search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாற்றுத்திறனாளிகள்"

    ஆர்.டி.ஓ., தலைமையிலும் முகாம்கள் நடத்த வருவாய்த்துறை முதன்மை செயலர் சித்திக் உத்தரவிட்டுள்ளார்.

    திருப்பூர்:

    கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து வகை குறைகேட்பு கூட்டமும் ரத்து செய்யப்பட்டது. இயல்புநிலை திரும்பிய பின் குறைகேட்பு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதேபோல் மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு கூட்டத்தையும் நடத்த வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    வருவாய் நிர்வாக கமிஷனர் தலைமையில், மாநில அளவிலான குறைகேட்பு முகாம் தவிர, இரு மாதங்களுக்கு ஒருமுறை கலெக்டர் தலைமையிலும், மாதம் ஒருமுறை ஆர்.டி.ஓ., தலைமையிலும் முகாம்கள் நடத்த வருவாய்த்துறை முதன்மை செயலர் சித்திக் உத்தரவிட்டுள்ளார்.

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் கூறுகையில், பதிவு செய்த மாற்றுத்திறனாளிகள் நல சங்க பிரதிநிதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அழைத்து குறைகேட்பு நடத்தப்படும்என்றனர்.

    குமாரபாளையத்தில் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 6-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளனர்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையத்தில் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 6-ந்தேதி உண்ணா விரத போராட்டம் நடத்த உள்ளனர்.

    இது குறித்து நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் பழனிவேல் கூறுகையில், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் தரை தளத்தில் அமைய வேண்டும். 

    இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி குமாரபாளையம் தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டோம். ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர்.

    இருப்பினும் குறிப்பிட்டபடி அடுத்த மாதம் 6-ந்தேதி அதே இடத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்றார்.
    ×