை:

    மதுரை டி.வி.எஸ்.நகர், சத்தியசாய் நகர், முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜா (வயது 37). லாரி டிரைவரான இவருக்கும், மைக்கேல் ஜீவா (36) என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இது காதல் திருமணம் ஆகும். இவர்களுக்கு ஹரிதா (4), ஹரீஸ்கிஷோர்குமார் (3) என்ற 2 குழந்தைகள் இருந்தனர்.

    மைக்கேல் ஜீவாவுக்கும், வேறு ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக ராஜா சந்தேகப்பட்டார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்தது.

    மனமுடைந்த மைக்கேல் ஜீவா தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தார். தான் இறந்து விட்டால் பிள்ளைகள் அனாதையாகி விடுமே என்று கருதிய அவர் குழந்தைகளையும் கொன்று விடுவது என்று முடிவு எடுத்தார்.

    அதன்படி நேற்று இரவு மைக்கேல் ஜீவா, தனது 2 குழந்தைகளையும் பிளாஸ்டிக் உறைகளால் முகத்தில் மூடினார். இதில் மூச்சுத் திணறி குழந்தைகள் இறந்தன. அதன் பின்னர் மைக்கேல்ஜீவா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து சுப்பிரமணியபுரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தற்கொலை செய்வதற்கு முன்பு மைக்கேல் ஜீவா எழுதிய கடிதங்களை போலீசார் கைப்பற்றினர். அதில் கூறியிருப்பதாவது:-

    பலியான குழந்தைகள் ஹரிதா, ஹரிஸ்கிஷோர்குமார்.

    “எனக்கு யாருடனும் கள்ளத்தொடர்பு இல்லை. எனக்கு செய்த துரோகத்துக்கு நீ (கணவன்) அனுபவிப்பாய், அதை நான் பார்க்கத் தான் போகிறேன்.

    என்னை எவ்வளவோ கேவலப்படுத்தி இருக்கிறாய். என்னையும், என் குழந்தைகளையும் தவறாக பேசியதால் நொறுங்கி விட்டேன். இதுக்கெல்லாம் நீயும் சரி, உன் குடும்பமும் சரி அனுபவிப்பீங்க” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    “அனாதை போல் எங்களை கருதி எரித்து விடவும். என் கணவர் கொள்ளி போடக்கூடாது” என்று தனது சகோதரிகள் ராணி, தீபா ஆகியோருக்கு எழுதிய மற்றொரு கடிதத்தில் மைக்கேல் ஜீவா குறிப்பிட்டுள்ளார்.

    இந்த பரிதாப சம்பவம் சத்திய சாய் நகர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சுப்பிரமணியபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இறப்பில் எந்த மர்மமும் இல்லை என்று தஞ்சையில் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் கூறினார்.
    தஞ்சாவூர்:

    '2016 டிசம்பர் 5-ன் சந்தேகங்கள்' என்ற நூல் அறிமுக விழா தஞ்சையில் நடைபெற்றது. விழாவுக்கு உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார்.

    இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது:-

    தமிழக அரசு நம் நாட்டில் இயற்கை வளங்களை அழிக்கும் திட்டத்தை எதிர்த்து யார் குரல் கொடுத்தாலும் அல்லது போராடினாலும் அவர்களை ஒடுக்குவதற்கு முயற்சி செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம், சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்ட எதிர்ப்பு, மீத்தேன் எதிர்ப்பு, எரிவாயு எதிர்ப்பு போராட்டம் என எந்த போராட்டமாக இருந்தாலும் அவை மக்களால் உருவாக்கப்படுகின்றன. இதற்காக குரல் கொடுக்கிற கட்சிகளையோ அல்லது அமைப்புகளையோ ஒடுக்குவதற்கு முயற்சி செய்வது ஒருபோதும் வெற்றி பெறாது, அவ்வாறு ஒடுக்க நினைத்தால் மிகப்பெரிய அளவில் மக்கள் போராட்டம் வெடிக்கும் என்பதற்கு தூத்துக்குடி போராட்டம் எடுத்துக்காட்டு என்பதை அரசு தெரிந்து கொள்ள வேண்டும்.


    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்து போது, புதுடெல்லியில் இருந்து எய்ம்ஸ் டாக்டர்கள், சிங்கபூர், லண்டனில் இருந்து டாக்டர்கள் என பெரிய டாக்டர்கள் கூட்டமே வந்து அவரது உடலை பரிசோதித்தது. அப்போது தேவையான சிகிச்சையை அவர்கள் அளித்தனர். இதில் எந்த மர்மமும் இல்லை.

    இது பற்றி விரிவான தகவல் டிசம்பர் 5-ன் சந்தேகங்கள் என்ற நூலில், ஆசிரியர் விரிவாக குறிப்பிட்டுள்ளார். லோக் ஆயுக்தா சட்டம் நீண்ட காலத்துக்கு முன்பே தமிழகத்தில் அமல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் இந்த சட்டம் தற்போது தாமதமாக கொண்டு வரப்பட்டுள்ளது. இப்போதாவது இந்த லோக் ஆயுக்தா சட்டத்தை சரியான முறையில் செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Jayalalithaa #PazhaNedumaran
    ×