search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செஞ்சி அருகே விளையாட்டு மைதானத்தில் தூக்கில் தொங்கிய தொழிலாளி கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை
    X

    செஞ்சி அருகே விளையாட்டு மைதானத்தில் தூக்கில் தொங்கிய தொழிலாளி கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை

    • தணிகைவேல் (வயது 20). வெல்டிங் கடையில் வேலை செய்து வருகிறார்
    • தணிகைவேல் (வயது 20). வெல்டிங் கடையில் வேலை செய்து வருகிறார்

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த காரை கிராமத்தை சேர்ந்த சர்க்கரை என்பவரது மகன் தணிகைவேல் (வயது 20). வெல்டிங் கடையில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று இரவு அவரது வீட்டின் அருகே உள்ள வாலிபால் விளையாடும் மைதானத்தில் உள்ள வாலிபால் போஸ்டரில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியடி உயிரிழந்த நிலையில் இருந்தார்.

    இது குறித்து அக்கம் பக்கத்தினர் அனந்தபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த செஞ்சி போலீஸ் துணை சூப்பிரண்டு பிரியதர்ஷினி விசாரணை செய்தார். அப்போது தனது மகன் சாவில் சந்தேகம் இருப்ப தாக கூறி உறவினர்கள் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மேலும், உடலை எடுக்க விடாமல் முற்றுகை யிட்டனர். இவரை அடித்து கொலை செய்து யாரோ தூக்கில் மாட்டி இருக்கி றார்கள் எனவும், இது குறித்து உரிய விசாரணை செய்ய வேண்டும் எனவும் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்பு போலீசாரின் பேச்சு வார்த்தைக்கு இணங்கிய பொதுமக்கள் உடலை எடுக்க விட்டனர். உடனடியாக உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கொலையா? அல்லது தற்கொலையா? என விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×