என் மலர்
நீங்கள் தேடியது "puducherry govt"
- ஏற்கனவே சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
- காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவும் பெறப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
வருகிற சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தொடர வேண்டும் என என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜ.க. உறுதியாக உள்ளது. இதனால் ஆட்சியை தக்க வைக்க பல்வேறு நலத்திட்டங்களை அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
தற்போது வழங்கப்பட்டு வரும் குடும்ப தலைவிகளுக்கான ஓய்வூதியத்தை ரூ.2 ஆயிரத்து 500 ஆகவும், முதியோர், மாற்றுத்திறனாளிகள் உட்பட பல பிரிவுகளில் உதவித்தொகை ரூ.500 உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை விரைவில் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பொங்கல் தொகுப்புடன் தமிழகம்போல பரிசுத் தொகை வழங்கவும் புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது. காலியாக உள்ள அரசின் அனைத்து பணியிடங்களையும் நிரப்பும் வகையில் அரசு தேர்வு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு ஆணையம் மூலம் 10-ம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு வரை படித்தவர்களுக்கு பணிக்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது.
ஏற்கனவே சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. தற்போது போலீஸ் உடல் தகுதி தேர்வு நடந்து வருகிறது. சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு எழுத்து தேர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது. 1000 பேர் கொண்ட 2-வது ஐ.ஆர்.பி.என். படை அமைக்கவும் மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க ராஜீவ்காந்தி சிலை முதல், இந்திராகாந்தி சிலை வரை சுமார் ரூ.600 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இது மட்டுமன்றி புதுச்சேரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், வளர்ச்சி திட்டங்களுக்காகவும் மத்திய அரசிடம் கூடுதல் நிதியை கேட்டுள்ளனர். இந்த நிதியும் விரைவில் வழங்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
பிரதமர் புதுச்சேரிக்கு வரும்போது பல்வேறு திட்டங்கள் செயல்வடிவம் பெறும் என துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சூசகமாக அறிவித்துள்ளார். இதன் மூலம் ஆட்சியை தக்க வைப்பதில் ஆளும் கட்சியான என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜ.க. முனைப்புடன் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
அதே நேரத்தில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனர். கைநழுவி போன புதுச்சேரியை மீண்டும் காங்கிரசின் கோட்டை என நிரூபிக்க தேர்தலில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என முனைப்புடன் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். தி.மு.க.வும் கால் நுாற்றாண்டாக இல்லாத ஆட்சியை தங்கள் தலைமையில் மீண்டும் கொண்டுவர வேண்டும் என திட்டமிட்டு செயல்படுகின்றனர்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் இந்தியா கூட்டணி பெற்ற வெற்றி காங்கிரஸ் -தி.மு.க. கூட்டணியை உற்சாகப்படுத்தி உள்ளது. காங்கிரஸ், தி.மு.க.வுக்கு கட்சி தலைமை மூலம் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவும் பெறப்பட்டு வருகிறது.
அதோடு ஆட்சியின் அவலங்களை தொடர்ந்து காங்கிரஸ், தி.மு.க. மக்களிடம் கூறி வருகின்றனர். சமீபத்தில் போலி மருந்து தொழிற்சாலை விவகாரத்தை இந்தியா கூட்டணி கையில் எடுத்து அரசுக்கு எதிராக தொடர் பிரசாரம் செய்து வருகிறது. இதில் ஆளும்கட்சிக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ், தி.மு.க. வலியுறுத்தி வருகிறது.
இதேபோல ஆளும் அரசு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ், தி.மு.க. கூறி வருகிறது. இதற்காக பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் வருகிற 21-ந்தேதி முதல் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. அரசை கண்டித்து புதுச்சேரி காங்கிரசார் பாதயாத்திரை நடத்த உள்ளனர்.
இந்த பாதயாத்திரை 15 நாட்கள் மாநிலம் முழுவதும் நடைபெற உள்ளது. இதை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. அறிவித்துள்ளார். பாத யாத்திரைக்கான கையேடையும் வெளியிட்டுள்ளார். ஆட்சியின் அவலங்களை ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் புதுச்சேரி தாத்தா என்ற பெயரில் விமர்சனம் செய்யும் வீடியோக்களையும் காங்கிரஸ் வெளியிட்டு வருகிறது. இதற்கான கி.யூ.ஆர். கோடையும் காங்கிரஸ் தலைவர் வெளியிட்டுள்ளார்.
