என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » jayalalithaa dies
நீங்கள் தேடியது "Jayalalithaa dies"
ஜெயலலிதாவின் இறப்பிற்கும், அவருக்கு தண்டனை கிடைப்பதற்கும் டி.டி.வி.தினகரன் தான் காரணம் என்று வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார். #TNMinister #Thangamani #TTVDhinakaran
வேலூர்:
வேலூரில் நேற்று நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி பேசியதாவது:-
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எடப்பாடிபழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒரு சாமானியர்களாக இருந்து ஆட்சி புரிந்து வருகின்றனர்.
அத்தகைய சாமானியர்களின் ஆட்சியைக் கலைத்திட திமுகவுடன் கைகோர்த்துக் கொண்டு தினகரன் செயல்பட்டு வருகிறார்.
அவர் தற்போது தகுதி நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களை கொண்டு மீண்டும் திமுகவுடன் கைகோர்த்து அதிமுக ஆட்சியைக் கலைக்க முயற்சித்து வருகிறார்.
மேலும், 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு தீர்ப்பு வந்தால் ஆட்சியில் உள்ளவர்கள் சிறை செல்வர் என்றும் தினகரன் கூறி வருகிறார். அவரது 1991ஆம் ஆண்டுக்கு முந்தைய சொத்துக் கணக்கும், தற்போதைய சொத்துக் கணக்கும் வெளியானாலே யார் சிறைக்கு செல்வர் என்பது தெளிவாகிவிடும்.
எப்போதும் சிரித்து கொண்டே இருப்பவர் தான் லூசு மோகன். அவரது இடத்தை தற்போது டி.டி.வி.தினகரன் நிரப்பி உள்ளார். எனவே அவரை இனி லூசு மோகன் என்ற டி.டி.வி. தினகரன் என்று அழைக்கலாம்.
திருப்பரங்குன்றம், திருவாரூரில் டி.டி.வி.தினகரனின் பலம் எடுபடாது.
25 சதவீதம் மது அவரது தொழிற்சாலையில் இருந்து தான் வருகிறது. அவருடன் உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி தருவதாக ஆசை வார்த்தை கூறி வைத்துள்ளார். எங்கள் மீது பொய்யான பிரசாரம் செய்து வருகிறார்.
தொண்டர்களுக்கு எல்லாம் தெரியும். பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்கு இருந்த போது கருணாநிதியுடன் டி.டி.வி. தினகரன் கூட்டு வைத்துக்கொண்டு ஆட்சியையும், கட்சியையும் கலைக்க நினைத்தார்.
அதன் காரணமாகவே லண்டன் ஓட்டல் வழக்கில் இருந்து டி.டி.வி.தினகரன் விடுவிக்கப்பட்டார். ஜெயலலிதாவின் இறப்பிற்கும், அவருக்கு தண்டனை கிடைப்பதற்கும் காரணம் டி.டி.வி.தினகரன் தான்.
இவ்வாறு அவர் பேசினார். #TNMinister #Thangamani #TTVDhinakaran
வேலூரில் நேற்று நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி பேசியதாவது:-
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எடப்பாடிபழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒரு சாமானியர்களாக இருந்து ஆட்சி புரிந்து வருகின்றனர்.
அத்தகைய சாமானியர்களின் ஆட்சியைக் கலைத்திட திமுகவுடன் கைகோர்த்துக் கொண்டு தினகரன் செயல்பட்டு வருகிறார்.
அவர் தற்போது தகுதி நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களை கொண்டு மீண்டும் திமுகவுடன் கைகோர்த்து அதிமுக ஆட்சியைக் கலைக்க முயற்சித்து வருகிறார்.
மேலும், 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு தீர்ப்பு வந்தால் ஆட்சியில் உள்ளவர்கள் சிறை செல்வர் என்றும் தினகரன் கூறி வருகிறார். அவரது 1991ஆம் ஆண்டுக்கு முந்தைய சொத்துக் கணக்கும், தற்போதைய சொத்துக் கணக்கும் வெளியானாலே யார் சிறைக்கு செல்வர் என்பது தெளிவாகிவிடும்.
எப்போதும் சிரித்து கொண்டே இருப்பவர் தான் லூசு மோகன். அவரது இடத்தை தற்போது டி.டி.வி.தினகரன் நிரப்பி உள்ளார். எனவே அவரை இனி லூசு மோகன் என்ற டி.டி.வி. தினகரன் என்று அழைக்கலாம்.
திருப்பரங்குன்றம், திருவாரூரில் டி.டி.வி.தினகரனின் பலம் எடுபடாது.
