search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Medical consultation"

    • மாணவர்கள், பெற்றோர் வலியுறுத்தல்
    • மத்திய அரசு அனுமதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் சென்டாக் கலந்தாய்வு தள்ளிப்போனது.

    புதுச்சேரி:

    இந்திய மருத்துவ ஆணை யத்தின் உத்தரவின்படி

    எம்.பி.பி.எஸ். உட்பட மருத்துவ படிப்புகளுக்கு முதல்கட்ட கலந்தாய்வு ஆகஸ்டு 6, 2-ம் கட்டம் ஆகஸ்ட் 30, 3-ம் கட்டம் செப்டம்பர் 20, இறுதி கலந்தாய்வு செப்டம்பர் 30-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

    ஆனால் புதுவையில் முதல்கட்ட கலந்தாய்வுதான் முடிந்துள்ளது. இந்திய மருத்துவ மையத்தின் உத்தரவுப்படி புதுவையில் கவுன்சிலிங்கை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 2016-ல் அக்டோபர் 7-ந் தேதி வரை மாணவர் சேர்க்கை நடந்தது.

    அப்போது செப்டம்பர் 30-ந் தேதிக்கு பிறகு மருத்துவம் சேர்ந்த மாணவர்களை தகுதிநீக்கம் செய்ய உத்தரவிட்டது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி யானது. மாணவர்கள் நீதிமன்ற போராட்டத்துக்கு பின் மருத்துவம் படித்து முடித்தனர்.

    இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு அனுமதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் சென்டாக் கலந்தாய்வு தள்ளிப்போனது.

    எனவே கடந்த காலம் போல மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையா டாமல், இந்திய மருத்துவ மையத்தின் சிறப்பு அனுமதியை பெற்று மருத்துவ கலந்தாய்வுகளை நடத்த வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • தேவர்மலை அரசு பள்ளியில் மருத்துவ ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
    • மருத்துவ ஆலோசனைகளை டாக்டர்.சக்தி கிருஷ்ணன் வழங்கினார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள தாமரைக்கரை அடுத்த தேவர்மலை அரசு பள்ளியில் சுகாதாரத்துறை சார்பில் புன்னகை திட்டத்தின் கீழ் வீடியோ காலில் நோயாளிகளிடம் பேசி ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.

    அந்தியூர் வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் வீடியோ காலில் பேசினார்.

    பர்கூர் மலைப்பகு தியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளை டாக்டர்.சக்தி கிருஷ்ணன் வழங்கினார்.

    மேலும் மேல் சிகிச்சை தேவைப்படும் மலை வாழ் மக்களை அந்தியூர் அரசு மருத்துவ மனை அல்லது ஈரோடு அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியின் போது தேவர்மலை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மற்றும் செவிலியர்கள் உடன் இருந்தனர்.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து மருத்துவ கலந்தாய்வு நடைமுறைகள் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. #MBBSAdmission #Supremecourt

    சென்னை:

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை முதல் வாரம் நடைபெற்றது.

    இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்தும் நிரம்பின. அதனை தொடர்ந்து தனியார், மருத்துவ கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் நீட் தேர்வில் தமிழ் வினாத்தாள் மூலம் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்கியதோடு புதிய தரவரிசை பட்டியல் வெளியிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

    இதனை தொடர்ந்து அகில இந்திய மருத்துவ கலந்தாய்வு மற்றும் தமிழகத்தில் நடைபெற்று வந்த கலந்தாய்வு என அனைத்தும் நிறுத்தப்பட்டன.

    இந்த நிலையில் இந்த வழக்கை எதிர்த்து சி.பி.எஸ்.இ. சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், மதுரை ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதித்துள்ளது.

    இதையடுத்து மருத்துவ கலந்தாய்வு நடைமுறைகள் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் எட்வின் ஜோ கூறியதாவது:-

     


    ஐகோர்ட்டு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளதால் கலந்தாய்வு நடைமுறைகள் மீண்டும் தொடங்கப்படும். அந்த உத்தரவின் நகல் கிடைத்ததும் தமிழக அரசிடம் ஆலோசனை பெற்று, சட்ட ஆலோசனைகளும் பெற்ற பின்னனர் கலந்தாய்வு குறித்து அறிவிக்கப்படும். திங்கட்கிழமை கலந்தாய்வு தேதி குறித்த தெளிவான அறிவிப்பு வெளியிடப்படும்.

    அகில இந்திய அளவிலான இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த முடிவுகள் வெளியிடப்பட்டு மீதம் உள்ள இடங்கள் தமிழக ஒதுக்கீட்டுக்கு ஒப்படைக்கப்படும். முதல்கட்ட கலந்தாய்வில் ஒதுக்கப்பட்ட இடங்களில் சேராதவர்கள் மூலம் ஏற்படும் காலி இடங்களுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வையும், நிர்வாக ஒதுக்கீட்டிற்கான முதல் கட்ட கலந்தாய்வையும் ஒரே நேரத்தில் நடத்தவும் திட்டமிட்டு வருகிறோம் என்றார். #MBBSAdmission #Supremecourt

    மேற்குவங்காளத்தில் படித்த மாணவி மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #HighCourt

    சென்னை:

    மேற்கு வங்கத்தில் பள்ளிப்படிப்பை முடித்த ஐஸ்வர்யா என்ற மாணவி, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கோரி விண்ணப்பித்தார்.

    இந்நிலையில் கடந்த 4-ந்தேதி முதல் தொடங்கியுள்ள மருத்துவ படிப்புக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஒதுக்கீட்டு இடங்களுக்கு நடத்தப்படும் கலந்தாய்வில் தன்னை அனுமதிக்கும்படி உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, மாணவி ஐஸ்வர்யா தமிழகத்தை சேர்ந்தவர் என்பதற்கான எந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை என மருத்துவ மாணவர் சேர்க்கை தேர்வுக்குழு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் வாதிட்டார்.

    இதையடுத்து, அரசு வேலை, தொழில் காரணமாக வெளி மாநிலம் செல்பவர்கள், தங்கள் நிரந்தர முகவரியை இழந்து விடக்கூடாது எனத் தெரிவித்த நீதிபதி, மருத்துவ படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வில் மனுதாரரை அனுமதிக்க உத்தரவிட்டார்.

    அதேசமயம், பிற்படுத்தப் பட்டோருக்கான இடஒதுக்கீட்டின் கீழ் தன் விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டும் என கோரினால், அதை நிராகரிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி வைத்தியநாதன், இந்த மனுவுக்கு வரும் 30-ந் தேதிக்குள் பதிலளிக்க மருத்துவ மாணவர் சேர்க்கை தேர்வுக் குழுவுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார். #HighCourt

    மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பட்டமேற்படிப்புக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. 39 இடங்களுக்கு நடந்த கலந்தாய்வில் 19 பேர் மட்டுமே கலந்துகொண்டனர்.
    சென்னை:

    மருத்துவ பட்ட மேற்படிப்புக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

    இந்த கலந்தாய்வுக்கு தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 39 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 23 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 4 பேர் அகில இந்திய ஒதுக் கீட்டு இடங்களை தேர்ந்து எடுத்தனர். இவ்வாறு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை எடுத்தவர்கள் இந்த கலந்தாய்வுக்கு வரக்கூடாது.

    அதன் படி மீதம் உள்ள 19 பேர் மட்டுமே வந்தனர். அவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது. 19 பேர்களில் 14 பேர் மட்டுமே இடங்களை தேர்ந்து எடுத்தனர். 5 பேர் எந்த இடமும் எடுக்கவில்லை.

    மாற்றுத்திறனாளிகளுக்கான இடங்களில் நிரம்பாத இடங்கள் பொதுகலந்தாய்வுக்கு சென்றுவிடும். பொது கலந்தாய்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை)நடத்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவகல்லூரிகளில் 15 மருத்துவ கல்லூரிகளில் தான் மருத்துவ பட்ட மேற்படிப்பு உள்ளன. இந்த கல்லூரிகளில் 864 இடங்கள் உள்ளது. இந்த இடங்கள் போக அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சென்ற இடங்களில் 117 இடங்கள் திரும்பி வந்தன.

    இது தவிர 10 சுயநிதி மருத்துவகல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 122 உள்ளன. மொத்தம் 1103 இடங்களுக்கு இன்று(ஞாயிற்றுக்கிழமை) பொது கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

    22-ந் தேதி பல் மருத்துவ பட்டமேற்படிப்பில் சேர மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. அரசு பல் மருத்துவ கல்லூரிகளில்23 இடங்கள் உள்ளன. மேலும் சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 96 இருக்கின்றன.

    பல் மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்களுக்கு 22-ந் தேதி பகல் 2 மணியில் இருந்து கலந்தாய்வு நடக்கிறது. 23-ந் தேதி கலந்தாய்வு முடிவடைகிறது.
    ×