இதன்மூலம் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே புதுச்சேரியில் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
- உயர்த்தப்பட்ட உதவித்தொகை வருகிற 12-ந் தேதி, அல்லது பொங்கலுக்கு பின் வழங்கப்படும்.
- மஞ்சள் அட்டை குடும்ப தலைவிகளுக்கும் உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
எங்கள் அரசு பொறுப்பேற்ற பின் பல உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது. பொதுப்பணி, உள்ளாட்சி மூலம் பல பணிகள் செய்யப்பட்டுள்ளது. புதுவை உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவது, நல்ல கல்வி, மருத்துவ வசதி, அடிப்படை வசதிகள் செய்யப்பட வேண்டும் என்பதே அரசின் எண்ணம்.
மக்கள் கோரிக்கையை ஏற்று எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கையை ஏற்று, சட்டசபை வாக்குறுதிகள் அனைத்தையும் அரசு நிறைவேற்றியுள்ளது. எல்லா தொகுதியிலும் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுவை மாநிலம் ஒட்டு மொத்த வளர்ச்சி பெற வேண்டும் என்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.
4 பிராந்தியத்திலும் இன்னும் பல மக்கள் நல பணிகள் தொடங்கப்பட உள்ளது. நல்ல அரசாக செயல்பட்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை தீர்க்கும் அரசாக செயல்பட்டு வருகிறது.
அரசின் எந்த உதவியும் பெறாத குடும்ப தலைவிகளுக்கு ரூ.ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதை உயர்த்தி ரூ.2 ஆயிரத்து 500 ஆக வழங்குவதாக அரசு அறிவித்தது. மாதந்தோறும் பெண்களுக்கு வழங்கப்படும் ரூ.1000-ம் முதலில் வழங்கப்படும். உயர்த்தப்பட்ட உதவித்தொகை வருகிற 12-ந் தேதி, அல்லது பொங்கலுக்கு பின் வழங்கப்படும். மஞ்சள் அட்டை குடும்ப தலைவிகளுக்கும் உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். முதியோர் உட்பட உதவித்தொகை ரூ.500 உயர்த்தி வழங்கப்படும் என அரசு அறிவித்தது.
இந்த தொகையும் விரைவில் உயர்த்தி வழங்கப்படும். புதுவையில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பொங்கலுக்கு எந்தளவுக்கு பரிசு தொகை தரமுடியுமோ அவை வழங்கப்படும். போலி மருந்து விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையாக அறிக்கை வெளியிடப்படும் என்றார்.
- மின்துறையை தனியார் மயமாக்குவதற்கான ஏற்பாடுகள் அரசு தரப்பில் தொடர்ந்து வந்தன.
- அரசின் பேச்சுவார்த்தைக்கு பிறகு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
புதுச்சேரி:
மத்திய அரசு கடந்த 2020-ம் ஆண்டு யூனியன் பிரதேசங்களில் மின் வினியோகம் தனியார் மயமாக்கப்படும் என்று அறிவித்தது. புதுச்சேரியில் இதை அமல்படுத்த அப்போதைய முதல்-அமைச்சர் நாராயணசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில் என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு மின்துறையை தனியார் மயமாக்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. தனியார் மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் முதல்-அமைச்சர் ரங்கசாமி, மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இருப்பினும் மின்துறையை தனியார் மயமாக்குவதற்கான ஏற்பாடுகள் அரசு தரப்பில் தொடர்ந்து வந்தன. 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின்துறை தனியார் மயமாக்குவதை உறுதி செய்யும் வகையில் புதுச்சேரி மின்சார பகிர்மான கம்பெனி என்ற பெயரில் 100 சதவீத பங்குகளை தனியாருக்கு வழங்குவதற்கான டெண்டர் வெளியிடப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கை மின்துறை ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஊழியர்கள் குதித்தனர்.
