search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New website"

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
    • இதன் மூலம் மீனாட்சி அம்மன் கோவில் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மீனாட்சி- சுந்தரேசுவரர் கோவிலுக்கு தனியார் நிறுவனம் சார்பில் www.maduraimeenakshi.org இணையதளம் ஏற்படுத்தப்பட்டது. அது இப்போது மூடப்பட்டு விட்டது. தமிழக அரசு சார்பில் https://maduraimeenakshi.hrce.tn.gov.in இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இருந்த போதிலும் பழைய இணையதளம் மூலம் புதிய இணையத்தை பார்வையிடலாம். இதன் மூலம் மீனாட்சி அம்மன் கோவில் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    கோவிலுக்கு நன்கொ டை மற்றும் உபய சேவை கட்டணங்களை இணையதளம் மூலம் செலுத்தலாம். அரசு இணையதள முகவரி தவிர கோவிலுக்கு வேறு எந்த இணையதளமும் கிடையாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெற தமிழில் புதிய இணையதளத்தை நேற்று கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் எளிதில் பயன்பெறும் வகையில் பல்வேறு சிறப்பு வசதிகளுடன் தேசிய தகவலியல் மையம் சார்பில் https://tirunelveli.nic.in புதிய இணையதளம் தமிழில் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த இணைய தளத்தை நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த புதிய இணையதளம் அனைத்து மாவட்ட நிர்வாகத்துக்கும் பொதுவான வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை இணையதளத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே தகவல்களை அளித்து கொண்டு இருந்தது.

    நெல்லை மாவட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய இணையதளம் தமிழிலும் தகவல்களை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய இணைய தளமானது கணினி மட்டுமின்றி பொதுமக்களின் மடிக்கணினி, செல்போன், ஐபேட் போன்றவைகள் மூலம் எளிதில் பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    மாற்றுத்திறனாளிகள் எளிதில் இந்த இணைய தளத்தை கையாளுவதற்கு பல வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. மாவட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து துறைகளை பற்றிய முழு விவரங்கள் இந்த புதிய இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, நெல்லை உதவி கலெக்டர் மைதிலி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார், தேசிய தகவல் மைய முதுநிலை தொழில்நுட்ப இயக்குனர் தேவராஜ், தொழில்நுட்ப இயக்குனர் ஆறுமுகநயினார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ×