search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "disable"

    ஆர்.டி.ஓ., தலைமையிலும் முகாம்கள் நடத்த வருவாய்த்துறை முதன்மை செயலர் சித்திக் உத்தரவிட்டுள்ளார்.

    திருப்பூர்:

    கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து வகை குறைகேட்பு கூட்டமும் ரத்து செய்யப்பட்டது. இயல்புநிலை திரும்பிய பின் குறைகேட்பு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதேபோல் மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு கூட்டத்தையும் நடத்த வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    வருவாய் நிர்வாக கமிஷனர் தலைமையில், மாநில அளவிலான குறைகேட்பு முகாம் தவிர, இரு மாதங்களுக்கு ஒருமுறை கலெக்டர் தலைமையிலும், மாதம் ஒருமுறை ஆர்.டி.ஓ., தலைமையிலும் முகாம்கள் நடத்த வருவாய்த்துறை முதன்மை செயலர் சித்திக் உத்தரவிட்டுள்ளார்.

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் கூறுகையில், பதிவு செய்த மாற்றுத்திறனாளிகள் நல சங்க பிரதிநிதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அழைத்து குறைகேட்பு நடத்தப்படும்என்றனர்.

    பட்ஜெட்டுக்கு அனுமதி பெறாமலேயே சட்டமன்ற கூட்டத்தொடரை கூட்டியது சட்டமன்ற நடைமுறைகளை கேள்விக்குறியாக்கியுள்ளது என்று அன்பழகன் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை சட்டமன்றத்தின் மாண்புகளையும், மரியாதைகளையும், ஜனநாயக நடை முறைகளையும் போட்டி போட்டுக்கொண்டு ஆளும் காங்கிரஸ் அரசும், கவர்னரும் காலில் போட்டு மிதிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பட்ஜெட்டுக்கு அனுமதி பெறாமலேயே சட்டமன்ற கூட்டத்தொடரை கூட்டியது சட்டமன்ற நடைமுறைகளை கேள்விக்குறியாக்கியுள்ளது. இதற்காக காரணமின்றி சட்டமன்றத்தை காலவரையின்றி ஒத்திவைத்ததையும் அ.தி.மு.க. சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

    கவர்னர், முதல்-அமைச்சர் தொடர் மோதலால் புதுவை அரசின் நிர்வாகத்தை முடக்கம் செய்ய சதியாக இருக்குமோ? என்ற சந்தேகம் எழுகிறது. இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபையில் கவர்னர் மீதே ஆளும்கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் சட்டமன்றத்தை கவர்னர் முடக்கம் செய்வது பலிக்காது என பேசியுள்ளார்.

    பட்ஜெட்டிற்கு அனுமதி கிடைக்காததற்கு தலைமை செயலாளரும், நிதி செயலாளரும் பொறுப்பேற்க வேண்டும். இதற்கு கவர்னர் விளக்கம் தர வேண்டும்.

    புதுவை மாநிலத்தின் வரி சலுகையை பயன்படுத்தி சில வியாபாரிகள் மாநிலத்தை கடத்தல் மாநிலமாக மாற்றியுள்ளனர். மது, பெட்ரோல், டீசல், சிகரெட், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களுக்கு குடோன் அமைத்து தமிழகத்திற்கு கடத்தி விற்பனை செய்து வருகின்றனர். இதனால் புதுவை கடத்தல் மாநிலமாக மாறியுள்ளது.

    இதனால் புதுவை மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. ஒவ்வொரு ஆட்சியிலும் அவர்களுக்கு வேண்டியவர்கள் இந்த கடத்தலில் ஈடுபடுகின்றனர். தற்போது மணல் பிரச்சினை பூதாகரமாக எழுந்துள்ளது. கடத்தி கொண்டுவரப்படும் மணலை அனுமதிக்கும் வகையில் அமைச்சர் சட்டமன்றத்தில் பேசினார். இது அமைச்சர் பதவிக்குரிய மாண்புக்கு குந்தகம் விளைவிக்கும் செயலாகும்.

    மத்திய அரசின் சட்டப்படி மணலை குடோவுனில் வைத்திருப்பதும், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதும் சட்டப்படி குற்றம். புதுவையில் உள்ள சட்டப்படியும் மணலை எடுத்து வருவது குற்றமாகும். அப்படியிருக்க தமிழகத்திலிருந்து கடத்தி கொண்டுவரும் மணலை அரசு அதிகாரிகள் சட்டப்படிதான் பிடிக்கின்றனர். இந்த பிரச்சினையை சட்டரீதியாக தீர்க்க அரசு முன்வர வேண்டும். ஆனால் கடத்தல்காரர்களுக்கு சாதகமாக செயல்படக் கூடாது.

    புதுவை மணல் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசோடு சுமூக போக்கை கடைபிடிக்க வேண்டும். அதைவிடுத்து மோதல் போக்கை கடைபிடித்துக் கொண்டு சட்டசபையில் உண்மைக்கு மாறான தகவல்களை நாராயணசாமி தெரிவித்தார். அவர் தென்மாநில மாநாட்டில் பங்கேற்றபோது மணல் பிரச்சினை பற்றி தமிழக அமைச்சரோடு பேசியதாக கூறினார்.

    அப்போது அவர் முதல்-அமைச்சராக இருந்தாரா? தமிழகத்தை உரிய முறையில் அணுகி மணல் பிரச்சினையை தீர்க்க வழி காண வேண்டும். வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்யப் போவதாக நாராயணசாமி கூறியுள்ளார். இதற்கு கவர்னர் அனுமதி தருவாரா? என்ற சந்தேகம் எழுகிறது. ஏனெனில் துறைமுகம் செயல்படவே கவர்னர் அனுமதிக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×