இதனால் மின் பழுது நீக்குதல், புதிய இணைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடங்கின. பல இடங்களில் நாள் முழுவதும் மின்சாரம் தடைப்பட்டது. இதனால் பொதுமக்கள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினர். பின்னர் அரசின் பேச்சுவார்த்தைக்கு பிறகு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்தநிலையில் மின்துறை தனியார் மயத்துக்கான 100 சதவீத பங்குகளை விற்பனை செய்வதற்கான டெண்டர் தொடர்ந்து பலமுறை கால நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது. மின்துறையின் 100 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதற்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நிர்வாக காரணங்களுக்காக டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மின்துறை தெரிவித்துள்ளது. இதனால் புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்கப்படாது என்பது உறுதியாகியுள்ளது.
- பரிசு பொருட்களை பெற பொதுமக்கள் தயாராக இருந்தனர்.
- முதல்-அமைச்சர் ரங்கசாமி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத காரணத்ததால் விழா திடீரென தள்ளி வைக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசின் குடிமைப்பொருள் வழங்கல் துறை சார்பில் ஆண்டு தோறும் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நடப்பு ஆண்டில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி 4 கிலோ பச்சரிசி, 1கிலோ நாட்டு சர்க்கரை, 1 கிலோ பாசி பருப்பு, 300கிராம் நெய், சமையல் எண்ணெய் 1 லிட்டர் உள்ளடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அரசின் கான்பெட் நிறுவனம் டெண்டர் விட்டது. டெண்டர் இறுதி செய்யப்பட்டு பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதன் தொடக்க விழா நேற்று மாலை 4 மணிக்கு சண்முகாபுரத்தில் உள்ள ரேசன் கடையில் நடைபெறும் என்றும், இதனை முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அந்த கடையில் பொங்கல் தொகுப்பு பொருட்கள் அனைத்தும் எடுத்து தயாராக வைக்கப்பட்டு இருந்தது. பரிசு பொருட்களை பெற பொதுமக்கள் தயாராக இருந்தனர்.
முதல்-அமைச்சர் ரங்கசாமி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத காரணத்ததால் விழா திடீரென தள்ளி வைக்கப்பட்டது. நாளை (திங்கட்கிழமை) முதல் வழங்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டது ஏன் என்பதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
பொங்கல் தொகுப்பு பொருட்கள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி அழைப்பிதழில் கவர்னர் மற்றும் முதல்-அமைச்சர் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.
சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பெயர் இடம்பெறவில்லை. இதனை அறிந்த முதல்-அமைச்சர் ரங்கசாமி அழைப்பிதழில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பெயர்கள் ஏன் இடம்பெறவில்லை என துறை அதிகாரிகளை கண்டித்துள்ளார்.
மேலும் அழைப்பிதழில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பெயர்களை இடம்பெற செய்து அவர்களுக்கு அழைப்பு விடுத்து விட்டு விழாவை நடத்த வேண்டும் என உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
- அக்டோபர், நவம்பர் மாதத்துக்கான தலா 2 கிலோ வீதம் 4 கிலோ இலவச கோதுமை வழங்கப்பட்டது.
- ஜனவரி 3-ந்தேதி முதல் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு ரேஷன்கடைகள் மூலம் வழங்கப்படும்.
புதுச்சேரி:
பொங்கல் பண்டிகைக்கு தரப்படும் இலவச ஆடைக்கு பதிலாக அவரவர் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
இலவச ஆடைக்கு பதிலாக நேரடியாக ரேசன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்றும் பொங்கல் பண்டிகைக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் 'இலவச ஆடை' வழங்கல் திட்டம் இனி இல்லை என்றும் அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக புதுச்சேரி ரேஷன் கடைகளில் சிவப்பு ரேஷன்கார்டுகளுக்கு 20 இலவச அரிசியும், மஞ்சள் கார்டுகளுக்கு 10 கிலோ இலவச அரிசியும் வழங்கப்படுகிறது.
இதற்கிடையே புதுச்சேரி சட்டசபையில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2 கிலோ இலவச கோதுமை வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். இந்த திட்டத்தை திலாசுப்பேட்டை ரேஷன் கடையில் 2 கிலோ இலவச கோதுமையை பொதுமக்களுக்கு வழங்கி முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். அக்டோபர், நவம்பர் மாதத்துக்கான தலா 2 கிலோ வீதம் 4 கிலோ இலவச கோதுமை வழங்கப்பட்டது. இதன்பின்னர் முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறியதாவது:-
இலவச அரிசி மற்றும் கோதுமை தொடர்ச்சியாக வழங்கப்படும். சட்டமன்றத்தில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் அரசு செயல்படுத்தி வருகிறது. ஜனவரி 3-ந்தேதி முதல் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு ரேஷன்கடைகள் மூலம் வழங்கப்படும் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தனியார் ஆப்ரேட்டர்கள் எலெக்ட்ரிக் பஸ்களின் ஓட்டுநர்களை நியமிப்பது, பஸ்களுக்கான பராமரிப்பு பணிகளை மேற்கொள்வார்கள்.
- எலெக்ட்ரிக் பஸ்கள் செல்வதற்கான உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு ரூ. 8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
பிரதம மந்திரி இ-பஸ் சேவா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 10 ஆயிரம் எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்க முடிவெடுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இந்த திட்டத்தில் மகாராஷ்டிரா, அரியானா, ஒடிசா, குஜராத் மற்றும் மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களும், சண்டிகர், புதுச்சேரி மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசங்களும் இதில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 2024-25-ம் ஆண்டிற்கான 4,588 எலெக்ட்ரிக் பஸ்களுக்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 75 எலக்ட்ரிக் பஸ்கள் இயக்கிக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ரூ.57 ஆயிரம் கோடி செலவில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தில் மத்திய அரசின் பங்காக ரூ.20 ஆயிரம் கோடி வழங்க உள்ளது. மீத தொகையை இயக்கப்படும் பஸ்களுக்கு ஏற்ப அந்தந்த மாநிலங்களே அதற்கான தொகையை ஏற்கும்.
இந்த திட்டத்தை முழுமையாக பயன்படுத்தி புதுவை முழுவதும் எலெக்ட்ரிக் பஸ்கள் மூலம் பொது போக்குவரத்தை மேம்படுத்த கவர்னர் கைலாஷ்நாதன் தீவிரம் காட்டி வருகிறார்.
மொத்தமுள்ள 75 பஸ்களில், 12 மீட்டர் நீளம் கொண்ட 50 பஸ்களை புறநகர் பகுதிகளுக்கு இடையில் இயக்கவும், 9 மீட்டர் நீளம் கொண்ட 25 பஸ்களை புதுவை நகர பகுதிகளுக்குள் இயக்கவும் திட்டமிட்டுள்ளது.
இந்த எலெக்ட்ரிக் பஸ்களை மறைமலை அடிகள் சாலை தாவரவியல் பூங்கா எதிரேவும் மொரட்டாண்டிக்கு அருகே உள்ள நியூகோவின் டெப்போவிலும் சார்ஜ் செய்து கொள்ளலாம். தனியார் ஆப்ரேட்டர்கள் எலெக்ட்ரிக் பஸ்களின் ஓட்டுநர்களை நியமிப்பது, பஸ்களுக்கான பராமரிப்பு பணிகளை மேற்கொள்வார்கள்.
புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் கண்டக்டர்களை நியமிக்கும். புறநகர் பகுதிகளில் இயக்கப்படும் பஸ்களுக்கு ஒரு கிலோமீட்டருக்கு ரூ. 24 மற்றும் நகரங்களுக்குள் இயக்கப்படும் பஸ்களுக்கு ரூ. 22 என கணக்கிட்டு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.
எலெக்ட்ரிக் பஸ்கள் செல்வதற்கான உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு ரூ. 8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் உள்ள லாரி முனையத்தில் 3.5 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு அருகில் உள்ள துணை நிலையத்திலிருந்து கேபிள்கள் புதைக்கப்பட உள்ளது.
பணிமனை கட்டுவதற்கு ரூ. 12.75 கோடிக்கு வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு அதற்கான டெண்டர் விடும் பணி நடந்துவருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களுக்கு, அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகள், தானியங்கி கட்டண வசூல் அமைப்புகள் ஆகியவை அமைக்கப்பட உள்ளது.