25 சதவீதம் மது அவரது தொழிற்சாலையில் இருந்து தான் வருகிறது. அவருடன் உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி தருவதாக ஆசை வார்த்தை கூறி வைத்துள்ளார். எங்கள் மீது பொய்யான பிரசாரம் செய்து வருகிறார்.
தொண்டர்களுக்கு எல்லாம் தெரியும். பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்கு இருந்த போது கருணாநிதியுடன் டி.டி.வி. தினகரன் கூட்டு வைத்துக்கொண்டு ஆட்சியையும், கட்சியையும் கலைக்க நினைத்தார்.
அதன் காரணமாகவே லண்டன் ஓட்டல் வழக்கில் இருந்து டி.டி.வி.தினகரன் விடுவிக்கப்பட்டார். ஜெயலலிதாவின் இறப்பிற்கும், அவருக்கு தண்டனை கிடைப்பதற்கும் காரணம் டி.டி.வி.தினகரன் தான்.
இவ்வாறு அவர் பேசினார். #TNMinister #Thangamani #TTVDhinakaran
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இறப்பில் எந்த மர்மமும் இல்லை என்று தஞ்சையில் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் கூறினார்.
தஞ்சாவூர்:
'2016 டிசம்பர் 5-ன் சந்தேகங்கள்' என்ற நூல் அறிமுக விழா தஞ்சையில் நடைபெற்றது. விழாவுக்கு உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார்.
இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது:-
தமிழக அரசு நம் நாட்டில் இயற்கை வளங்களை அழிக்கும் திட்டத்தை எதிர்த்து யார் குரல் கொடுத்தாலும் அல்லது போராடினாலும் அவர்களை ஒடுக்குவதற்கு முயற்சி செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்து போது, புதுடெல்லியில் இருந்து எய்ம்ஸ் டாக்டர்கள், சிங்கபூர், லண்டனில் இருந்து டாக்டர்கள் என பெரிய டாக்டர்கள் கூட்டமே வந்து அவரது உடலை பரிசோதித்தது. அப்போது தேவையான சிகிச்சையை அவர்கள் அளித்தனர். இதில் எந்த மர்மமும் இல்லை.
இது பற்றி விரிவான தகவல் டிசம்பர் 5-ன் சந்தேகங்கள் என்ற நூலில், ஆசிரியர் விரிவாக குறிப்பிட்டுள்ளார். லோக் ஆயுக்தா சட்டம் நீண்ட காலத்துக்கு முன்பே தமிழகத்தில் அமல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் இந்த சட்டம் தற்போது தாமதமாக கொண்டு வரப்பட்டுள்ளது. இப்போதாவது இந்த லோக் ஆயுக்தா சட்டத்தை சரியான முறையில் செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Jayalalithaa #PazhaNedumaran
'2016 டிசம்பர் 5-ன் சந்தேகங்கள்' என்ற நூல் அறிமுக விழா தஞ்சையில் நடைபெற்றது. விழாவுக்கு உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார்.
இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது:-
தமிழக அரசு நம் நாட்டில் இயற்கை வளங்களை அழிக்கும் திட்டத்தை எதிர்த்து யார் குரல் கொடுத்தாலும் அல்லது போராடினாலும் அவர்களை ஒடுக்குவதற்கு முயற்சி செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம், சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்ட எதிர்ப்பு, மீத்தேன் எதிர்ப்பு, எரிவாயு எதிர்ப்பு போராட்டம் என எந்த போராட்டமாக இருந்தாலும் அவை மக்களால் உருவாக்கப்படுகின்றன. இதற்காக குரல் கொடுக்கிற கட்சிகளையோ அல்லது அமைப்புகளையோ ஒடுக்குவதற்கு முயற்சி செய்வது ஒருபோதும் வெற்றி பெறாது, அவ்வாறு ஒடுக்க நினைத்தால் மிகப்பெரிய அளவில் மக்கள் போராட்டம் வெடிக்கும் என்பதற்கு தூத்துக்குடி போராட்டம் எடுத்துக்காட்டு என்பதை அரசு தெரிந்து கொள்ள வேண்டும்.
இது பற்றி விரிவான தகவல் டிசம்பர் 5-ன் சந்தேகங்கள் என்ற நூலில், ஆசிரியர் விரிவாக குறிப்பிட்டுள்ளார். லோக் ஆயுக்தா சட்டம் நீண்ட காலத்துக்கு முன்பே தமிழகத்தில் அமல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் இந்த சட்டம் தற்போது தாமதமாக கொண்டு வரப்பட்டுள்ளது. இப்போதாவது இந்த லோக் ஆயுக்தா சட்டத்தை சரியான முறையில் செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Jayalalithaa #PazhaNedumaran
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X