இதற்கிடையே ஏற்கனவே புதுவையில் தனியார் பங்களிப்புடன் 25 எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
- ஒரு குடும்பத்தில் ஒரு பெண் அல்லது மாணவிக்கு மட்டுமே வாழ்நாளில் ஒருமுறை இந்த உதவி பெற தகுதியுடையவர் ஆவர்.
- முதுகலைப் பட்டப்படிப்பாக இருந்தால், இளங்கலை பட்டப்படிப்புத் தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ள நிலையில் அனைத்து திட்டங்களையும் என்.ஆர்.காங்கிரஸ்.,- பா.ஜ.க. கூட்டணி அரசு வேகப்படுத்தி வருகிறது.
குடும்ப தலைவிகளுக்கு தற்போது வழங்கப்படும் மாதத்தொகை ரூ.2 ஆயிரத்து 500 உயர்வு, மஞ்சள் ரேசன் கார்டு குடும்ப தலைவிகளுக்கும் மாத உதவி தொகை, முதியோர், விதவை உதவி தொகை ரூ.500 உயர்வு, அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் 2 கிலோ இலவச கோதுமை ஆகிய திட்டங்கள் விரைவில் நடைமுறைபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெண்களை கவரும் வகையில் முதல்-அமைச்சரின் புதுமை பெண்கள் என்ற பெயரில் ஆதிதிராவிடர் நலத்துறை வாயிலாக புதிய திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ்,
* பணிபுரியும் பெண்கள், கல்லூரி மாணவிகளுக்கு மானிய விலையில் இ-ஸ்கூட்டர் வழங்கப்பட உள்ளது. இந்த புதிய திட்டத்திற்கு கவர்னர் கைலாஷ்நாதனும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
* இந்த திட்டத்தில் பயன்பெற புதுவை அரசால் அங்கீகரிக்கப்பட்ட பட்டியல் சாதியினர் அல்லது பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். 5 ஆண்டுகள் தொடர்ந்து வசித்ததன் அடிப்படையில் புதுச்சேரியை சேர்ந்தவராக இருக்க வேண்டும். ஆண்டு குடும்ப வருமானம் ரூ.8 லட்சத்துகு்கு மிகாமல் இருக்க வேண்டும்.
* விண்ணப்பிக்கும் தேதியில் விண்ணப்பதாரரின் வயது 18 வயதுக்கு குறையாமலும், 40 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனம், தன்னாட்சி அமைப்புகள், நிறுவனங்கள் அல்லது வங்கிகளில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.
* ஒரு குடும்பத்தில் ஒரு பெண் அல்லது மாணவிக்கு மட்டுமே வாழ்நாளில் ஒருமுறை இந்த உதவி பெற தகுதியுடையவர் ஆவர். நீடித்த நோய் அல்லது இ-ஆட்டோ மானியத் திட்டத்தின் கீழ் உதவி பெறும் விண்ணப்பதாரர் தகுதியற்றவர்.
* விண்ணப்பதாரர் தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் மோட்டார் சைக்கிள் கியர் இல்லாத அல்லது மோட்டார் சைக்கிள் கியர் கொண்ட ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர், இளங்கலைப் பட்டப்படிப்பு மாணவியாக இருந்தால், பிளஸ்-2 தேர்வில் குறைந்தபட்சம் 75 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
* முதுகலைப் பட்டப்படிப்பாக இருந்தால், இளங்கலை பட்டப்படிப்புத் தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். முனைவர் பட்டப்படிப்பு மாணவியாக இருந்தால், முதுகலைப் பட்டப்படிப்புத் தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
* தூரமான பகுதிகளில் வசிக்கும் பணிபுரியும் பெண்கள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற விதவைகள், மற்றும் 35 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
* இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் பணிபுரியும் பெண்கள், வேலைக்கான போதுமான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும். முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பயனாளிகள் தேர்வு நடத்தப்பட உள்ளது. இ-ஸ்கூட்டரின் விலையில் 75 சதவீத மானியம் அல்லது ரூ.ஒரு லட்சம் இதில் எது குறைவோ அது வழங்கப்படும்.
இதுமட்டுமல்லாமல் மத்திய அரசின் பி.எம்.இ.டிரைவ் திட்டத்தின் கீழ் மானியம் பெற்ற பிறகு, அதிகபட்சமாக ஒரு வாகனத்திற்கு ரூ.5 ஆயிரம் பயனாளியின் கணக்கில் செலுத்தப்படும். தேர்தலுக்கு முன் இந்த திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.
- பொதுமக்கள் நம்ம ஊரு டாக்ஸி செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- போக்குவரத்து துறையின் வலைத்தளம் மற்றும் அரசு டிஜிட்டல் சேனல்களிலும் அதிகாரப்பூர்வ பதிவிறக்க இணைப்புகள் கிடைக்கும்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரசு அங்கீகாரத்துடன் பாதுகாப்பான பயணத்துக்கான 'நம்ம ஊரு டாக்டாக்ஸி' அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த செயலியில் நியாயமான கட்டணம், நேரடி சவாரி கண்காணிப்பு, சரி பார்க்கப்பட்ட ஓட்டுனர் சுய விவரம், 24 மணி நேரமும் உதவி மையம், எஸ்.ஓ.எஸ். பாதுகாப்பு வசதி உள்ளிட்டவைகள் இடம் பெற்றுள்ளன.
இந்த செயலி புதுச்சேரியில் எலெக்ட்ரிக் ஆட்டோ மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் வைத்துள்ள அனைவரும் மிகவும் எளிதாக பயன்படுத்தும் வகையில் தமிழ், ஆங்கிலத்தில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் பாதுகாப்பான, வெளிப்படையான மற்றும் வசதியான பயண அனுபவத்தை வழங்குகிறது. பணம் அல்லது யு.பி.ஐ. கட்டண பரிவர்த்தனை மூலம் கட்டணம் செலுத்தும் வசதியும் உள்ளது.
பொதுமக்கள் நம்ம ஊரு டாக்ஸி செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது பயணிகளுக்கும், எலெக்ட்ரிக் ஆட்டோ, ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் தனித்தனி செயலிகள் உள்ளது.
போக்குவரத்து துறையின் வலைத்தளம் மற்றும் அரசு டிஜிட்டல் சேனல்களிலும் அதிகாரப்பூர்வ பதிவிறக்க இணைப்புகள் கிடைக்கும்.
இந்த தகவலை புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.
- ஆந்திராவில் புயல் கரையை கடக்கும் போது 90 முதல் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் முன்னெச்சரிக்கை.
- 1800 4252303, 0884-2321223, 0884-2323200 ஆகிய உதவி எண்களும் அறிவிக்கப்பட்டது.
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மோன்தா புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது. இது மேற்கு திசையில் நகர்ந்து ஆந்திராவின் மசூலிப்பட்டினம், கலிங்கப்பட்டினம் இடையே இன்றிரவு தீவிர புயலாக கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதனிடையே, 'மோன்தா' புயல் எதிரொலியாக ஏனாமில் இன்று பகல் 12 மணிக்கே கடைகள், வணிக நிறுவனங்களை மூட புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆந்திராவில் புயல் கரையை கடக்கும் போது 90 முதல் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் முன்னெச்சரிக்கையாக ஏனாம் மண்டல நிர்வாக அதிகாரி அன்கித் குமார் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், 1800 4252303, 0884-2321223, 0884-2323200 ஆகிய உதவி எண்களும் அறிவிக்கப்பட்டது.
- அக்டோபர் 3-ந்தேதி அரசு விடுமுறையாக அறிவித்ததற்கு ஈடாக நாளை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- நாளை அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் இயங்குகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் சனிக்கிழமையான நாளை அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என அரசு தெரிவித்துள்ளது.
ஆயுத பூஜைக்கு அடுத்த நாள் அதாவது அக்டோபர் 3-ந்தேதி அரசு விடுமுறையாக அறிவித்ததற்கு ஈடாக நாளை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் இயங்குகிறது.
- தொழில் தொடங்குவதை எளிதாக்கும் சட்டத்தின் கீழ் அரசு துறைகளுக்கு அனுமதி அளிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்படுகிறது.
- சட்டமன்றத்தின் பட்ஜெட் அறிவிப்புகள், வாக்குறுதிகள் நிறைவேற்றம், மாநில அந்தஸ்து ஆகியவை குறித்தும் விவாதங்கள் நடைபெறும்.
புதுச்சேரி:
புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் 10-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.
மார்ச் 12-ந்தேதி முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து 13 நாட்கள் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 27ந்தேதி மாநில அந்தஸ்து வலியுறுத்தும் அரசு தீர்மானத்தை நிறைவேற்றி முடிவடைந்தது.
6 மாதத்துக்கு ஒரு முறை சட்டமன்றம் கூட்டப்பட வேண்டும் என்பது விதி. அதன்படி இந்த மாதம் சட்டசபை கூட்டப்பட வேண்டும். இதற்காக வருகிற 18-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு புதுச்சேரி சட்டசபை கூடுகிறது.
இதனை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இன்று அறிவித்தார்.
15-வது புதுவை சட்டப்பேரவையின் 6-வது கூட்டத்தொடரின் 2-வது பகுதி வருகிற 18-ந் தேதி காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள பேரவை கூடத்தில் கூடுகிறது. பேரவையின் முன் வைக்க வேண்டிய சட்ட முன்வரைவுகள், ஏடுகள் இருந்தால் அவற்றை பேரவை முன் வைக்க அரசு துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதோடு, இந்த சட்ட பேரவை கூட்டம் எத்தனை நாள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்யும். புதுச்சேரியில் தொழில் தொடங்குவதை எளிதாக்கும் சட்ட மசோதா மற்றும் ஜி.எஸ்.டி. 2-வது சட்ட திருத்த மசோதா ஆகியவை சபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
தொழில் தொடங்குவதை எளிதாக்கும் சட்டத்தின் கீழ் அரசு துறைகளுக்கு அனுமதி அளிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்படுகிறது.
மேலும் சட்டமன்றத்தின் பட்ஜெட் அறிவிப்புகள், வாக்குறுதிகள் நிறைவேற்றம், மாநில அந்தஸ்து ஆகியவை குறித்தும் விவாதங்கள் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 4 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர்.
- அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் சிவப்பு ரேசன் கார்டு பெற தகுதியுள்ளவர்களாக இருப்பர்.
புதுச்சேரி:
புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறை மூலம் ரேசன் கார்டுகளை கணக்கிட்டு வழங்கப்படும் இலவச அரிசியில் பல கோடி மோசடி நடந்துள்ளது என்றும் இதுதொடர்பாக விசாரிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும் என புதுச்சேரியை சேர்ந்த வக்கீல் பாலமுருகன் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்களுடன் தலைமை செயலரிடம் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து வக்கீல் பாலமுருகன் கூறியதாவது:-
புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 3 லட்சத்து 62 ஆயிரத்து 136 ரேசன் கார்டுகள் உள்ளன. இதில் மஞ்சள் ரேசன் கார்டுகள் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 404. சிவப்பு ரேசன் கார்டுகள் 2 லட்சத்து 6 ஆயிரத்து 7. ஆண்டு வருமானம் 72 ஆயிரத்திற்குள் இருப்பவர்களுக்கு தான் அவர்கள் வறுமையில் உள்ளதாக கருதி சிவப்பு ரேசன் கார்டு வழங்கப்படுகிறது.
அப்படி இருக்கும்போது மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 4 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் சிவப்பு ரேசன் கார்டு பெற தகுதியுள்ளவர்களாக இருப்பர். தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் குடும்பத்தினர் கண்டிப்பாக சிவப்பு ரேசன் கார்டு பெற தகுதியுடையவர்களாக இருக்க மாட்டார்கள்.
எனவே தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலின் அடிப்படையில் ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரேசன் கார்டு மோசடியாக பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டிற்கு ரூ.63 கோடியே 30 லட்சத்து 24 ஆயிரம் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த மோசடி சம்பந்தமாக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






